Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20240609-WA0018.jpg?resize=750,375&s

பாடையில் ஏற்றப்பட்ட பட்டங்கள்- யாழ். வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்!

பல்கலைக்கழகத்தினால் பட்டதாரிகளுக்கு வழங்கப்படுகின்ற பட்டத்தை பிரேதப்பெட்டியில் ஏற்றி, வேலையில்லா பட்டதாரிகள் இன்று யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னாபாக இன்று காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது?, படிப்பிற்க்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா?, எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க வேண்டும், படித்ததக்கு கூலிதொழிலா கடைசி வரைக்கும்?, படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா?, பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா?, படித்தும் பரதேசிகளாக திரிவதா?” என பல்வேறுப்பட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240609-WA0009.jpg?resize=600,338&s

IMG-20240609-WA0014.jpg?resize=600,338&s

IMG-20240609-WA0015.jpg?resize=600,338&s

IMG-20240609-WA0012.jpg?resize=600,338&s

IMG-20240609-WA0017.jpg?resize=600,338&s

IMG-20240609-WA0022.jpg?resize=600,338&s

IMG-20240609-WA0026.jpg?resize=600,338&s

IMG-20240609-WA0027.jpg?resize=600,338&s

https://athavannews.com/2024/1386848

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகளை சந்தித்தார் சஜித் பிரேமதாச 

10 JUN, 2024 | 04:19 PM
image
 

பாரபட்சமற்ற வேலைவாய்ப்பை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடியதுடன் பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பாக பேசுவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.

வட மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்றும் திங்கட்கிழமை (10) போராட்டம் இடம்பெற்றது.

போராட்ட இடத்துக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்.

தமது ஆட்சி உருவாகும்போது கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவருவதாகவும், மாற்றுத் திறனாளி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் இதன்போது சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த போராட்டத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரபிரகாஷ் உள்ளிட்ட அமைப்பாளர்களும் உடனிருந்தனர். 

IMG-20240610-WA0022.jpg

IMG-20240610-WA0018.jpg

IMG-20240610-WA0019.jpg

IMG-20240610-WA0025.jpg

IMG-20240610-WA0027.jpg

IMG-20240610-WA0028.jpg

IMG-20240610-WA0023.jpg

https://www.virakesari.lk/article/185757

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.