Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1712545039-More-than-90-killed-as-boat-s

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் படகு விபத்து- 90 பேர் உயிரிழப்பு!

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொசாம்பிக் கடற்கரையில் இடம்பெற்ற படகு விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

விபத்து ஏற்படும் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிக ஆட்களை அழைத்துச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1376989

  • கருத்துக்கள உறவுகள்

மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் 90 பேர் பலி !

08 APR, 2024 | 08:28 AM
image

மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தின் போது படகில் சுமார் 130 பேர் வரையில் பயணித்துள்ளனர்.

படகு விபத்தில் நீரில் மூழ்கிய 5 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற படகே இவ்வாறு வித்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படகு விபத்தின் போது காணாமல்போன ஏனையவர்களை தேடும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் குறித்த படகில் அதிகபட்சம் 100 பேர் பயணிக்க முடியுமெனவும் அதில் சுமார் 130 பேர் இருந்ததாக பயணித்ததாகவும் அந்நாட்டு அதிகாரியொருவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180660

  • கருத்துக்கள உறவுகள்

கொலரா அச்சம்: மீன்பிடி படகில் தப்பிக்க நினைத்த மக்கள்… நீரில் மூழ்கி 91 பேர் பலி!

Over 90 Killed As Boat Sinks Off Mozambique Coast - DailyNews

கிழக்கு ஆபிரிக்காவின் மொசாம்பிக் (Mozambique) நாட்டின் நம்புலா மாநிலத்தில் கொலரா பற்றிய தவறான தகவல்களால் ஏற்பட்ட பீதியின் காரணமாக, மக்கள் அந்த நிலப்பகுதியிலிருந்து வெளியேற முயன்றுவருகின்றனர்.

அதன் ஒருபகுதியாகவே ஒரு கோரசம்பவம் நடந்திருக்கிறது.

மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரை மாநிலமான நம்புலாவிலிருந்து சுமார் 130 பேரை ஏற்றிக்கொண்டு மீன்பிடிப் படகு ஒன்று புறப்பட்டிருக்கிறது.

அந்தப் படகில் அளவுக்கு மீறிய நபர்களை ஏற்றியிருக்கவே கூடாது. ஆனால், அளவுக்கு மீறிய பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு சென்றுகொண்டிருந்தபோது நடுக்கடலில் கப்பல் மூழ்கத் தொடங்கியிருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை 91 பேர் இறந்திருப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல் கிடைத்திருக்கிறது.

இதுதொடர்பாக பேசிய நம்புலா மாநிலச் செயலாளர் ஜெய்ம் நெட்டோ,
“படகில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பயணிகளை ஏற்றிச் செல்வதற்குப் பொருத்தமில்லாமல் இருந்ததாலும் படகு மூழ்கியதாக அறிகிறோம். பல குழந்தைகள் உட்பட 91 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணியாளர்கள் ஐந்து பேரை உயிருடன் மீட்டிருக்கின்றனர். பலரைத் தேடி வருகிறோம்.

ஆனால் கடல் நிலைமைகள் மீட்புப்பணியைக் கடினமாக்குகிறது. படகு விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

https://thinakkural.lk/article/298458

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.