Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`ஓசோன்படல அழிவு தொடர்ந்தால் 50 ஆண்டுகளில் இலங்கையின் கரையோரம் கடலில் மூழ்கிவிடும் அபாயம்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`ஓசோன்படல அழிவு தொடர்ந்தால் 50 ஆண்டுகளில் இலங்கையின் கரையோரம் கடலில் மூழ்கிவிடும் அபாயம்'

[05 - October - 2007]

"பூமி இயங்குவதற்கும் ஜிவராசிகள் வாழ்வதற்கும் சூரியனே முழுமுதற் காரணமாக அமைகின்றான். எனவே நாம் தினமும் சூரியனை பொங்கல் வைத்து வழிபாடு செய்யவேண்டும்" என்று சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சின் தேசிய ஓசோன் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டபிள்யூ எஸ்.சுமதிபாலா "எதிர்கால சந்ததியினருக்காக ஓசோன் படலத்தைப் பாதுகாப்போம்" என்ற பொருளில் விரிவுரையைாற்றும் போது குறிப்பிட்டார். "சூரியனிலிருந்து பூமிக்கு பயணிக்கிற வெவ்வேறு கதிர்களிலிருந்து ஜீவராசிக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஊதாக் கதிர்கள் இயற்கையான சூரியத்திரையாக செயற்பட்டு வரும் ஓசோன் படலத்தினால் உறிஞ்சப்பட்டு வருகின்றது. ஓசோன் படலத்தை அழிவிலிருந்து பாதுகாக்கவேண்டும். ஓசோன் படலத்தை மதித்து மனிதன் செயற்பட வேண்டும்" என்று டாக்டர் சுமதிபாலா தெரிவித்தார்.

டாக்டர் சுமதிபாலா மேலும் சொன்னதாவது: "மனிதன் கிராமம், நகரம், நாடு என்ற வேறுபாடின்றி பூமியைப் பாதுகாக்க வேண்டிய நிலை இன்று உருவாகியுள்ளது. உலகில் உள்ள 192 நாடுகளும் சூரியனின் இயற்கைத் திசையாக விளங்கும் ஓசோன் படலத்தை பாதுகாக்க அண்மையில் திடசங்கற்பம் பூண்டுள்ளன. ஓசோன் படலம் அழிந்தால் மனித இனமே அழிந்துவிடும் ஆபத்து உருவாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷும் நாமும் ஒன்றாகத்தான் அழிவோம். இப்பிரபஞ்சத்தில் பூமிமாத்திரம் தான் ஒரேயொரு உயிர்வாழும் கோளமாக விளங்குகின்றது. பூமியில் வாழும் உயிரினங்களைப் பாதுகாக்கும் ஓசோன்படலம், பூமியின் மேற்பரப்பிலிருந்து 10-50 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட தூரத்தில் உள்ள வளிமண்டலத்தில் உருவாகின்றது.

ஓசோன் படலத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள அழிவு தொடருமானால் இன்னும் ஐம்பது வருட காலத்தில் இலங்கையின் கரையோரப் பிரதேசம் கடலில் மூழ்கும் ஆபத்து ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதுபோன்று ஏனைய நாடுகளும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. இது தொடருமானால் உலக வரைபடத்தையே மாற்றி அமைக்கும் நிலையும் ஏற்படும். இன்று பூமி 71 சதவீதம் கடலாலும், 29 சதவீதமே நிலத்தாலும் அமைந்துள்ளது. ஓசோன் படல அழிவு இதனையே மாற்றி அமைத்துவிடும். ஓசோன் படல அழிவால் உயிர்களுக்கு எவ்வாறு அழிவு ஏற்படும் என்பதையும் மனித இனத்துக்கு ஏற்படும் அழிவுகளையும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். ஓசோன் படல அழிவு, விவசாயத்துக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும், பயிர்களுக்கு சேதம் ஏற்படும். விளைச்சல் குறையும், உற்பத்தியாகும் தானியங்களும் சந்தைப்படுத்த செய்யக்கூடிய தரத்தை எட்டாது, காடு அழியும். மரங்களின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஓசோன் படல அழிவு, காலநிலையை சீரற்றதாக்குகின்றது. முகிற்கூட்டங்கள் உருவாகுவதைத் தடுக்கின்றது. வெப்பத்தை அதிகரிக்கிறது. உயிரியல் ரீதியிலும் ஓசோன் படல அழிவு மூலம் பூமியைத் தாக்கும் ஊதா கதிர்கள் உயிரியல் ரீதியான சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கிறது. நன்னீர் நிலைகள், கடல் ஆகியவற்றின் மீன் இனங்களைப் பாதிக்கின்றது. ஊதாக் கதிர் நீரினுள் ஊடுருவி சிறியமீன், பெரிய மீன்களின் உற்பத்தியை குறைக்கின்றது. கடலில் மீன் இல்லை என்றால் பொருளாதாரமே இல்லை. மீன் அழிவது சூழல் பாதுகாப்பை பாதிக்கிறது.

சூரியனின் இயற்கைத் திரையாக விளங்கும் ஓசோன் படலம் தான் மனிதனை நோய்களிலிருந்து பாதுகாத்து ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கின்றது. ஓசோன் படல துவாரம் மூலம் வெளியேறும் சூரியனின் ஊதாக் கதிர்கள் மனிதனின் உடலைத் தாக்கும்போது அவன் தோல்புற்றுநோய்க்கு ஆளாகின்றான். அவனின் கண்களும் பாதிக்கப்படுகின்றன. விழிவெண்படலம் (கட்டரக்ட்) நோய்க்கு ஆளாகின்றான். நோய் எதிர்ப்புச் சக்தி குறைகின்றது. சுவாசம் தொடர்பான நோய்களும் ஏற்படுகின்றன. இவை எல்லாம் நேரடிப் பாதிப்புகளாகும். 1600 மில்லியன் ஆண்டுகளாக ஓசோன் படலம், மனிதனின் கண்டுபிடிப்புகள் சிலவற்றினால்தான் அழிக்கப்பட்டு வருகின்றன. குளோராபுளோரகார்பனைப் பயன்படுத்தும் உபகரணங்களை பயன்படுத்துவதானால் வெளியேறும் வாயுக்களே சூரியனின் இயற்கைத் திரையான ஓசோன் படலத்தை அழித்து வருகிறது. ஓசோன் படலத்தை குறைவடையச் செய்யும் பதார்த்தங்களையும் பாவியாது விடவேண்டும். ஓசோனின் நட்புடைய ஒருவராக மனிதன் மாறவேண்டும். எப்போது குளோரோ புளோரோ கார்பன் அற்றதான குளிரேற்றிகள் (பிரிட்ஜ்கள்) மற்றும் காற்றுக் குளிரூட்டிகள். (எயார்கண்டிஷன்கள்) ஆகியவற்றை நாம் பயன்படுத்தவேண்டும். குளோரா புளோரோகார்பன்களைப் பயன்படுத்தும் விசிறு கருவிகள், வாசனைத்திரவிய தூவிகள் அல்லது கிருமிநாசினிகளை வாங்கக்கூடாது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் குளோரா புளோரோ காபன் குளிரேற்றிகள் மற்றும் காற்றுக் குளிரூட்டிகளை ஓசோன் நட்புக் குளிரூட்டிகளாக மாற்றவேண்டும். வளிமண்டலத்தில் ஓசோனை அழிக்கும் பதார்த்தங்களை முடிந்தளவு வெளியேற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். பெற்றோர் கூறுவார்கள், அடுத்த பரம்பரையினரின் நல்வாழ்வுக்காகத் தான் வாழுகின்றோம் என்று. அவர்கள் ஒன்றை எண்ணிப்பார்க்கவேண்டும். அடுத்த பரம்பரையினர் வாழ்வதற்கேற்ற இடமாக இப்பூமியைப் பாதுகாத்துக் கொடுக்கவேண்டும் என்பதை ஒவ்வொரு தாய், தந்தையரும் உணர்ந்து செயல்பட வேண்டும். சூரியத்திரையான ஓசோனின் நண்பர்களாக ஒவ்வொரு பெற்றோரும் தாங்கள் வாழ்வதன் மூலமே தமது குழந்தைகள் நோய், துன்பமின்றி பொருளாதாரச் சுபிட்சத்துடன் வாழக்கூடியதாக இப்பூமியை அவர்களுக்குக் கையளிக்க முடியும்" என தேசிய ஓசோன் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் சுமதிபாலா தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2007/10/5/...s_page37736.htm

அப்ப 50 வருசதிற்கு பிறகு இலங்கையின்ட கரையோர பகுதியை பார்க்க ஏலாது என்று சொல்லுறீங்க சரி நான் இருபேன் தானே 50 வருசம் ஆனா பிறகு பிகோஸ் நான் பேபி தானே!! :)

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.