Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோட்டங்களை ஒப்படைத்து செல்லுமாறு அரசாங்கத்தால் ஆணையிட முடியாது நாட் சம்பளமாக 1380 ரூபாவை மாத்திரமே எம்மால் வழங்க முடியும் - பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

27 MAY, 2024 | 06:31 PM
image

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டந் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க முடியாவிட்டால், தோட்டங்களை ஒப்படைத்து செல்லுமாறு அரசாங்கத்தால் ஆணையிட முடியாது. அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கெதிராக தாமும் சட்ட நடவடிக்கை எடுக்க தயார் என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது.

அடிப்படை சம்பளத்தில் 200 ரூபா அதிகரிப்புடன், நாட் சம்பளமாக 1380 ரூபாவை மாத்திரமே எம்மால் வழங்க முடியும். இது தொடர்பான முன்மொழிவை நாம் சமர்ப்பித்த போதிலும், அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது. இவ்வாறான முட்டாள் தனமான தீர்மானங்களால் எதிர்காலத்தில் 'சிலோன் டி' என்ற நாம் முற்றாக அழிந்து போகக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் முதலாளிமார் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்தது.

பெருந்தோட்டந் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் நேற்று திங்கட்கிழமை கொழும்பு, ரேணுகா சிட்டி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர்.

ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் சேனக அலவத்தேகம, பொதுச் செயலாளர் லலித் ஒபேசேகர, பேச்சாளர் ரொஷான் இராஜதுறை, கொழும்பு தேயிலை வர்த்தக சங்கத்தின் தலைவர் சஞ்ஜய் ஹேரத், சிரேஷ்ட தேயிலை ஏற்றுமதியாளர் அன்ஸ்லம் பெரேரா, சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜகத் பத்திரண உள்ளிட்டோரால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் இராஜதுறை தெரிவிக்கையில்,

சம்பள உயர்வை வழங்க முடியாது என நாம் கூறவில்லை. ஆனால் உற்பத்தி செலவு மற்றும் வருமானம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே சம்பள அதிகரிப்பை வழங்க முடியும். அடிப்படை சம்பளத்தை 200 ரூபாவால் அதிகரித்து, நாளாந்த மொத்த சம்பளமாக 1380 ரூபாவை வழங்குவதற்கான யோசனையை முன்வைத்துள்ளோம். எனினும் அரசாங்கமும், பெருந்தோட்ட தொழிற்சங்கங்களும் அந்த யோசனையை நிராகரித்துள்ளன.

உற்பத்தி திறன் மற்றும் வருமானத்துடன் இணைக்கப்பட்ட சம்பள மாதிரியை அல்லது தொழிலாளர்களின் கொடுப்பனவுகளை உற்பத்தி திறன் மற்றும் வருமானத்துடன் இணைக்கும் வருவாய் பகிர்வு மாதிரியை நாம் முன்மொழிந்துள்ளோம். அந்த முன்மொழிவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

1992இல் அரசாங்கம் தன்னால் நிர்வகிக்க முடியாத நிலைமையிலேயே தோட்டங்களை கம்பனிகளிடம் குத்தகைக்கு வழங்கியது. இவற்றில் பல பில்லியன்களை கம்பனிகள் முதலீடு செய்துள்ளன. அது மாத்திரமின்றி பங்குகளையும் கொள்வனவு செய்துள்ளன. எனவே தற்போது தோட்டங்களை சிறந்த நிலைமைக்கு கொண்டு வந்ததன் பின்னர் ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு எவ்வாறு கூற முடியும்? அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நாம் அதனை சட்ட ரீதியாக அணுகுவோம்.

1700 ரூபா வழங்க முடியும் என்றால் அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள தோட்டங்களில் அதனை செய்து காண்பிக்குமாறு சவால் விடுக்கின்றோம். எம்மால் வழங்கக் கூடிய அதிகபட்ச நாளாந்த சம்பளம் தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கவில்லை. முதலாளிமார் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் பங்குடைமையாளர்களுடன் பேசியே இறுதி தீர்மானம் எடுக்க முடியும் என்றார்.

சிரேஷ்ட தேயிலை ஏற்றுமதியாளர் அன்ஸ்லம் பெரேரா தெரிவிக்கையில், ஆட்சியாளர்களினால் எடுக்கப்பட்ட தான்தோன்றித்தனமான சில முடிவுகளாலேயே இன்று பெருந்தோட்டங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான முட்டாள்தனமான தீர்மானங்கள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமானால் எதிர்காலத்தில் 'சிலோன் டி' என்ற நாமம் அழிந்து விடும் அபாயம் காணப்படுகிறது. இது நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.

https://www.virakesari.lk/article/184642

  • கருத்துக்கள உறவுகள்

Estate-worker.jpg?resize=340,227&ssl=1

1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது!

தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பை அரசாங்கம் பரிந்துரைத்தவாறு வழங்க முடியாது என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

புதிய சம்பள உயர்வால் பெருந்தோட்டத் துறையில் ஏற்பட்டுள்ள பாதகமான விளைவுகளுக்கு எதிராக அனைத்து பங்குதாரர்களாலும் வெளியிடப்பட்டுள்ள கூட்ட அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

தேயிலை மற்றும் இறப்பர் துறையில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் 70 வீதமாக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்துக்கும் கடும் எதிர்ப்பினை முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிக்கும் இந்தத் தீர்மானமானது பெருந்தோட்டத் துறையை நலிவடையச் செய்து இறுதியில் நாட்டில் கடுமையான பொருளாதார ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், தொழில்துறையிலுள்ள அனைத்து பங்குதாரர்களின் நலன்கள் மீது எந்த அக்கறையும் இல்லாமல் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் எந்த நன்மையையும் தராத இந்தத் தீர்மானம் நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழிலின் ஒவ்வொரு துறையையும் மேலும் பலவீனப்படுத்தும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முழு பெருந்தோட்டத்தின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளதாகவும் மேலும், நாடு முழுவதும் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் சமூகங்களின் வாழ்வாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் முதலாளிமார் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

https://athavannews.com/2024/1384356

  • கருத்துக்கள உறவுகள்

manusha-1.jpg?resize=600,375&ssl=1

தோட்ட முதலாளிமார்களுக்கு மனுஷ நாணயக்கார உத்தரவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த பட்ச சம்பளத்தை 1,700 ரூபாயாக அதிகரிப்பதற்கான தீர்மானத்தை அனைத்து தோட்ட முதலாளிமார்களும் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, உரிய சம்பளத்தை வழங்காத தோட்டங்கள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு முறையானவர்களிடம் கையளிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் ஏற்கனவே குறைந்தபட்ச சம்பளத்தை விட அதிகமாக சம்பளத்தை செலுத்தி வருவதாகவும், அரசாங்கத்திடம் இருந்து தனியாருக்கு மாற்றப்பட்ட உள்ளூர் தோட்ட நிறுவனங்களில் இந்த சம்பளத்தை அதிகரிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறைந்தபட்ச சம்பளத்தை அமுல்படுத்தாத தோட்ட நிறுவனங்களை கையகப்படுத்தி அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்தக் கூடியவர்களுக்கு வழங்குவதற்கான அடிப்படை சட்டத்தை தயார் செய்ய ஜனாதிபதி அமைச்சரவையில் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அடுத்த மாதம் முதல் உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் இல்லையெனில், சட்டத்தை அமல்படுத்த தொழில் திணைக்களத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1384357

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சட்டதிட்டங்கள் தெரியாமலா அரசாங்கம் ஊதிய அதிகரிப்பை அறிவித்தது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.