Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   26 JUL, 2024 | 01:51 AM

image

(நா.தனுஜா)

வி.எப்.எஸ் குளோபல் விசா விநியோக விவகாரம் அண்மையில் கடும் சர்ச்சைக்குரிய பேசுபொருளாகியிருந்த நிலையில், இந்த விசா வெளிவள உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

 இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள், குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள அதிகாரி உள்ளடங்கலாக 31 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

இம்மனுக்களில் விசா வெளிவள உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளுக்கு விசா விநியோகிக்கும் பொறுப்பு வி.எப்.எஸ் குளோபல் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட விவகாரத்தில் நிலவும் குழறுபடிகள் மற்றும் சட்டவிரோத நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொள்வனவு செயன்முறை மீறப்பட்டுள்ளமை, தேசிய பாதுகாப்பு மற்றும் தரவுப்பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள், சுற்றுலாத்துறை மீதான தாக்கம், சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகை நியமங்களுக்கு முரணாக இருத்தல், பிளெக்ஸ்டோன் மற்றும் குவேனி டிரவலின் தொடர்பு ஆகிய விடயங்கள் மனுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 அதேபோன்று சர்ச்சையிலுள்ள உடன்படிக்கையின் அமுலாக்கத்தைத் தடைசெய்து, இறுதித்தீர்மானம் எட்டப்படும் வரையில் முன்பு நடைமுறையில் இருந்த இலத்திரனியல் பயண இசைவாணை முறைமைக்குத் திரும்பும் வகையில் இடைக்காலத்தடையுத்தரவினை விதிக்குமாறு மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தினைக் கோரியுள்ளனர். 

இதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள இம்பீரியல் மொனார்ஜ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் என்ற ரீதியில், அக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு தாம் மூவரும் இம்மனுவைத் தனித்தனியாகத் தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

'இந்த வி.எப்.எஸ் குளோபல் விசா விநியோக சேவையை முற்றுமுழுதான ஊழல் நடவடிக்கையாகவே கருதுகின்றோம். இந்த உடன்படிக்கை வி.எப்.எ

ஸ் குளோபல் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், அதன் பின்னாலுள்ள ஐ.வி.எஸ் உள்ளி;ட்ட உரித்தாளர்களின் விபரங்கள் தெரியாத நிறுவனங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. நாம் அரசாங்கத்தில் அங்கம் வகித்த காலப்பகுதியிலும் நாம் அறியாதவண்ணம் இதுபோன்ற மிகப்பாரிய மத்திய வங்கி மோசடி அரங்கேறியது. அதன் விளைவாக நாம் ஆட்சியை இழக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. இருப்பினும் தற்போது இடம்பெற்றுவரும் விசா வெளிவள உடன்படிக்கை ஊழலானது மத்திய வங்கி மோசடியை விடவும் 100 மடங்கு மிகையானதாகும். அம்மோசடியைப்போன்று இதுவும் தேர்தல் காலப்பகுதியிலேயே நடைபெறுகின்றது. எனவே இது பணச்சுத்திகரிப்பை மேற்கொள்வதற்கான உத்தியா? என்ற சந்தேகமும் எழுகின்றது' எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

நாட்டுக்கு சுமார் 2.7 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய இந்த பொறுப்பு முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாமல் பிறிதொரு நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும், இதனூடாக இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளிடம் 25 டொலர் அறவிடப்படுவதன் காரணமாக கடந்த ஏப்ரல்மாத நடுப்பகுதியிலிருந்து சுற்றுலாப்பயணிகளின் வருகை சடுதியாக வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அதேவேளை கடந்த 2018 ஆம் ஆண்டின் பின்னர் கொவிட் - 19 வைரஸ் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீழ்ச்சியடைந்த சுற்றுலாப்பயணிகளின் வருகை தற்போதுதான் மீண்டும் உயர்வடைய ஆரம்பித்திருப்பதாகவும், இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் முறைகேடான விதத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த உடன்படிக்கை சுற்றுலாப்பயணிகளின் வருகையிலும், நாட்டின் பொருளாதாரத்திலும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விசனம் வெளியிட்டார். 

அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் உயர்நீதிமன்றம் நீதியை நிலைநாட்டுமென தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், இவ்விவகாரத்திலும், இதனையொத்த ஏனைய ஊழல் மோசடி விவகாரங்களிலும் அவற்றை முறியடிப்பதற்கான தமது முயற்சிகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/189391

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.