Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் இல்லாத காரணத்தால் மதப்பிரச்சினையை ஏற்படுத்த வடக்கிலும், தெற்கிலும் சதி! - அநுரகுமார

693484739.jfif

முப்படைகள் முன்னிலையில் அநுரகுமார குற்றச்சாட்டு!

யுத்தத்தால் நீண்டகாலமாக தங்களின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக்கொண்ட ரணிலும் மஹிந்தவும், யுத்தம் இல்லாமல் போனதால் இப்போது சோர்வடைந் திருக்கின்றார்கள். இதனால்தான் அவர்கள் மீண்டும் ஒரு மதப் பிரச்சினையை ஏற்படுத்த வடக்கிலும் தெற்கிலும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்று ஜே.வி.பி.யின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற முப்படையினர் கூட்டமைப்பின் தேசிய மாநாடு கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது- "மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையில் நாட்டில் நிலவிய உண்மையான பிரச்சினைகள் பற்றி பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றி மக்களுக்குச் சரியான விடயங்களை எடுத்துரைத்தோம். எனினும் சிலர்  உருவாக்கிய இனவாத அரசியல் ஏனைய எல்லா விடயங்களையும் மூடிமறைத்து முழு நாட்டினதும் கவனத்தை யுத்தத்தின் பால் வழிப்படுத்தியது.

1948ஆம் ஆண்டில் பெருந்தோட்ட மக்களின் குடியுரிமை நீக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டில் ஒரு பிரச்சினையை உருவாக்கி 1958ஆம் ஆண்டில் 'ஸ்ரீ' எழுத்தை அழித்தார்கள். 1965ஆம் ஆண்டில் இனவாதத்தை ஊக்குவிக்கும் பேரணிகள் நடத்தப்பட்டன. இவ்வாறாக இவர்கள் (சிங்கள ஆட்சியாளர்கள்) செய்த அத்துமீறல்கள் நீட்சியானவை. இதன் தொடர்ச்சியாக 1981ஆம் ஆண்டு யாழ் நூலகத்தைத் தீக்கிரையாக்கினார்கள். யாழ் மக்களின் ஆன்மீக பிணைப்பு நிலவிய நூலகத்தை தீக்கிரைக்காக்கும்போது அவர்களுடைய இதயங்கள் வெடித்துச் சிதறமாட்டாதா?

1983ஆம் ஆண்டில் கறுப்பு ஜுலை உருவாக்கப்பட்டது. 1982ஆம் ஆண்டில் நடத்தப்படவிருந்த பொதுத்தேர்தல் முறைப்படி நடத்தப்பட்டிருந்தால் யாழ் .மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்திருக்கும். எனினும் ஜே.ஆர் ஜயவர்தன தன்னுடைய 5ஃ6 பெரும்பான்மை அதிகாரத்தை பேணிவர செயலாற்றியதன் காரணமாக வடக்கில் ஆயுத போராட்டத்துக்கு அது வழிசமைத்தது. இதுவே, 1983ஆம் ஆண்டில் கறுப்பு ஜுலை காரணமாக வும் தற்கொலைக் குண்டுதாரிகள் உருவாகுவதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் டவுன் ஹோல் குண்டு வெடிப்புக் காரணமாகவே சந்திரிகா ஜனாதிபதியாகினார். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் யுத்தமே முக்கியமான இடம் வகித்தது. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த கௌரவத்துக்காக  இரண்டாவது தடவையாகவும் மஹிந்த ஜனாதிபதியாக்கப்பட்டார். சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக வருவதும் யுத்தத்திற்கு தலைமைத்துவம் வழங்கியதாலேயே.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின் உருவாக்கிய குண்டுப்பீதி காரணமாகவே கோத்தாபய ஜனாதிபதியானார். அவர்கள் யுத்தத்தை உருவாக்கி நீண்ட காலமாக அவர்களின் இருப்பினை உறுதிசெய்து கொண்டாலும் இப்போது ரணிலும் மஹிந்தவும் யுத்தம் இல்லாமல் போனதால் சோர்வடைந்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு மதப்பூசலை ஏற்படுத்துவதற்காக வடக்கிலும் தெற்கிலும் முயற்சி செய்து வருகிறார்கள் என்பது எமக்கு தெரியும். அதனாலேயே அவர்களுக்கு தேசபந்து வேண்டும். அவர்கள் ஒருபோதுமே யுத்தத்தில் பாதிப்படைந்தவர்களாக மாறாமல் தமது அரசியலுக்காக அதனைப் பயன்படுத்தி வந்தார்கள்.

யோஷித்த ராஜபக்சவை கடற்படையில் சேர்த்துக் கொள்வதற்காக அதுவரை ஆட்சேர்ப்புக்கு இருந்த குறைந்த பட்ச தகைமையை குறைத்தார்கள். அத்துடன் நின்று விடாமல் பிரிட்டனில் ஒரு பாடநெறிக்காக ஒரு கோடியே எண்பது இலட்சம் ரூபா பொதுப்பணத்தை செலவிட்டார்கள். அதன் பின்னர் உக்ரைனுக்கு  ஒரு பாடநெறிக்காக அனுப்பி 36 இலட்சம் ரூபாவுக்கு கிட்டிய பொதுப் பணத்தை செலவிட்டார்கள். அதன் பின்னர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுடன் அவரை இணைத்து 27 தடவைகள் வெளிநாடு செல்வதற்காக வாய்ப்பளித்தார்கள். இந்த நாட்டில் சாதாரண பெற்றோரின்  பிள்ளைகள் யுத்தத்திற்கு பலியாகின்ற வேளையில் அவர்களின் பிள்ளைகள் யுத்தத்தின் பயனாளிகளாக மாறினார்கள். வடக்கிலுள்ள தாய் தந்தையர்களும் தமது பிள்ளைகள் தொடர்பில் இன்னமும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் - என்றார். (ச)
 

https://newuthayan.com/article/யுத்தம்_இல்லாத_காரணத்தால்_மதப்பிரச்சினையை_ஏற்படுத்த_வடக்கிலும்,_தெற்கிலும்_சதி!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.