Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமஷ்டி மூலமாக மட்டும் தான் தீர்வு என்று ஐ.தே.க எப்போதும் கூறவில்லை- ரவி கருணாநாயக்கா

Featured Replies

தேசியப் பிரச்சினைக்கு சமஷ்டி மூலமாகத் தீர்வு காணவேண்டும் என்று ஐ.தே.க ஒருபோதும் கூறவில்லை. மூவின மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அதிகாரப் பகிர்வு மூலமே தீவுர் அமைய வேண்டும் என்பது தான் ஐ.தே.கட்சியின் நிலைப்பாடு. சமஷ்டி தான் ஐ.தே.க நிலைப்பாடு என்று ஊடகங்கள் தான் கூறிவருகின்றன. நாம் ஒரு போதும் அப்படிக் கூறவில்லை.இவ்வாறு ஐ.தே.கவின் நா.உறுப்பினர் ரவி கருணாநாயக்க நேற்று எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றறுகையில் கூறினார்.

அவர் தொடர்ந்தும் கூறியவை :-

'தேசிய பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வொன்றை முன்வைக்க இந்த அரசு தயாரில்லல. யுத்தத்தையே அது நம்பியுள்ளது.'யுத்தம் மூலம் ஒரு போதும் தீர்வு காணமுடியாது என்பது இந்த உலகமே அறிந்த உண்மை. அந்த உண்மையை ஒருபோதும் இந்த அரசால் பொய்யாக்க முடியாது'.

'பேச்சு மூலம் தான் தேசியப்பிரச்சினைக்கு தீர்வு என்று சர்வதேச நாடுகளுக்குக் கூறிக் கொண்டு யுத்தம் மூலமே தீர்வு காண அரசு முயல்கின்றது'.

'பதவிக்கு வந்து மூன்று மாதங்களுள் அரசியல் தீர்வு யோசனையை முன்வைப்போம் என்று அரசு கூறியது. சர்வகட்சி மாநாட்டைத் தொடங்கி 13 மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் எந்தத் தீர்வும் முன் வைக்கப்படவில்லை'.

'தேசிய பிரச்சினைக்காண தீர்வு பேச்சு மூலமா அல்லது யுத்தம் மூலமா என்பதை அரசு தெளிவாகச் சொல்ல வேண்டும். அதைவிட்டு விட்டு பயங்கரவாதத்தை ஒழிக்கவும புலிகளின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடதவுமே இராணுவ நடவடிக்கை முன்னேடுக்கப்படுகிறது என்று கூறுவதில் அர்த்தமில்லை'.

'பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் நாமும் உடன்படுகிறோம். ஆனால், அதற்காக யுத்தம் மூலம் தீர்வு காண முற்படுவதை ஏற்க முடியாது'.

'தேசிய பிரச்சினைக்கு எவ்வாறன தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பது ஜனாதிபதிக்குத் தெரியாது.

'சமஷ்டி, ஒற்றை ஆட்சி மற்றும ஐக்கிய இலங்கை போன்ற சொற்பதங்களோடு அரசு முட்டி மோதுகிறது. எந்தப் பதத்தைத் தேர்ந்தெடுப்பதென்பது தெரியாமல் அரசு தடுமாறுகிறது'.

'அமையப் போகும் தீர்வு எதுவாக இருந்தாலும் அது மூவினங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அதிகாரப்பகிர்வாக இருக் வேண்டும். அப்படியானதோரு தீர்வுக்கு எந்தப் பதத்தையும் பாவித்துக் கொள்ளலாம். சொற்பதத்தில் பிரச்சினையே இல்லை. வழங்கப்படும் தீர்வுதான் முக்கியம்'.

'ஐ.தே.க உச்ச மட்ட அதிகாரப் பதிர்வையே வலியுறுத்தி வருகின்றது அது சமஷ்டி ஊடான அதிகாரப்பதிவு என்று சொல்ல முடியாது'.

'சமஷ்டி தான் எமது நிலைப்பாடு என்று ஊடகங்கள் கூறிவருகின்றன. ஆனால் நாம் அப்படிச் சொல்வில்ல. அதிகாரப்பகிர்வைக் கொண்ட தீர்வுதான் எமது நிலைப்பாடு. அதில் சமஷ்டியை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க முடியும்'.

'சமஷ்டி ஊடான தீர்வு யோசனையை ஒஸ்லோ பேச்சின் போது புலிகள்தன் முன்வைத்தனர். அதன் அடிப்படையில் பேச்சு மட்டும் நடைபெற்றது. அதனூடாகத்தான் தீர்வு என்று நாம் கூறவில்லை.சொற்பதங்கள் பற்றி எமக்குப் பிரச்சினை இல்லை. மூவினங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அதிகாரப்பகிர்வின் ஊடாகவே தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பது தான் எமது நிலைப்பாடு" . இப்படி அவர் கூறினார்.

ஓஸ்லே பிரகடனம்

ஐ.தே.க ஆட்சியில் இருந்த காலத்தில் ஓஸ்லோவில் கையெழுத்திடப்பட்ட பிரகடனத்தில், இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு குறித்து பரிசீலனை செய்வதற்கு ஐ.தே.கட்சி இணங்கி இருந்தது குறிப்படத் தக்கது.உள்ளக சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு

தீர்வு ஒன்றை எட்டுவதற்கான சாத்தியம் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று ஒஸ்லோ பிரகடனத்தில் தெரிவிக்கபட்டிருந்தது.

பேச்சல் கலந்து கொண்ட விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் குழுத் தலைவர் அன்டன் பாலசிங்கமும் அரசதரப்புப் பிரதிநிதிகள் குழுத் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசும் ஒஸ்லோ பிரகடனத்தில் கைச்சாத்திட்டிருந்தனர்.

இனப்பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வை பரிசீலனை செய்ய அன்று ஐ.தே.கட்சி இணங்கியிருந்தாலும், ஆறு வருடங்களின் பின்னர் தோன்றியுள்ள தற்போதைய நிலவரம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதன் பின்னர் சமஷ்டி நிலைப்பாடடில் இருந்து முற்றாக விலகிக் கொள்வதற்கு ஐ.தே.கட்சித் தலைமை தீர்மானித்தாக ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி : சுடர் ஒளி

  • தொடங்கியவர்

2002ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அப்போதைய ஐ.தே.க அரசுக்கும் இடையில் செய்து கொள்ளபட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு ஐ.தே.கட்சி உடன்படும் என்று தெரிவித்தள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடந்த ஊடுகவியலாளர் சந்திப்பின் போது ரவி கருணாநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

தேவை ஏற்படின் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்து அந்த ஒப்பந்தத்தைப் பலப்படுத்துமாறு அரசுக்கு அவர் நேற்று வேண்டுகோள் விடுத்தார்.

ரவி காருணாநாயக்க மேலும் பேசுகையில் கூறியவை வருமாரு :-

'எமது ஆட்சியின் போது புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் பலப்படுத்தப்படாமையினாலேயே இப்போது யுத்தம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

"யுத்த நிறுத்த ஒப்பந்தம இன்னும் ரத்துச் செய்யப்படவில்லை. அது நடைமுறையில் தான் உள்ளது. ஆனால், அதை இரு தரப்பினரும் முறையாகப் பின்பற்றத் தவறுகின்றனர்'.

'யுத்த நிறுத்த ஒப்பந்தம் உரிய முறையில் பேணப்படாவிடட்டால் சமாதானப் பேச்சை முன்னெடுப்பது சாத்தியமில்லை. எமது ஆட்சிக்காலத்தில் இந்த உண்மையை நாம் உணர்ந்தோம்'.

'யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தபட்டு அது முறையாகப் பின்பற்றப்பட்டதன் காரணமாகவே புலிகளுடன் எம்மால் ஆறு சுற்றுப் பேச்சுக்களை நடத்த முடிந்தது. நாட்டில் அமைதியும் நிலவியது'.

'அப்படிப்பட்ட ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் தான் உள்ளது. ஆனாலும், அதை எவரும் பின்பற்றுவதில்லை. தற்போது களநிலைமைகள் மாறி இருப்பதால் அவசியம் ஏற்பட்டால் ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்து ஒப்பந்தத்தைப் பலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

நன்றி : சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.