Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   19 JAN, 2024 | 03:58 PM

image

இலங்கை தனக்கு கடன்வழங்கிய உத்தியோகபூர்வ கடன்கொடுப்பனவாளர்களுடன் விரைவில் இறுதி உடன்படிக்கைகளை பூர்த்தி செய்வது அவசியம் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட கடன்கொடுப்பனவாளர்களுடன் இலங்கை தீர்மானமொன்றிற்கு வருவதும் அவசியம் எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளின் இலங்கைக்கான விஜயத்தின் இறுதியில் இந்தகருத்து வெளியாகியுள்ளது.

இலங்கையின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக பொருளாதார மீட்சிக்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் தென்படுகின்றன என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த முன்னேற்றங்கள் இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்பதால் சவால்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

2023ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு பகுதியில் சாதகமான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி காணப்பட்டுள்ளது, பணவீக்கம் குறைவடைந்துள்ளது, வருமானங்களை பெற்றுக்கொள்ளுதல், அந்தியசெலவாணிகையிருப்பு அதிகரித்தமை  போன்றவற்றில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினை முன்னெடுத்தமை ஒரு மைல்கல் எனவும் சர்வதேச நாணயநிதியம்  பாராட்டியுள்ளது.

https://www.virakesari.lk/article/174344

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகள் கொள்ளையடித்த  பணம் , ஊழல்கள் மூலம் வியாபாரிங்க கொள்ளையடித்த பணம் மீட்கப்படும் வரை மீட்சி இல்லை. 

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொருளாதார கொள்கை பலனளிக்க ஆரம்பித்துள்ளது; நிறைவேற்று சபை அனுமதியளித்ததும் 337 மில்லியன் டொலர் - சர்வதேச நாணயநிதியம்

Published By: RAJEEBAN   21 MAR, 2024 | 03:40 PM

image

இலங்கைக்கான அடுத்த கட்ட திட்டம் தொடர்பில் இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணநிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரமளித்ததும் இலங்கைக்கு  மூன்றாவது கட்ட நிதியுதவியான 337 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார திட்டங்கள் பலனளிக்க ஆரம்பித்;துள்ளன எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியம் மேலும் தெரிவித்துள்ளதாவது

நான்கு வருட ஈஎவ்எவ் ஆதரவு திட்டத்தின் இரண்டாவது மறுஆய்வினை பூர்த்தி செய்வதற்காக பொருளாதார கொள்கைகள் குறித்து இலங்கையின் அதிகாரிகளும்; சர்வதேசநாணயநிதியத்தின் பணியாளர்களும் இணக்கப்பாட்டினை எட்டியுள்ளனர்.

இந்த மறு ஆய்வினை சர்வதேச நாணயநிதியத்தின் முகாமை அங்கீகரித்ததும் சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபை ஏற்றுக்கொண்டதும் இலங்கையால் 337 மில்லியன் டொலர்களை பெறமுடியும்.

நுண்பொருளாதார கொள்கை சீர்திருத்தங்கள் பலனளிக்க ஆரம்பித்துள்ளன தற்போதைய சீர்திருத்தங்களை தொடர்வதும் ஆட்சிமுறையில் காணப்படும் பலவீனங்களை அகற்றுவதும் ஊழலை அகற்றுவதும் இலங்கையின் பொருளாதாரத்தை நிரந்தர மீட்பு ஸ்திரதன்மை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற பாதையில்  இட்டுச்செல்வதற்கு அவசியமான விடயங்களாகும்

சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் சிறந்த முன்னேற்றத்தை காண்பிக்கின்றனர் பாராட்டத்க்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன -பணவீக்கம் மிகவேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது அன்னியசெலாவணிகையிருப்புகள் வலுவான விதத்தில் அதிகரித்துள்ளன.

நிதிஅமைப்பின் ஸ்திரதன்மையை பேணும் அதேவேளை பொருளாதார வளர்ச்சிக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன .

குறிப்பிடத்தக்க நிதி சீர்திருத்தத்தை தொடர்ந்து பொதுநிதி வலுவடைந்துள்ளது.

பொருளாதார நிலைமை படிப்படியாக வளர்ச்சி காண்கின்றது ஆறுகாலாண்டு கால வீழ்ச்சிக்கு பின்னர் வளர்ச்சி சாதகமானதாக காணப்படுகின்றது 2023 ம் ஆண்டின் மூன்றாவது நான்காவது காலாண்டு பகுதியில் 1.6 மற்றும் 4.5 வளர்ச்சி வீதம் காணப்பட்டது..

உற்பத்தி கட்டுமானம் மற்றும்சேவை துறைகளில் தொடர்ந்தும் வளர்ச்சி காணப்படுவதை பொருளாதார சுட்டிகள் வெளி;;ப்படுத்தியுள்ளன.

2022 செப்டம்பரில் 70 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் 2024 பெப்ரவரியில் 5.9 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.என தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/179338

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

2022 செப்டம்பரில் 70 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் 2024 பெப்ரவரியில் 5.9 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.என தெரிவித்துள்ளது

அதிசயம் ஆனால் உண்மையோ?இந்தியாவுக்கு இது பொறுக்காதே..இந்தியாவின் பணத்தில் இந்த பணவீக்கம் குறைந்திருந்தால் அவர்கள் மகிழ்ந்திருப்பார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.