Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   14 MAY, 2024 | 04:34 PM

image

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் அதன் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு  பரீட்சைகள் திணைக்களத்துக்கு குறைந்தது மூன்று மாதங்கள் தேவையாகும். இக்காலப்பகுதியில்  மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து விலகியிருப்பதால், அவர்கள் கல்வி பொதுத்தராதர  உயர்தரத்தை பயில்வதற்கான போக்குகள் குறைவடைவதால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள்  உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

இவ்விடயத்தைக் கருத்தில் கொண்டு மாணவர்களுடைய நேரத்தை பயனுள்ளவாறு முகாமைத்துவப்படுத்துவதற்கும் க.பொ.த உயர்தர  பாடவிதானங்களை  உள்ளடக்குவதற்காக  ஆசிரியர்களுக்கு போதியளவு நேரத்தை ஒதுக்கி வழங்குவதற்கு இயலுமாகும் வகையில்  2024ஆம் ஆண்டில் சாதாரண பரிட்சை பூர்த்தியானதுடன் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கை நடவடிக்கைகளை ஆரம்பிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய 2023ஆம் ஆண்டுக்கான  க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்காக, அப்பரீட்சை முடிந்தவுடன் க.பொ.த உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/183537

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூனில் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பம் - கல்வி அமைச்சினால் சுற்று நிரூபம் வெளியீடு

16 MAY, 2024 | 05:38 PM
image
 

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 2023 (2024)  தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, உயர்தர வகுப்புகளை ஜூன் 4ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. புதன்கிழமை (15) நிறைவடைந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஏற்கனவே அறிவித்திருந்தார்.

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வெசாக் விடுமுறையின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளன. எவ்வாறிருப்பினும் பரீட்சைகளை நிறைவு செய்துள்ள மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகள் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம் கிடைக்கப் பெறாத அதிபர்கள் மாகாண மற்றும் வலய கல்வி திணைக்களங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/183718

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.