Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர், பானுமதி. 40 வயதான அவர், சில வருடங்களுக்கு முன்பு கணவரை விட்டுப் பிரிந்து வெள்ளத்துரை என்பவருடன் குடித்தனம் நடத்தி வருகிறார். சபலம் கொண்ட தொழிலதிபர்களை சமூக வலைதளங்களில் தேடிக் கண்டுபிடித்து, முகநூல் நண்பர்களாகி ஏமாற்றி மோசடி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார், பானுமதி. 20-க்கும் அதிகமான தொழிலதிபர்கள் மூலம் கோடிக்கணக்கில் பணத்தைப் பறித்த விவரம் வெளியாகியுள்ளது.

 
 
 
முகநூல் பழக்கத்தில் தொழிலதிபர்களை கடத்திய தம்பதி
 
முகநூல் பழக்கத்தில் தொழிலதிபர்களை கடத்திய தம்பதி
 

அவரிடம் அண்மையில் சிக்கிய சேலம் மாவட்டம், அய்யன்பெருமாள்பட்டியை சேர்ந்த நித்யானந்தன் மூலமாகவே இந்த வில்லங்க விவகாரம் வெளியில் தெரியவந்துள்ளது. அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து பானுமதி அவரது கூட்டாளிகள் வெள்ளத்துரை, பார்த்தசாரதி, சுடலை, ரஞ்சித் ஆகிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 
 

இந்த வழக்கை விசாரிக்கும் பெருமாள்புரம் காவல்துறையினரிடம் பேசினோம். “இந்த கும்பலின் மூளையாக பானுமதியும் வெள்ளத்துரையும் செயல்பட்டுள்ளனர். சேலத்தில் காற்றாலைகளுக்கு உதிரிப் பாகங்கள் சப்ளை செய்யும் தொழில் செய்யும் நித்யானந்தனுக்கு முகநூலில் பானுமதியின் நட்பு கிடைத்துள்ளது. மூன்று மாதப் பழக்கத்தில் நித்யானந்தனின் நிதிநிலையை அறிந்துகொண்ட பானுமதி, அவரிடம் ஆசையாகப் பேசி தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.

 
பெருமாள்புரம் காவல் நிலையம்
 
பெருமாள்புரம் காவல் நிலையம்
 

அதை நம்பிய நித்யானந்தன் நெல்லை வந்திருக்கிறார். பானுமதியின் வீட்டில் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது வெள்ளத்துரை தனது நண்பர்களான பார்த்தசாரதி, சுடலை, ரஞ்சித் ஆகியோருடன் நுழைந்து சரமாரியாகத் தாக்கியுள்ளார். பின்னர் நித்யானந்தனை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றிருக்கிறார்கள்.

 
 

எப்படியோ தனது நண்பரைத் தொடர்பு கொண்டு நித்யானந்தன் இந்த விவரங்களைச் சொல்லியிருக்கிறார். அவர் மூலமாகவே எங்களுக்கு தகவல் தெரியவந்தது. பிடிபட்டவர்களிடம் விசாரித்த பிறகே இந்த கும்பல் பானுமதி மூலம் தொழிலதிபர்களை வீட்டுக்கு வரவழைத்து பணம் பறிக்கும் விவரம் தெரியவந்தது. இவர்களிடம் பலர் 50 லட்சம், 60 லட்சம் என இழந்திருக்கிறார்கள். வெளியே சொன்னால் அசிங்கம் என பாதிக்கப்பட்டவர்கள் ஒதுங்கிச் சென்றதை சாதகமாகப் பயன்படுத்தி நீண்ட காலமாக இந்த மோசடியைச் செய்திருக்கிறார்கள்” என்றார்கள்.

 
கடத்தல் கும்பலிடம் பிடிபட்ட சொகுசு கார்
 
கடத்தல் கும்பலிடம் பிடிபட்ட சொகுசு கார்
 

பானுமதிக்கு உடந்தையாக இருந்த நான்கு பேரும் ஊருக்குள் பெரிய மனிதர்கள் போல வலம் வந்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளுடனும் நல்ல தொடர்பில் இருந்துள்ளனர். அனைத்துக் கட்சியினருடனும் நெருக்கமாக இருந்ததோடு, தேர்தல் நேரத்தில் பல கட்சியினருக்கும் நன்கொடையை வாரி வழங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 
 

”மோசடி மூலமாகக் கிடைக்கும் பணத்தை சமமாக பிரித்துக் கொள்வோம். பணம் கைக்கு வந்ததும் பானுமதியை அடுத்த அசைன்மெண்டை பார்க்கச் சொல்லிவிட்டு நாங்கள் நான்கு பேரும் கோவா, மும்பை என வெளி மாநிலங்களுக்கு செல்வோம். அங்குள்ள பெரிய ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி பெண்களோடு இருப்போம். சில சமயம் சென்னையில் இருந்து விமானம் மூலம் துணை நடிகைகளை வரவழைத்து தங்கியிருப்போம். பணம் தீர்ந்த பிறகே ஊருக்குத் திரும்புவோம்” என விசாரணையின்போது அவர்கள் தெரிவித்ததைக் கேட்டு போலீஸாரே அதிர்ந்து விட்டார்களாம்.

 
நெல்லை காவல்துறை ஆணையர் மூர்த்தி
 
நெல்லை காவல்துறை ஆணையர் மூர்த்தி
 

நீண்ட காலமாக போலீஸ் பிடியில் சிக்காத இந்த மோசடி கும்பலிடம் 20-க்கும் அதிகமான தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் பணத்தை இழந்திருக்கிறார்கள். இந்த கும்பல் பிடிபட்டது எப்படி என நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் மூர்த்தியிடம் கேட்டோம். ”சேலத்தை சேர்ந்த நித்யானந்தன் கடத்தப்பட்ட விவரத்தை அவரது நண்பர் எங்களுக்கு தெரியப்படுத்தினார். அதன் மூலமாகவே இந்த கும்பலைப் பிடிக்க முடிந்திருக்கிறது.

 
 

பானுமதியின் மூன்று மாத முகநூல் பழக்கத்தை நம்பி நெல்லைக்கு வந்த நித்யானந்தனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வீட்டுக்குள் அடைத்து வைத்த பானுமதி அவரிடம் இருந்த நகை பணத்தைப் பறித்துள்ளார். அவரின் ஏ.டி.எம் கார்டு மற்றும் ஜி-பே மூலமாக ஒன்றே கால் லட்சம் பணத்தை எடுத்த பின்னர் காரில் கடத்திச் சென்று அடித்து மிரட்டியுள்ளனர்.

 
மோசடி கும்பலை பிடித்த சிறப்புப்படை
 
மோசடி கும்பலை பிடித்த சிறப்புப்படை
 

உயிரோடு ஊர் திரும்ப வேண்டுமானால் 10 லட்சம் ரூபாய் பணத்தை செக் மூலம் எடுத்துக் கொடுக்க வேண்டும் என மிரட்டி வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வங்கியில் கிடைத்த சிறிய வாய்ப்பை பயன்படுத்தி தனது நண்பருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். அவர் மூலமாக எங்களுக்கு தகவல் கிடைத்ததும் நித்யானந்தன் செல்போன் நம்பரை வாங்கி, அதன் டவரை வைத்து மீட்க முடிவு செய்தோம்.

 
 

நெல்லை மாநகர துணை ஆணையர் ஆதர்ஷ் பசோரா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் நாங்குநேரி பகுதியில் சென்று கொண்டிருந்த காரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை அழைத்து வந்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த போதுதான் பானுமதி மூலம் இந்தக் கும்பல் பலரிடம் மோசடி செய்த விவரம் தெரியவந்தது.

 
திறமையாகச் செயல்பட்ட காவல்துறையினருக்கு வெகுமதி
 
திறமையாகச் செயல்பட்ட காவல்துறையினருக்கு வெகுமதி
 

பலரை மிரட்டி பணம் பறித்த இந்த கும்பலிடம் இருந்து கையெழுத்திட்ட காசோலைகள், அடமான பத்திரங்கள், கடன் பத்திரங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளோம். சிறையில் இருக்கும் பானுமதி உள்ளிட்ட ஐந்து பேரையும் கஸ்டடி எடுத்து விசாரித்தால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்பதால் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர், இவர்களிடம் 60 லட்சம் ஏமாந்திருக்கிறார். அவரும் புகார் அளித்துள்ளதால் இதுவரை இரண்டு வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.

பாதிக்கப்பட்ட மேலும் சிலர் எங்களிடம் பேசியுள்ளனர். முகநூல் மூலம் நட்பாகப் பழகி மோசடி செய்யும் கும்பல் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும். தங்களைப் பற்றிய விவரத்தை மறைக்க நினைத்தால் எங்களிடம் நேரில் வந்து தகவல் மட்டும் கொடுக்கலாம். இந்த கும்பல் மோசடியாகச் சேர்ந்த பணத்தை தொழில்களில் முதலீடு செய்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதனால் அவர்களை கஸ்டடி எடுத்து விசாரித்த பின்னர் பணத்தை இழந்தவர்களுக்கு திருப்பிக் கொடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.