Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்துமாறு தொழில் வாண்மையாளர் ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் அர­சாங்க அதி­கா­ரி­க­ளினால் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் நசுக்­கப்­பட்டு உரி­மை­களும் மறுக்­கப்­பட்டு வரு­வ­தாக தொழில் வாண்­மை­யாளர் மற்றும் சிவில் அமைப்­பு­களின் ஒன்­றியம் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­துள்ளது.

அத்­துடன், இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு வழங்கும் செயற்­திட்­டத்­தின்­போது வடக்கு, கிழக்­கி­லுள்ள முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்தும் கவனம் செலுத்­து­மாறும் அவ்­வ­மைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது.

கடந்த சனிக்­கி­ழமை மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் செய்த ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்லிம் பிர­மு­கர்­களை மட்­டக்­க­ளப்பு “ஈஸ்ட் லகூன்” உல்­லாச விடு­தியில் சந்­தித்தார்.

இதன்போது மட்­டக்­க­ளப்பு மாவட்ட மற்றும் கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் தொடர்பில் கருத்துக்களை தெரி­வித்த தொழில் வாண்­மை­யாளர் மற்றும் சிவில் அமைப்­பு­களின் ஒன்­றிய தவி­சாளர் யு.எல்.எம்.என்.முபீன் மற்றும் அவ் அமைப்பின் உபதலைவர் ஜாபீர் நளீமி ஆகியோர் பல்வேறு கருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

முதலில் கருத்து தெரி­வித்த தொழில் வாண்­மை­யாளர் ஒன்­றி­யத்தின் தவி­சாளர் முபீன் அண்­மையில் வட­மா­கா­ணத்­திற்கு விஜயம் செய்த ஜனா­தி­பதி ஆகிய நீங்கள் 13 ஆம் திருத்­தத்தை பொலிஸ் அதி­காரம் இன்றி நடை­மு­றைப்­ப­டுத்தப் போவ­தாக கூறி இருந்­தீர்கள்.

உண்­மையில் இலங்­கையின் இனப் பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கப்­பட வேண்­டி­யதை முஸ்லிம் சமூகம் வர­வேற்­கி­றது.

ஆனால் நான் பின்னால் சொல்லப் போகின்ற பல்­வேறு கார­ணங்­க­ளினால் இத்­த­கைய தீர்­வுகள் வழங்­கப்­ப­டு­வது முஸ்­லிம்­க­ளுக்கு ஆபத்­தாக முடிந்து விடுமா? என்று அச்சம் முஸ்­லிம்­க­ளுக்­குள்ளே தொட­ராக இருந்து வரு­கின்­றது. காரணம் இங்கே பத­வியில் இருக்­கின்ற தமிழ் அதி­கா­ரிகள் மற்றும் அர­சி­யல்­வா­திகள் கிழக்கு மாகா­ணத்தில், வட­மா­கா­ணத்தில் முஸ்­லிம்­களை நசுக்கும் போக்­கி­னையே கடைப்­பி­டித்து வரு­கின்­றனர்.

தற்­போது அர­சியல் யாப்பின் ஊடாக வழங்­கப்­பட்­டுள்ள அதி­காரப் பர­வ­லாக்க நடை­மு­றை­களின் ஊடாக அதா­வது பிர­தேச செய­லகம், கச்­சேரி முறை­மை­களின் ஊடாக அவ்வதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்­தியே முஸ்­லிம்­களின் உரி­மை­களை தொடர்ந்­து­தேச்­சி­யாக இந்த தமிழ் அதி­கா­ரிகள் மறுத்து வரு­கின்­றனர்.
எனவே இவர்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை கொடுக்­கின்றபோது அவ் அதி­கா­ரங்­களைக் கொண்டு மேலும் முஸ்­லிம்­களை அவர்கள் நசுக்­கு­வார்கள் என்ற அச்சம் முஸ்­லிம்­களை பீடித்­துள்­ளது. என­வேதான் 13வது திருத்தம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற போது முஸ்­லிம்­க­ளுக்­கான தீர்வு என்ன என்ற கேள்­வியை அதி­மே­தகு ஜனா­தி­ப­தி­யா­கிய உங்­களைப் பார்த்து நாங்கள் கேட்­கின்றோம்? இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை நீங்கள் வழங்க வேண்டும்.

ஆனால் அத்­தீர்வு வழங்­கு­கின்ற போது முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய பொருத்­த­மான தீர்­வையும் நீங்கள் வழங்க வேண்டும் என்று உங்­களை மிகத் தாழ்­மை­யாக கேட்­டுக்­கொள்­கிறோம்.
அடுத்த விட­ய­மாக தங்கள் கவ­னத்­திற்கு கொண்­டு­வர விரும்­பு­வது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் பாரிய நிலப்­பற்­றாக்­கு­றையை எதிர்­நோக்­கு­கின்­றனர். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 27% வாழ்­கின்ற முஸ்­லிம்கள் வெறு­மனே 46 சதுர கிலோ­மீட்டர் காணி­யையே பயன்­ப­டுத்தக் கூடி­ய­தாக உள்­ளது.
மட்­டக்­க­ளப்­பிலே 2854 சதுர கிலோ­மீட்டர் மொத்த காணியில் தமிழ் பிர­தே­சத்தில் 2808 சதுர கிலோ­மீட்டர் அவர்­க­ளுக்கு உரி­ய­தாக காணப்­பட நான்கு பிர­தேச செய­ல­கங்­களைக் கொண்ட முஸ்­லிம்கள் வெறு­மனே 46 சதுர கிலோ மீற்றர் காணி­க­ளையே பயன்­ப­டுத்தக் கூடி­ய­தாக உள்­ளது. இது மொத்த காணி அளவில் 1.5 வீதம் ஆகும்.

2023 ஆம் ஆண்டு மட்­டக்­க­ளப்பு மாவட்ட புள்ளி விவர அறிக்­கை­யின்­படி முஸ்­லிம்­களின் விகி­தா­சாரம் 27% ஆகும் எனவே, 27 வீதத்­திற்கு மொத்­த­மாக முஸ்­லிம்­க­ளுக்கு 770 சதுர கிலோ­மீட்டர் காணி உரித்­து­டை­யது
ஆனால் மட்­டக்­க­ளப்பு கச்­சேரி திட்­ட­மிட்ட வகையில் முஸ்­லிம்­களின் காணி உரி­மை­களை மறுத்து வெறும் 46 சதுர கிலோ மீட்­ட­ருக்குள் அவர்­களை முடக்­கி­யுள்­ளது.

கடந்த உள்­நாட்டு யுத்­தத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்­லிம்­களின் 33 கிரா­மங்­களில் இருந்து பல­வந்­த­மாக துரத்தி அடிக்­கப்­பட்­டனர். அவ்­வாறு வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்கள் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலே அமைந்­துள்ள காத்­தான்­குடி, ஏறாவூர், கல்­குடா போன்ற பிர­தே­சங்­களில் குடி­யே­றினர். இதனால் ஏற்­க­னவே அங்கு நில­விய காணி­தட்­டுப்­பாடு மேலும் பாரிய தட்­டுப்­பாட்டை அம் முஸ்லிம் மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தி­யது.

அத்­தோடு 1999 ஆம் ஆண்டு அர­சாங்­கத்தால் நிய­மிக்­கப்­பட்ட பனம்பல ஆணைக்குழு­விற்கு புதிய பிர­தேச செய­லக கோரிக்­கையை முன்­வைத்த தமிழ் தரப்­பினர் தங்­க­ளுக்­கான ஒரு புதிய தமிழ் பிர­தேச செய­ல­க­மாக கோரளை தெற்கு கிரான் பிர­தேச செய­ல­கத்தை உரு­வாக்­கு­கின்ற போது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு காணி இருந்த ஒரே­ ஒரு பிர­தே­ச­மான கோரளை மேற்கு ஓட்­ட­மா­வடி பிர­தே­சத்தில் இருந்து ஐந்து கிரா­மங்­களை திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் இணைத்து தங்­க­ளுக்­கான பிர­தேச செய­ல­கத்தை உரு­வாக்கிக் கொண்­டனர். ஏற்­க­னவே பல­மான காணி தட்­டுப்­பாட்டை எதிர்­நோக்­கிய முஸ்­லிம்­க­ளுக்கு இத்­த­கைய திட்­ட­மிட்ட செயல் அவர்­களின் காணியை உரி­மையை மேலும் மிகப்­பெ­ரிய சிக்­க­லுக்கு உள்­ளா­கி­யது.
எனவே மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்­லிம்­களின் விகி­தா­சா­ரத்­துக்கு ஏற்ப 770 சதுர கிலோ­மீட்டர் காணியை நீங்கள் உங்கள் அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி எமக்கு பெற்றுத் தர வேண்டும் என்று கேட்­டுக்­கொள்­கிறோம்.

இலங்­கையில் புதிய பிர­தேச செய­ல­கங்­களை உரு­வாக்­கு­வ­தற்­காக 1999 ஆம் ஆண்டு பணம்­ப­லன ஆணை குழு அர­சாங்­கத்தால் நிய­மிக்­கப்­பட்­டது, இவ்­வா­ணைக்­குழு இலங்­கையின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளுக்கு விஜயம் செய்து ஆறு பிர­தேச செய­ல­கங்­களை உரு­வாக்­கி­யது. இவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட பிர­தேச செய­ல­கங்­களில் இரண்டு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உரு­வாக்­கப்­பட்­டது.
அதில் ஒன்று கோர­ளை­ப்பற்று மத்தி பிர­தேச செய­லகம் ஆகும். இக்­கோ­ர­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­லகம் முஸ்­லிம்­க­ளுக்கு என உரு­வாக்­கப்­பட்­ட­துடன் அதே­வேளை கோர­ளைப்­பற்று தெற்கு கிரான் பிர­தேச செய­லகம் தமி­ழர்­க­ளுக்­கான உரு­வாக்­கப்­பட்­டது.

இவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட பிர­தேச செய­ல­கங்­களில் கிரான் பிர­தேச செய­ல­கத்தை உத்­தி­யோகப்பற்­றற்ற முறையில் 620 சதுர கிலோ­மீட்டர் காணியை வழங்கி அப்­பி­ர­தேச செய­ல­கத்தை இயங்­கு­வ­தற்கு மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­லகம் அனு­மதி வழங்­கி­யது. அதே வேளை முஸ்­லிம்­க­ளுக்கு என உரு­வாக்­கப்­பட்ட அதா­வது 240 சதுர கிலோ­மீட்டர் காணி பரப்பைக் கொண்ட கோர­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­ல­கத்தை அதற்­கு­ரிய காணி அள­வீட்­டினை அள­வீடு செய்­யாமல் மட்­டக்­க­ளப்பு கச்­சேரி மறுத்து வரு­வ­துடன் இன்று வரை சுமார் 23 வரு­டங்கள் கடந்தும் இக் கோரளை மத்தி முஸ்லிம் பிர­தேச செய­லகம் வெறும் ஆறு சதுர கிலோ­மீட்­ட­ருடன் இயங்கி வரு­கி­றது.

அத்­துடன், 2000 ஆண்டு இச்­செ­ய­ல­கத்தை நிறு­வு­வ­தற்கு அமைச்­ச­ர­வையில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­தையும் இது­வரை அமுல்­ப­டுத்­தாமல் இழுத்­த­டித்து முஸ்­லிம்­களின் காணி உரி­மையை இந்த மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­லகம் மறுத்­து­வ­ரு­கி­றது.

இது­வ­ரையில் 9 அர­சாங்க அதி­பர்கள் அமைச்­ச­ரவை தீர்­மா­னத்தை மறுத்து அர­சாங்­கத்தின் ஆணைக் குழுவின் சிபா­ரி­சையும் மறுத்து முஸ்­லிம்­க­ளுக்கு அநி­யாயம் செய்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் இது தொடர்பில் அர­சாங்கம் இது­வரை உறு­தி­யான நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள், ஜனா­தி­பதி, பிர­தமர் என பலரை சந்­தித்தும் இது­வரை இந்த அநி­யா­யத்­துக்கு முடிவு கிடைக்­க­வில்லை. எனவே உங்­க­ளு­டைய காலத்­தி­லா­வது இந்த பிரச்­சினையை தீர்த்து வையுங்கள் என்றார்.

அதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி, இனப்­பி­ரச்­சினைத் தீர்வு தொடர்பில் சக­ல­ரு­டனும் கலந்­து­ரை­யாடி தீர்வை வழங்க எதிர்­பார்க்­கிறோம். ஏனை­ய­ வி­வ­கா­ரங்கள் தொடர்பில் தேர்தல் முடிந்­ததன் பின்னால் மீண்டும் வருகை தந்து எல்­லோ­ரி­டமும் கலந்­து­ரை­யாடி இதற்­கான தீர்­வு­களை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரி­வித்த தொழில் வாண்­மை­யாளர் மற்றும் சிவில் அமைப்­பு­களின் ஒன்­றி­யத்தின் உப தலை­வ­ரான அஷ்ஷெய்க் ஜாபிர் நளீமி,

காத்­தான்­கு­டியின் எல்லை பிரச்­சி­னைகள் மிக நீண்ட கால­மாக தீர்க்­கப்­ப­டாமல் இருக்­கின்­றன. இவ் எல்­லைகள் தொடர்பில் தெளி­வான மூன்று வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் இருந்தும் இரண்டு பக்க எல்­லை­க­ளிலும் முஸ்­லிம்­களின் காணி அடாத்­தாக ஏனைய பிர­தேச செய­ல­கங்­களால் கைப்­பற்­றப்­பட்டு நிர்­வாகம் செய்­யப்­ப­டு­கி­றது. பாரிய காணித்­தட்­டுப்­பாட்டை எதிர்நோக்கும் காத்­தான்­கு­டிக்கு இது மிகப்­பெ­ரிய நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது.

எனவே இவ் எல்லை பிரச்­சினையை தீர்த்துத் தரு­மாறு கேட்­டுக்­கொள்­கிறோம்.
மேலும் காத்­தான்­குடி பிர­தேச சபை நகர சபை­யாக தரம் உயர்த்­தப்­பட்ட வேளையில் காத்­தான்­கு­டியின் காணிப் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை. அண்­மையில் அமுல்­ப­டுத்­தப்­பட்ட “உரு­மய” வேலைத் திட்­டத்தில் காத்­தான்­கு­டியில் பாரிய காணிப் பிரச்­சி­னையை எதிர்­நோக்கும் முஸ்­லிம்­க­ளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடி­ய­வில்லை.

எனவே புதிய காத்­தான்­கு­டியை ஒரு பிர­தேச சபை­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறு ஜனா­தி­ப­தியை கேட்டுக் கொள்­வ­தோடு அப்­பி­ர­தேச சபை­யுடன் காத்­தான்­கு­டிக்கு நெருக்­க­மாக உள்ள முஸ்லிம் கிரா­மங்­க­ளான பூனொச்­சி­முனை, மஞ்சந் தொடுவாய், பால­முனை போன்ற கிரா­மங்­க­ளையும் இணைத்து புதிய காத்­தான்­குடி பிர­தேச சபை ஒன்றை உரு­வாக்கித் தரு­மாறு கேட்­டுக்­கொள்­கிறோம் என்றார்.-

Vidivelli

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.