Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளை செவ்வாய்க்கிழமை (18)  யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ள யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், எமக்கு விரைவில் தீர்வு கிடைக்காவிடில் பாராளுமன்றத்தையும் முற்றுகையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .  

யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்று  திங்கட்கிழமை (17)  நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர் . 

கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் சிறீ கந்தவேல் புனித பிரகாஸ் கருத்து தெரிவிக்கையில், 

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாடு எமது கடற்பகுதிகளில் அரங்கேறிவருகிறது. இதனால் எமது கடற்றொழிலாளர்கள் பெருமளவு பாதிபாபை எதிர்கொள்கின்றனர்.

நாளைசெவ்வாய்க கிழமை  காலை 10 மணிக்கு இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.

ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர், துறைசார்ந்த திணைக்களங்கள் விரைந்து செயற்பட்டு இந்திய இழுவை மடி படகுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் பாராளுமன்றத்தை முற்றுகையிட எமது அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளன.

யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம் கருத்து தெரிவிக்கையில், 

இந்திய இழுவைமடி கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் எமது மக்கள் வீதிக்கு வந்து பட்டினிச்சாவை எதிர்நோக்க வேண்டி வரும். சிறுவர் தொடங்கி பெரியவர் இதன்மூலம் பாதிப்புக்களை எதிர்கொள்வர்.

இலங்கை அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மனித நேயத்துடன் இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் செயற்படவேண்டும். இந்தியாவின் மிலேச்சத்தனமாகவே இதனை பார்க்கிறோம்.

இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக செவ்வாய்க்கிழமை  நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து கடற்றொழிலாளர்களையும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம் - என்றார்.   

யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : யாழ் கடற்தொழிலாளர் அறிவிப்பு | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

636760319.jpg

 

இந்திய துணைத் தூதரகம் முன் மீனவர்கள் போராட்டம்!!!

(இனியபாரதி)

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக  மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்திய அரசே எமது கடல் வளத்தை சூறையாடாதே: எம்மையும் வாழவிடுங்கள் எனக் கோரி யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமாசங்களின் சம்மேளன ஏற்பாட்டில் இன்று (18) காலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் டொன் பொஸ்கோ பாடசாலைக்கு அண்மையிலுள்ள மருதடிச் சந்தியில் இருந்து இந்திய துணைத்தூதரகம் வரை பேரணியாகச் சென்று தூதரகம் முன்பாக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது இலங்கை கடற்படையே நிறுத்து நிறுத்து; அத்துமீறலை தடுத்து நிறுத்து, கடற்தொழில் அமைச்சர் கண்ணை திறந்துபார், இந்திய அரசே எம்மையும் வாழ விடு, சிறிலங்கா காவல்துறையே எங்களை தடுக்காதே உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை மீனவர் சங்கப் பிரதிநிதிகள் துணைத்தூதரகத்தில் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஏ)

இந்திய துணைத் தூதரகம் முன் மீனவர்கள் போராட்டம்!!! (newuthayan.com)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.