Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"துரோகம்"
 
 
நான் கொழும்பில் பொறியியலாளராக வேலை பார்த்துக்கொண்டு இருந்த காலம் அது. எனக்கு உதவி பொறியியலாளராக, வெற்றிநாயகன் என்ற ஒருவன் பதவி பெற்று, என்னுடன் நல்ல நண்பனாகவும் பழகத் தொடங்கினான். எமது நட்பு பலமாக, நாம் எம் தனிப் பட்ட விடயங்களையும் எமக்கிடையில் பகிரத் தொடங்கினோம். இருவரும் அப்பொழுது திருமணம் ஆகாத வாலிபர்கள். ஆகவே பெண் நண்பியை பற்றியும் தாராளமாக கதைப்போம். எமக்கிடையில் எந்த ஐயப்பாடும் இல்லை.
 
ஒரு முறை, விடுதலையில் ஊர் போய், திரும்பிய வெற்றிநாயகன், முதல் முதல் தன் காதல் அனுபவத்தை, அன்று மாலை இருவரும் பொது விடுதியில் [pub] சந்தித்த பொழுது சொல்ல தொடங்கினான்.
 
தான் ஒரு முறை தன் கிராமத்தில், ஒட்டப்பயிற்சி செய்யும் பொழுது, தற்செயலாக அவள் அங்கு ஒரு குளத்தில் தோழிகளுடன் குளித்துக்கொண்டு இருக்கும் பொழுது பார்க்க நேர்ந்ததாகவும், அவளின் அழகும் இளமையும், துடிப்பும் தன்னை கவர்ந்ததாகவும் , பிறகு மெல்ல மெல்ல அவளுடன் கதைத்து, அவளைப்பற்றி முழுதாக அறிந்து, அவள் சாதாரண படிப்பு என்றாலும், அவளின் குணம் பிடித்துக்கொண்டதாகவும், அவளையே தான் கல்யாணம் செய்யப்போவதாகவும் கூறினான்.
 
அதன் பின் ஒவ்வொரு முறையும் ஊர் போய் திரும்பி வந்தால் , அவளின் கதை தான்! இருவரும் ஒன்றாக படங்களும் எடுத்துள்ளனர், எனக்கும் ஒரு முறை, நான் அவனின் கிராமத்துக்கு சென்றபொழுது, அவளை அறிமுக படுத்தினான். உண்மையில் அவனின் தெரிவு நல்லதாகவே இருந்தது. மிகவும் பண்பாடாக என்னுடன் கதைத்தாள். என்னை அண்ணா என்று கூப்பிடுவாள். நானும் என் தங்கையாக மிக மரியாதையுடன் கதைப்பேன்.
 
"ஒட்டி உடையில் பெண்மை காட்டி
எட்டி நடையில் வேகம் காட்டி
சுட்டி விடையில் புத்தி காட்டி
வெட்டி பேச்சில் வெகுளி காட்டி
தட்டி கழித்து நாணம் காட்டி
முட்டி மோதி போகும் பெண்ணே"
 
அவளை என்னால் அன்று கவிதையில் சொல்லக்கூடியதாக இருந்தது. கிராமத்து மணம் வீசும், ஒரு சாதாரண பெண் அவள், என் நண்பனுடன் உயிருக்கு உயிராக அன்பாக நட்பாக பழகினாள். அவனும் அப்படித்தான் எனக்கு அன்று தெரிந்தது.
 
பொதுவாக நகரத்திற்கு வரும் கிராமத்து பெண்களின் பேச்சு, நடை, உடை பாவனைகளை பார்க்கும் நகரத்து பெண்கள் அவர்களை ஏளனம் செய்வது நான் பார்த்துள்ளேன். ஆனால் அவர்கள் அந்த கிராமத்துக்கு போய் அவர்களின் வாழ்வை நேரடியாக பார்க்கவேண்டும். அப்ப தான் அவர்களின் கிராமத்து மணம் வீசும் உண்மையான அன்பும் பற்றும் கொண்ட அவர்களின் பண்பாட்டு வாழ்வை அறிவார்கள். இவளும் அப்படித்தான். இதழ்களில் வழிந்தோடும் கனி ரசமான இரத்தின புன்னகை - அதில் முத்துக் குளிக்க காத்திருக்கும் வரிசையான பற்கள், பின்னல் போடும் மயில் தோகை - அதில் இருந்து வெளி வரும் இயற்கை. மணம். பொய்கள் வசீகரம் இல்லா உண்மையான வார்த்தைகள்! . என்றாலும் விதி யாரைத்தான் விட்டது?
 
நாட்டில் கலவரங்கள் , அரசியல் கொந்தளிப்புக்கள் தொடர்ந்து ஏற்பட, அவன் நாட்டை விட்டு திடீரென ஒருநாள் வெளிநாடு போய்விட்டான். தான் அங்கு முறையாக குடியேறியதும், அவளை கூப்பிடுவதாக என்னிடம் கூறினான். அவளும் தன்னிடம் அப்படி கூறியதாகவும் , அந்தநேரம் தன் பெற்றோரிடம் கதைப்பார் என்றும் கூறினாள். நானும் அதன் பின் திருமணம் செய்து, மனைவியுடன் வெளிநாடு போய்விட்டேன். நன்பனுடன், அல்லது அவனின் காதலியுடன், அதன் பின்பு எனக்கு தொடர்பு இருக்கவில்லை.
 
பல ஆண்டுகள் கழித்து, முகநூல் மூலம் என் நண்பன் மீண்டும் என்னுடன் இணைந்து கொண்டான். நானும் மிக மகிழ்ச்சியாக எங்கே என் தங்கச்சி [அவரின் காதலி] என்றேன். அதெல்லாம் முடிந்து விட்டது என்றான். எனக்கு ஒரே அதிர்ச்சி. ஏன் என்ன நடந்தது தங்கச்சிக்கு என்று ஆவலாக கேட்டேன். ஒரு பக்கம் அவளுக்கு ஏதாவது நடந்து விட்டதா என்ற கவலையும் ஏக்கமும்
 
ஆனால் அவனோ, சிரித்தபடி, அதெல்லாம் அந்தநேரம். நான் வெளியே வந்ததும் மறந்துவிட்டேன். நான் இங்கேயே ஒருவளை காதலித்து மணந்து விட்டேன். அவளுக்கு தெரியுமா என்றேன் ?. இப்ப அவள் எப்படி என்றேன் ?? தான் அவளுக்கு சொல்லவில்லை என்றும், அது தேவையும் இல்லை என்றும் கூறி, எப்படி நீ என கதையை மாற்றினான். மனைவி படமும் காட்டினான். அவளை விட அழகு என்று சொல்ல
முடியாது, ஆனால் வசதியான படித்த பெண்ணாக தெரிந்தது. என்றாலும், அண்ணா என்று அன்பாக, பண்பாக என்னுடன் கதைத்த அவளை பற்றி அறியவேண்டும் என்ற கவலை என்னில் இருந்தது.
 
முகநூல், மற்றும் நண்பர்கள் மூலம் தேடி, ஒருவாறு அவளை கண்டு பிடித்தேன். அவள், அவன் வெளிநாடு சென்றபின், வருவான் வருவான் என்று காத்திருந்து, பின் வேறு ஒருவரை கல்யாணம் செய்ய மறுத்து, தனிக் கட்டையாக இன்னும் வாழ்வதாக அறிந்தேன்!
 
அவன், தனது வசதிக்கு ஏற்ப, முன்னையதை தூக்கி எறிந்து விட்டு, புதியதை ஏற்று, வாழ பழகிவிட்டான். காலம், வசதிக்கு ஏற்ப தன்னை சரிப்படுத்தி விட்டான். அதை அவன் துரோகம் என்று கூட கருதவில்லை. அவன் சொன்ன காரணம். நாம் காதலித்தோம் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எல்லோரும் எதோ ஒரு நேரத்தில் காதல் கொள்ளுவது புதுமை இல்லை. நம்பிக்கை கொடுத்ததும் கூப்பிடுவேன் என்று சொன்னதும் உண்மைதான். இவை எல்லாம் அந்த நேர பேச்சுக்கள். அதை தூக்கி பிடித்துக்கொண்டு வாழ்வை வீணாக்க முடியாது.
 
மகாவம்சத்தில், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு வந்த விஜயன், அங்கு அடைக்கலம் புகுந்து, யக்கினி குவேனியை திருமணம் செய்கிறான். என்றாலும் பிறகு அது தனக்கு பெருமை மற்றும் வசதி இல்லை என்று, அடைக்கலம் கொடுத்த நாட்டுக்கும் மக்களுக்கும் தான் திருமணம் செய்த குவேனிக்கும் துரோகம் செய்து, பாண்டிய மன்னனின் மகளை திருமணம் செய்து, இலங்கையின் துரோக வரலாற்றை ஆரம்பிக்கிறான் என்று கூறுகிறது. ஆகவே என் நண்பனின் கதை எனக்கு ஆச்சிரியம் தரவில்லை. ஆனால் அவள் மேல் பரிதாபம் இருந்தது. அவள் கிராமத்து நம்பிக்கைகள் கூடிய அப்பாவி பெண்! அவளுக்கு இதெல்லாம் புரியாது. காதல் செய்யும் பொழுதே, தன்னை இச்சையில் தொடும் பொழுதே, இவன் தான் என் புருஷன் என, தான் வணங்கும் காவல் தெய்வத்துக்கும் சொல்லிவிடுவாள். அவளுக்கு பொய்க்கும் உண்மைக்கும் உள்ள வேறுபாடு தெரியாது. காதல் வாழ்வை சூழலுக்கு ஏற்ப சரிப்படுத்தி நகரவும் தெரியாது !
 
பரிணாமம் என்பது புதுமை படைப்பதோ, புரட்சி செய்வதோ அல்ல. அது வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப கொஞ்சம்கொஞ்சமாக நம்மை நாமே செதுக்கிக் கொள்வது போன்றது. அப்படித்தான் அவனும் இலங்கையில் இருந்த சூழலும் வெளிநாட்டு சூழலும் ஒன்றுக்கொன்று மாற அவனும் தன்னை அதற்கு ஏற்றவாறு மாற்றிவிட்டானென்று சொல்வதா ? இல்லை இது துரோகம் தானா ?உங்களுக்கு எப்படியோ ??
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.