Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'காலம் கடந்த ஞானம்' : 2019 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் தவறுகள் இழைத்ததை ஒப்புக்கொண்டார் 'டைம்ட் அவுட்' மத்தியஸ்தர் இரேஸ்மஸ்

05 APR, 2024 | 06:20 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற 2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கள மத்தியஸ்தர்களால் இரண்டு தவறுகள் இழைக்கப்பட்டதாக அப்போட்டியில் மத்தியஸ்தம் வகித்தவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற மராயஸ் இரேஸ்மஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்த இறுதிப் போட்டி 50 ஓவர்கள் நிறைவிலும் பின்னர் சுப்பர் ஓவர் நிறைவிலும் சமநிலையில் முடிவடைந்தது. இதனையடுத்து இரண்டு அணிகளும் குவித்த பவுண்டறிகளின் அடிப்படையில் 26 - 17 என முன்னணியில் இருந்த இங்கிலாந்து உலக சம்பியனாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

அந்த இறுதிப் போட்டியில் மராயஸ் இரேஸ்மஸ், குமார் தர்மசேன ஆகியோர் கள மத்தியஸ்தர்களாக செயற்பட்டனர்.

3__marais_erasmus_and_kumar_dharmasena.p

நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 241 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்துக்கு கடைசி ஒவரில் மேலும் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ட்ரென்ட் போல்ட் வீசிய அந்த ஓவரின் 3ஆவது பந்தில் சிக்ஸ் ஒன்றை விளாசினார் பென் ஸ்டோக்ஸ்.

அடுத்த பந்தை பென் ஸ்டோக்ஸ் விசுக்கி அடிக்க மிட் விக்கெட் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த மார்ட்டின் கப்டில் பந்தை தடுத்து நிறுத்தி விக்கெட்டை நோக்கி எறிந்தார். ஆனால், ஸ்டோக்ஸின் துடுப்பில் பட்டு திசை திரும்பிய பந்து எல்லைக் கோட்டை கடந்து சென்றது.

அவ்வேளையில் ஸ்கொயார் லெக் மத்தியஸ்தராக இருந்த இரேஸ்மஸ், தலைமை மத்தியஸ்தராக இருந்த குமார் தர்மசேனவிடம் 6 ஓட்டங்கள் என சைகை செய்தார். இதனை அடுத்து எண்ணிக்கை பதிவாளர்களை நோக்கி 6 ஓட்டங்கள் என தர்மசேன கைகை செய்தார்.

பென் ஸ்டோக்ஸும் ஆதில் ராஷித்தும் 2 ஓட்டங்களை எடுத்ததாகவும் எறிபந்தினால் 4 ஓட்டங்கள் கிடைத்ததாகவும் அப்போது கருதப்பட்டது.

ஆனால், இங்கிலாந்துக்கு 5 ஓட்டங்களுக்கு பதிலாக 6 ஓட்டங்கள் கொடுக்கப்பட்டது தவறு என இப்போது இரேஸ்மஸ் ஒப்புக்கொண்டுள்ளார். ஏனெனில் இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் 2ஆவது ஓட்டத்தின்போது ஒருவரை ஒருவர் கடக்கவில்லை என்பதால் 5 ஓட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என அவரது 'காலம் கடந்த ஞானம்' தெரிவிக்கிறது.

மாட்டின் கப்டில் பந்தை எறிந்தபோது பென் ஸ்டோக்ஸ், ஆதில் ராஷித் ஆகிய இருவரும் 2ஆவது   ஓட்டத்தின்போது ஒருவரை ஒருவர் கடக்கவில்லை என்பது சலன அசைவுகளில் நிரூபணமாகியது.

இது தொடர்பாக டெலிகிராப் பத்திரிகைக்கு அண்மையில் இரேஸ்மஸ் தெரிவித்திருந்ததாவது:

''மறுநாள் காலை நான் காலை வுக்கு செல்வதற்காக எனது அறைக் கதவைத் திறந்த அதேநேரம் குமார் தர்மசேனவும் அவரது அறைக் கதவைத் திறந்தார். அப்போது அவர் 'நாங்கள் பாரிய தவறு இழைத்தோம் என்பதை நீங்கள் கவனித்தீர்களா?' என என்னிடம் கூறினார். அப்போதுதான் நான் அதை அறிந்தேன். ஆனால், மைதானத்தில் நாங்கள் வெறுமனே ஆறு என எங்களுக்குள்ளே கூறிக்கொண்டோம். ஆறு, ஆறு, அது ஆறு என கூறினோமே தவிர துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்தார்களா என்பதை கவனிக்கவில்லை. அவ்வளவுதான்' என்றார்.

இந்தத் தவறுக்காக மட்டும் அவர் வருந்தவில்லை. இன்னும் ஒரு தவறை 'தவறுதலாக' செய்திருந்தார் இரேஸ்மஸ்.

நியூஸிலாந்து முதலாவதாக துடுப்பெடுத்தாடியபோது 15 ஓட்டங்களைப் பெற்றிருந்த ரொஸ் டெய்லர் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்ததாக இரேஸ்மஸ் தீர்ப்பு வழங்கினார். பந்துவீச்சுப் பகுதி விளிம்பில் (wide of the crease) இருந்து மார்க் வூட் வீசிய பந்து ரொஸ் டெஸ்லரின் முழங்காலுக்கு மேல் பட்டது. களத்தடுப்பில் எல்.பி.டபிள்யூ.வுக்கு கேள்வி எழுப்பப்பட்டதும் ரொஸ் டெய்லர் ஆட்டம் இழந்ததாக இரேஸ்மஸ் தீர்ப்பிட்டார். நியஸிலாந்து தனது மீளாய்வுக்கான வாய்ப்பை நிறைவுசெய்திருந்ததால் ரொஸ் டெய்லர் மீளாய்வு செய்ய முடியாதவராக களம் விட்டகன்றார். 2019 உலகக் கிண்ணப் போட்டியில் ஒரு வெற்றிகர மீளாய்வுக்கான வாய்ப்பே அனுமதிக்கப்பட்டிருந்தது.

அது தொடர்பாக இரேஸ்மஸ் என்ன கூறினார் தெரியுமா?

'அது சற்று உயர்வாக இருந்தது. ஆனால் அவர்கள் மீளாய்வுக்கான வாய்ப்பை நிறைவு செய்திருந்தார்கள். ஏழு வாரங்கள் நீடித்த உலகக் கிண்ணப் போட்டியில் நான் இழைத்த ஒரே ஒரு தவறு அதுதான். அதனால் நான் பின்னர் மிகுந்த கவலை அடைந்தேன். ஏனெனில் அதனை நான் சரியாக தீர்மானித்திருந்தால் தவறு இழைக்காதவனாக உலகக் கிண்ணத்தை நிறைவுசெய்திருப்பேன். மேலும் எனது அந்தத் தீர்ப்பு போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். ஏனெனில் சிறந்த வீரர்களில் அவரும் (ரொஸ் டெய்லர்) ஒருவர்' என இரேஸ்மஸ் குறிப்பிட்டார்.

இந்த மத்தியஸ்தர்தான் (இரேஸ்மஸ்) இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் டெல்லியில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு 'டைம்ட் அவுட்' தீர்ப்பு வழங்கியவர் ஆவார்.

அவரேதான் இப்போது 'டைம்ட் அவுட்' ஆன நிலையில் 2019 உலகக் கிண்ண தவறுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதேபோன்று ஏஞ்சலோ மெத்யூஸின் டைம்ட் அவுட் ஆட்டம் இழப்பு தொடர்பாக இரேஸ்மஸ் காலம் கடந்து தவறை ஒப்புக்கொண்டாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை.

ஆனால், குமார் தர்மசேன அப்போது என்ன கூறியிருந்தார் தெரியுமா?

உலகக் கிண்ணப் போட்டி முடிந்து ஒரு வாரத்துக்குப் பின்னர் 'எனது தீர்மானம் குறித்து நான் ஒருபோதும் கவலைப்படப் போவதில்லை'  என  குறிப்பிட்டிருந்தார்.

'போட்டிக்கான சகல மத்தியஸ்தர்களுடனும் கலந்தாலோசித்த பின்னரே உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு 6 ஓட்டங்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டது' என அவர் கூறியிருந்தார்.

2__kumar_dharmasena.png

https://www.virakesari.lk/article/180545

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

குமார் த‌ர்ம‌சேனா விட்ட‌ பிழையால் எல்லாம் த‌லைகீழா போச்சு 

இனி இதை ப‌ற்றி புல‌ம்பி ஒன்றும் ந‌ட‌க்க‌ போவ‌து இல்லை

க‌ட‌ந்த‌ கால‌ இல‌ங்கை அணிய‌ப் போல‌ ப‌ல‌ வாட்டி அடிச்சு பிடிச்சு பின‌லுக்கு வ‌ந்து தோத்த‌து தான் மிச்ச‌ம்

நியுசிலாந்துக்கு போக‌ வேண்டிய‌ கோப்பை😢.........................

இல‌ங்கை அணியாவ‌து இர‌ண்டு முறை தூக்கி விட்டார்க‌ள் 1996 ம‌ற்றும் 2014.........................

 

இன்னும் இர‌ண்டு மாத‌த்தில் தொட‌ங்க‌ இருக்கும் உல‌க‌ கிண்ண‌ம் வெல்ல‌ வெஸ்சின்டீஸ் அணிக்கு அதிக‌ வாய்ப்பு இருக்கு.................

அவ‌ங்க‌ட‌ சொந்த‌ மைதான‌த்தில் ந‌ல்லா அடிச்சு விளையாடுவாங்க‌ள்....................நாச‌மாய் போன‌ வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழு இந்த‌ முறை சுனில் ந‌ர‌னுக்கு வாய்ப்பு கொடுக்க‌னும்🤲..........................................................................................................

Edited by பையன்26

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.