Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image
 

14 முன்னணித் தனியார் துறைக் கம்பனிகள் அடங்கிய தூதுக்குழுவினர், இலங்கை ஊழியர் சம்மேளனத்துடன் சேர்ந்து, வட மாகாணத்தில் பிரதான துறைகளில் உபாய மார்க்கமிக்க முதலீடுகள்,  வர்த்தகம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புக்கள் என்பவற்றை ஆராய்வதற்காக உயர் மட்ட விஜயத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை ஊழியர் சம்மேளனத்தின் பங்காண்மையுடன் சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விஜயம் வட மாகாணத்தில் முதலீட்டுக்கான வாய்ப்புக்களை எடுத்துக்காட்டி, பிரதான பங்கீடுபாட்டாளர்களுக்கு மத்தியில் கலந்துரையாடலையும் ஒத்துழைப்பினையும் போஷித்து, வியாபாரங்களுக்கும் சமுதாயங்களுக்கும் நன்மை பயக்கும் பங்காண்மையினை வசதிப்படுத்துவதை விஜயத்தின் பிரதான குறிக்கோள்களின் மத்தியில் கொண்டுள்ளது.

வட மாகாண பிரதம செயலாளரான லட்சுமணன் இளங்கோவன் அவர்களுடனான சந்திப்புக்கு மேலதிகமாக, வட மாகாணத்தில் வியாபாரம் செய்வதற்கான வாய்ப்புக்கள், கொள்கை மற்றும் ஒழுங்குறுத்துகைத் தோற்றப்பாடு பற்றிய பகுப்பாய்வினை வழங்குவதற்கான பங்கீடுபாட்டாளர் கலந்தாலோசிப்பினை விஜயம் உள்ளடக்கியிருந்தது. இதற்குப் பிரதம செயலாளர் அலுவலகம் தலைமை வகித்தது. 

அச்சுவேலிக் கைத்தொழிற் பேட்டைக்கான விஜயத்தினையும் தொழில்முனைவோர் மற்றும் வியாபாரச் சங்கங்களுடன் வலையமைப்புருவாக்க நிகழ்வினையும் அரசாங்க அமைப்புக்கள் மற்றும் பிராந்தியச் சம்மேளனங்கள் உள்ளிட்ட பிரதான துறைசார் செயற்படுனர்களுடன் கலந்தாலோசிப்பினையும் விஜயம் உள்ளடக்கியிருந்தது.

பிராந்தியத்தில் முதலீட்டினால் உந்தப்பட்ட வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைப் பாராட்டி, வட மாகாணப் பிரதம செயலாளர்  லெட்சுமணன் இளங்கோவன் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“முன்னோக்கிப் பார்க்கையில், அபிலாஷைகளைச் செயற்பாடுகளாக நிலைமாற்றுவதற்கு நாம் ஒன்றுபடுவோம். முதலீட்டு வாய்ப்புக்களை மேம்படுத்தும் தூதுக்குழுவினை நாம் வரவேற்று அதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அதனுடன் பணியாற்றக் காத்திருக்கின்றோம்”

பல் துறைகளின் ஊடே வாய்ப்புக்களில் அதிகரிப்பினைப் பிராந்தியம் அனுபவித்து வரும் நிலையில், உட்கட்டமைப்பு முதலீடுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள அதேவேளை, உள்நாட்டுச் சந்தையினையும் ஏற்றுமதிச் சந்தையினையும் இலக்குவைக்கும் விவசாயம் மற்றும் கடற்றொழில், அதேபோன்று நீரியல் வளம் ஆகிய துறைகள் வளர்ச்சிக்கும் விருத்திக்குமான பெரும் சாத்தியத்தினைக் கொண்டுள்ளன. மேலும், PAVE கருத்திட்டத்தின் கீழான இடையீடுகள், வளர்ச்சியின் நன்மைகள் சமுதாயத்தின் சகல உறுப்பினர்களின் மத்தியிலும் ஒப்புரவுடன் பகிரப்பட்டு அதன் மூலம் மிகவும் நிலைபேறான மற்றும் நியாயமான பொருளாதார அபிவிருத்தி போஷிக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தி, உள்ளடக்கும் தன்மையினையும் பால்நிலைச் சமத்துவத்தினையும் மேலும் வலியுறுத்துகின்றது.

இலங்கையின் பொருளாதார மீளல் எனும் தற்போதைய சூழமைவில், தனியார் துறை அமைப்புக்கள் உள்ளிட்ட அரசாங்க மற்றும் ஏனைய சூழியல் முறைமைச் செயற்படுனர்கள், மாகாண மற்றும் பிராந்திய வளர்ச்சியினை ஊக்குவிப்பதில் இன்றியமையாத வகிபாத்திரத்தினைக் கொண்டுள்ளனர். விஜயத்தின் வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த EFCஇன் பணிப்பாளர் நாயகம் / பிரதம நிறைவேற்று அதிகாரி வஜிர எல்லபொல பின்வருமாறு குறிப்பிட்டார் :

“தேசிய தொழில்வழங்குனர் அமைப்பு என்ற ரீதியில் EFC, தனியார் துறையினுள் ஆர்வத்தினை உருவாக்குவதில் மூலகர்த்தாவாக இருந்து வருவதுடன் இது வடக்கில் முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்வதற்காக வியாபாரத் தூதுக்குழுவின் விஜயத்துக்கு இட்டுச்சென்றுள்ளது. தொழில்முனைவு விருத்தி, தொழில் உருவாக்கம், பல்வகைமை மற்றும் உள்ளடக்கம் ஆகியவை  EFC மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்பு கொண்டுள்ள சில பிரதான விழுமியங்களாகும். இந்த விழுமியங்களுடன் நெருக்கமாக இயைபுறும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இடையீடுகளின் குறிக்கோள்களும், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியில் கவனம் குவிக்கும் தேசியக் கொள்கை ஆகியவற்றுடனான இதன் ஒட்டுமொத்தப் பொருத்தப்பாடும் இந்தக் கருத்திட்டத்தில் எமது ஒத்துழைப்பிற்கான உந்துசக்தியாக இருந்தன”

இந்த விஜயமானது நோர்வே அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பாதிப்புறு நிலையிலுள்ள நபர்கள் மற்றும் தொழில் முயற்சியாண்மைகளின் முன்னேற்றத்தினை மேம்படுத்தும் (PAVE) சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கருத்திட்டத்தின் பகுதியாக அமுல்படுத்தப்பட்டது. உள்ளடக்கும் தன்மை மிக்க வளர்ச்சி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு உதவுவதற்காக கௌரவமான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதை நோக்கிய ஐஎல்ஓவின் பதிற்செயற்பாடுகளின் மத்தியில் PAVE கருத்திட்டம் காணப்படுகின்றது. வட மாகாணத்தில் வாழும் மிகவும் பாதிப்புறு நிலையில் உள்ள மிகவும் ஓரங்கட்டப்பட்ட ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும், உள்ளடக்கும் தன்மை மிக்க வளர்ச்சியினையும் தனியார் துறை முதலீட்டினையும் தொழில் முயற்சியாண்மையினையும் பால்நிலைச் சமத்துவம் மற்றும் உள்ளடக்கும் தன்மையினையும டிஜிட்டல்மயமாக்கத்தினையும் மேம்படுத்துவதன் மூலம் கௌரவமான வேலையினை உருவாக்குவதை கருத்திட்டம் முன்னுரிமைப்படுத்துகின்றது.

 

ஐ.எல்.ஓ.,வின் பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங் பின்வருமாறு குறிப்பிட்டார்: “வட மாகாணத்தில் தனியார் துறை முதலீடுகளை அதிகரிப்பது வியாபாரங்களை அர்த்தமிக்கதாக மாத்திரம் ஆக்காது, மனித மூலதனத்தினை வலுப்படுத்தி, அனுகூலம் கிட்டாத சமுதாயங்களுக்கு உறுதியான வருமான மூலங்கள் மூலம் நன்மை பயக்கின்றது – அங்கவீனமான பாதிப்புறு நிலையில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்காக தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் சகலருக்கும் நன்மை பயத்தல் எனும் இதன் முன்மொழிவுகள், நெருக்கடி மீளளுக்கும் நல்லிணக்கத்துக்கும் உதவுகின்றன.”

வட மாகாணத்தில் முதலீட்டுச் சூழல் மற்றும் தோற்றப்பாடு பற்றிய மேம்பட்ட புரிதலை அதிதிகளுக்கு வழங்கி, தனியார் துறைக்கும் உள்ளூரதிகார சபைகளுக்கும் இடையில் எதிர்கால ஒத்துழைப்பிற்கான அத்திவாரத்தினை இந்த விஜயம் இட்டுள்ளது. ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கான முதலீட்டுத் திட்டத்தினை உருவாக்குவதை அடுத்த படிகள் சம்பந்தப்படுத்தும்.

ஒரே ஒரு முத்தரப்பு ஐ.நா. முகவரான சர்வதேச தொழிலாளர் அமைப்பு, தொழில் நியமங்களை நிர்ணயித்து, உலகம் முழுவதும் வேலை செய்யும் சகல ஆண்கள் மற்றும் பெண்களுக்காக கௌரவமான வேலையினை மேம்படுத்தும் கொள்கைகளை உருவாக்கி, நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்குவதற்காக அரசாங்கங்களையும் தொழில் வழங்குனர்களையும் தொழிலாளர் பிரதிநிதிகளையும் ஒன்றுசேர்க்கிறது.

வட மாகாணத்தில் தனியார் துறை முதலீடுகளுக்கான சாத்தியங்களை ஆராய்ந்த முன்னணித் தனியார் துறைக் கம்பனிகள் அடங்கிய தூதுக்குழு | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.