Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாடுகள் ஏப்பம் விடுவதைக் கட்டுப்படுத்த கோடிக்கணக்கில் செலவிடும் நியூசிலாந்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பண்ணைத் தொழிலில் இருந்து வெளியேறும் மீத்தேனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நியூசிலாந்து தனது வேளாண் துறை மீத்தேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், எலன் ரைக்கர்ஸ்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

நியூசிலாந்தில் 1 கோடி பசுக்கள் மற்றும் 2 கோடியே 60 லட்சம் ஆடுகள் உள்ளன. புவி வெப்பமடைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் இலக்குகளை அடைய, அந்நாடு அறிவியல் மற்றும் தனித்துவமான கொள்கையைப் பயன்படுத்தி, கால்நடை வளர்ப்பு தொழிலில் இருந்து அதிக அளவிலான மீத்தேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இளம் காளை ஒன்று பிளாஸ்டிக் டப்பாவில் இடப்பட்டுள்ள காய்ந்த உருண்டைகளை வாயில் எடுத்து, மென்று, காதுகளை அசைத்து, ஏப்பம் விடுகிறது. அப்போது அது வெளியேற்றும் காற்றில் எந்த அளவுக்கு மீத்தேன் வாயு கலந்துள்ளது என்பதைக் கண்டறிய ஹூட் என்ற உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மொபைல் பீஸ்ஸா அடுப்பைப் போல தோற்றமளிக்கும் சக்கரங்களில் ஒரு கான்ட்ராப்ஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதில் எந்த அளவுக்கு மீத்தேன் வெளிப்படுகிறது என்பதை மிகவும் துல்லியமாக அளவிடமுடியும். இந்த வாயு புவி வெப்பமடைவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் வாயுவாக இருக்கிறது. 20 ஆண்டு காலத்தில் இந்த வாயு கார்பன் டை ஆக்ஸைடை விட 84 மடங்கு அதிகமாக வெப்பத்தை உருவாக்கியுள்ளது.

காளை ஏப்பம் விடும்போது, சுவாசிக்கும்போது அதன் செரிமானப் பாதையில் இருந்து வெளியேறும் வாயுவை, ஒரு உறிஞ்சும் விசிறியால் வினாடிக்கு 40 லிட்டர் (8.8 கேலன்கள்) வரை இழுக்கப்பட்டு, கிரீன்ஃபீட் அமைப்பு எனப்படும் இந்தக் கருவியில் மீத்தேனின் அளவு கணக்கிடப்படுகிறது.

சில நிமிட நேரம் மட்டுமே சாப்பிடும் காளை ஏப்பத்தின் மூலமாகவோ, மூச்சு மூலமாகவோ வெளியேற்றும் காற்றில் எவ்வளவு மீத்தேன் வாயு உள்ளது என்பதை இந்த அளவு மூலம் துல்லியமாகக் கணக்கிட முடியும். அதன் செரிமான அமைப்பு எவ்வளவு மீத்தேன் வாயுவை வெளியேறுகிறது என்பதைப் பற்றிய ஒரு படம் இந்த அளவீடு மூலம் உருவாக்கப்படுகிறது.

நியூசிலாந்தில் உள்ள வேளாண்-தொழில்நுட்ப கூட்டுறவு கால்நடை மேம்பாட்டுக் கழகத்தின் (எல்ஐசி) மூத்த விஞ்ஞானி லோர்னா மெக்நாட்டன், ஒரு கணினியின் மானிட்டரில் காட்டப்படும் தரவுகளை ஆய்வு செய்கிறார். சில காளைகள் அதிக அளவில் மீத்தேனை வெளியேற்றுகின்றன என்றும், சில காளைகள் குறைவாக வெளியேற்றுகின்றன என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆறு முதல் 15 மாதங்களுக்கு இடைப்பட்ட வயதுடைய காளைக் கன்றுகள், "இளைஞர்களைப் போல, எல்லாவிதமான குறும்புகளையும் செய்கின்றன," என்கிறார் மெக்நாட்டன். இந்த காளைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளை அளித்து ஒரு நாளைக்கு ஆறு முறை கிரீன்ஃபீட் அமைப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன என மெக்நாட்டன் கூறுகிறார். இந்த காளைகள் ஒரே தொழுவத்தில் சுமார் 40 நாட்கள் வைக்கப்பட்டு, அவை வெளியேற்றும் மீத்தேன் அளவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கின்றனர்.

மாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

2021 முதல், பல்வேறு நிறுவனங்கள் இணைந்து, 800 இளம் காளைகள் வெளியேற்றும் மீத்தேன் அளவை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இயற்கையாகவே குறைவான மீத்தேன் உற்பத்தி செய்யும் கறவை மாடுகளை வளர்ப்பதற்கான முயற்சிகளில் இது முதல் படியாகும் - இதன் மூலம் இந்த ஆற்றல்மிக்க பசுமைக்குடில் வாயுவான மீத்தேனைக் குறைக்க இது ஒரு வழி என நியூசிலாந்து கருதுகிறது.

இது போன்ற கால்நடைகளால் நியூசிலாந்தில் அசாதாரண அளவுக்கு மீத்தேன் வாயு வெளியேற்றப்படுகிறது. அந்நாட்டில் வளர்க்கப்படும் ஒரு கோடி பசுக்கள் மற்றும் 2 கோடியே 60 லட்சம் ஆடுகள் தான் இந்த அளவுக்கு மீத்தேனை உற்பத்தி செய்கின்றன. கிட்டத்தட்ட நாட்டின் பாதி அளவுக்கான மீத்தேன் உற்பத்தி பண்ணைத் தொழில்களில் இருந்து செய்யப்படும் நிலையில், மொத்த மீத்தேனின் அளவில் இது 43 சதவிகிதமாக இருக்கிறது. இதில் 85 சதவிகிதம் கால்நடை வளர்ப்பு மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக ஒரு பிரச்னையாக மாறிக்கொண்டிருக்கும் கார்பன் டை ஆக்சைடு போலல்லாமல், பெரும்பாலான மீத்தேன் வாயு கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளுக்குள் தான் உற்பத்தியாகியிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், மீத்தேனைச் சமாளிப்பது மிகவும் சிரமமான வேலையாக இருக்கும். உலகளாவிய ‘மீத்தேன் உறுதிமொழியின்’ படி, 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் மீத்தேன் வெளியேற்றத்தை 30% குறைப்பதன் மூலம் 2050 ஆம் ஆண்டில் 0.2C (0.36F) அளவுக்கு வெப்பத்தைக் குறைக்க முடியும்.

உலகளாவிய ‘மீத்தேன் உறுதிமொழியில்’ கையெழுத்திட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்றாகும். ஆனால் மற்ற நாடுகள் எண்ணெய் வயல்கள் மற்றும் இயற்கை எரிவாயு குழாய்களில் இருந்து கசிவை அடைப்பது முதல் பல்வேறு செயல் திட்டங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போது, நியூசிலாந்தின் கவனம் நுண்ணுயிரிகளால் வெளியேற்றப்படும் மீத்தேன் மீது படிந்துள்ளது.

பண்ணை விலங்குகளின் செரிமானப் பாதைகளில் மீத்தேன் வாயு உற்பத்தியாகி அது வளிமண்டலத்தில் கலக்கிறது. எனவே அந்நாட்டு அரசு நீண்ட காலமாக இதை ஒரு முக்கியப் பிரச்னையாகவே கருதி வருகிறது. மேலும், இது போல் மீத்தேன் வாயு உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அந்நாட்டு அரசு அதன் ‘காலநிலை இலக்குகளை’ எட்டிவிட முடியும் என நம்பினால், அதற்கு இந்த நடவடிக்கைதான் மிகச் சிறந்தது எனக்கருதப்படுகிறது.

இந்தச் செயல்முறை இரண்டு படிகளைக் கொண்டது. இப்படி பயோஜெனிக் மீத்தேன் அளவைக்கு குறைப்பதற்கான இலக்கு, 2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டது. 2030 ஆம் ஆண்டுக்குள் 24 முதல் 47 சதவிகிதம் மீத்தேன் உற்பத்தியைக் குறைத்து 2017-ல் இருந்த நிலையை எட்டவும், 2050 ஆம் ஆண்டுக்குள் 10 சதவிகித அளவு மீத்தேன் உற்பத்தியைக் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் 2050 ஆம் ஆண்டில் வெப்ப அளவை 1.5C என்ற நிலைக்குக் கீழ் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் உலகளாவிய செயல்முறைகளுக்கு இசைவாக இருக்கவேண்டும் என்றும் அந்நாட்டு அரசு கருதுகிறது. மேலும், இதன் மூலம் பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தத்தையும் நிறைவேற்ற முடியும் என நியூசிலாந்து அரசு நம்புகிறது.

2022 இல், நியூசிலாந்து பசுமைக் குடில் வாயுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான அதன் உத்தியை வெளியிட்டது. மேலும், ‘மீத்தேன் உற்பத்திக் குறைப்புத்’ திட்டத்தில், நாடு முழுவதும் உற்பத்தியாகும் மீத்தேனின் அளவில், விவசாயத் துறையில் இது போன்ற தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதன் மூலம் அந்நாடு கணிசமான வெற்றியைப் பெறமுடியும்.

ஆனால் அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் இந்தக் கொள்கையில் ஒரு தொய்வை ஏற்படுத்திய நிலையில், அந்நாட்டு அரசு இதுவரை நடைமுறையில் இல்லாத மரபணு திருத்தம் போன்ற தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இது போன்ற சூழ்நிலையில், விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட நியூசிலாந்து மீத்தேன் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதில் என்ன நடவடிக்கையைத் தொடரப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
பண்ணைத் தொழிலில் இருந்து வெளியேறும் மீத்தேனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நியூசிலாந்தில் 1 கோடி கால்நடைகள் உள்ளன என்பதுடன் அந்நாட்டின் தேசிய அளவில் உருவாகும் பசுமைக் குடில் வாயுக்கள் வேளாண் தொழில்களில் இருந்து உற்பத்தியாகின்றன.

"ஒரு வெள்ளி தோட்டா பற்றிய இந்த யோசனை மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. ஆனால் இதற்கு பல்வேறு நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தேவைப்படும்," என நியூசிலாந்து வேளாண்மை பசுமைக் குடில் வாயு தொடர்பான ஆராய்ச்சி மையத்தின் (NZAGRC) முதன்மை அறிவியல் ஆலோசகர் சினேட் லீஹி கூறுகிறார்.

இந்த மையம் (NZAGRC) 2009 ஆம் ஆண்டு முதல் இது போன்ற தீர்வுகளை எட்ட முற்பட்டுவருகிறது. இது நேரடியாக ஆராய்ச்சி குழுக்களை பணியமர்த்தவில்லை. ஆனால் தடுப்பு முறைகள் மற்றும் மீத்தேன் போன்ற புதிய தொழில்நுட்பங்களை ஆய்வு செய்யும் வெளிப்புற குழுக்களுக்கு உத்தி ரீதியாக நிதியளிக்கிறது.

இந்த ஆராய்ச்சிக்கான உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை உருவாக்க இது வரை இந்த அமைப்பு சுமார் 460 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் மதிப்பாய்வு ஆராய்ச்சி ஒன்று இது போன்ற பணிகள் "விஞ்ஞான ரீதியாக சவாலானது" என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் "சாத்தியமான மற்றும் நடைமுறைத் தணிப்புக்கான வழிகளில்" நிலவும் குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டு வருகின்றன. தற்போது கிடைக்கக்கூடிய அணுகுமுறைகள் - பெரும்பாலும் கறவை மாடுகள் எத்தனை முறை பால் கொடுக்கின்றன என்பதையும், அதற்கு எவ்வளவு மீத்தேன் வாயுவை வெளியேற்றுகின்றன, அவை பண்ணைகளில் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதைக் கண்டறியும் பணிகளைப் போல உள்ளன. இதில் போதிய மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் 10% அளவுக்கு மீத்தேன் உற்பத்தி குறைக்கப்படும் என ஒரு மதிப்பாய்வு கூறுகிறது.

"ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த உத்தி பெரும்பாலும் உண்மைதான் எனத்தெரியவந்துள்ளது. நியூசிலாந்தின் 2030 ஆம் ஆண்டின் இலக்கு, 2017 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மீத்தேன் அளவை எட்டும் வகையில் 10% உற்பத்தியைக் குறைக்கும். "சவால்" "2030 என்ற இலக்கை அடையும் நேரத்தில் வரம்பிற்குட்பட்ட தொழில்நுட்பங்கள் கிடைக்கலாம்," என லோர்னா மெக்நாட்டன் மதிப்பிடுகிறார். நீண்ட காலத்திற்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் திறனைப் பற்றி லீஹி அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார். "இது போன்ற அறிவியல் பூர்வமான பணிகளில் முதலீடு செய்வதன் தொடர்ச்சியாக 2030 முதல் 2040 வரையிலான காலகட்டத்திற்குள் அதற்கான பலன்கள் கிடைக்கும் என்பதை நாங்கள் உண்மையில் எதிர்பார்க்கிறோம்," என அவர் சொல்கிறார். இதற்கிடையில், நில பயன்பாட்டு மாற்றங்கள் மற்றும் கழிவுகளை நிர்வகிப்பதில், விவசாயிகளுக்கு போதிய பயிற்சி அளிப்பதன் மூலம் மீத்தேன் உற்பத்திக் குறைப்புக்கான இலக்கில் பெரும்பாலும் பயன் மிகுந்ததாக இருக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

மீத்தேன் உற்பத்தியை தடுக்கும் தடுப்பான்கள், புதிய தொழில்நுட்பங்களில் ஒன்றாக இருக்கலாம். இது போன்ற ஒரு தடுப்பான் ஏற்கனவே சர்வதேச அளவில் சந்தையில் கிடைக்கிறது. டச்சு நிறுவனம் உருவாக்கிய போவேர் எனப்படும் தீவன சேர்க்கை ஒரு நல்ல மீத்தேன் தடுப்பானாக உள்ளது. இந்த தீவனக் கலவை கறவை மாடுகளின் மீத்தேன் உற்பத்தியை 30% வரை குறைக்கிறது. ஆனால் கறவை மாடுகள் தீவனத்தை எடுத்துக்கொள்ளும் போது ஒவ்வொரு வாய்க்கும் இந்த தீவனம் சேர்க்கப்படவேண்டும். இந்த தீவனக் கலவையை நியூசிலாந்தின் மேய்ச்சல் அமைப்பில் செயல்படுத்துவது கொஞ்சம் சிரமமானது. அங்கு கால்நடைகள் மேய்ச்சல் வெளியில் புற்களை மேய்கின்றன. "எங்கள் அமைப்பில் இந்த தீவனக் கலவையை அளிக்கும் முயற்சியை செயல்படுத்தி பொருளாதார ரீதியாக லாபத்தை ஈட்டும் பயனுள்ள வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்," என லீஹி கூறுகிறார்.

மாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மற்றொரு கவர்ச்சிகரமான தொழில்நுட்ப தீர்வு என்னவென்றால், ஒரு மீத்தேன் உற்பத்தியைத் தடுக்கும் ஒரு தடுப்பு மருந்து. ஆனால் இந்த தடுப்பூசி, 2030 ஆம் ஆண்டளவில் தயாராகும் வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படி அது சாத்தியப்பட்டால் அது நீண்ட காலம் பலனளிக்கும் என்பதுடன் மேய்ச்சல் அடிப்படையிலான விவசாயத்திற்கும் பொருத்தமாக இருக்கும். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது போன்ற ஒரு தடுப்பூசி கண்களுக்குத் தென்படவில்லை.

"ஆனால் எங்களிடம் இந்த கருத்துக்கான எந்த ஆதாரமும் இல்லை," என லீஹி கூறுகிறார். "இருப்பினும் இன்றுவரை எந்த பரிசோதனையும் இது போன்ற ஒரு முயற்சி பலனளிக்காது என்பதைக் காட்டவில்லை. எனவே இத்தகவல் ஊக்கமளிப்பதாக இருக்கிறது," என்கிறார் அவர். நியூசிலாந்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனமான அக்ரிசர்ச் (AgResearch)-ன் விஞ்ஞானிகள் இது போன்ற ஒரு தடுப்பானைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் சோதனை அளவில் வெற்றிபெற்றுள்ளனர். இருந்தும் செம்மறி ஆடுகளுக்கு இந்த தடுப்பூசி மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் இன்னும் வெற்றிபெறவில்லை.

விவசாயிகளிடம் ஒரு யோசனை இருக்க வாய்ப்புள்ளது. 'தடுப்பான்கள் அல்லது தடுப்பூசிகளை விட, குறைவான மீத்தேன் உற்பத்தி செய்யும் கால்நடை இனத்தை உருவாக்குவது மற்றும் அவற்றை இனப்பெருக்கம் செய்வதன் மூலம் நாட்டின் மீத்தேன் உற்பத்தியைக் குறைக்கலாம். இதன் மூலம் நியூசிலாந்து நாட்டின் மொத்த உற்பத்தியில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கை குறைக்கமுடியும்.

"குறைந்த அளவு மீத்தேனை உற்பத்தி செய்யும் இனத்துக்கும் மற்ற இனங்களுக்கும் இடையே மற்ற இனங்களுக்கும் இடையே 15 முதல் 20% வரை வேறுபாடுகளைக் காண்கிறோம்," என மெக் நாட்டன் கூறுகிறார். "எனவே நான் அமைதியாக நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்."

ஆராய்ச்சி முடிவுகள் நம்பிக்கைக்குரியதாக இருப்பதாக லீஹி ஒப்புக்கொள்கிறார். ஆனால் தரவுகளை சேகரிக்க இன்னும் நிறைய ஆராய்ச்சி மற்றும் நேரம் தேவை என்று அவர் குறிப்பிடுகிறார். "பசுக்களின் பண்பைச் சரிபார்த்து, குறைவான மீத்தேன் உற்பத்தியைக் கொண்டிருக்கும் பசுக்களை இனப்பெருக்கம் செய்வதில் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்த இன்னும் பல வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது." என்று அவர் சொல்கிறார்.

அமெரிக்க கறவை மாடுகளில் இருந்து குறைந்த மீத்தேன் வெளியேற்றும் மாடுகள் சிறியனவாகவும், சிறிய குடல்களைக் கொண்டவையாகவும் இருக்க்கலாம். ஆனால் அவற்றின் பால் உற்பத்தி குறைவாக இருக்காது என்று பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், 15% குறைவான மீத்தேன் வெளியேற்றும் ஐரிஷ் பசுக்கள், அதே அளவு தீவனத்தை எடுத்துக்கொள்கின்றன என்றும், அதே அளவு பால் தருகின்றன என்றும் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி தெரியவந்துள்ளது.

நியூசிலாந்து ஆய்வு நிறுவனங்களில் இதுவரை கண்டறியப்பட்ட குறைந்த அளவில் மீத்தேன் வெளியேற்றும் பசுக்களின் கன்றுகளிடம் இதேபோன்ற ஆய்வு நடந்து வருகிறது. பால் உற்பத்தி குறைதல் போன்ற பாதகமான விளைவுகள் ஏதேனும் இருந்தால் அந்த மாடுகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும்.

2026 ஆம் ஆண்டுக்குள், இது போன்ற ஆராய்ச்சிகளில் எந்த வித பின்னடைவுகளும் ஏற்படவில்லை என்றால், ஆராய்ச்சி நிறுவனங்கள் நியூசிலாந்தின் 90% கறவை மாடுகளை செயற்கை கருவூட்டல் மூலம் உற்பத்தி செய்துவிடும் வாய்ப்பு உள்ளது. இதன் பொருள் என்னவென்றால், குறைந்த அளவு மீத்தேனை வெளியேற்றும் பசுக்களை பண்ணையாளர்கள் தேர்வு செய்யும் நிலை உருவாகும் என்பதே ஆகும்.

 
பண்ணைத் தொழிலில் இருந்து வெளியேறும் மீத்தேனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

குறைந்த அளவு மீத்தேன் வெளியேற்றும் செம்மறி ஆடுகளை இனப்பெருக்கம் செய்வதற்கான வழியை நியூசிலாந்து கண்டறிந்துள்ளது.

குறைந்த அளவு மீத்தேன் வெளியேற்றும் கறவை மாடுகளை இனப்பெருக்கம் செய்வதென்பது ஆடுகள் எவ்வளவு மீத்தேனை உற்பத்தி செய்கிறது என்பதன் அடிப்படையிலும் அமையும். ஆடுகள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 13கிலோ மீத்தேன் வாயுவை வெளியிடும் போது, ஒரு கறவை மாடுக்கு 98 கிலோ மீத்தேனை வெளியிடுகிறது. "செம்மறி ஆடுகளை கையாள்வது மிகவும் எளிதானது," என அக்ரிசர்ச்சின் மூத்த விஞ்ஞானி சுஸான் ரோவ் கூறுகிறார். "அவற்றின் கர்ப்ப காலம் மிகவும் குறைவு," என்கிறார் அவர்.

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ரோவ் மற்றும் அக்ரிசர்ச் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு ஒன்று செம்மறி ஆடுகளின் மீத்தேன் வெளியேற்ற அளவு ஒவ்வொரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறையில் மாறுவதில்லை என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டது. அக்குழுவினர் நியூசிலாந்து முழுவதிலும் இருந்து 1,000 ஆடுகளைச் சேகரித்து சுவாச அறையைப் பயன்படுத்தி 48 மணி நேரத்திற்கும் மேலாக அவற்றின் மீத்தேன் வாயு வெளியீட்டை அளவிடத் தொடங்கினர்.

"அந்த 1,000 விலங்குகளும் வெளியேற்றிய மீத்தேனை அளக்க பல ஆண்டுகள் ஆனது," என ரோவ் கூறுகிறார். 48 மணிநேரம் என்பதற்கு பதிலாக ஒரு மணிநேரத்திற்கு அளவீட்டைச் செம்மைப்படுத்துவதற்கான கடினமான செயல்முறையை அவர் விளக்குகிறார். "அந்த பெரிய சவால்" நிறைந்த பணி, மூன்று நம்பமுடியாத பயனுள்ள விஷயங்களை வெளிப்படுத்தியது. அவை: குறைந்த அளவு மீத்தேன் வெளியேற்றும் செம்மறி ஆடுகள், அதிக அளவு வெளியேற்றும் செம்மறி ஆடுகள், மற்றும் வேகமான மீத்தேன் அளவீட்டுக்கான சிறிய கருவியின் பயன்பாடு.

இரண்டு மந்தைகளும் சௌத் ஐலாண்டில் உள்ள ஒரே பண்ணைக்கு இடம் மாற்றப்பட்டன. அதிக அளவு மீத்தேன் வெளியேற்றும் ஆடுகள் அதே ரக ஆடுகளுடன் இனப்பெருக்கம் செய்யவும், குறைந்த அளவு மீத்தேன் வெளியேற்றும் ஆடுகள் அதே ரக ஆடுகளுடனும் இனப்பெருக்கம் செய்யப்பட்டன. இப்படி இனப்பெருக்கம் செய்யப்பட்ட போது, குறைந்த அளவு மீத்தேனை வெளியேற்றும் ஆடுகளின் புதிய ஆட்டுக்குட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு சதவிகிதம் வரை குறைவான மீத்தேனை வெளியிடுவதைக் கண்டறிந்தனர்.

இன்று அதிக மற்றும் குறைந்த மந்தைகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் சராசரியாக 18% ஆகும். கூடுதலாக, மீத்தேன் அளவு குறைவது பிற பண்புகளின் அடிப்படையில் உருவாவதாகத் தெரியவில்லை. உண்மையில், இதுவரை வெளிப்பட்ட மாற்றங்கள் நேர்மறையானவை. "குறைந்த அளவு மீத்தேனை வெளியேற்றும் ஆடுகளின் உடலில் அதிக அளவிலான ரோமங்களும் இருந்தன," என ரோவ் கூறுகிறார். "அவற்றின் பால் மற்றும் இறைச்சியில் சற்று வித்தியாசமான கொழுப்பு அமிலம் இருப்பதையும், அவை மெலிந்த உடலைக் கொண்டிருந்ததையும் நாங்கள் கண்டறிந்தோம்."

இதற்கிடையில், 'கூல் ஷீப்' திட்டத்தின் மூலம் நியூசிலாந்து முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கையடக்க மீத்தேன் அளவீட்டுக் கருவிகளின் துணை கொண்டு ஆடுகள் வெளிப்படுத்தும் மீத்தேன் அளவு துல்லியமாகக் கண்டறியப்பட்டது. "நாங்கள் பல்வேறு பண்ணைகளிலிருந்து ஆடுகள் வெளியேற்றும் மீத்தேனை அளப்பதற்காக, கிராமப்புறங்களில் ஏறி இறங்குகிறோம்," என ரோவ் கூறுகிறார். அவருடைய குழுவினர் இப்போது 30,000 ஆடுகள் வரை அவை வெளியேற்றும் மீத்தேனை அளந்துள்ளதாக அவர் மதிப்பிடுகிறார். "விவசாயிகள் தங்கள் சொந்த மந்தைகளுக்குள்ளேயே குறைந்த அளவு மீத்தேனை வெளியேற்றும் ஆடுகளைத் தேர்வு செய்யும் வகையில் இத்திட்டம் உள்ளது," என ரோவ் விளக்குகிறார். "அது ஏன் மிகவும் முக்கியமானது என்றால் அவர்கள் தேர்வு செய்யும் ஆடுகள் ஏற்கனவே அந்த சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன."

 
பண்ணைத் தொழிலில் இருந்து வெளியேறும் மீத்தேனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நியூசிலாந்தின் காலநிலை மாற்ற ஆணையம், அந்நாட்டின் தற்போதைய நீண்ட கால மீத்தேன் குறைப்பு இலக்குகளை அடையும் கொள்கைகளில் தவறிழைத்துள்ளது என எச்சரித்துள்ளது.

நியூசிலாந்து நாட்டின் மீத்தேன் வெளியேற்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? செம்மறி ஆடுகளுக்கு, ஆண்டுக்கு 0.5 முதல் 1% வரை மீத்தேன் வெளியேற்றம் குறைவதாக ரோவ் மதிப்பிடுகிறார். "காலப்போக்கில், அது விரைவில் கணிசமான அளவுக்குக் குறைகிறது," என அவர் சொல்கிறார். "மற்ற நன்மை என்னவென்றால், அது குறைந்த செலவில் நிறைவேற்றக்கூடிய பணியாகவும், நிரந்தரமானதுமாக உள்ளது." ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கத்தின் தாக்கமும் மெதுவாக வெளிப்படுத்துகிறது. ஏனெனில் மரபணுக்கள் உடனடியாக செயல்படுவதை விட காலப்போக்கில் மெதுவான மாற்றங்களைப் பெறுகின்றன.

கனடாவில், குறைந்த மீத்தேன் வெளியேற்றும் காளைகளின் விந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் வணிக ரீதியாக விற்பனைக்கு வந்தது. குறைந்த மீத்தேன் பண்பை ஏற்றுக்கொள்வது கனடாவின் பால் உற்பத்தித் துறையின் மீத்தேன் வெளியேற்றத்தை 2050 ஆம் ஆண்டளவில் 20-30% குறைக்கலாம் என்று மரபியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனமான செமெக்ஸ் கூறுகிறது .

2021 ஆம் ஆண்டில், நாட்டின் காலநிலை மாற்ற ஆணையம், செம்மறி ஆடுகள் மற்றும் மாடுகளுக்கு குறைந்த மீத்தேன் இனப்பெருக்கம் செய்வதன் மூலம் 4.5–7.5% அளவுக்கு மீத்தேன் வெளியேற்றம் குறையும் என்று பரிந்துரைத்தது. 2050க்குள். கறவை மாடுகளுக்கு, இந்த வகை இனப்பெருக்கம் செய்வது 2030 முதல் பரவலாக்கப்படும் என்றும், 2050க்குள் 7.5–13.5% மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைக்கமுடியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான முயற்சிகள் அணிவகுப்புத்து வரும் நிலையில், பண்ணை சார் தொழில்களில் மீத்தேன் உற்பத்தியைக் குறைக்கும் செலவினங்கள் குறித்த அச்சம் பெரிதாக உள்ளது. பண்ணைத் தொழில்களில் மீத்தேன் உற்பத்தியைக் குறைக்க ‘வேளாண் உமிழ்வு வரியை’ அறிமுகப்படுத்திய நியூசிலாந்தின் முதல் முயற்சி 2003 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்துவருகிறது. அப்போது 'ஃபார்ட் வரி'-க்கு எதிராக மக்களிடையே பெரும் போராட்டம் வெடித்தது. 'ஃபார்ட் வரி' ஒரு தவறான வரி. பெரும்பாலான வாயுக்கள் மூக்கு மற்றும் வாய் வழியாக முன் முனையிலிருந்து வெளியேற்றப்படுவதால், லீஹி கூறுகிறார்: "சுமார் 75:25 விகுதியிலான வாயுக்கள் நாசி அல்லது வாய் மூலம் வெளியேற்றப்படுகிறது"

அந்த வரி மூலம் ஆராய்ச்சிக்காக வருடத்திற்கு 84 லட்சம் நியூசிலாந்து டாலர்கள் ஈட்டித்தந்திருக்கும். இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், ஒரு எம்.பி. டிராக்டரை நாடாளுமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏற்றிப் போராட்டம் நடத்தினார். மற்றொருவர் இரண்டு மாடுகளை நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றிப் பிடித்துச் சென்றார். இது போல் நாடாளுமன்றத்தின் முன் போராட்டங்கள் நடந்தன.

அப்போதிருந்து, பண்ணை சார் வேளாண் துறை நியூசிலாந்தின் மீத்தேன் வெளியேற்றத்தை வர்த்தக ரீதியாகப் பார்ப்பதைத் தவிர்க்க கடுமையாக வற்புறுத்தி வந்தது. இது அதன் சுற்றுச் சூழல் மாசுபாட்டிற்கு வணிக ரீதியான மதிப்பை அளிக்கும் ஒரு வெளிப்புறத் தொழிலாக ஆக்கியது.

 
பண்ணைத் தொழிலில் இருந்து வெளியேறும் மீத்தேனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

புதிய திட்டங்களின் மூலம் மீத்தேன் பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நியூசிலாந்து அரசு உறுதியளித்துள்ளது.

2017 இல், பண்ணை சார் தொழில்களையும் பசுமை வரித் திட்டத்துக்குள் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்த ஜசிந்தா ஆர்டெர்ன், எதிர்பாராத விதமாக நாட்டின் பிரதமரானார். அவருடைய திட்டத்தின்படி, பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றுபவர்கள் அதற்கான பெர்மிட்டுகளைப் பெறவேண்டும். தொடக்கத்தில் இலவசமாக அளிக்கப்பட்ட இந்த பெர்மிட்டுகளை பின்னர் அரசு ஏலம் விட்டது. இதற்கான திட்டத்தை வகுக்க வேளாண் துறையும், அரசும் ஒரு தனி உடன்படிக்கையை நிறைவேற்றின. இத்திட்டத்தின் வடிவமைப்பு செயல்பாட்டின் போது வழங்கப்பட்ட ஆலோசனையில், நியூசிலாந்தின் காலநிலை மாற்ற ஆணையம் ஒரு முக்கியமான கருவியாகச் செயல்பட்டது.

இறுதித் திட்டம், டிசம்பர் 2022 இல் அறிவிக்கப்பட்டது. மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றுக்கான பெர்மிட்டுகளின் வெவ்வேறு ஐந்தாண்டு விலைகளை அரசாங்கம் நிர்ணயிக்கும். விவசாய பிரதிநிதிகள் மற்றும் காலநிலை மாற்ற ஆணையத்தின் உள்ளீடுகளுடன். இந்தத் திட்டம் 2025 இல் நடைமுறைக்கு வரவிருந்தது, ஆனால் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் திட்டம் வீழ்ச்சியடைந்தது. ஒரு புதிய மைய-வலது கூட்டணி, மாடுகள் ஏப்பம் மூலம் வெளியேற்றும் மீத்தேன் வாயுவுக்கு வரி விதிக்கும் திட்டத்தை 2030 ஆம் ஆண்டுக்குத் தள்ளிவைத்தது.

மீத்தேன் வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான வரிவிதிப்பு கொள்கையில் நிபுணத்துவம் பெற்ற நியூசிலாந்தின் பொருளாதார வல்லுனர் சுசி கெர், "சரிவிதிப்பை தாமதப்படுத்துவது எதிர்காலத்தில் அத்திட்டத்தை நடைமுறைச் சாத்தியமில்லாத திட்டமாக மாற்றிவிடும்,” என்கிறார்.

"அப்போது அவசரப்பட்டால அதற்கு மிகுந்த விலை கொடுக்கவேண்டியிருக்கும்," என்கிறார் அவர்.

மாடு ஏப்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கெர்ரின் கூற்றுப்படி, இது போன்ற ஒரு பசுமை வரி திட்டம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டும் பயனளிக்காது. இது நியூசிலாந்து விவசாயிகளுக்கு நிலையான சந்தை சமிக்ஞைகள் மற்றும் அவர்களின் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைக்கு வெகுமதி அளிப்பதற்கான வழிமுறையை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

"உலகளாவிய கண்ணோட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளும் இந்த மறைமுகமான நிலையில் விவசாயிகள் உள்ளனர்," என கெர் கூறுகிறார்.

குறைந்த அளவில் பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றுபவர்களின் சராசரிக்கும் இடையே 15 முதல் 20% வேறுபாடுகளைக் காண்கிறோம் என லோர்னா மெக்நாட்டன் கூறுகிறார்.

வரி நிர்ணய திட்டம் இல்லாமல், நியூசிலாந்து அதன் மீத்தேன் குறைப்பு இலக்குகளை அடைய முடியுமா? "நியூசிலாந்தின் வரலாறு இல்லை என்ற திலையே தருகிறது," என கெர் கூறுகிறார்.

2021 இல், விவசாயத் துறையில் இருந்து வெளியேறும் பசுமைக் குடில் வாயு 1.5% குறைந்துள்ளது. குறைந்த ஆடு மற்றும் மாடுகளின் காரணமாக இந்த விளைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இது ஒரு சிறிய அளவு மட்டுமே. மேலும் இது ஒரு புதிய போக்கைக் குறிக்க போதுமானதாக இல்லை என்று கெர் கூறுகிறார். "பசுமைக் குடில் வாயு உமிழ்வைக் குறைப்பதில் ஏற்பட்ட மேம்பாடுகள் அதிகரித்த உற்பத்தி அளவுகளால் ஈடுசெய்யப்பட்டுள்ளன," என அவர் கூறுகிறார். "அவை சில இடங்களில் குறைய ஆரம்பித்தாலும், கிட்டத்தட்ட வேகமாக குறையவில்லை."

அண்மையில் வெளியிடப்பட்ட ஆலோசனையில், நியூசிலாந்து அதன் ஒட்டுமொத்த வாயு உமிழ்வு குறைப்பு இலக்குகளை அடையும் பாதையில் இல்லை என்று காலநிலை மாற்ற ஆணையம் எச்சரித்துள்ளது. மீத்தேனைப் பொறுத்தவரை, "தற்போதுள்ள கொள்கைகள் மட்டும்... 2030 ஆம் ஆண்டுக்கான இலக்கை அடைய போதுமான அளவு உதவாது," என அந்த ஆணையம் எச்சரித்துள்ளது.

2030 ஆம் ஆணடுக்குள் 10% மீத்தேன் குறைப்பை எட்டுவதற்கும், நீண்ட கால அடிப்படையில் 2050 ஆம் ஆண்டுக்கான இலக்கை அடைவதற்கும், 2025 முதல் விவசாயத்துக்கு பசுமை வரியை நிர்ணயிப்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. புதிய தொழில்நுட்பம், பலதரப்பட்ட நிலப் பயன்பாடு மற்றும் பண்ணையில் செயல்திறனை அதிகரிப்பது ஆகியவையும் 2030 ஆம் ஆண்டுக்கான இலக்கில் பங்கு வகிக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

குறைந்த அளவு மீத்தேன் வெளியேற்றும் விலங்குகளை இனப்பெருக்கம் செய்வது, மீத்தேன் தடுப்பான்கள் மற்றும் தடுப்பூசிகளின் வளர்ச்சியுடன், நியூசிலாந்து அதன் நீண்டகால காலநிலை இலக்குகளை அடைய உதவும் என்று ஆணையம் குறிப்பிடுகிறது.

தேர்தலுக்கு முன், அக்டோபரில் 2023 ஆம் ஆண்டு இது குறித்து ஒரு பகுப்பாய்வு நடத்தப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் மற்றும் புதிய கொள்கை என நிலைமை திசை மாறியது. புதிய காலநிலை மாற்ற அமைச்சர் ஆணையத்தின் அறிவுரையை வரவேற்றிருப்பதுடன், இதில் அரசாங்கம் "உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதில் பல்வேறு அரசியல் சார்ந்த நடவடிக்கைகளின் தலையீடு இருப்பதால் ஆணையத்தின் அறிவுரைக்கு அவர்கள் செவிசாய்க்கிறார்களா என்பது புதிய அரசாங்கத்தைப் பொறுத்தது.

பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் அந்த நாடு ஒப்புக்கொள்ளப்பட்ட வாயு உமிழ்வு குறைப்பு இலக்குகளை அடையத் தவறினால், அது தேவையின்றி பில்லியன் கணக்கான டாலர்களை செலவழிக்க வேண்டியிருக்கும்.

உத்தியோகபூர்வ இலக்குகளுக்கு ஏற்ப மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைப்பது "சவாலானது" என்று லீஹி கூறுகிறார். ஆனால் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். விலங்குகளின் மூலம் உற்பத்தியாகும் மீத்தேன் அளவைக் குறைப்பது கூட எவ்வளவு தொலைவுக்கு சாத்தியமானது என்று அவருக்குத் தெரியவில்லை. இது குறித்த விளக்கங்களை அவர் அளித்த போது, "இன்றைக்கு வேகமாக முன்னேறுங்கள். மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து நமக்கு உதவ இருக்கின்றன. நம்பிக்கையுடன் உங்கள் பணிகளைத் தொடருங்கள்," என அவர் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cn0qg9p6py3o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.