Jump to content

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG_9151-scaled.jpg?resize=750,375

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு!

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

தந்தை செல்வா கலையரங்கில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தேசிய மாநாடு இடம்பெற்றது

 

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர்.கணேசலிங்கம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா , வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சர்வேஸ்வரன் , யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் உள்ளிட்டவர்களுடன் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

https://athavannews.com/2024/1393039

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள்: சபாநாயகருக்கு சிறிதரன் கடிதம்!

தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ளன – சிறீதரன்!

தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் அன்று மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றன. இந்த நிலைமையைச் சீர்செய்ய தமிழ் தேசிய அரசியல் மறுசீரமைப்பு முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

கொள்கை ரீதியாக ஒன்றுபட்டுச் செயற்படுகின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் அரவணைத்தவாறு புலம்பெயர் தேசக் கட்டமைப்புகளுடனும் இணைந்த வகையில் தமிழர்களின் தாகம் வெல்ல உழைப்பதே இங்குள்ள ஒவ்வொருவரினதும் முதன்மைக் கடமையாகும்.

கடந்த எட்டுத் தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்தமிழர்களின் சுதந்திரத்துக்காக, அவர்களின் இறையாண்மையை நிலை நிறுத்துவதற்காக, சிங்கள பௌத்த ஒடுக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிராக, இரத்தமும் சதையுமாக நடைபெற்று வருகின்ற போராட்ட வலியின் நீட்சியில் உருவான, ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்கான அரசியல் இயக்கங்களில் ஒன்றாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்டுள்ள ‘தமிழ் மக்கள் கூட்டணியின்’ முதலாவது தேசிய மாநாட்டில் உரையாற்றக் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை, காலத்தேவை கருதிய வரலாற்றுச் சந்தர்ப்பங்களில் ஒன்றாகவே நான் பார்க்கிறேன்.

இன்று தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றன. இங்கு தான் உரிமை அரசியலை சலுகை அரசியல் வெல்கிறது. இந்த நிலைமையைச் சீர்செய்ய தமிழ் தேசிய அரசியல் மறுசீரமைப்பு முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும்.

 

கொள்கை ரீதியாக ஒன்றுபட்டுச் செயற்படுகின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் அரவணைத்தவாறு புலம்பெயர் தேசக் கட்டமைப்புகளுடனும் இணைந்த வகையில் தமிழர்களின் தாகம் வெல்ல உழைப்பதே இங்குள்ள ஒவ்வொருவரினதும் முதன்மைக் கடமையாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

எமது சிந்தனைகளை மீள் வடிவமைப்புக்கு கொண்டுவருவதன் மூலம் காலத்தின் வேகத்துடனும், பூகோள மாற்றங்களுடனும் எமது மக்களின் அபிலாசைத் தளங்களிலிருந்து தடம்புரளாது பயணிக்க வேண்டியுள்ளது. இந்த நெருக்கடிமிக்க சூழலை எளிதாகக் கையாள்வதாயின், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும், புலத்திலிருந்தவாறு இனத்தின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் உறவுகளும் ஒருங்குசேர தம் அரசியற் பயணத்தை முன்கொண்டு செல்வதற்கான எதிர்கால வழி வரைபடம் ஒன்றையும் அதுசார் கொள்கை வகுப்புகளையும் உருவாக்க வேண்டும்.

அத்தகையதோர் தளத்தில் நின்று எல்லாத் தரப்பினரையும் இணைத்துச் செயலாற்றுவதன் தேவையுணர்ந்த ஒருவனாக, அந்தத் தளத்தின் இணைப்புப்பாலமாக இருந்து என் எல்லா இயலுமைகளைக் கடந்தும் ஈழத்தமிழினத்தின் அரசியல் வேட்கையைச் சுமந்த பயணத்தின் பங்குதாரராக செயலாற்றுவதில் எனக்கிருக்கும் விருப்பையும், கடமையையும் நான் இவ்விடத்தில் வெளிப்படையாகவே பதிவு செய்கிறேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலும் தொிவித்தாா்.

https://athavannews.com/2024/1393048

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

c.v.wines_.jpeg?resize=300,168

எமது தனித்துவத்தை ஏற்கும் ஒரு அரசியல் யாப்பு உதயமாக வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்!

எம்முடைய இன்றைய அவலம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு மூலம் வந்ததே என்பதை எமது தமிழ் மக்கள் ஆழ உணர வேண்டும் என்பதுடன், எமது தனித்துவத்தை ஏற்கும் ஒரு அரசியல் யாப்பும் உதயமாக வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில் இன்று இடம்பெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

எம்முடைய இன்றைய அவலம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு மூலம் வந்ததே என்பதை எமது தமிழ் மக்கள் ஆழ உணர வேண்டும். எமது தனித்துவத்தை ஏற்கும் ஒரு அரசியல் யாப்பு உதயமாக வேண்டும்.

தமிழ்ப்பேசும் மக்கள் வேண்டுவது ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழான 13வது திருத்தச் சட்டத்தை அல்ல. எமக்கு சர்வதேசச் சட்டத்தின் கீழ் தரப்பட்டிருக்கும் சுயநிர்ணய உரிமையையே நாங்கள் கேட்கின்றோம். தமிழ்ப் பொது வேட்பாளர் இந்தக் கருத்தையே தமிழ்ப்பேசும் மக்களிடையே முன்னிறுத்த இருக்கின்றார்.

வடகிழக்கில் ஐக்கிய நாடுகள் மக்கள் தீர்ப்பைக் கோரி தேர்தல் நடத்தட்டும். தமிழ்ப்பேசும் மக்கள் எதனைக் கோருகின்றார்களோ அதனை வழங்க ஐக்கிய நாடுகள் முன்வரவேண்டும் என்ற கருத்தை சர்வதேசத்தின் முன் முன்னிலைப்படுத்தவே தமிழ் பொது வேட்பாளர் காத்து நிற்கின்றார்.

13ஐத் தருவதால் எமது மக்களுக்கு விடிவு காலம் ஏற்படாது. ஏற்கனவே 13ன் கீழுள்ள பல அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தினால் எம்மிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டுள்ளன.

இப்போது இருப்பது வெறும் கோதே! மேல்த்தோலே! அதிலும், தரப்பட்டிருக்கும் மிக சொற்ப பொலிஸ் அதிகாரங்களைக்கூட வழங்க முடியாது என்று ஒரு வேட்பாளர் கூறியுள்ளார்.

 

நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வேண்டும் என்று போட்டியிடவில்லை. எமது தனித்துவத்தை உலகறியச் செய்யவும் எமது ஜனநாயக உரித்தை ஐக்கிய நாடுகள் மூலம் பரீட்சித்துப் பார்க்க ஒரு வேண்டுதல் மேடையாக இத்தேர்தலைப் பாவிக்கவுமே நாம் ஒரு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்த உத்தேசித்துள்ளோம்.

நாங்கள் பொது வேட்பாளரை நிறுத்த இருக்கின்றோம் என்றவுடன் மூன்று முக்கிய சிங்கள வேட்பாளர்களும் தமது சேனை பரிவாரங்களுடனும் படைகளுடனும் இங்கு வந்து 13ஐத் தருகின்றோம் என்று சொல்லிச் சென்றுள்ளார்கள்” என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தொிவித்தாா்.

https://athavannews.com/2024/1393051

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Unity.jpg?resize=562,375

தமிழ்ப் பொது வேட்பாளர் = தமிழ் ஐக்கியம்! நிலாந்தன்.

தமிழ்ப் பொது வேட்பாளர் = தமிழ் ஐக்கியம்

தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் ஒரு பேசுபொருள் என்ற கட்டத்தைக் கடந்து ஒரு செயலாக மாற்றமடையும் நிலைமைகள் படிப்படியாக வளர்ந்து வருகின்றன. கடந்த 22 ஆம் தேதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடந்த ஒரு நிகழ்வில் ஏழு தமிழ்த் தேசிய கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் “தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு ” என்று ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த மாதம் 29ம்தேதி வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.எனினும் அப்பொழுது கையெழுத்திடப்படவில்லை. கையெழுத்திடும் நிகழ்வை இம்மாதம் ஆறாம் தேதி ஒழுங்கு செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது.ஆனால் சம்பந்தரின் மறைவையொட்டி அந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அது கடந்த 22 ஆம் தேதி நடந்தது.

தமிழ்த் தேசிய அரசியலில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆகப் பிந்திய ஒரு பொதுக் கட்டமைப்பு அதுவாகும். இதற்கு முன் கட்சிகளின் கூட்டுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.ஆனால் மக்கள் அமைப்புக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கூட்டெனப்படுவது இதுதான் முதல் தடவை.அதுவும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் இணைவது என்பது இதுதான் முதல் தடவை. இந்தக் கட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தி உழைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அடுத்தடுத்த கட்டத்திற்கு கட்டமைப்பு ரீதியாக முன்னேறத் தொடங்கியுள்ளது என்று தெரிகிறது. ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாராக இருந்தால் கட்சிகளும் மக்கள் அமைப்பும் ஒன்றாக உழைத்து அவருக்கு வாக்குத் திரட்டும் பொழுது என்ன நடக்கும்?

தமிழ் பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளை பெருமளவுக்கு பெறுவாராக இருந்தால் அது தென் இலங்கை வேட்பாளர்களின் வெற்றிகளை சவால்களுக்கு உள்ளாக்கும். எந்த ஒரு தென் இலங்கை வேட்பாளரும் பெருமைப்படக்கூடிய பெரும்பான்மையைப் பெற முடியாத ஒரு நிலைமை தோன்றக்கூடும்.

ஏனென்றால் கிடைக்கும் செய்திகளின்படி தென்னிலங்கையில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் நிறுத்தப்படும் நிலமைகள் காணப்படுகின்றன. ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின் வெற்றி குறித்த நிச்சயமின்மைகளை அதிகமாகக் கொண்ட ஒரு தேர்தல் இது. ஒரு மேற்கத்திய நாட்டின் தூதரக அதிகாரி ஒருவர் கூறியதுபோல, தேர்தல் முடிவுகளை எதிர்வு கூற முடியாதிருக்கிறது என்பது மட்டுமல்ல, ஊகிக்கவும் முடியாத ஒரு நிலைமை காணப்படுகிறது என்பது சரியானதுதான். ஏனெனில் ஒப்பீட்டளவில் யாருமே மிகப்பெரிய பெரும்பான்மையோடு வெல்வார் என்று கூற முடியாத அளவுக்கு நிலைமை காணப்படுகிறது. இப்படிப்பட்ட நிச்சயமின்மைகள் அதிகமுடைய ஒரு தேர்தல்களத்தில் தமிழ் பொது வேட்பாளர் தமிழ் மக்களின் அதிகப்படியான வாக்குகளை கவர்வாராக இருந்தால் நிலைமை என்னவாகும் ?

தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டாலும் நிறுத்தப்படாவிட்டாலும் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்தான் ஜனாதிபதியாக வரப்போகிறார். ஆனால் தமிழ் வாக்குகள் அவருக்கு இல்லை என்றால் முதலாவதாக அவர் பெறும் வெற்றியின் அந்தஸ்து குறைந்து விடும். எவ்வாறெனில் தமிழ் மக்களின் ஆணை அவருக்கு இல்லை என்பது அவரை நாடு முழுவதுமான ஜனாதிபதி என்ற அந்தஸ்திலிருந்து தரமிறக்கும்.

இரண்டாவதாக தமிழ் மக்களின் வாக்குகள் பெருமளவுக்கு அவருக்கு கிடைக்காவிட்டால் அவர் பெறக்கூடிய வெற்றியின் பருமன் குறையும். அதுவும் அவருடைய அந்தஸ்தை, அங்கீகாரத்தை குறைக்கும்.

எனவே தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் அதிகளவு வாக்குகளைப் பெறுவாராக இருந்தால் இந்த ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்படப் போகும் எந்த ஒரு ஜனாதிபதியும் அங்கீகாரம் குறைந்த;அந்தஸ்து குறைந்த ஒரு ஜனாதிபதியாகத் தான் காணப்படுவார்.அவர் பெறக்கூடிய வெற்றியின் பருமன் அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சிகள் பெறக்கூடிய வெற்றி தோல்விகளில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும்.

எனவே ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளை அதிகமாகக் கவர்ந்தால், தென்னிலங்கையில் பலம் குறைந்த ஒரு அரசுத் தலைவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்.அதேசமயம் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிறுத்தப்படாவிட்டால் என்ன நடக்கும் ?

தமிழ் வாக்குகள் பலவாகச் சிதறும். ரணில் விக்கிரமசிங்க நம்புகிறார், ஆங்கிலம் பேசும் படித்த தமிழ் நடுத்தர தர்க்கம் தன்னை ஆதரிக்கும் என்று. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை அவர் மீட்டிருப்பதாக ஆங்கிலம் பேசும் படித்த நடுத்தர வர்க்கத் தமிழர்கள் கருதுவார்களாக இருந்தால், அவர்கள் ரணிலுக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும்.

அதேபோல சஜித்தோடு ஏதாவது ஒரு உடன்படிக்கைக்கு வர விரும்பும் கட்சிகள் தனது வாக்காளர்களை சஜித்தை நோக்கி சாய்ப்பாபார்களாக இருந்தால், சஜித்துக்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும். தென்னிலங்கை வேட்பாளர்கள் தமது வாக்குறுதிகளை வெளிப்படையாக முன்வைத்தபின் அவர்களோடு பேசலாம் என்று காத்திருக்கும் கட்சிகள்,தமிழ் மக்களின் வாக்குகளை யாரோ ஒரு தென் இலங்கை வேட்பாளரை நோக்கித்தான் சாய்க்கப் போகின்றன.எனவே சஜித்,ரணில் போன்ற வேட்பாளர்கள் அவ்வாறான எதிர்பார்ப்புகளோடு இருக்க முடியும்.

அடுத்ததாக, அனுர.மாற்றத்தை விரும்புகிறவர்கள் முன்னைய தலைவர்களில் சலித்துப் போனவர்கள், அனுரவை எதிர்பார்ப்போடு பார்க்கக்கூடும். அதனால் அவருக்கும் ஒரு தொகுதி தமிழ் வாக்குகள் கிடைக்கலாம்.

இந்த மூன்று தென்னிலங்கை வேட்பாளர்களையும் தவிர பகிஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேட்கின்றது.அதற்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கக்கூடும்.ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்றால் தமிழ் வாக்குகள் மேற்கண்டவாறு சிதறும் நிலைமைகளை அதிகமாக ஏற்படும்.

இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக்கூட்டமைப்பானது தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தத் தவறினால் யாரோ ஒருவர் தமிழ்ப் பொது வேட்பாளர் என்று கூறிக்கொண்டு களமிறங்கத்தான் போகிறார். அவருக்கும் ஏதோ ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும்.இப்படிப்பார்த்தால் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்று சொன்னால்,தமிழ் வாக்குகள் முன்னெப்பொழுதையும்விட பல கூறாகச் சிதறும் ஆபத்தும் அதிகம் தெரிகிறது. அதாவது தமிழ்ப் பலம், தமிழ் அரசியல் சக்தி பல துண்டுகளாகச் சிதறப் போகின்றது.

இது அடுத்தடுத்த தேர்தல்களிலும் எதிரொலிக்கும்.ஜனாதிபதித் தேர்தலில் சிதறடிக்கப்பட்ட தமிழ் வாக்குகள் அடுத்தடுத்த கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலிலும் மாகாண சபை தேர்தலிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் மேலும் சிதறடிக்கப்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.எனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்குகளை ஒன்றுதிரட்டத் தவறினால்,தொடர்ந்து நடக்கக்கூடிய ஏனைய மூன்று தேர்தல்களிலும் தமிழ்மக்கள் மேலும் சிதறடிக்கப்படுவார்கள்.

இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தவிர வேறு புத்திசாலித்தனமான தீர்க்கதரிசனமான தெரிவு தமிழ்மக்களுக்கு உண்டா? அல்லது அதை மேலும் ஆழமான பொருளில் கேட்டால், ஐக்கியப்படுவதைத் தவிர வேறு உடனடி நிகழ்ச்சி நிரல் தமிழ் மக்களுக்கு உண்டா?

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் ஐக்கியம் நிரூபிக்கப்பட்டால்,அது அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்லப்படும். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு பொதுநிலைப்பாட்டின் கீழ் ஒன்று திரட்டப்பட்டால், தமிழ் மக்கள் மத்தியில் உற்சாகம் பிறக்கும்; உத்வேகம் பிறக்கும். இது தமிழரசியலில் ஒரு புதிய ரத்தச் சுற்றோட்டத்தை ஏற்படுத்தும்.

 

கடந்த பல தசாப்தங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கும் ஓர் உண்மை எதுவென்றால், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வாக்களிப்பு அலை தோன்றும் போதுதான் அதிகப்படியான ஆசனங்கள் கிடைக்கின்றன.தமிழ் வாக்களிப்பு அலை எனப்படுவது அதன் பிரயோக அர்த்தத்தில் தமிழ்த் தேசிய அலைதான். தமிழ்த் தேசிய அலை என்பது அதை வேறு வார்த்தைகளில் சொன்னால் தமிழ் ஐக்கியம் தான்.

தேசியவாத அரசியல் எனப்படுவது அது எந்த தேசியவாதமாக இருந்தாலும், ஐக்கியம்தான்.எவ்வாறெனில்,தேசியவாத கட்சி அரசியல் எனப்படுவது மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது.அதாவது ஆகக்கூடிய பெரும் திரளாக திரட்டுவது.அதை தேர்தல் வார்த்தைகளில் சொன்னால், வாக்காளர்களை ஆகக்கூடியபட்சம் திரட்டுவது.எனவே தமிழ்த்தேசிய வாக்களிப்பு அலை எனப்படுவது தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஐக்கியப் படுத்துவதுதான்.

அந்த அடிப்படையில்தான் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் சிந்திக்கப்படுகிறது.கடந்த திங்கட்கிழமை தந்தை செல்வா கலையரங்கில் எழுதப்பட்ட உடன்படிக்கையில் 7கட்சிகள் கையெழுத்திட்டன.உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி முடிவெடுக்க முடியாதபடி இரண்டாக நிற்கின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கின்றது.

தமிழ்ப் பொது வேட்பாளரைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சிக்குள் இரண்டு அணிகள் உண்டு.சிறீதரன் அணி பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது. சுமந்திரன் அணி எதிர்க்கின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட காணொளி ஊடகம் ஒன்று மாவை சேனாதிராஜாவை நேர்கண்ட பொழுது,அவர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகப் பதில் சொல்லியிருக்கிறார்.தமிழ்ப் பொது வேட்பாளரை நியாயப்படுத்தும் பொழுது, அவர் ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்டியுமிருக்கிறார்.மக்களிடம் ஆணை பெறுவது என்பதை விடவும்,மக்களை ஐக்கியப்படுத்தவேண்டும்; கட்சிகளை ஐக்கியப்படுத்த வேண்டும் என்ற பொருளில் அவருடைய பதில் அமைந்திருந்தது.மாவை சேனாதிராஜாதான் இப்பொழுதும் கட்சியின் தலைவர். எனவே அவருடைய கருத்துக்கு இங்கு அதிகம் முக்கியத்துவம் உண்டு. அது தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் சிறீதரன் அணியைப் பலப்படுத்தக் கூடியது.

இப்பொழுது ஏழு கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கியிருக்கும் பொதுக் கட்டமைப்பானது ஏனைய கட்சிகளுக்காகத் திறக்கப்பட்டிருக்கும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.அதன்மூலம் ஆகக்கூடியபட்ச ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதுதான் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கம் என்று கூறப்பட்டிருக்கிறது.இந்த ஐக்கியம் வெற்றி பெறுமாக இருந்தால் எதிர்காலத்தில் தமிழ் அரசியலை அது புதிய வழியில் செலுத்துமா?

https://athavannews.com/2024/1393877

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்வியறிவுள்ள, பல்வேறு தொடர்புகளுள், ஆழுமையுள்ளசுமந்திரனும் சாணக்கியனும் TNA க்குத் தலைமை தாங்கி  வழிநடாத்த வேண்டும்,...👍 ஏனப்பா,.. ஒரு குசும்புக்கு எழுதினாலும் விசுகர் தடியோடதான் நிக்கிறார் கண்டியளோ,..🤣
    • புதிய ஜனாதிபதி அநுரவின் கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் வடக்கு/கிழக்கில் வரும் பொதுதேர்தலில் கிடைக்கலாம். ஆனால் அவை ஆசனத்தை பெறுவதற்கு போதுமானதாக அமையுமா என்பது சந்தேகமே.
    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God, I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.