Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 FEB, 2024 | 09:28 PM
image

(எம்.மனோசித்ரா)

முறையான காணி உரிமையின்றி நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் வகையில் காணி உறுதி வழங்கு 'உரித்து' (உருமய) வேலைத்திட்டத்தில் பெருந்தோட்ட மக்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் வினவிய போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார். 'விவசாய நடவடிக்கைகளுக்காக நிபந்தனைகளுடன் வழங்கப்பட்ட காணிகளுக்கான உரிமம் வழங்கும் வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகிறது. பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணி வழங்கும் திட்டம் இந்த வேலைத்திட்டத்தோடு தொடர்புடையதல்ல.

இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு நிச்சயம் 7 பேர் காணி வழங்கப்படும். எவ்வாறிருப்பினும் விவசாய நடவடிக்கைகளுக்காக அரச காணிகளைப் பெற்றுக் கொண்ட சகலருக்கும் எவ்வித பேதமும் இன்றி உரிமம் வழங்கப்படும். வடக்கு, கிழக்கு மக்களும் இதில் உள்ளடங்குவர்.' என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

'உரித்து' திட்டத்தின் கீழ் 1935ஆம் ஆண்டு காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ்  விவசாயிகளுக்கு அனுமதிப்பத்திரம் மற்றும் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட அரச காணிகளின் முழு உரிமையையும் விவசாயிகளுக்கு வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

அதற்கமைய  20 இலட்சம் விவசாயக் குடும்பங்கள்   பயனாளிகளாக இனங்காணப்பட்டுள்ள இந்த உரித்து  வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் கீழ் 2 பில்லியன் ரூபா  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தம்புள்ளையில் இடம்பெற்றது.

எவ்வாறிருப்பினும் கடந்த ஆண்டு பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணி, உரிமத்துடன் வழங்கப்படும் என்று அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் அதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்பட்டதாகக் தெரியவில்லை. எனவே இதுகுறித்து வினவிய போது ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ்  தெரிவிக்கையில்,

காணி உரிமம் வழங்கும் இந்த வேலைத்திட்டம் வரவேற்கத்தக்கதாகும். இந்த வேலைத்திட்டத்தை தேசிய மயப்படுத்தி 200 வருடங்களாக இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக மக்களுக்குரிய காணி உரிமமும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும், காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மிக விரைவில் அதற்கான ஆக்க பூர்மான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மலையத்தில் காணப்படும் 10 பிரதேச செயலகப்பிரிவுகளையும் உள்ளடக்கிய வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/176106

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிரந்தர உரிமை அடிப்படையில் பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணி : அமைச்சர் ஜீவன் தலைமையில் அலரி மாளிகையில் விசேட கலந்துரையாடல்

11 FEB, 2024 | 09:23 PM
image

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 பேர்ச்சஸ் காணியை நிரந்தர உரிமை அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதியால் 4 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (09)  அலரிமாளிகையில் பிரதமரின் செயலாளரின் பங்கேற்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

பெருந்தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 பேர்ச்சஸ் காணியை நிரந்தர உரிமை அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கையை நாம் இணைந்து முன்னெடுத்துள்ளோம்.

தேசிய ரீதியிலான 86 சதவீதமானோருடன் ஒப்பிடுகையில், பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களில் 8 சதவீதமானோருக்கு மாத்திரமே சொந்த வீடு காணப்படுகிறது. இந்த வரலாற்று அநீதியை நாம் சரி செய்வோம்.

அரசாங்க அதிகாரிகள், பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

பொருத்தமான காணிகள் மற்றும் பயனாளிகளை அடையாளம் காணுதல், வரைபடமிடுதல், அளவீடு செய்தல், பத்திரங்களை தயாரித்தல் போன்ற நடைமுறைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.

அந்த வகையில் குறித்த திட்டத்தின் மூலம் 200 000 குடும்பங்களைச் சேர்ந்தர்கள் பயனடைவார்கள். அதற்கான செயல்முறையை ஒருங்கிணைக்க ஒரு செயலகத்தை அமைக்கப்பதற்கு இதன் போது தீர்மானிக்கப்பட்டதோடு, இந்த வேலைத்திட்டத்துக்காக ஜனாதிபதியினால் 4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

200 வருடங்களாக எமது பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய பெருந்தோட்ட சமூகம் வாழ்வதற்கு ஒரு இடம் என்ற எளிய பாதுகாப்பைக் கூட அனுபவித்ததில்லை.

இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் அவர்களுக்குள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் அனுபவிப்பதை இந்த முயற்சி உறுதி செய்கிறது. இது அவர்களின் சொந்த நிலத்தின் உறுதியையும் பாதுகாப்பையும் அவர்களின் எதிர்காலத்தில் ஒரு பங்கையும் கொடுக்கும். எனவே இதனை  வழங்குவதில் நான் உறுதியாகவுள்ளேன்.

https://www.virakesari.lk/article/176097

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறையாவது மலையக தமிழர்களுக்கு காணி உரிமை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். எல்லாவற்றிலுமே ஏமாற்றப்படட ஒரு சமூகம். இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாவது அவர்களது வாழ்க்கையில் ஒரு வெளிச்சம்  ஏட்படடாள் நல்லதுதான். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.