Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏமனுக்குள் புகுந்து இரான் ஆதரவு பெற்ற ஹூத்திகள் மீது அமெரிக்கா, பிரிட்டன் பல்முனை தாக்குதல்

ஏமன் மீது அமெரிக்க தாக்குதல்

பட மூலாதாரம்,MINISTRY OF DEFENCE/PA WIRE

12 ஜனவரி 2024, 06:35 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் ஏமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது பல்முனை தாக்குதல்கள் நடத்தியுள்ளன.

கடந்த நவம்பவர் மாதம் முதல், செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்களுக்கான எதிர்வினையே இது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மக்களை பாதுகாக்கவும், சர்வதேச வர்த்தகத்தை உறுதி செய்யவும், இந்த தாக்குதல்களை தீவிரப்படுத்த தயங்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இந்த தாக்குதல்களுக்கு நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பஹ்ரைன் ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

ஏன் செங்கடலில் தாக்குதல்கள் நடைபெறுகின்றன?

கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடங்கியதை அடுத்து, ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் தாக்குதல்களை அதிகரித்தனர். இந்த தாக்குதல்களை நடத்தும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களை ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று அழைத்துக்கொள்கின்றனர். ஏமனின் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். எனினும், ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட அனைத்துக் கப்பல்களும் உண்மையில் இஸ்ரேலை நோக்கிச் சென்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இரானின் ஆதரவு பெற்றதாக அறியப்படுகிறது.

 
ஏமன் மீது அமெரிக்க தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏமனில் எங்கெல்லாம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன?

அக்டோபர் மாதம் முதல் செங்கடலில் சர்வதேச கடல்வழித்தடத்தில் சென்ற 27 கப்பல்களை ஹூத்திகளை தாக்கியுள்ளன என்றும் இதனால் 55 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் ராயல் விமானப் படையின் போர்விமானங்கள், குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலை நடத்த உதவி புரிந்ததாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள் வரையறுக்கப்பட்டவை, அவசியமானவை மற்றும் தற்காப்புக்கு தேவையான அளவில் நடத்தப்பட்டவை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடல் வழி சுதந்திர பயணத்துக்கும், தடையில்லா வர்த்தகத்துக்கும் பிரிட்டன் துணை நிற்கும் என்று கூறியிருந்தார்.

சைப்ரஸிலிருந்து பறந்த, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் நான்கு டைஃபூன் ஜெட் விமானங்கள் இரண்டு ஹூத்தி இலக்குகள் மீது குண்டு வீசின.

இந்த தாக்குதல்கள் ஏமனின் தலைநகர் சனா, செங்கடலில் உள்ள ஏமனின் துறைமுகம் ஹுதயா, தமர் நகரம், சாதா நகரம் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. ஜனவரி 11ம் தேதி காலை 2.30 மணியளவில் அமெரிக்க போர்க்கப்பல் தோமாஹாக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ஜெட் விமானங்கள் 12க்கும் மேற்பட்ட இடங்களை குறி வைத்து தாக்கின என்று தாக்குதல்கள் குறித்த விவரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

செங்கடலில் வர்த்தகப் போக்குவரத்தை சீர் செய்ய இந்த தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஹூத்தி வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஹுசைன் அல்-எஸ்ஸி, இந்த அப்பட்டமான தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.

 
யேமன் மீது அமெரிக்க தாக்குதல்

பட மூலாதாரம்,REUTERS

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாய்ட் ஆஸ்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டு ராணுவ நடவடிக்கைகள் ஹூத்திகளை வலுவிழக்க செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்திருந்தார்.

ஹூத்திகளின் ஆளில்லா விமானம், ஆளில்லா கப்பல், தரை வழி தாக்குதல் நடத்தும் ஏவுகணை, கடலோர மற்றும் வான்வழி கண்காணிப்பு கருவிகள் ஆகியவற்றை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் விளக்கியுள்ளார்.

உடல் நலம் குன்றியுள்ள ஆஸ்டின் , மருத்துவமனையிலிருந்து இந்த தாக்குதல்களை நேரடியாக மேற்பார்வையிட்டார்.

ஏமன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹூத்திகளுக்கு எதிரான பத்து நாடுகள் கூட்டறிக்கை

ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, தென் கொரியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய அரசுகள் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் ஒத்த கருத்து இருப்பதாக கூறும் அந்த அறிக்கை, கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், செங்கடலில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஹூத்திகள் நிறுத்த வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுட்டிக்காட்டியது.

ஹூத்திகள் மீது நடத்தப்படும் பல்முனை தாக்குதல்கள், தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த தற்காப்புக்காக நடத்தப்படுவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“உலக மிக முக்கியன் கடல்வழிபாதைகளில் ஒன்றில் சர்வதேச வர்த்தகம் மற்றும் சர்வதேச மாலுமிகளின் உயிருக்கு அச்சுறுத்துலாக இருக்கும் ஹூத்திகளின் திறன் மற்றும் சக்தியை வலுவிழக்க செய்யவே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” என்று அந்த அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. செங்கடலில் நிலவும் பதற்றத்தை தணித்து நிலைமைகளை சீராக்கும் நோக்கில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூத்திகள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்களுக்கு, அவர்கள் தரப்பிலிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

யேமன் மீது அமெரிக்க தாக்குதல்

பட மூலாதாரம்,FAREED KOTB/ANADOLU VIA GETTY IMAGES

சவுதி அரேபியா என்ன சொல்கிறது?

இதற்கிடையில், செங்கடலில் தாக்குதல்களை அதிகரிக்க வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தியுள்ளது. அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கடலில் பாதுகாப்பான சூழல் நிலவுவதன் முக்கியத்துவத்தை சவுதி அரேபியா உணர்கிறது. ஏமனில் நடைபெறும் பல்முனை தாக்குதல்கள் குறித்து சவுதி அரேபியா கவலைக் கொள்கிறது. எனவே அமெரிக்கா மற்றும் அதன் உடன் நிற்கும் நாடுகள் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹூத்திகள் என்ன கூறுகிறார்கள்?

ஹூத்திகள் இந்த தாக்குதல்களுக்கு பயப்படவில்லை என்று தெளிவாக தெரிகிறது. ஹூத்தி அதிகாரிகளில் ஒருவர், “அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கற்பனைக்கு அப்பாற்பட்டு அவர்களின் எதிர்பார்ப்புகளை விக பெரியதாக இந்த போர் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஹூத்திகளின் செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல்சலாம், “ஏமனுக்கு எதிரான இந்த தாக்குதல்களுக்கு எந்தவித நியாயமும் கிடையாது. செங்கடல் மற்றும் அரபிக்கடல்களில் சர்வதேச போக்குவரத்துக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. இஸ்ரேல் கப்பல்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனின் துறைமுகங்கள் நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அது இனியும் தொடரும்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தங்கள் தாக்குதல்களினால், பாலத்தீன் மற்றும் காஸாவுக்கு ஆதரவு அளிப்பதை ஏமன் கைவிடும் என்று நினைப்பது தவறு” என்று X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

பிற நாடுகள் என்ன கூறுகின்றன?

இரான் வெளியுறவுத்துறை அமைச்சகம், ஏமன் மீதான தாக்குதல்களை கண்டித்துள்ளது. “ஏமனின் இறையாண்மையை, பிராந்திய உரிமையை மீறும் செயலாகும். சர்வதேச சட்டங்களையும் இந்த தாக்குதல்கள் மீறுகின்றன. இந்த தாக்குதல்களின் அச்சமும், நிலையற்றத்தன்மையுமே” என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி தெரிவித்துள்ளார்.

இரானின் ஆதரவு பெற்ற லெபனான் ஆயுதக்குழு ஹிஸ்புல்லாவும் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளது. “காஸா மீது சியோனிச எதிரி நடத்திய படுகொலைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் அமெரிக்கா முழு உடந்தை என்பது இந்த தாக்குதல்கள் காட்டுகின்றன” என்று ஹிஸ்புல்லா கூறியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி கூறுகிறது.

இராக் பிரதமர் அலுவலகம் “இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான மோதலை இந்த பிராந்தியம் முழுவதும் நீட்டிக்கிறது அமெரிக்கா” என்று கூறியுள்ளது.

பிரிட்டன் ராணுவத்தின் முன்னாள் தலைவர் லார்ட் டன்னட் பிபிசியிடம் பேசுகையில், இரான் இந்த விவகாரத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. ஹூத்திகள் மட்டுமல்ல, ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகியவற்றுக்கான ஆதரவையும் வழங்குகிறது. இந்த தாக்குதல்கள் துல்லியமாக கணக்கிடப்பட்டு நடத்தப்படுபவையாக இருந்தால், செங்கடலில் நிலவும் பிரச்னையை துரிதமாக தீர்க்க உதவும். மீண்டும் நமது கவனத்தை இஸ்ரேல் காஸா போரை கட்டுப்படுத்தப்பட்டதாக வைத்திருக்க செலுத்த முடியும்” என்று கூறினார்.

பிரிட்டன் ஆயுதமேந்தி படைகளின் அமைச்சர் ஜேம்ஸ் ஹேப்பி “நமது நாட்டின், படைகள் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக திட்டமிட்டு நடத்தியுள்ளனர். இதில் நிறைய ஆபத்துகள் இருந்தன. நேற்று இரவு அவர்கள் செய்த காரியத்துக்காக நாம் பெருமைப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cnd7771x7zko

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகள் சர்வதேச சட்ட்ங்களை மதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே ஹூத்தி பயங்கரவாதிகளின் செயட்பாடும் அப்படியே இருக்கும். வயிற்றில் கத்தியை சொருகிக்கொண்டு வந்தால் சர்வதேச நாடுகள் பயந்து விடுவார்கள் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அவர்களுக்கு ஆயத்தங்களை வழங்கும் ஈரானும் அப்படி நினைத்திருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏமன்: ஹூத்திகள் அமெரிக்காவின் தாக்குதலை எப்படி எதிர்கொள்வார்கள்?

ஹூத்திக்கள் மீது தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹூத்தியின் ரேடார் தளத்தை அமெரிக்கா ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஏமனில் உள்ள ஹூத்தி கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அமெரிக்கா ராணுவம் இரண்டாவது முறையாக வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஏமனில் உள்ள ஹூத்தியின் ரேடார் தளத்தை அமெரிக்காவின் டோமாஹாக்(Tomohawk) ஏவுகணைகளைக் கொண்டு சனிக்கிழமை காலை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.

இந்தத் தாக்குதல் இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு நடந்துள்ளது. செங்கடலைத் தளமாகக் கொண்டு இயங்கும் அமெரிக்காவின் கடற்படை போர்க் கப்பலால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று(வெள்ளிக்கிழமை) ஹூத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனில் இருந்து வந்த ட்ரோன்களை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியிருந்தது.

இன்று(சனிக்கிழமை) காலை நடத்தப்பட்ட தாக்குதல், நேற்று எடுக்கப்பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சிதான் என்றும் அமெரிக்க ராணுவம் கூறியது. மேலும், செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் உள்ளிட்ட கப்பல்களைத் தாக்கும் ஹூத்திகளின் திறனைக் குறைக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு காரணம் என்ன?

ஏமனில் அமெரிக்கா தாக்குதல்

பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES

படக்குறிப்பு,

ஏமனில் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படம்

முன்னதாக, செங்கடலில் மூன்று வணிகக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானதையடுத்து, அமெரிக்க போர்க்கப்பல் மூன்று ஆள்ளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி ஆயுதக் குழுவினர் ஏமனில் இருந்து குறிவைப்பதால், பிரிட்டன் உள்ளிட்ட 14 நாடுகளுக்குத் தொடர்புடைய கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை உதவியதாக அமெரிக்க ராணுவம் கூறியது.

இரண்டு கப்பல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டன, ஆனால் எந்த உயிரிழப்பும் இல்லை என்றும் அமெரிக்க ராணுவம் கடந்த காரம் கூறியது. ஆனால், ஹூத்தி ஆயுதக்குழுவின் செய்தித் தொடர்பாளர் இரண்டு இஸ்ரேலிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறினார்.

ஆனால், அந்தக் கப்பல்களுக்கும் இஸ்ரேலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் ராணுவம் கூறியது. இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி ஆயுதக்குழுவினர் 2014இல் நாட்டின் அரசாங்கத்தைக் கவிழ்த்ததில் இருந்து ஏமனின் சில பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், இது உள்நாட்டுப் போரைத் தூண்டியது.

காஸாவில் இரான் ஆதரவுடைய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுடன் சண்டையிட்டு வருவதால், ஹூத்திகள் செங்கடலில் உள்ள இஸ்ரேலுக்கு தொடர்புடைய கப்பல்களை சமீபகாலமாகக் குறிவைத்து வருகின்றனர்.

ஏமனில் அமெரிக்கா தாக்குதல்

பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES

படக்குறிப்பு,

ஏமனில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்குப் பின் எடுக்கப்பட்ட புகைப்படம்

'ஹூத்திகள் சுதந்தரமான எண்ணம் கொண்டவர்கள்'

ஹூத்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தற்போதைய நிகழ்வுகள், காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு இடையே நடக்கும் மோதல்களுக்கு நேரடியாகத் தொடர்புடையது என்றும், அந்தப் பிராந்தியத்தில் ஏற்கெனவே இருக்கும் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்றும் பிபிசியின் சர்வதேச செய்தி ஆசிரியர் ஜெர்மி போவன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஹூத்திகள் உடனடியாக பதிலடி கொடுப்பதாகக் கூறியுள்ளனர். இராக் மற்றும் சிரியாவில் உள்ள இரான் ஆதரவு ஆயுதக்குழுவினர், பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக ஜெர்மி போவன் கூறியுள்ளார்.

"ஏமனில் உள்ள ஹூத்திகளுடன் நான் சிறிது காலம் இருந்துள்ளேன். அவர்கள் மிகவும் சுதந்திரமான எண்ணம் கொண்டவர்கள். அவர்கள் அமெரிக்கர்களுடன் மோதலை விரும்புவார்கள். அவர்கள் இஸ்ரேல்-ஹமாஸ் போரின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள். என்ன நடக்கிறது என்பது ஹூத்திகளுக்கும் இரானின் இஸ்லாமிய குடியரசுக்கும் தெரியும்," என்கிறார் அவர்.

தாக்குதலுக்கு அஞ்சுமா ஹூத்தி ஆயுதக்குழு?

ஹூத்தி ஆயுதக்குழு

பட மூலாதாரம்,MINISTRY OF DEFENCE/PA WIRE

படக்குறிப்பு,

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஹூத்தி ஆயுதக்குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஏமனின் தலைநகரான சனாவையும், செங்கடல் கடற்கரை உட்பட நாட்டின் பெரும் பகுதிகளையும் ஹூத்திகள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டில், செளதி அரேபியா ஒரு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் ஒரு கூட்டணியை அமைத்து, ஹூத்திகளுடன் சண்டையிட்டது. ஆனால், அது முடியவில்லை.

ஏமனின் உள்நாட்டுப் போரில் தலையிடுவது என்பது அந்த நாட்டின் சட்டபூர்வமான மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தை மீண்டும் நிறுவுவதாகும். அதற்காக, ஹூத்திகளை வெளியேற்ற வேண்டும் என்றும் செளதி கூறியது.

"ஆனால், தலையீடு தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, நான் மிகவும் மூத்த சௌதிகளுடன் பேசினேன், அவர்கள் இரானின் ஹூத்திகளுக்கு பின்னால் இருந்து செயல்படுவதைத் தடுப்பதற்காகவே இதைச் செய்ததாக் கூறினர். ஏமன் சௌதி அரேபியாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது," என்றார் ஜெரெமி போவன்.

 

அமெரிக்காவின் தாக்குதலை ஹூத்திகள் எப்படி எதிர்கொள்வார்கள்?

ஹூத்திகள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஹூத்தி ஆயுதக்குழுவினருக்கு இரான் நவீன ஆயுதங்களை வழங்கி வருகிறது.

ஹூத்திகளின் திறனில் 2015 முதல் செளவுதி மேற்கொண்ட தொடர் குண்டுவீச்சு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை என்றார் ஜெரெமி போவன்.

"ஏமன் ஒரு மலை நாடு. குண்டுவீச்சுக்கு ஆளான அவர்களின் அனுபவத்தைப் பொறுத்தவரை, அவர்கள் பல விஷயங்களை மறைக்க முயன்றிருக்கலாம். ஹூத்திகளுக்கு இரான் வழங்கிய ஆயுதங்களை இயக்க உதவுவதற்காக ஏமனுக்கு ஆலோசகர்களையும் பயிற்சியாளர்களையும் அனுப்பியிருக்கலாம். மேலும் அவர்களும் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் வழிகளைப் பற்றி யோசித்திருப்பார்கள்," என்றார் ஜெரெமி போவன்.

இரான், ஹூத்தி ஆயுதக் கிடங்கை மேம்படுத்திய விதத்தை, அவர்கள் ஏமனில் இருந்து சுடும் ஆயுதங்களைப் பார்த்து நாம் அறிந்து கொள்ளலாம், என்றார் ஜெரெமி போவன். "அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் மிகவும் அதிநவீனமானவை, மிகவும் ஆபத்தானவை, எனவே அதிக அச்சுறுத்தல் கொண்டவை.

கடந்த மாதம் ஹூத்திகள் ஒரு வணிகக் கப்பலைக் கைப்பற்றியபோது, அவர்களின் தாக்குதலின் வீடியோவில் நன்கு பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் ஹெலிகாப்டரில் இருந்து இறங்குவதைக் காட்டியது. நாம் அடிக்கடி டிவியில் பார்க்கும் படங்களைவிட அவை மிகவும் வலிமையானவை," என்றார் ஜெரெமி.

பிராந்தியம் முழுவதும் ஆதரவாளர்களைக் கொண்ட ஹூத்திகள், கப்பல்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி துப்பாக்கிச் சூடு நடத்த முடிந்தால், அவர்கள் மேற்கு நாடுகளுக்கு அடிபணியவில்லை என்று தங்கள் ஆதரவாளர்களுக்கு முறைமுகமாகச் சொல்வார்கள்.

ஹூத்திகள், அமெரிக்கா சொல்லும்படி செய்யாவிட்டால், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் இருந்து மேலும் பதிலடி கொடுக்கப்படுவதும் உறுதிதான் என்றார் ஜெரெமி.

 

செங்கடலில் நடக்கும் தாக்குதல்களுக்கு காரணம் என்ன?

செங்கடலில் நடக்கும் தாக்குதல்கள்

பட மூலாதாரம்,FAREED KOTB/ANADOLU VIA GETTY IMAGES

படக்குறிப்பு,

கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தும் ஹூத்தி ஆயுதக் குழுவினர் தங்களை ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடங்கியதை அடுத்து, ஹூத்தி ஆயுதக்குழுவினர் தங்கள் தாக்குதல்களை அதிகரித்தனர்.

இந்தத் தாக்குதல்களை நடத்தும் ஹூத்தி ஆயுதக்குழுவினர் தங்களை ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். ஏமனின் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

இஸ்ரேலை நோக்கிச் செல்லும் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். எனினும், ஹூத்தி ஆயுதக் குழுவினர் தாக்கப்பட்ட அனைத்துக் கப்பல்களும் உண்மையில் இஸ்ரேலை நோக்கிச் சென்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

 

ஏமனில் எங்கெல்லாம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன?

ஹூத்தி அமைப்பினர் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அக்டோபர் மாதம் முதல் செங்கடலில் சர்வதேச கடல்வழித் தடத்தில் சென்ற 27 கப்பல்களை ஹூத்திகளை தாக்கியுள்ளன என்றும் இதனால் 55 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் ராயல் விமானப் படையின் போர் விமானங்கள், குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை நடத்த உதவி புரிந்ததாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்கள் வரையறுக்கப்பட்டவை, அவசியமானவை மற்றும் தற்காப்புக்குத் தேவையான அளவில் நடத்தப்பட்டவை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடல் வழி சுதந்திர பயணத்துக்கும், தடையில்லா வர்த்தகத்துக்கும் பிரிட்டன் துணை நிற்கும் என்று கூறியிருந்தார்.

சைப்ரஸில் இருந்து பறந்த, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் நான்கு டைஃபூன் ஜெட் விமானங்கள் இரண்டு ஹூத்தி இலக்குகள் மீது குண்டு வீசின.

இந்தத் தாக்குதல்கள் ஏமனின் தலைநகர் சனா, செங்கடலில் உள்ள ஏமனின் துறைமுகம் ஹுதயா, தமர் நகரம், சாதா நகரம் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. ஜனவரி 11ஆம் தேதி காலை 2.30 மணியளவில் அமெரிக்க போர்க்கப்பல் தோமாஹாக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ஜெட் விமானங்கள் 12க்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து தாக்கின என்று தாக்குதல்கள் குறித்த விவரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

செங்கடலில் வர்த்தகப் போக்குவரத்தை சீர்செய்ய இந்தத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹூத்தி வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஹுசைன் அல்-எஸ்ஸி, இந்த அப்பட்டமான தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.

 

ஹூத்திகளுக்கு எதிரான பத்து நாடுகள் கூட்டறிக்கை

கப்பல்கள் மீது ஹூத்தி அமைப்பினர் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, தென் கொரியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய அரசுகள் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டிருந்தன.

ஹூத்தி ஆயுதக்குழுவினர் எதிரான சர்வதேச சமூகத்தின் ஒத்த கருத்து இருப்பதாகக் கூறும் அந்த அறிக்கை, கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், செங்கடலில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஹூத்திகள் நிறுத்த வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் சுட்டிக்காட்டியது.

ஹூத்திகள் மீது நடத்தப்படும் பல்முனைத் தாக்குதல்கள், தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த தற்காப்புக்காக நடத்தப்படுவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“உலக மிக முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றில் சர்வதேச வர்த்தகம் மற்றும் சர்வதேச மாலுமிகளின் உயிருக்கு அச்சுறுத்துலாக இருக்கும் ஹூத்திகளின் திறன் மற்றும் சக்தியை வலுவிழக்கச் செய்யவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன,” என்று அந்த அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

செங்கடலில் நிலவும் பதற்றத்தைத் தணித்து நிலைமைகளைச் சீராக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூத்திகள் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களுக்கு, அவர்கள் தரப்பிலிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cd1e9j66qdvo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் - ராடர்களை இலக்குவைத்தது

13 JAN, 2024 | 12:27 PM
image
 

யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் ராடர் நிலைகளை இலக்குவைத்து அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்கா யுஎஸ்எஸ் கார்னே என்ற போர்க்கப்பலில் இருந்து டொம்ஹவ்க் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்த தாக்குதலை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

செங்கடல் பகுதியில் வர்த்தக கப்பல்கள் உட்பட கப்பல்களை தாக்குதவற்கான ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் பலத்தை அழிப்பதற்காக 12ம்  திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் தொடர்ச்சியே இந்த தாக்குதல்கள் என தெரிவித்துள்ள அமெரிக்கா நவம்பர் 19ம் திகதி முதல் ஈரான் சார்பு ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் 28 தடவை செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/173855

  • கருத்துக்கள உறவுகள்
UNSC has not authorized force against Yemen; China urges all parties concerned to abide by international law: China’s UN envoy
By Global Times Published: Jan 13, 2024 08:35 PM

 

Zhang Jun, China's permanent representative to the UN. Photo:VCG

Zhang Jun, China's permanent representative to the UN. Photo:VCG


China opposes any forcible transfer of the Palestinian people from the Gaza Strip, and all measures must be taken to alleviate the humanitarian catastrophe and make a cease-fire the most urgent task of the moment, China's permanent representative to the UN Zhang Jun said during a UN Security Council conference on Friday local time.

An immediate ceasefire has become the overwhelming call of the international community, but a permanent member of UN Security Council (UNSC) has vetoed the consensus reached by the UNSC in this regard on various grounds, which is a blatant defiance of international fairness, justice and the authority of UNSC, Zhang said.

The UNSC failed to adopt a draft resolution on December 8, 2023 that would have demanded an immediate humanitarian ceasefire in Gaza due to a veto cast by the US. Many countries expressed disappointment over the US veto of the Gaza-related draft.

It is a blatant double standard for some people to talk about the protection of human rights and the prevention of genocide while pretending to be deaf and dumb, covering up and diverting attention from the tragic situation in Gaza, Zhang remarked, "We must remove all interference and take vigorous action to quell the war, save lives and restore peace.

https://www.globaltimes.cn/page/202401/1305318.shtml

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:
UNSC has not authorized force against Yemen; China urges all parties concerned to abide by international law: China’s UN envoy
By Global Times Published: Jan 13, 2024 08:35 PM

 

Zhang Jun, China's permanent representative to the UN. Photo:VCG

Zhang Jun, China's permanent representative to the UN. Photo:VCG


China opposes any forcible transfer of the Palestinian people from the Gaza Strip, and all measures must be taken to alleviate the humanitarian catastrophe and make a cease-fire the most urgent task of the moment, China's permanent representative to the UN Zhang Jun said during a UN Security Council conference on Friday local time.

An immediate ceasefire has become the overwhelming call of the international community, but a permanent member of UN Security Council (UNSC) has vetoed the consensus reached by the UNSC in this regard on various grounds, which is a blatant defiance of international fairness, justice and the authority of UNSC, Zhang said.

The UNSC failed to adopt a draft resolution on December 8, 2023 that would have demanded an immediate humanitarian ceasefire in Gaza due to a veto cast by the US. Many countries expressed disappointment over the US veto of the Gaza-related draft.

It is a blatant double standard for some people to talk about the protection of human rights and the prevention of genocide while pretending to be deaf and dumb, covering up and diverting attention from the tragic situation in Gaza, Zhang remarked, "We must remove all interference and take vigorous action to quell the war, save lives and restore peace.

https://www.globaltimes.cn/page/202401/1305318.shtml

இந்த கொள்ளை கூட்ட்துக்கு ஈரானுடன் சேர்ந்து ஆயுதம் கொடுப்பதே இந்த சீனாதான். அப்படி இருக்கும்போது பயங்கரவாதிகளை தாக்குவதை எப்படி ஆதரிப்பார்கள்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.