Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
27 JUL, 2024 | 06:00 PM
image

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகை குளத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவு தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை பிரதேச கமக்கார அமைப்பு போன்ற பொது அமைப்புக்கள், நீர்ப்பாசன பொறியியலாளர் போன்ற அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளன. இருப்பினும், இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என அமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கனகாம்பிகை குளத்தின் ஏ9 வீதியோடு உள்ள பகுதி மண் நிரப்பப்பட்டு அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ளது. 10 கொள்ளளவு கொண்ட இக்குளத்தினை நம்பி சுமார் 300 வரையான சிறுதானிய பயிர்ச்செய்கையாளர்கள் வாழ்கின்றனர்.

எனவே குளம் ஆக்கிரமிக்கப்படும்  நிலைமையானது எதிர்காலத்தில் இக்குளத்தினை நம்பியுள்ள விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்திவிடும். 

ஏற்கனவே இக்குளத்துக்கு சொந்தமான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 20 ஏக்கர் வரையான நிலம் பொது மக்களால் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டுள்ளது. 

DSC_0318.JPG

இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளின் கவனத்துக்குச் கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக குளத்தின் பல பகுதிகள் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தற்போது இடம்பெற்றுள்ள குளத்தின் முக்கிய பகுதி ஆக்கிரமிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் உடனடியாக அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

DSC_0326.JPG

இந்நிலையில், கிளிநொச்சி கிழக்கு பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் எந்திரி கை.பிரகாஸ் கரைச்சி பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு இக்குளத்தின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துமாறு கடிதங்களை எழுதியுள்ளார். 

எனவே, இவ்விடயம் தொடர்பாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரை தொடர்புகொண்டு வினவிய போது, இவ்விடயம் தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் ஆக்கிரமிப்பு பற்றி உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளதாகவும் தெரிவித்தார். 

WhatsApp_Image_2024-07-27_at_11.08.02_57

WhatsApp_Image_2024-07-27_at_11.08.02_44

WhatsApp_Image_2024-07-27_at_11.08.01_f4

https://www.virakesari.lk/article/189543

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவது மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் - முன்னாள் எம்.பி. சந்திரகுமார்

28 JUL, 2024 | 10:06 AM
image

குளங்களை ஆக்கிரமித்து அதன் பரப்பளவை குறைத்து வருகின்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை (27) கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பொது அமைப்புக்கள் மற்றும் கமக்கார அமைப்புக்களின் முறைப்பாட்டுக்கு அமைவாக, தனி நபர் ஒருவரால் குளம் ஆக்கிரமிக்கப்படுவதனை நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவர் மேலும் தெரிவிக்கையில், 

தற்போது உலகம் மிகப்பெரும் பருவநிலை மாற்றத்துக்கு முகங்கொடுத்துள்ளது. நீருக்காக மக்கள் அலைந்து திரிகின்றார்கள். வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். நிலத்தடி நீர் வேகமாக வற்றுகிறது.  இதனால் மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எங்கள் மத்தியில் இருக்கின்ற குளங்களையும் நாம் பாதுகாத்து பேணுவதை விடுத்து அதனை தனிநபர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவது என்பது ஒரு ஆபத்தான நிலைமையை உருவாக்கும்.

எமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட குளங்களை பாதுகாக்க வேண்டியது எங்கள் அனைவரினதும் மிகப்பெரிய பொறுப்பு. முன்னோர்கள் குளங்களை உருவாக்கி அதனை பாதுகாத்து எங்களிடம் கையளித்ததன் காரணமாகவே நாம் அதன் பயனை அனுபவித்து வருகிறோம். எனவே நாமும் இவற்றை அவ்வாறே பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்க வேண்டும்.  

10 அடி கொள்ளளவு கொண்ட கனக்காம்பிகை குளத்தை நம்பி நூற்றுக்கணக்கான விவசாய குடும்பங்கள் உள்ளன. அந்த பிரதேசத்தின் நிலத்தடி நீரும் இக்குளம் காரணமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே இக்குளத்தினை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.  

குளத்தின் பின்பகுதியில் சுமார் 20 ஏக்கர் வரையான பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டது. தற்போது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு குளத்துக்குள் மண் நிரப்பப்பட்டு வருகிறது. 

ஆகவே, குளத்தை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

DSC_0317.JPG

DSC_0348.JPG

DSC_0313.JPG

DSC_0321__1_.JPG

DSC_0334.JPG

https://www.virakesari.lk/article/189569

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.