Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹெஸ்புல்லா அமைப்பு தோன்றியது எப்படி? அது ஏன் இஸ்ரேலை அழிக்க நினைக்கிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இஸ்ரேல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

8 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹெஸ்பொல்லா என்பது ஈரான் ஆதரவு கொண்ட ஷியா இஸ்லாமிய அரசியல் கட்சி மற்றும் லெபனானில் உள்ள துணை ராணுவக் குழு ஆகும். இது 1992 முதல் ஹசன் நஸ்ரல்லாவால் வழிநடத்தப்படுகிறது. ஹெஸ்பொல்லா பெயரின் பொருள் கடவுளின் கட்சி.

1980 களின் முற்பகுதியில் லெபனானை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் போது ஈரானின் நிதி மற்றும் இராணுவ உதவியுடன் ஹெஸ்புல்லா உருவானது.

லெபனானின் பாரம்பரியமாக அதிகாரம் இழந்த ஷியாக்களை தெற்கில் பாதுகாப்பதற்கான ஒரு சக்தியாக அது இருந்தது. அதன் கருத்தியல் வேர்கள் 1960 மற்றும் 1970 களில் லெபனானில் ஷியா இஸ்லாமிய மறுமலர்ச்சி வரை நீண்டுள்ளது.

2000 ஆம் ஆண்டில் இஸ்ரேல் பின்வாங்கிய பிறகு, ஹெஸ்புல்லா நிராயுதபாணியாக்கும் அழுத்தத்தை எதிர்த்தது. அதன் ராணுவப் பிரிவையும் வலுப்படுத்தியது.

இந்த குழு, ரெசிஸ்டன்ஸ் பிளாக் (Resistance Bloc) கட்சிக்கு ஆதரவாக இருந்ததன் மூலம், படிப்படியாக லெபனானின் அரசியல் அமைப்பில் முக்கிய அதிகார மையமாக மாறியது. மேலும், அமைச்சரவையின் முடிவை நிராகரிக்கும் அதிகாரத்தையும் அந்தக் குழு திறம்பட பெற்றுள்ளது.

பல ஆண்டுகளாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான குண்டுவீச்சுகள் மற்றும் சதித்திட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதாக ஹெஸ்பொல்லா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹெஸ்பொல்லாவை, மேற்கத்திய நாடுகள், இஸ்ரேல், வளைகுடா அரபு நாடுகள் மற்றும் அரபு லீக் ஆகியவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளனர்.

 

சிரியாவின் அதிபர் பஷர் அல்-அசாத்தின் கூட்டாளியான ஹெஸ்புல்லா, 2011 ஆம் ஆண்டு சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரின் போது அசாத்துக்காக போரிட ஆயிரக்கணக்கான போராளிகளை அனுப்பியது. மோதல் தீவிரமடைந்ததால், அங்குள்ள ஆயுதக்குழுக்களிடம் இழந்த நிலத்தை மீட்க அரசாங்க படைகளுக்கு ஹெஸ்புல்லா குழுவைச் சேர்ந்தவர்கள் உதவியுள்ளனர்.

ஈரான் மற்றும் ஹெஸ்புல்லா ஆயுதக்குழுவினருடன் தொடர்பில் உள்ள சிரியாவை அடிக்கடி இஸ்ரேல் தாக்குகிறது. ஆனால், அவற்றை எப்போதாவது தான் ஒப்புக்கொள்கிறது.

7 அக்டோபர் 2023 அன்று பாலத்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் குறைந்தது 1,400 பேரைக் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, ஹெஸ்பொல்லாவும் இஸ்ரேலும் தங்களது எல்லைகளைக் கடந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இஸ்ரேல் காஸா மீது பதிலடி வான்வழித் தாக்குதல்களை நடத்தி, ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றது. அப்போது, இஸ்ரேலுக்கு எதிரான போரில் பங்களிக்க "முழுமையாக தயார்" என்று ஹெஸ்புல்லா குழு கூறியது.

ஹெஸ்புல்லாவின் இராணுவம், பாதுகாப்பு மற்றும் அரசியல் செல்வாக்கு மற்றும் அது வழங்கும் சமூக சேவைகள் ஒரு மாநிலத்திற்குள் உள்ள ஒரு மாநிலமாக அதன் நற்பெயரை நிலைநிறுத்தியுள்ளது. அரசாங்க நிறுவனங்களுக்கு போட்டியாக இது உள்ளது.

சில வழிகளில், அதன் திறன்கள் இப்போது லெபனான் இராணுவத்தை விட அதிகமாக உள்ளன. சில லெபனானியர்கள் ஹெஸ்புல்லாவை நாட்டின் நிலையான தன்மைக்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றனர். ஆனால், இது ஷியா சமூகத்தினுள் தொடர்ந்து பிரபலமாகவே உள்ளது.

ஹெஸ்புல்லா

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

1980 களின் முற்பகுதியில் லெபனானை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் போது ஈரானின் நிதி மற்றும் இராணுவ உதவியுடன் ஹெஸ்புல்லா உருவானது.

இஸ்ரேலை ஏன் ஹெஸ்புல்லா எதிர்த்தது?

ஹெஸ்புல்லா ஆரம்பிக்கப்பட்ட காலத்தை கணிப்பது சற்று கடினமான ஒன்று தான். ஆனால், அவர்கள் 1982 இல் பாலத்தீன ஆயுதக்குழுவின் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேலிய படையெடுப்பின்போது, ஹெஸ்புல்லாவின் ஆரம்பக்காலம் வெளிப்பட்டது.

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்பதற்காக அமல் இயக்கத்திலிருந்த பிரிந்த ஒரு ஆயுதக்குழுவிற்கு ஷியா இஸ்லாமிய தலைவர்கள் ஆதரவளித்தனர்.

புதிய அமைப்பாக உருவான இஸ்லாமிய அமல், ஈரானின் புரட்சிகர அமைப்பிடமிருந்து ஆதரவைப் பெற்றது. மிகவும் முக்கியமான அமைப்பாக உருவான ஷியா ஆயுதக்குழு, ஹெஸ்புல்லா என பின்னர் அறியப்பட்டது.

 
ஹெஸ்பொல்லா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

லெபனானின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த 1989 தைஃப் உடன்படிக்கை ஹெஸ்புல்லா ஆயுதக்குழுவை, ஆயுதங்களை கைவிடும்படி அழைப்பு விடுத்தது.

புதிதாக உருவான இந்த ஹெஸ்புல்லா ஆயுதக்குழு, இஸ்ரேலிய ராணுவம் மற்றும் அதன் நட்பு சக்தியான தெற்கு லெபனான் ராணுவம் மற்றும் லெபனானில் உள்ள பிற வெளிநாட்டு சக்திகள் மீது தாக்குதல்களை நடத்தியது.

1983 ஆம் ஆண்டு அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க கடற்படை முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியது ஹெஸ்புல்லா ஆயுதக்குழு இருந்ததாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 258 அமெரிக்கர்கள் மற்றும் 58 பிரெஞ்சு படை வீரர்கள் இறந்தனர். இதனால், மேற்கத்திய அமைதிப்படைகள் பின்வாங்கின.

1985 ஆம் ஆண்டில், ஹெஸ்புல்லா தனது ஸ்தாபனத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அமெரிக்காவையும் சோவியத் யூனியனையும் இஸ்லாத்தின் பிரதான எதிரிகளாக அடையாளப்படுத்தி, முஸ்லீம் நிலங்களை ஆக்கிரமிப்பதாகக் கூறிய இஸ்ரேலை "அழிக்க" அழைப்பு விடுத்து ஒரு "திறந்த கடிதத்தை" வெளியிட்டது.

மேலும், "இஸ்லாமிய முறையை மக்கள் சுதந்திரமான மற்றும் நேரடியான தேர்வின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டும், வலுக்கட்டாயமாக திணிப்பதன் அடிப்படையில் அல்ல" என்றும் அது அழைப்பு விடுத்தது.

லெபனானின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த 1989 தைஃப் உடன்படிக்கை ஹெஸ்புல்லா ஆயுதக்குழுவை, ஆயுதங்களை கைவிடும்படி அழைப்பு விடுத்தது.

இதனால், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட "இஸ்லாமிய எதிர்ப்பு" படையாக அதன் ராணுவப் பிரிவாக மறுபெயரிட ஹெஸ்புல்லாவைத் தூண்டியது.

1990 இல் சிரியா ராணுவம், லெபனான் மீது அமைதியைத் திணித்த பிறகு, தெற்கு லெபனானில் ஹெஸ்புல்லா தனது கெரில்லாப் போரைத் தொடர்ந்தது. லெபனான் அரசியலிலும் முக்கியப்பங்கு வகிக்க ஆரம்பித்தது.

1992 இல், அது முதன்முறையாக தேசிய தேர்தல்களில் வெற்றிகரமாக பங்கேற்றது. இறுதியாக 2000 இல் இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கியபோது, அவர்களை வெளியேற்றிய பெருமை ஹிஸ்புல்லா பெற்றது.

ஷெபா பண்ணைகள் மற்றும் பிற பகுதிகளில் இஸ்ரேலியகள் தொடர்ந்து இருப்பதைக் காரணம்காட்டி, ஆயுதங்களை கைவிடக்கோரிய அழுத்தங்களை அந்த ஆயுதக்குழு எதிர்த்தது. மேலும், தெற்கில் தங்களின் ஆயுதக்குழுவின் இருப்பையும் உறுதி செய்தது.

2006 ஆம் ஆண்டில், ஹெஸ்பொல்லா ஆயுதக்குழுவினர் எல்லை தாண்டிய தாக்குதலைத் தொடங்கினர். அதில் எட்டு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் கடத்தப்பட்டனர். இதனால், இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாரானது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் தெற்கிலும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள ஹெஸ்புல்லாவின் கோட்டைகளை நோக்கி குண்டுகளை வீசின. அதே நேரத்தில் ஹெஸ்புல்லா, இஸ்ரேல் மீது சுமார் 4,000 ராக்கெட்டுகளை ஏவியது.

இப்படி தொடர்ந்து 34 நாட்கள் நடந்த மோதலில் 1,125 க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் இறந்தனர். இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்த 119 பேரும், 45 பொதுமக்களும் இதில் இறந்தனர்.

 
ஹெஸ்பொல்லா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

2009 தேர்தலில், ஹெஸ்பொல்லா அமைப்பு பாராளுமன்றத்தில் 10 இடங்களை வென்று, ஐக்கிய அரசாங்கத்தில் இடம் நீடித்தது.

ஹெஸ்புல்லா முக்கியத்துவம் பெற்றது எப்படி?

2008 ஆம் ஆண்டில், லெபனானின் மேற்கத்திய ஆதரவுடைய அரசாங்கம் ஹெஸ்பொல்லாவின் தனியார் தொலைத்தொடர்பு வலையமைப்பை மூடுவதற்கு முயன்றது.

மேலும், பெய்ரூட் விமான நிலையத்தின் பாதுகாப்புத் தலைவர், ஹெஸ்பொல்லா ஆயுதக் குழுவுடன் தொடர்பில் இருந்த காரணத்திற்காக அவரை பதவியில் இருந்து அகற்றவும் முடிவு செய்தது.

இதற்கு எதிர்வினையாற்ற முடிவு செய்த ஹெஸ்புல்லா ஆயுதக்குழு, லெபனான் தலைநகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றி, தனது போட்டியாளரான சுன்னி இஸ்லாமிய குழுக்களுடன் போரிட்டது.

இருதரப்பினருக்கும் நடந்த இந்த மோதலில் சுமார் 81 பேர் இறந்த பிறகு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, அரசாங்கத்திற்கும் ஹெஸ்பொல்லா ஆயுதக்குழுவினருக்குமிடையே அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, ஹெஸ்புல்லா அமைப்பு, அமைச்சரவையின் முடிவை எதிர்க்கவும், மீறவும் உரிமை வழங்கப்பட்டது.

அதன்பின் நடந்த 2009 தேர்தலில், ஹெஸ்புல்லா அமைப்பு பாராளுமன்றத்தில் 10 இடங்களை வென்று, ஐக்கிய அரசாங்கத்தில் இடம் நீடித்தது.

 
ஹெஸ்பொல்லா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

டிசம்பர் 2020 இல், ஹெஸ்பொல்லா உறுப்பினர் சலீம் அய்யாஷ் கொலையில் ஈடுபட்டதற்காக ஐ.நா-ஆதரவு பெற்ற லெபனானுக்கான சிறப்பு தீர்ப்பாயத்தால் ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த ஆண்டின் இறுதியில், ஹெஸ்புல்லா அமைப்பின் செயலாளர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா ஒரு புதிய அரசியல் அறிக்கையை வெளியிட்டார். அது குழுவின் "அரசியல் பார்வையை" வெளிப்படுத்தியது.

1985 தேர்தல் அறிக்கையில் காணப்பட்ட இஸ்லாமியக் குடியரசு பற்றிய குறிப்பை அது கைவிட்டது. ஆனால், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராக கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்தது மற்றும் ஹெஸ்பொல்லா தனது ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறியது.

2011 ஆம் ஆண்டில், ஹெஸ்புல்லா குழுவும் அதன் கூட்டாளிகளும் சவூதி ஆதரவு பெற்ற சுன்னி முஸ்லீம் சாத் ஹரிரி தலைமையிலான ஐக்கிய அரசாங்கத்தை தகர்த்தனர்.

டிசம்பர் 2020 இல், ஹெஸ்புல்லா உறுப்பினர் சலீம் அய்யாஷ் கொலையில் ஈடுபட்டதற்காக ஐ.நா-ஆதரவு பெற்ற லெபனானுக்கான சிறப்பு தீர்ப்பாயத்தால் ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஹெஸ்புல்லாவும் அதன் கூட்டாளிகளும் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருக்கும் அடுத்தடுத்த அரசாங்கங்களில் தொடர்ந்து அங்கம் வகித்தனர்.

https://www.bbc.com/tamil/articles/cn39jpdrlrmo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹிஸ்புல்லா ஒன்றரை லட்சம் ராக்கெட்டுடன் தயார் - இஸ்ரேல் மீது மேலும் ஒரு முனையில் தாக்குதல் நடக்குமா?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

18 அக்டோபர் 2023

அக்டோபர் 7-ம் தேதியன்று ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதல், பின் இஸ்ரேலின் பதிலடித் தாக்குதலைத் தொடரந்து, அடுத்தக்கட்டமாக தற்போது காஸாப் பகுதியில் இஸ்ரேலின் படையெடுப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதல், அதன் தாக்கம் மற்றும் அதன் முடிவு உள்ளிட்டவை குறித்து நூற்றக்கணக்கான கேள்விகளை பிபிசி பெற்றுள்ளது. மற்ற நாடுகளும் இந்த மோதலில் ஈடுபடுமா என பலர் கேட்டுள்ளார்கள்.

இந்தப் பகுதியில் இருந்து செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் பிபிசியின் செய்தியாளர்கள் பலர், அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்.

ஒன்றரை லட்சம் ராக்கெட்டுகளுடன் தயாராகும் ஹிஸ்புல்லா

தற்போதைய நெருக்கடியானது இஸ்ரேலின் எல்லைகளுக்கு அப்பால் பரவி பிராந்திய யுத்தமாக மாறிவிடக் கூடாது என்பதே அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பல மேற்கத்திய நாடுகளுக்கு ராஜ தந்திர ரீதியிலான மிகப்பெரிய அச்சம் ஆகும்.

 

காசாவில் பாலஸ்தீனர்கள் கொல்லப்படும் போது, நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று ஈரான் ஏற்கனவே மிரட்டியுள்ளது.

ஈரானிய ஆதரவு போராளிகள் ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு லெபனானுக்கு இஸ்ரேலின் எல்லைக்கு அருகில் இருப்பதாக அரபு ஊடகங்களில் இப்போது செய்திகள் வந்துள்ளன.

இந்த போராளிகளில் சிலர் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரிய அரசுப் படைகள் பக்கம் நின்று போர் புரிந்த அனுபவம் பெற்றவர்கள்.

பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஈரானிய சார்பு போராளிகளைக் காட்டிலும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

இது 2006-ம் ஆண்டில் இஸ்ரேலுடன் ஒரு முடிவிலா போரை நடத்தியது. அதன் பின்னர் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை சுமார் ஒன்றரை லட்சம் என்கிற அளவுக்கு குவித்து வைத்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய துல்லியமான வழிகாட்டுதல் கொண்டவை,

இஸ்ரேலின் வான் பாதுகாப்பை முறியடிக்க முடிந்தால், ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் நகரங்களில் உள்ள முழு அமைச்சக அலுவலகங்களையும் தரைமட்டமாக்கப் போதுமானவை.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்

பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK

ஹமாஸூக்கு எதிரான இஸ்ரேலின் போரில் ஹிஸ்பொல்லா, ஈரான் ஆகியவை இறங்குவதை தடுப்பதற்காக, கிழக்கு மத்திய தரைக் கடலில் இரண்டு முழு விமானந்தாங்கிக் கப்பல் தாக்குதல் படைகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

காசாவில் மருத்துவமனை குண்டுவெடிப்புக்கு முன்னதாகவே அப்பகுதியில் பதற்றம் அதிகமாக இருந்தது. இஸ்ரேலிய தரைப் படைகள் காஸாவுக்குள் முழு அளவில் புகுந்து தாக்குதலை தொடங்கினால், லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா ஒரு புதிய போர் முனையை தொடங்கக் கூடிய ஆபத்தும் இருக்கிறது. அந்த தீப்பிழம்புகளை அணைப்பது எளிதல்ல.

இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்

பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK

இந்த மோதலில் இஸ்ரேலுக்கு எதிராக இரான் நேரடியாக போரில் இறங்கினால், அது அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் நேரடியாகப் போரில் சேரத் தூண்டுமா? இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமா? என பிரிட்டன் ஸ்கெல்மர்ஸ்டேலைச் சேர்ந்த கிரேக் ஜான்சன் கேட்டுள்ளார்.

அதற்கு, தெற்கு இஸ்ரேலில் இருந்து செய்தி சேகரிக்கும் எங்களது சர்வதேச செய்தி ஆசிரியர் ஜெர்மி போவன் பதிலளித்துள்ளார்.

அவர், “இரான் அல்லது அதன் லெபனான் கூட்டாளியான ஹிஸ்புல்லா தலையிடுவதற்கான சாத்தியக்கூறு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேட்டபோது, ஜோ பைடன் “வேண்டாம்” என பதிலளித்தார். (அவர்கள் தலையிட வேண்டாம் என்ற பொருள்படும்படி ஆங்கிலத்தில் பதிலளித்திருந்தார்)

அமெரிக்கா தங்களது இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை கிழக்கு மத்திய தரைக் கடலில் நிறுத்தியுள்ளது. அதன் மூலம் இரான் இதில் தலையிட வேணடாம் என்ற உறுதியான செய்தியை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

இரு தரப்புக்கும் தங்களது ஆபத்து தெரியும். ஒரு சுமூகமான உறவில் இருந்துவிட்டு, போருக்குச் சென்றால், அது உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த மத்திய கிழக்கில் தீப்பொறியைப் பற்ற வைக்கும்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஸ்ரேலின் நோக்கம் என்ன?

"எதிர்பார்க்கப்படும் தரைப் போரில் இஸ்ரேலின் ஒட்டுமொத்த நோக்கம் என்ன ? "என ஸ்காட்டிஷ் எல்லையில் உள்ள லூசியானோ சிசி கேட்டுள்ளார்.

இதற்கு தெற்கு இஸ்ரேலில் உள்ள எங்கள் தலைமை சர்வதேச செய்தியாளர் லைஸ் டூசெட் பதிலளித்துள்ளார்.

“கடந்த காலப் போர்களில் "ஹமாஸை கடுமையாக தாக்குவதாக" இஸ்ரேல் சபதம் செய்தது. இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகளை வீசும் அதன் திறன உட்பட, நிலத்தடி சுரங்கங்கள் என அனைத்தையும் அழித்துவிடும் எனக் கூறியிருந்தது.

ஆனால், தற்போது உள்ள சூழல் வேறு. இஸ்ரேல் "ஹமாஸை அழிப்பதாக" சபதம் செய்கிறது. ஐ.எஸ். இயக்கத்தைப் (Islamic State-IS) போல ஹமாஸ் அழிக்கப்பட வேண்டும் என இஸ்ரேல் கூறுகிறது.

ஹமாஸின் உள்கட்டமைப்பை உடைக்கவும், அதன் சுரங்கப்பாதைகளை நசுக்கவும், அதன் கட்டுப்பாட்டு அமைப்பை முடக்கவும் இஸ்ரேலுக்கு ராணுவ வலிமை உள்ளது.

ஆனால், காஸாவில் என்ன காத்திருக்கிறது என்பது இஸ்ரேலுக்கு எவ்வளவு தெரியும் என தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டமைப்பை தகர்க்கும் ஹமாஸின் ராணுவ வலிமை இஸ்ரேலியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஹமாஸ், மூர்க்கமான இஸ்ரேலியர்களை எதிர்கொள்ளும்போதும் அதே நுட்பமான உத்திகளை பயன்படுத்தக் கூடும்.

ஐ.எஸ். குழுவைப் போலல்லாமல், ஹமாஸ் என்பது பாலத்தீன சமூகத்தில் பொதிந்துள்ள ஒரு அரசியல் மற்றும் சமூக அமைப்பாகும்.

ஒரு ராணுவத் தாக்குதல் அதன் கட்டடங்களையும், பிறவற்றையும் அழித்துவிடும். ஆனால், ஒரு உறுதியான காரணத்திற்காக இறக்கத் தயாராக உள்ளவர்களின் உறுதி மேலும் வலுவாகும்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

ஹமாஸ் தாக்குதலின் நோக்கம் என்ன?

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்

இங்கிலாந்தில் உள்ள ஆண்ட்ரூ பார்க்கர், ஹமாஸ் தாக்குதலின் நோக்கம் என்ன? எனக் கேட்டுள்ளார்.

அதற்கு எங்கள் பாதுகாப்பு செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர் பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “ஹமாஸின் செய்தித் தொடர்பாளர் மொஹமட் அல்-டீஃப் இந்தத் தாக்குதலுக்கான காரணத்தை கூறினார்.

காஸா மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலியர்களால் பாலத்தீனர்கள் அனுபவித்த தொடர்ச்சியான அவமானங்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

வேறு, சொல்லப்படாத காரணங்கள் இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

தாக்குதலுக்கு முன்பு, இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் உறவுகளை சீராக்குவதற்கான பாதையில் இருந்தன.

இதை ஹமாஸ் மற்றும் அதன் ஆதரவாளரான ஈரானும் எதிர்த்தன. தற்போது அந்த பேச்சுவார்த்தையை சவுதி நிறுத்தி வைத்துள்ளது.

பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி அரசாங்கம் அறிமுகப்படுத்திய நீதித்துறை சீர்திருத்தங்களால் இஸ்ரேலிய சமுதாயத்தில் ஏற்பட்ட கூர்மையான பிளவுகளை ஹமாஸின் தலைமை கவனித்திருக்கும்.

அவர்கள் இஸ்ரேலுக்கு வலி மிகுந்த அடியை கொடுப்பதை நோக்கமாகக் கொண்டனர். அதில் அவர்கள் வெற்றி பெற்றனர்.

 

எகிப்து எல்லையை மூடி வைத்திருப்பது ஏன்?

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்

இஸ்லாமியர்கள் குடும்பம் மற்றும் இஸ்லாத்தின் சகோதரத்துவத்தைப் பற்றி பேசுகிறார்கள். எகிப்தில் உள்ள முஸ்லிம்கள் காஸாவுடனான எல்லையை மூடி வைத்திருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்? என இங்கிலாந்தில் உள்ள டயானா கேட்டுள்ளார்.

இதற்கு தெற்கு இஸ்ரேலில் இருந்து செய்தி சேகரிக்கும் எங்கள் சர்வதேச ஆசிரியர் ஜெர்மி போவன் பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “இஸ்லாம் ஒரு நம்பிக்கை. ஆனால் அது தேசிய பாதுகாப்பு அரசியலை தாண்டியது அல்ல.

லட்சக்கணக்கான எகிப்திய முஸ்லிம்கள் காஸாவில் உள்ள பொதுமக்களின் துன்பத்தைப் போக்க விரும்புகிறார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆனால், எகிப்திய அரசாங்கம், அமைதியான நேரங்களில் கூட, காஸாவிலிருந்து ரஃபா கடவுப்பாதை வழியாக வழக்கமான போக்குவரத்தை அனுமதிப்பதில்லை. 2007 இல் ஹமாஸ் காஸாவை கைப்பற்றியதில் இருந்து இஸ்ரேலின் ஒரு நட்பு நாடாக எகிப்து இருந்து வருகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எகிப்தில் நிறுவப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பில் ஹமாஸ் அதன் வேர்களைக் கொண்டுள்ளது. சகோதரத்துவம் இஸ்லாமிய போதனை மற்றும் நம்பிக்கைக்கு ஏற்ப நாடுகளையும் சமூகத்தையும் மறுவடிவமைக்க விரும்புகிறது.

எகிப்திய ராணுவம் அந்த ஆசையை எதிர்க்கிறது. அது 2013 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லீம் ஜனாதிபதியை அகற்றியது.

எகிப்தின் தற்போதைய ஆட்சியானது ஹமாஸுடன் உறவுகளைக் கொண்டுள்ளது. கடந்த காலத்தில் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இணைப்பாக இருந்தது. ஆனால், பாலத்தீன அகதிகளின் வருகையை அது விரும்பவில்லை.

சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகும் புதிதாக சுதந்திரம் பெற்ற இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை தங்க வைக்க காஸாவில் அகதிகள் முகாம்கள் உள்ளன. அவர்கள் ஒருபோதும் தங்களின் வீட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை.

 

ஹமாஸ் போர்க்குற்றம் செய்ததா?

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதினுக்கு எதிராக உலகம் சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்தது. ஹமாஸ் தலைமைக்கு எதிராக ஏன் அதே பதில் வரவில்லை? இது பெரிய அளவிலான போர்க்குற்றம் இல்லையா? என இங்கிலாந்தைச் சேர்ந்த சைமன் கேட்டுள்ளார்.

அதற்கு, நமது உலக விவகார நிருபர் பால் ஆடம்ஸ் பதிலளித்துள்ளார்.

அப்போது அவர், “முந்தைய சுற்று மோதல்கள் பல ஆண்டுகளாக நீடித்த போதிலும், அக்டோபர் 7 க்கு முன் ஹமாஸுடன் போரில் ஈடுபடுவதாக இஸ்ரேல் கருதவில்லை.

இஸ்ரேலைப் பொருத்தவரை இது ஒரு பயங்கரவாதச் செயல், போர் அல்ல.

பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் அதன் சொந்த வழியில் நீதியைப் பின்பற்றுகிறது. படுகொலைகளுக்குப் பொறுப்பாகக் கருதும் குறைந்தது இரண்டு ஹமாஸ் ஆயுதக்குழுவின் தளபதிகளை ஏற்கனவே கொன்றுவிட்டது.

அது இன்னும் பலரைக் கொல்ல முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கத்தார் மற்றும் லெபனானில் வசிக்கும் அந்த அமைப்பின் அரசியல் தலைமை பற்றி கேள்விகள் எழலாம். ஆனால், இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தும் ராணுவப் பிரிவின் திட்டங்களைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை என சிலர் கூறுகிறார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c1dk75ygzzno

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.