Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஒரு பாதை ஒரு மண்டலம்' முயற்சிக்கு இலங்கை முழுமையாக ஆதரவு : 'ஷி யான் - 6' கப்பலை அனுப்பாமலிருக்க சீனா தீர்மானம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 OCT, 2023 | 10:34 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

'ஒரு பாதை ஒரு மண்டலம்' முன்முயற்சி திட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின்போது எழுத்து மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இராஜதந்திர கொந்தளிப்புகளை பிராந்தியத்தில் ஏற்படுத்தியுள்ள 'ஷி யான்  6' ஆய்வுக் கப்பலை இலங்கைக்கு அனுப்பாதிருக்க சீனா தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடவிருந்த குறித்த சீன ஆய்வுக் கப்பலின் வருகையை நவம்பர் மாதம் வரை ஒத்திவைக்குமாறு அரசாங்கம் கோரியிருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே 'ஷி யான் - 6' ஆய்வுக் கப்பலின் இலங்கைக்கான விஜயத்தை சீன தரப்பு இரத்து செய்துள்ளதாக அறிய முடிகிறது. ஆனால் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பலான ஷியாங் ஹொங் 6 என்ற கப்பலை எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு அனுப்புவதற்கான தீர்மானத்தில் எவ்விதமான மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

'ஒரு பாதை ஒரு மண்டலம்' முன்முயற்சி திட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின்போது எழுத்து மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் விவசாயம், கடற்றொழில், எண்ணெய் சுத்திகரிப்பு, வர்த்தக வலயங்கள் மற்றும் உள்ளக தொழில்துறை என்று 10க்கும் மேற்பட்ட திட்டங்களை இலங்கையில் முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்தை அரசாங்கம் சீனாவுக்கு வழங்கியுள்ளது.

எனவே சீனாவின் இலக்கான 'ஒரு பாதை ஒரு மண்டலம்' முன்முயற்சி திட்டத்துக்குள் இலங்கையை முழுமையாக உள்வாங்குவதாகும். அந்த இலக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்துடன் வெற்றி கண்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே இலங்கையின் கோரிக்கையை கருத்தில் கொண்டு குறித்த கப்பலின் விஜயம் தடுக்கப்பட்டுள்ளது.

ஷி யான் - 6  என்ற சீன ஆய்வுக் கப்பல் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு விஜயம் செய்து நவம்பர் மாதம் வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை கடற்பரப்புகளில் நங்கூரமிட்டு பல்வேறு ஆய்வு நடவடிக்கைளை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தது.

இராஜதந்திர கொந்தளிப்புகள்

இலங்கையில் சீனாவின் ஆழமான கால் தடங்கள் குறித்து இந்தியா தனது கவலையை இலங்கையுடன் பல முறை பகிர்ந்து கொண்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய டெல்லி விஜயத்தின் போது, இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு மற்றும் மூலோபாய கவலைகள் குறித்து கருத்தில் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் உறுதியளிக்கப்பட்டது.  

இருப்பினும் ஷி யான் 6 ஆய்வுக் கப்பல்களுக்கு இலங்கை அனுமதியளித்ததாகவும், ஏற்கனவே கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணிக்கக்கூடிய அதி நவீன யுவான் வாங் 5 என்ற சீன உளவுக் கப்பல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பல எதிர்ப்புகளை கடந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்ட அனுமதித்தமையும் இருதரப்பு இராஜதந்திர உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தியது.

'ஒரு பாதை ஒரு மண்டலம்' முன்முயற்சி திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் மேலும் பல திட்டங்களை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/167478

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.