Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடளாவிய ரீதியில் சுகாதார சேவைகளுடன் இணைந்த 10 தொழிற்சங்கங்கள் இன்று காலை 8 மணிமுதல் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றன.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி, குறித்த 10 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம், அரச மருந்தாளர்கள் சங்கம், மருத்துவ ஆய்வக தொழில் வல்லுநர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை தாதியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இதன்காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மருத்துவ சேவை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ள சென்றுள்ள நோயாளர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

https://thinakkural.lk/article/287727

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார அமைச்சரும் ஒரு வைத்தியர். அரசியலை விட்டு போனால் வைத்திய தொழில்தான் செய்ய வேண்டும். அதை எல்லாம் கணக்கில் கொண்டு நல்ல ஒரு சம்பளஉயர்வு கொடுத்திருக்கிறார். என்ன, இப்போது மக்கள்தான் படாத பாடு பட்டு திரிகிறார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார தரப்பினர் தொழிற்சங்க நடவடிக்கை: இராணுவத்தினர் அரச வைத்தியசாலைகளில் கடமையில்

news-01-6.jpg

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் சுகாதார தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தத்திற்கு பதிலடியாக, அத்தியாவசிய சேவைகளை பேணுவதற்கும் இடையூறு இல்லாத நோயாளர் பராமரிப்பை உறுதி செய்வதற்கும் இலங்கை இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கோரிக்கையின் அடிப்படையில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, பாதுகாப்புப் படைத் தளபதிகளுக்குத் தேவைக்கேற்ப படைகளை அனுப்புவதற்குத் தயார்படுத்துமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, மேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களுக்கான பாதுகாப்புப் படைத் தளபதிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி பொது வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, மஹமோதர போதனா வைத்தியசாலை, குருநாகல் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய வைத்தியசாலைகளுக்கு இராணுவத்தினரை அனுப்பியுள்ளனர். , அத்துடன் மாத்தறை, பலாங்கொடை, எஹலியகொட, நாவலப்பிட்டி, பதுளை, கம்பளை, மற்றும் மீரிகம ஆகிய அரச வைத்தியசாலைகளிகளிலும் இராணுவத்தினர் கடமையில் உள்ளனர்.

கிட்டத்தட்ட 500 வீரர்கள் தற்போது முக்கியமான நடவடிக்கைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

லெப்டினன்ட் ஜெனரல் லியனகே, விரைவான மற்றும் திறமையான நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தினார், மேலும் இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்புப் படைத் தளபதிகளை மேலதிக துருப்புக்களை அனுப்புவதற்கு தயார்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

தொழிற்சங்க நடவடிக்கை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பொதுமக்களின் அசௌகரியங்களை குறைத்து, தடையற்ற மருத்துவ சேவையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

வேலை நிலைமைகளை மேம்படுத்துதல் மற்றும் சம்பள உயர்வு போன்ற சிறு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/287827

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.