Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
26 JUL, 2024 | 05:25 PM
image
 

இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசின் கீழ் இந்தி மொழி கற்பதற்கு 36 இலங்கை மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சன்தோஷ் ஜா நேற்று (25) வியாழக்கிழமை மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட இருந்த நிலையில் இறுதியாக இலங்கை மாணவர்களுடன் உரையாடியுள்ளார்.

இதன்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கலாச்சாரம், மொழி, இலக்கியம் மற்றும் மத உறவுகளை மேம்படுத்துவதில் இந்தி மொழி மற்றும் இலக்கியத்தின் பங்களிப்பை எடுத்துக்காட்டியுள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆறு மாணவர்களும், சுவாமி விவேகானந்தா கலாச்சார நிலையத்திலிருந்து நான்கு மாணவர்களும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து நான்கு மாணவர்களும், அனுராதபுரத்தில் உள்ள ரஜரட்ட பல்கலைக்கழகத்திலிருந்து நான்கு மாணவர்களும், கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், மாத்தறை பல்கலைக்கழகக் கல்லூரியிலிருந்து இரண்டு மாணவர்களும், ஜேதவனாராம பௌத்த மடாலயத்திலிருந்து மூன்று மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இந்தி மொழி மற்றும் இலக்கியம் மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகமாகத் தாக்கம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் உள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்படக் கிட்டத்தட்ட 100 கல்வி நிறுவனங்களில் இந்திய மொழி மற்றும் இலக்கியம் கற்பிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/189456

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

களனிப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆறு மாணவர்களும், சுவாமி விவேகானந்தா கலாச்சார நிலையத்திலிருந்து நான்கு மாணவர்களும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து நான்கு மாணவர்களும், அனுராதபுரத்தில் உள்ள ரஜரட்ட பல்கலைக்கழகத்திலிருந்து நான்கு மாணவர்களும், கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், மாத்தறை பல்கலைக்கழகக் கல்லூரியிலிருந்து இரண்டு மாணவர்களும், ஜேதவனாராம பௌத்த மடாலயத்திலிருந்து மூன்று மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் இவர்களை றோவுக்கு உளவுபார்க்க வைக்க இலகுவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:
 

களனிப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆறு மாணவர்களும், சுவாமி விவேகானந்தா கலாச்சார நிலையத்திலிருந்து நான்கு மாணவர்களும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து நான்கு மாணவர்களும், அனுராதபுரத்தில் உள்ள ரஜரட்ட பல்கலைக்கழகத்திலிருந்து நான்கு மாணவர்களும், கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், மாத்தறை பல்கலைக்கழகக் கல்லூரியிலிருந்து இரண்டு மாணவர்களும், ஜேதவனாராம பௌத்த மடாலயத்திலிருந்து மூன்று மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வட பகுதி பல்கலைகளிலிருந்து எவரும் தெரிவாக இல்லை போல....... இதற்கு விண்ணப்பிப்பதற்கு பாடசாலை உயர்தரத்தில் ஹிந்தி மொழியை ஒரு பாடமாக எடுத்திருக்க வேண்டும் அல்லது பல்கலையில் ஒரு பாடமாக எடுத்திருக்க வேண்டும் என்றிருக்கின்றது. யாழில் சில பாடசாலைகளில் ஹிந்தி ஒரு பாடமாக இருக்கின்றது என்று நினைக்கின்றேன்.

ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த ஒன்பது மாத பயிற்சி நல்ல ஒரு ஊக்கமாக அமையலாம். ஹிந்தி இந்திய மொழிகளில் ஒப்பீட்டளவில் புதிய மொழிகளில் ஒன்று. மூல மொழிகளிலிருந்து இது எதனை எடுத்திருக்கின்றது, எதனை தவிர்த்திருக்கின்றது என்பது கூட நல்ல ஒரு ஆராய்ச்சியாக இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.