Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

"உலகின் மிகப் பழைய சுமேரிய காதல் பாட்டின் தமிழ் ஆக்கம்"

ஈராக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டபோது 1889 ஆம் ஆண்டு உலகின் முதல் காதல் கடிதத்தை கவிதை வடிவில் கண்டு பிடித்தார்கள். பிலடெல்பியா (Philadelphia) பல்கலைக்கழக பேராசிரியரான Noah Kramer  இதன் மொழி பெயர்ப்பை ஆங்கிலத்தில் தந்தார். இது காதல் கணவனுக்காக முதல் இரவில் சுமேரிய ஆப்பு வடிவத்தில் எழுதியது. இது ஷு-சின் அரசனுக்கு உரைக்கப்பட்டது. இந்த காதல் கடித கவிதை 

"Bridegroom, dear to my heart, Goodly is your beauty, honeysweet ,........ " 

அற்புதமான அர்த்தங்களை கொண்டு உள்ளது. மேலும் இதுவே உலகின் மிகப்  பழைய காதல் பாட்டும் ஆகும் . இது கி மு 2030 அளவில் ஊர் என்ற நகரத்தில், 4000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. 

அந்த பெருமை பெற்ற பாடலை என்னால் இயன்றவரை தமிழில் மொழி பெயர்த்து கிழே தருகிறேன்.

"அன்பு மணாளனே! என் பிரியமான தோழனே !!
உன் கவர்ச்சி இனிமையானது, தேன் போல் இனிமையானது

ஆண்மையுள்ள சிங்கமே, என் இதயத்திற்கினிய காதலனே,
உன் வசீகரம் இனிமையானது,அமுதம் போல் இனிமையானது

நீ என்னை வயப்படுத்தி விட்டாய், எனவே 
எனது சுய விருப்பத்தில் நான் உன்னிடம் வருவேன்

ஆண்மையுள்ள வீரனே! பள்ளி அறைக்குள் என்னை
உன்னுடன் கொண்டு போ

நீ என்னை மயக்கி விட்டாய், எனவே 
எனது கட்டற்ற துணிவில் நான் உன்னிடம் வருவேன்

காதல் தோழனே! படுக்கையறைக்குள் என்னை
உன்னுடன் தூக்கி  போ

மணாளனே! உனக்கு என்னை இன்பம் கொடுக்க விடு
என் மதிப்புள்ள காதற் கண்மணியே! உனக்கு என்னை தேன் தர விடு

தேன் சொட்டும் பள்ளியறையில் உனது கவர்ச்சியை
மீண்டும் மீண்டும் நாம் அனுபவிப்போம், இனிய இன்பமே

இளைஞனே! உனக்கு என்னை மகிழ்வு கொடுக்க விடு
என் அரிதான காதலனே! உனக்கு என்னை அமிர்தம் ஊட்ட  விடு 

வீரனே!  நீ என்னை கவர்கிறாய், எனவே 
என் தாயிடம் கூறு நான் என்னையே தருவேன்
என் தந்தையிடம் கேள் அவர் பரிசாய் தருவார்

உன் ஆன்மாவை எங்கே மகிழ்ச்சி படுத்துவது என்பது எனக்கு தெரியும்
மணாளனே! விடியும் வரை எமது வீட்டில் உறங்கு

உனது இதயத்திற்கு எங்கே இன்பம் கொட்டுவது என்பது எனக்கு தெரியும் இளைஞனே! விடியும் வரை எமது வீட்டில் உறங்கு

வீரனே! நீ என்னை விரும்புவதால்,
நீயே எனக்கு இனியவை செய்வாய் என்றால்
எனது எஜமானே! கடவுளே!! பாதுகாவலனே!!!  
"என்லில்" கடவுளின் இதயத்தை மகிழ்ச்சிபடுத்தும்
எனது "ஷு-சின்" அரசனே!

உனது இன்ப ஊற்றை நீயே கையாளுவாய் ஆயின்,
தேன் போல் இனிய அந்த இடத்தை நீயே பற்றுவாய் ஆயின்,
அளவு சாடியின் மூடி போல
அங்கே உன் கையை எனக்காக மூடு [வை]

மரச் சீவல் சாடியின் மூடி போல
அங்கே உன் கையை  எனக்காக விரி [பரப்பு ]" 


குறிப்பு: 

ஷு சின்' : கி.மு 2037-2029 ஆண்டுகளில் ஆண்ட சுமேரிய அரசர்.

என்லில்: மழை மற்றும் காற்றுக் கடவுள்"

தமிழ் ஆக்கம்:

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.