Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேரினவாத வேதாளம் மீண்டும் முருங்கையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரினவாத வேதாளம் மீண்டும் முருங்கையில்

பெரும்பான்மை இனச் சிங்களக் கட்சிகள் குறித்து இப்பத்தியில் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டி வருகின்றோம்.

மகாவம்ச மனவமைப்பில் சிக்கி, பண்டைய இதிகாசங்கள் புனைந்துவிட்ட புரளிகளில் மூழ்கி, சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் தனது தேசிய சித்தாந்தமாக வரித்துக்கொண்டிருக்கும் தென்னிலங்கைக் கட்சிகளின் மேலாதிக்கக் கொள்கைப் போக்காக இந்தப் பேரினவாத வெறியே இலங்கை முழுவதும் கோலோச்சி நிற்கின்றது.

சிங்களத்தின் கருத்துருவச் சிந்தனைப் போக்கை முற்றாகச் சிறைப்பிடித்து வைத்திருக்கும் இந்தக் கருத்தாதிக்க வளையத்துக்குள் இருந்து வெளியே வரும் சுயபுத்தி புத்தி சாதுரியம் சிந்தனைத் தெளிவு சிங்களத்தில் வேரூன்றி நிற்கும் எந்தக் கட்சிக்குமே இல்லை.

அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகட்டும், ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும், ஜே.வி.பியாகட்டும் அல்லது அவற்றோடு ஒட்டிக்கொண்டு ஆட்சி அதிகாரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் மக்கள் ஐக்கிய முன்னணி முதல் பெயருக்கு இடதுசாரிப் போக்கை வெளிப்பகட்டுக்குக் காட்டிக்கொண்டிருக்கும் ஏனைய சிவப்புக் கட்சிகளாகட்டும் அவை ஆளுந்தரப்பில் இருந்தாலும் சரி, எதிர்த்தரப்பில் இருந்தாலும் சரி இனவாதச் சகதி என்ற குட்டையில் ஊறிய ஒரேவகையான மட்டைகள்தாம் என்பதில் எந்த வேறுபாடும் இல்லை. அதனையே இப்பத்தியில் பல தடவைகள் நாம் சுட்டிக் காட்டி வந்திருக்கிறோம்.

இதுவரை, இப்போக்கிலிருந்து தன்னை மாற்றிக்கொண்டதாக தாராளப் போக்குடன் நடந்து கொண்ட கட்சியாக கடந்த ஐந்தரை, ஆறு ஆண்டுகளாகக் காட்டிவந்த நடித்துக் கொண்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சி கூடத் தனது "சுயபுத்தி' யை மீண்டும் காட்டத் தொடங்கி விட்டது. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏற ஆரம்பித்துவிட்டது.

2000 ஆம் ஆண்டு முற்பகுதியில் அப்போதைய சந்திரிகா அரசு தன்பாட்டில் ஒரு தலைப்பட்சமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான யோசனைத்திட்டம் ஒன்றை அரசமைப்புத் திருத்த நகல் வடிவமாக நாடாளுமன்றில் முன்வைத்தது. நிதி, சட்டம், ஒழுங்கு, நில உரிமை, கல்வி போன்ற விடயங்களில் கணிசமான அதிகாரங்களை பிரித்து வழங்கும் அந்தப் பிரதேச சுயாட்சித் திட்டத்தில் முற்போக்கான, புரட்சிகரமான சில அம்சங்கள் அடங்கியிருந்தன என்பது மறுக்க முடியாத உண்மையே. அந்தத் தீர்வு யோசனைக்கான அரசமைப்புத் திருத்த நகலை நாடாளுமன்றத்துக்குள்ளேயே கிழித்து, வீசி, தீயிட்டுக் கொளுத்தி தனது பேரினவாத சிந்தனைப் போக்கை நாடாளுமன்றத்துக்குள்ளேயே நிரூபித்துக் காட்டியது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கட்சி.

அதைத் தொடர்ந்து இராணுவக் கள நிலையில் சந்திரிகா அரசு பல்வேறு தோல்விகளை அடுத்தடுத்துச் சந்தித்தது.

வன்னிப் பெருநிலப்பரப்பையும், இயக்கச்சி ஆனையிறவுக் கூட்டுப் படைத்தளத்தையும் இராணுவப் பிடியிலிருந்து புலிகள் மீட்டெடுத்தனர். அரசின் "அக்கினிச் சுவாலை' நடவடிக்கையை அடியோடு தகர்த்து அணைத்தனர்.

2001 ஜூலையில் கட்டுநாயக்கா விமானத் தளத்துக்குள் புலிகளின் கரும்புலி அணி நடத்திய வெற்றிகரத் தாக்குதல் ஒருபுறம் கொழும்பு அரசின் மனோவலிமையையும் பொருளாதார ஸ்திரத்தையும் படுக்கையில் வீழ்த்த, மறுபுறம் இராணுவச் சமச்சீர் வலுநிலை (Balance of Military Power)புலிகளுக்குச் சார்பாகத் திரும்பியது.

உலகின் போரியல் வரலாற்றில் மகத்தான சாதனைகளைப் புரிந்து, இராணுவ மேலாதிக்க நிலையில் புலிகள் நின்றபோது தென்னிலங்கையின் மனோதைரியமே நிலைகுலைந்து, சரிந்து கொட்டுண்டு அடங்கி விட்டதை உணர்ந்த ஐ.தே.கட்சி, தனது பேரினவாத சுயரூபத்தை ஒதுக்கித் தள்ளி வைத்துவிட்டு அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டு தமிழர் தாயகத்துடன் விட்டுக்கொடுத்து, சமரசம் பேசும் நடிப்புடன் முன்வந்தது. என்றாலும் தமிழர் தரப்பின் தலைவிதியைத் தமிழர்களே தீர்மானிக்கும் சுயாதீன உரிமையைப் பறிக்கும் விதத்தில் சர்வதேச சமூகத்தின் தலையீடு மற்றும் நெருக்குவாரம் மூலம் தமிழர் தரப்பைக் கட்டுப்படுத்தி அமுக்கி, நெரிக்கும் சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னலை ஒரு பக்கம் பலமாகப் பின்னிக்கொண்டு, மறுபக்கம் சமஷ்டித் தீர்வு குறித்து ஆராயும் நிலைவரை இறங்கி, தனது பேரினவாத முகத்தை மூடிமறைத்துக் கொண்டது அக்கட்சி.

ஆனால் இப்போது இராணுவக் களநிலையில் தான் சில வெற்றிகளை அடுத்தடுத்து ஈட்டி, இராணுவ மேலாதிக்க நிலையை எட்டிவிட்டதாக மஹிந்தரின் அரசு பரப்புரை பசப்புரை முன்னெடுக்க, அதை நம்பித் தென்னிலங்கை அந்தக் கயிறை விழுங்கும் நிலை ஏற்பட்டதும், பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவும் தனது சுயபுத்தியை மீளக் காட்டத் தொடங்கிவிட்டது.

"சமஷ்டி' யிலிருந்து "பல்டி' அடித்து, மூவினத்தவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு தீர்வு என்று புதிய கயிறை அவிழ்த்து விடத் தொடங்கி யிருப்பது, மீண்டும் ஐ.தே.க. தனது பேரினவாத முகத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டதற்கான கட்டியமேயன்றி வேறில்லை.

இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியில் தன்னுடைய தரப்பின் கருத்துக்களைத் தெளிவுபடுத்துவது என்ற பெயரில் ஒரு குழப்பகரமான அறிக்கையை மீண்டும் இன்று வெளியிடுவதற்கு ஐ.தே.கட்சி தயாராகி வருவதாகத் தெரிகின்றது. அதிலும் கூட "சமஷ்டி' பற்றிய தனது நிலைப்பாட்டை அது அமுக்கியே வாசித்திருப்பதாகத் தகவல்.

இந்த விவகாரங்களை நோக்கும்போது ஒன்று தெளிவாகத் தெரிகின்றது.

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பிரதான சிங்களக் கட்சிகளிடம் தெளிவானதும், உருப்படியானதும், தீர்க்க தரிசனத்துடன் வகுக்கப்பட்டதும், ஆழமான நெறிமுறைகளில் அமைந்ததுமான ஒரு தீர்வுத்திட்டத்திற்கான எண்ணக்கரு அன்றும் சரி, இன்றும் சரி இருக்கவில்லை. என்றும் இருக்கப்போவதுமில்லை.

தமிழரின் தேசிய இனப்பிரச்சினைகளின் அடிப்படைகளும், தமிழ் மக்களின் நீதி நியாயமான அபிலாஷைகளும் சிங்களத்துக்குப் புரியாதவையுமல்ல.

தனித்துவமான ஒரு மொழி, பண்பாடு, வரலாறு, நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு தாயக நிலம் போன்ற பண்புகளை உடைய தமிழ் மக்களுக்கு ஒரு தனித்துவமான மக்கள் சமூகம் என்ற ரீதியில் சுயநிர்ணய உரிமை உண்டு. தமிழர் தாயகம், தமிழர் தேசியம்,தமிழர் சுயநிர்ணயம் என்ற அடிப்படைகளில் திம்பு முதல் ஜெனிவா வரை தமிழர் தரப்பு விடாது வலியுறுத்தி முன்வைத்து வரும் தமிழர்களின் மூலக் கோட்பாடுகளை நியாயமான முறையில், புறநிலை நோக்குடன், ஆழமாக அலசிப் பார்க்க இக்கட்சிகள் சிங்களத் தலைமைகள் தயாரில்லை என்பதும் தெளிவு. இதுவே, இந்த இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இப்படி இழுபடுவதற்குப்பிரதான காரணமுமாகும்.

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.