"மாற்றம்" [யாழ்ப்பாணத்து தமிழ் மருத்துவ மாணவனின் கதை]
-
Tell a friend
-
Topics
-
1
கிருபன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது : இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழப்பு! 25 JUN, 2024 | 09:17 AM யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைதுசெய்யச் சென்ற இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்திய மீனவர்களை கைதுசெய்ய முயன்ற போது படகிலிருந்து தவறி விழுந்த கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இதன்போது ஒரு இந்திய மீனவர்களின் படகு இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் 10 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைமடிப் படகை பிடிக்க காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படையினர் சென்றிருந்தனர். இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகும் கைதுசெய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரதே பரிசோதனையின் பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/186897
-
புலிகள் இல்லாக் காலத்தில் பொதுவேட்பாளரே தமிழரின் ஆயுதம்! தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு இருந்தது. ஆனால், இப்போது எமக்கான எந்தப் பாதுகாப்பும் இல்லை. அதனால் எமது இனத்தை தங்களின் காலடியில் வீழ்த்திவிடலாம் என பேரினவாதிகள் மனப்பால் குடிக்கின்றனர். ஆனால், அதனை முறியடித்து, புலிகள் இல்லாத இந்தக் காலத்தில் எமது புதிய ஆயுதமாக பொதுவேட்பாளர் விடயத்தைக் கையாள்வோம். இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். கைதடியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; பொதுவேட்பாளருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. நானும் இந்தப் பொதுவேட்பாளருக்கு ஆதரவானவன். ஜனாதிபதித் தேர்தலில் காலாதிகாலமாக இலங்கை தேசியக் கட்சிகளுக்கே தமிழ் மக்களாகிய நாம் வாக்களிக்கப் பழகியிருக்கின்றோம். பொதுவேட்பாளராக தமிழர் வெற்றி வாகைசூடமுடியாது என்பதும், எந்த ஒரு தமிழனும் ஜனாதிபதியாக இலங்கையில் வரமுடியாது என்பதும் எமக்கு நன்கு தெரியும். ஆனால், இங்கே வெற்றி தோல்வியென்பதற்கு அப்பால், எமது உரிமைக்கான குரலை அழுத்தமாக வெளிப்படுத்தும் ஒரு கருவியாக பொதுவேட்பாளரை முன்னிறுத்த வேண்டும். மீண்டும் இந்த பதிமூன்றாவது திருத்தம் பற்றிய கதையாடல்கள் மேலெழத் தொடங்கிவிட்டன. பொதுவாகத் தேர்தல் காலங்களில் பதின்மூன்றாம் திருத்தத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கதைத்து, அதனை மூலதனமாக்கி வாக்குகளை அள்ளுவது பேரினவாத வேட்பாளர்களுக்குக் கைவந்தகலை. அதையே இப்போதும் செய்யத் தொடங்கி இருக்கின்றனர். இம்முறை ஜனாதிபதித் தேர்தல்களத்தில் மூவர் போட்டியிடப் போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ஆனால், அவர்களின் தலைவிதி தமிழர்களின் கையில் என்பதால்தான். அந்த மூவரும் அடிக்கடி வடக்குக்கு வருவதை வாடிக்கையாக்கிவிட்டார்கள். தமிழ் மக்களை சிங்களப்பேரினவாதம் கிள்ளுக்கீரையாக அடக்கியாள நினைத் தது. எப்பொழுது விடுதலைப் புலிகள் மீண்டும் திருப்பியடிக்கத் தொடங்கினார் களோ அன்றிலிருந்து தான் தமிழர்கள் மீது கைவைப்பதை சிங்களப் பேரின அரசு நிறுத்தியது. இப்பொழுது புலிகள் இல்லையென்பதால், மீண்டும் பழைய படி தமிழர்களை அடக்கியொடுக்க நினைக்கிறார்கள். வடக்கு-கிழக்கு முழுவதுமே இப்போது புலனாய்வாளர்களின் தீவிரக் கண்காணிப்பில் வந்துவிட்டது. தமிழ்மக்கள் எங்கு சென்றாலும் அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். ஒரு கருத்தைக் கூட சுதந்திரமாகச் சொல்லவிடாமல் தடுக்கிறார்கள். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாம் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். இனியொரு ஆயுதப்போராட்டத்தை தமிழர்கள் இப்போதைக்கு சிந்தித்துக்கூடப்பார்க்கமுடியாது. அப்படிப்பட்ட கையறு நிலையில் எமது உரிமைகளை வென்றெடுக்க புதிய வழிகளைக் கண்டறியவேண்டும். அப்படியான புதிய வழிகளுக்கான முதற்படியாக, புலிகள் இல்லாத இந்தக் காலத்தில் எம தினத்தின் புதிய ஆயுதமாக பொதுவேட்பாளரை மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார். (ச) https://newuthayan.com/article/புலிகள்_இல்லாக்_காலத்தில்_பொதுவேட்பாளரே_தமிழரின்_ஆயுதம்!
-
By வீரப் பையன்26 · Posted
விளையாட்டில் இதெல்லாம் சாதாரணமப்பா😁😛........................... -
By கிருபன் · பதியப்பட்டது
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது உறுதி செய்யப்பட்டது ! kugenJune 25, 2024 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் ஒரு கொள்கை முடிவாக இருந்த நிலையில் திங்கட்கிழமை (25) அது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அதனை முன்னெடுத்துச் செல்வதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்பீட கூட்டம் திங்கட்கிழமை (25) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று பொது வேட்பாளர் தொடர்பில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள் எமக்குள் இடம்பெற்று இருந்தது. இதுவரை காலமும் கொள்கை ரீதியாக பொது வேட்பாளர் ஒருவரைத் தமிழர் தரப்பில் நிறுத்துவது என்று இருந்த விடயம் திங்கட்கிழமை (25) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழர் தரப்பில் உள்ள சிவில் அமைப்புகளுடன் பேசி ஏனையவர்களையும் இணைத்து இந்த பொது வேட்பாளர் என்கின்ற விடயத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளரை நிறுத்துவதனூடாக தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை தீர்க்கக்கூடிய தமிழ் மக்களினுடைய உரிமைகளை முழுமையாக பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நிலையை அடையக்கூடிய வகையில் இந்த தேர்தல் களத்தை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்பதை தீர்மானமாக எடுத்திருக்கின்றோம் எனத் தெரிவித்தார். இன்றைய உயர் பீட சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஜனா கருணாகரன், ஈ பி ஆர் எல் எப் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன் மற்றும் துளசி, புளொட் சார்பில் முன்னாள் விவசாய அமைச்சர் சிவனேசன், ஜனநாயக தமிழ் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் இந்திரலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.battinews.com/2024/06/blog-post_490.html
-
-
Our picks
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts