Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலி ஆற்றின் குடிநீர் செயற்றிட்டத்தினால் பாதகம் நிகழக்கூடாது: ஜீவன் தொண்டமானுக்கு அவசர கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலி ஆற்றின் குடிநீர் செயற்றிட்டத்தினால் பாதகம் நிகழக்கூடாது: ஜீவன் தொண்டமானுக்கு அவசர கடிதம்

Screenshot-2023-12-28-at-10.43.25%E2%80%

பாலி ஆற்றின் குடிநீர் செயற்றிட்டத்தினால் விவசாயிகளது நலனுக்கு எதுவித பாதகமும் நிகழக்கூடாது என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இவ்விடயம் குறித்து நீர் வழங்கல் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு இன்றைய தினம்(28) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

பாலி ஆற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு போகும் செயற்றிட்டம் ஆரம்பிக்கவுள்ளதை வரவேற்கின்றோம்.

ஆனால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளது நலனுக்கு எதுவித பாதகமும் நீண்ட கால அடிப்படையில் நிகழக்கூடாது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த துறைசார்ந்த திணைக் களங்களுடனும் விவசாயிகளுடனும் தீர்க்கமான உரையாடல் மேற்கொள்ளப்படவில்லை.

358 ஹெக்டேயருக்கு மட்டுமே நீர்பாசனம் வழங்குவதாக தங்கள் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது 513 ஹெக்டேயர் பயிர் செய்யப்படுவதாக கமநல சேவை திணைக்கள தகவல் தெரிவிக்கின்றன.

தற்போது எட்டுக்குளங்கள் காலபோகம், சிறுபோகம் செய்கைக்கு பாலியாற்றில் இருந்து நீர் பெறுகின்றன. அதிலும் சிறு போகத்திற்கு ஏழு தொடக்கம், ஒன்பது தடவைகள் நீர் நிரப்ப வேண்டும்.

மழை குறைந்த காலத்தில் தாங்கள் அமைக்க இருக்கும் நீர்த்தேக்கத்திலிருந்து எப்படி நீரை விடுவிப்பீர்கள்.

குடிநீருக்கா? அல்லது விவசாயத்திற்கா? முதன்மைப்படுத்துவது எனும் நிலை உருவாகும். இவ்வருட சிறுபோகத்தில் கடம்பன்குளம் விவசாயிகளுக்கும் காரையன்கண்ணாடி விவசாயிகளுக்கும் பாலியாற்று நீர்ப் பகிர்வில் பெரும் பிரச்சினை உருவாகியது.

பாலி ஆற்றின் குடிநீர் செயற்றிட்டத்தினால் பாதகம் நிகழக்கூடாது: ஜீவன் தொண்டமானுக்கு அவசர கடிதம் | Project From Bali River

இது மாத்திரமன்றி கோடை காலத்தில் பாலியாற்று நீர் வராவிட்டால் நிலத்தடி நீர் குறைவடையும். அதனால் பாலியாற்றுக்கரையின் இருபுறமும் உள்ள மேட்டுநில செய்கை விவசாயம் முழுமையாக பாதிக்கப்படும்.

அதனால் அவர்களுக்கு பெரும் வாழ்வாதார இழப்பு ஏற்படும் என அஞ்சுவதாக எம்மிடம் கூறுகின்றனர். தற்போது உள்ள வயல் காணியை விட மேலும் சில ஆண்டுகளில் ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலம் அதிகரிப்பதற்கான ஏது நிலை காணப்படுவதாகவும் அதற்கு நீர் பெறுவது எவ்வகையில் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

பாலியாற்றில் மழை காலத்தில் கடலுக்குள் கலக்கும் உபரி நீரை யாழிற்கான குடிநீர் திட்டம் உருவாக்குகிறோம். எனும் போர்வையில் தமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு விடுமோ என அந்தப் பகுதி விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

எனவே இத் திட்டம் தொடங்குவதற்கு முன்னதாக துறைசார்ந்த திணைக்களங்கள் விவசாய அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோருடன் அராங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் மேற்கொண்டு இவற்றுக்கு தீர்வு காணுதல் அவசியமாகும்.

பாலி ஆற்றின் குடிநீர் செயற்றிட்டத்தினால் பாதகம் நிகழக்கூடாது: ஜீவன் தொண்டமானுக்கு அவசர கடிதம் | Project From Bali River

இதற்கு மாறாக அதிகாரிகள் தான் தோன்றித்தனமாக செயற்படுத்த முனைந்தால் அதன் விளைவு விபரிதமாகும்.

என்பதுடன் இரணைமடு குடிநீர் விவகாரம் போல் நிகழலாம். என்பதையும் முன்னெச்சரிக்கையுடன் அறியத்தருகின்றோம்” என குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://akkinikkunchu.com/?p=264231

  • கருத்துக்கள உறவுகள்

1) சிறீதரனின் நிலைதான் நகைப்பிற்குரியது. எல்லோருக்கும் பொதுவானவராக வந்திருக்க வேண்டிய சிறீதரன்  தற்போது கிளிநொச்சிக்கு மட்டுமே உரியவராகிவிட்டார். 

2) யாழ்ப்பாணத்தால் புறக்கணிக்கப்பட்ட மன்னார்  மாவட்டம்தான்  யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை  வழங்குவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறது. 

இந்த மாற்றத்தை குழப்புவதற்கு இடமளிக்கக் கூடாது. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

1) சிறீதரனின் நிலைதான் நகைப்பிற்குரியது. எல்லோருக்கும் பொதுவானவராக வந்திருக்க வேண்டிய சிறீதரன்  தற்போது கிளிநொச்சிக்கு மட்டுமே உரியவராகிவிட்டார். 

2) யாழ்ப்பாணத்தால் புறக்கணிக்கப்பட்ட மன்னார்  மாவட்டம்தான்  யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை  வழங்குவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறது. 

இந்த மாற்றத்தை குழப்புவதற்கு இடமளிக்கக் கூடாது. 

 

 

ஸ்ரீதரனுக்கு கிளிநொச்சிதான் வாழக்கை கொடுத்தது. அவரது சொத்துக்கள் வயல்காணிகள் எல்லாம் அங்குதான் இருக்கிறது. அந்த வயல் காணிகள் இரணைமடு குளத்தின் கீழ் அமைந்துள்ளதால்தான் அங்குள்ள விவசாயிகளின் உதவியுடன் யாழுக்கு நீர் கொண்டு செல்வதை எதிர்த்தவர். அதை தடுத்தும் விடடார்கள்.இப்போது மன்னார் மக்களின் நீராதாரத்தை யாழுக்கு கொண்டுபோவது அவருக்கு பிரச்சினை இல்லை.

இப்போதும்கூட மன்னார் மக்கள் இந்த திடத்தை எதிர்க்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். இந்த சிவகாரன் கூட மன்னார் மாவட்த்தை சேர்ந்தவர் இல்லை. ஆனால் அங்கு அரசியல் செய்கிறார். எனவே அவருக்கு ஸ்ரீதரனைப்போல ஒரு போராட்டம் தேவைப்படுகின்றது.

இந்த திடடம் இப்போது தொடங்கப்பட்ட்து இல்லை. பல வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்டு தொடங்கப்படட ஒன்று. நிதி நெருக்கடியினால் இடைநிறுத்தப்பட்ட்து. இதெல்லாம் இப்போது வந்த சிவகாரனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே ஸ்ரீதரன், சிவகாரன் எல்லாம் சுயநல அரசியல்வாதிகள். இவர்கள்தான் தமிழர்களை வழிநடத்த போகிறார்கள். தலை எழுத்து. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.