Jump to content

மத்திய வங்கியின் வட்டி வீதங்கள் குறைப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
central-banks.jpg

மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 25 அடிப்படை புள்ளிகளால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (23) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்கள் முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/306701

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்டி வீதங்களைக் குறைத்தது மத்திய வங்கி

Published By: DIGITAL DESK 3   25 JUL, 2024 | 09:39 AM

image

(நா.தனுஜா)

நாட்டின் பொருளாதாரத்தில் சமகாலத்தில் அவதானிக்கப்பட்ட குறிகாட்டிகளின் அடிப்படையில் வைப்புக்கள் மற்றும் கடன்களுக்கான வட்டிவீதங்களை முறையே 8.25 மற்றும் 9.25 சதவீதமாகக் குறைப்பதற்கு நாணயச்சபை தீர்மானித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.

நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான 4 ஆவது மீளாய்வுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி கடந்த மாதம் கேள்வியில் ஏற்பட்ட வீழ்ச்சி, அண்மைய வரி மறுசீரமைப்பை அடுத்து பணவீக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் குறைந்தளவிலான தாக்கமே ஏற்பட்டமை, நிலையான பணவீக்க எதிர்பார்க்கைகள், குறைந்தளவிலான வெளிநாட்டுத்துறை அழுத்தங்கள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் கொள்கை வட்டி வீதங்களை 25 அடிப்படைப்புள்ளிகளால் குறைப்பதற்கு நாணயச்சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன முறையே 8.25 மற்றும் 9.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதுடன், நியதி ஒதுக்குவீதத்தை முன்னர் நிர்ணயிக்கப்பட்ட 2 சதவீத மட்டத்திலேயே தொடர்ந்து பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் பிரகாரம் கடந்த ஜுனில் முதன்மைப் பணவீக்கமானது 1.7 சதவீதமாகப் பதிவானது. மின்சாரம், எரிபொருள், திரவப் பெற்றோலிய எரிவாயு போன்றவற்றின் விலைகள், கட்டணங்களில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சி இதற்குக் காரணமாக அமைந்தது.

அதேபோன்று தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்கள மதிப்பீடுகளின்படி நாட்டின் பொருளாதாரம் 5.3 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தது. தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கை, மேம்பட்ட நிரம்பல் நிலைமைகள், வெளிநாட்டுக்கேள்வி நிலைமையில் படிப்படியான மீளெழுச்சி, சுற்றுலாத்துறை மீட்சி போன்றவற்றின் காரணமாக நடுத்தர காலத்தில் உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு சுற்றுலாத்துறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பன மூலமான வருமானம் தொடர்ந்தும் நேர்மறையான மட்டத்தில் பதிவாகியிருக்கும் அதேவேளை, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 4.4 பில்லியன் டொலர்களாகப் பதிவான மொத்த வெளிநாட்டுக்கையிருப்புடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் கடந்த ஜுன்மாத இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 5.6 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளன.

இது இவ்வாறிருக்க சீன அபிவிருத்தி வங்கியுடனான கடன்மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளும், சர்வதேச பிணைமுறிதாரர்களுடன் இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளும் முன்னேற்றகரமான மட்டத்தில் இருப்பதாகவும், இருப்பினும் இதனுடன் தொடர்புடைய தகவல்கள் சந்தையில் உடனடித்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவற்றை வெளியிடமுடியாது எனவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

மேலும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கள் மந்தகரமான நிலையில் இருப்பினும், இவ்விடயத்தில் மத்திய வங்கி எவ்வகையிலும் தொடர்புபடவில்லை எனவும், மாறாக அரசாங்கம் இதுகுறித்து அவதானம் செலுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/189317

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.