Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
செயற்கை நுண்ணறிவு கருவி
படக்குறிப்பு,

மியா(MIA) எனப்படும் கருவியால் மருத்துவர்கள் தவறவிட்ட கட்டிகளைக் கண்டறிய முடிந்தது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜோ க்ளீன்மேன்
  • பதவி, பிபிசி உலக சேவை
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பிரிட்டிஷ் மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கருவி, மருத்துவர்களால் கவனிக்கப்படாமல் போன 11 பெண்களில் மார்பக புற்றுநோயின் சிறிய அறிகுறிகளை அடையாளம் கண்டுள்ளது.

மியா(MIA) என்று அழைக்கப்படும் இந்தக் கருவி, பிரிட்டனில் உள்ள பல சுகாதார மையங்களில் சோதிக்கப்பட்டது. இந்த கருவி கிட்டத்தட்ட 10,000 மேமோகிராம்களை பகுப்பாய்வு செய்தது.

அவற்றில் பெரும்பாலானவை புற்றுநோயின் அறிகுறிகளைக் காட்டவில்லை. ஆனால் மருத்துவர்களால் கண்டறியப்படாத 11 நோயாளிகளை அந்தக் கருவியால் வெற்றிகரமாக அடையாளம் காண முடிந்ததுள்ளது.

ஆரம்ப கட்டங்களில், புற்றுநோய்கள் மிகவும் சிறியதாகவும், அடையாளம் காண்பது கடினமாகவும் இருக்கும்.

மனிதக் கண்ணுக்கு தெரியாத அத்தகைய கட்டிகளை, செயற்கை தொழில்நுட்பக் கருவியால் சுட்டிக் காட்ட முடிந்தது.

 

அந்த கட்டிகள், அவற்றின் கலவையைப் பொறுத்து, மிக விரைவாக வளர்ந்து பரவுகின்றன.

கருவி மூலம் புற்றுநோய் கண்டறியப்பட்ட 11 நோயாளிகளில் பார்பராவும் ஒருவர், ஆனால் அவரது படங்களை ஆய்வு செய்த மருத்துவர்களால் அந்த கட்டியை கண்டறிய முடியவில்லை.

வெறும் 6 மிமீ அளவில் உள்ள அந்தக் கட்டி, ஆரம்பத்தில் கண்டறியப்பட்டது. எனவே அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை மற்றும் ஆறு நாட்கள் கதிரியக்க சிகிச்சை மட்டுமே தேவைப்பட்டது.

நோயறிதலின் போது 15 மில்லி மீட்டருக்கும் குறைவான கட்டிகளைக் கொண்ட புற்றுநோயாளிகள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 90% உயிர்வாழும் வீதத்தைக் கொண்டுள்ளனர்.

பார்பரா தனது சகோதரி மற்றும் தாயின் சிகிச்சையை விட மிகவும் குறைவான நாட்கள் சிகிச்சையில் இருந்ததால் மகிழ்ச்சியடைவதாக கூறுகிறார். அவர்களும் புற்றுநோய் பாதிப்பில் இருந்தவர்கள்.

பாதிக்கப்பட்ட நபர்
படக்குறிப்பு,

மியா கருவியின் அவதானிப்பிலிருந்து நோயறிதலைப் பெற்ற நோயாளிகளில் பார்பராவும் ஒருவர்.

கருவி எப்படி பயன்படுகிறது?

செயற்கைத் தொழில்நுட்பக் கருவி இல்லாமல், பார்பராவின் புற்றுநோய் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவரது அடுத்த மேமோகிராம் வரை கண்டறியப்பட்டிருக்காது.

நோயறிதலின் போது, அவருக்கு நோயின் அறிகுறிகள் எதுவும் இல்லை.

அவை உடனடியாக வேலை செய்வதால், மியா போன்ற ஏஐ கருவிகள் முடிவுகளுக்கான காத்திருப்பு நேரத்தை 14 நாட்களில் இருந்து வெறும் 3 ஆகக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளன என்று அதனை உருவாக்கிய கெய்ரான் மெமிக்கல் (Kheiron Medical) நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருத்துவ பரிசோதனையில் உள்ள நோயாளிகளின் பரிசோதனை முடிவுகள் கருவியால் மட்டுமே பகுப்பாய்வு செய்யப்படவில்லை; ஒவ்வொன்றும் பல மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

தற்போது இரண்டு கதிரியக்க வல்லுநர்கள் ஒவ்வொரு இமேஜிங் ஆய்வையும் மதிப்பாய்வு செய்கிறார்கள், ஆனால் அவை கருவி மூலம் மாற்றப்படலாம், இது மதிப்பாய்வு பணியின் செயல்திறனை மேம்படுத்தும்.

மருத்துவ பரிசோதனையில் பங்கேற்ற 10,889 பெண்களில், 81 பேர் மட்டுமே தங்கள் முடிவுகளைப் படிக்க கருவியைப் பயன்படுத்த விரும்பவில்லை என்று சோதனையை மேற்கொண்ட திட்டத்தின் இயக்குனர் ஜெரால்ட் லிப் விளக்கினார்.

ஒரு குறிப்பிட்ட நோயின் அறிகுறிகளைக் கண்டறிவதில் ஏஐ கருவிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

 
சாரா கெருயிஷ்
படக்குறிப்பு,

சாரா கெருயிஷ், கீரோன் மெடிக்கலின் தலைமை வியூக அதிகாரி.

தற்போது, முடிந்தவரை அதிக அளவிலான நோயாளிகளிடமிருந்து புற்றுநோய் அறிகுறிகளை பிரதிபலிக்கும் படங்களைக் கொண்டு, அந்த ஏஐ கருவியை பரிசோதிக்கலாம். ஆனால், இது நோயாளிகளின் ரகசியத்தன்மை மற்றும் தரியுரிமை காரணமாக அனைத்து தகவல்களையும் பெற்று பரிசோதிப்பதில் சிக்கல் இருக்கலாம்.

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பெண்களின் மேமோகிராம்களால் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய தரவுத்தளத்திற்கு நன்றி செலுத்தும் ஒரு கருவியான மியாவை உருவாக்க அவர்களுக்கு ஆறு ஆண்டுகள் ஆனது என்று கீரோன் இன் மூலோபாயத் தலைவர் சாரா கெர்ருஷ் கூறினார்.

மார்பக புற்றுநோய் மருத்துவர்கள் ஆண்டுக்கு 5,000 சோதனைகள் வரை மதிப்பாய்வு செய்கின்றனர்.

"அந்த வேலை சோர்வானது," என்று லிப் கூறுகிறார்.

இந்த கருவி ஒரு நாள் வேலையை மாற்றிவிடும் என்று கவலைப்படுகிறீர்களா என்று லிப்பிடம் கேட்டபோது, இந்த தொழில்நுட்பம் நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிட அனுமதிக்கும் என்று அவர் கூறுகிறார்.

"மியாவை ஒரு நண்பராகவும், எனது பணியின் நீட்டிப்பாகவும் நான் பார்க்கிறேன்," என்று லிப் கூறுகிறார்.

 
மனித உடல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

15 மி.மீ.க்கும் குறைவான கட்டிகளைக் கொண்ட புற்றுநோயாளிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 90% உயிர்வாழும் வீதத்தைக் கொண்டுள்ளனர்.

கருவியின் குறைகள் என்ன?

மியா, நிச்சயமாக முழுமையானது. நோயாளிகளின் மருத்துவ வரலாற்றை இந்த கருவியால் அறிய முடியாது.

எடுத்துக்காட்டாக, முந்தைய ஸ்கேன்களில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மற்றும் தீங்கற்றதாகக் கண்டறியப்பட்ட நீர்க்கட்டிகளைக் கூட இந்தக் கருவி மீண்டும் அடையாளம் காட்டுகிறது.

கூடுதலாக, தற்போதைய சுகாதார விதிமுறைகள் காரணமாக, சோதனையின் போது ஏஐ கருவியின் இயந்திர கற்றல் உறுப்பு முடக்கப்பட்டுள்ளது. எனவே அதன் வேலையைச் செய்யும்போது கற்றுக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அது புதுப்பிக்கப்படும்போது அது ஒரு புதிய மதிப்பாய்வுக்கு செல்ல வேண்டியிருந்தது.

மியாவின் சோதனையானது ஒரு இடத்தில் நடத்தப்படும் ஆரம்ப சோதனை மட்டுமே.

அபெர்டீன் பல்கலைக்கழகம் சுயாதீனமாக இந்த ஆராய்ச்சியை சரிபார்த்தது, ஆனால் மதிப்பீட்டு முடிவுகள் இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை.

"இந்த முடிவுகள் ஊக்கமளிக்கின்றன. நோயறிதலுக்கு ஏஐ வழங்கும் அற்புதமான திறனை முன்னிலைப்படுத்த உதவுகின்றன. நிஜ வாழ்க்கை மருத்துவ கதிரியக்க வல்லுநர்கள் அவசியம் மற்றும் ஈடுசெய்ய முடியாதவர்கள் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் ஏஐ கருவிகளின் அறிவைப் பயன்படுத்தும் மருத்துவ கதிரியக்க நிபுணர் நோயாளியின் பராமரிப்பில் ஒரு வலிமையான சக்தியாக இருப்பார்," என கதிரியக்கவியல் கல்லூரியின் தலைவர் கேத்தரின் ஹாலிடே கூறினார்.

 
இயந்திரங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

உடல்நலப் பிரச்னைகளைக் கண்டறிய உதவும் சில செயற்கை நுண்ணறிவு கருவிகள் ஏற்கெனவே உள்ளன.

ஜூலி ஷார்ப்,பிரிட்டனின் புற்றுநோய் ஆராய்ச்சி சுகாதாரத் தகவல் தலைவர், ஒவ்வொரு ஆண்டும் கண்டறியப்படும் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், என்ஹெச்எஸ் பராமரிப்பை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் "முக்கியமானதாக" இருக்கும் என்று கூறினார்.

"புற்றுநோயாளிகளுக்கான விளைவுகளை மேம்படுத்த இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகளைக் கண்டறிய கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படும்," என்றும் அவர் கூறினார்.

பிற உடல்நலம் தொடர்பான ஏஐ சோதனைகள் பிரிட்டன் முழுவதும் நடந்து வருகின்றன, இதில் ப்ரிசிம்டம் ஹெல்த்(Presymptom Health) என்ற நிறுவனத்தின் கருவி, அறிகுறிகள் தோன்றுவதற்கு முன், செப்சிஸின் அறிகுறிகளுக்கான ரத்த மாதிரிகளை பரிசோதிக்கிறது. ஆனால், அதன் முடிவுகள் குறித்து பலர் கவலை தெரிவிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c0d3k9v10lyo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.