Jump to content

எதியோப்பியாவில் சமஷ்டி வடிவமைப்பு இயல்பு மற்றும் தோல்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7   03 SEP, 2024 | 03:02 PM

image

தொகுப்பு: ஆர்.ராம்

உலகளாவிய ரீதியில் பல்வேறு சமஷ்டி முறைமைகள் காணப்படுகின்றன. அவை நாடுகளின் மேம்பட்ட நிலைமைகளுக்கு அவசியமானவையாக உள்ளன. அந்தவகையில் எதியோப்பியாவலும் சமஷ்டி முறைமை உள்வாங்கப்பட்டது. ஆனால் அதன் விளைவுகள் எவ்வாறு அமைந்திருந்தன. அதற்கான காரணங்கள் என்னவாக உள்ளன என்பது பற்றிப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.

ஆபிரிக்கப் பிராந்தியத்தில் இரண்டாவது மிகப் பெரும் சனத்தொகையாக 120மில்லியன் மக்களைக் கொண்ட தேசம் தான் எதியோப்பியா. 1936-1941 வரையான இத்தாலிய கட்டுப்பாடு, 1941-1952 பிரித்தானிய கட்டுப்பாடு ஆகிய இரண்டு காலகட்டங்களைத் தவிரவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீண்டதொரு காலனித்துவத்துக்குள் உள்ளாகாத தேசமாக எதியோப்பியா காணப்படுகின்றது.

இது, வரலாற்று ரீதியாகவும், பிராந்திய, பூகோள கலாசார ரீதியாகவும், மொழி வாரியாகவும் பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்தினைக் கொண்டதொரு தேசமாக காணப்படுகின்றது. 80இற்கும் அதிகமான மொழிகளைக் கொண்டிருக்கின்றமையானது விசேடமானதாகும்.

இப்படியானதொரு தேசத்தில் அரசைக் கட்டியெழுப்பும் செயல்முறை ஒரு முடியாட்சியின் மூலம் இருந்தது. அத்தோடு மத்திய அரசைக் கட்டுப்படுத்துவதற்கு ‘மன்னர்கள்’ அல்லது ‘ராசஸ்’ இடையே கடுமையான போட்டிகள் நிலவியிருந்தன. அதேநேரம், மத்தியிலிருந்து கீழ் மட்டம் வரையில் அணுக முடியாத காரணத்தால் சில பேரரசர்கள் நடைமுறையில் பரவலாக்கப்பட்ட நிர்வாக முறைமையைக் கொண்ட ஆட்சி வடிவத்தில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதியோப்பியா ஒரு பரவலாக்கப்பட்ட நிர்வாகத்திற்கு உகந்ததாகும். எனினும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீன அரசின் வளர்ச்சியுடன், நவீன தொழில்நுட்பம் மற்றும் சில மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பயன்படுத்தி ‘மிகை-மையமயமாக்கல்’ போக்குகள் உள்நாட்டுக்குள் வளர்ந்தன.

திறந்த ஒருங்கிணைப்பு மற்றும் அழிப்புக்கொள்கைகள் பேரரசர்களாலும் இராணுவ சர்வாதிகாரத்தாலும் பின்பற்றப்பட்டன. அம்ஹாரிக் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாகவும், கிறிஸ்தவம் மாநிலத்தின் மதமாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் நவீன அரசின் தோற்றம் குழு ஆதிக்கத்தின் வலுவானதொரு ‘மைய’ அதிகாரக் குவிப்பை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.

இதனால் ஏற்பட்ட மக்கள் புரட்சி 1974இல் கடைசி பேரரசரான ஹைல் செலாசியை ஆட்சியில் இருந்து அகற்றியது. எனினும், ஜனநாயக ஆட்சி உருவாக்கப்படுவதற்கு பதிலாக ஒரு இராணுவ சர்வாதிகாரம் நிறுவப்பட்டதோடு சில சீர்திருத்தங்களும் முன்னெடுக்கப்பட்டன. 

ஆனால் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சமத்துவத்திற்கான மக்களின் கோரிக்கைகளுக்;கு இராணுவத்தின் ஆட்சியில் பதிலளிக்கப்படவில்லை. இதனால் உள்நாட்டில் அந்நிய தேசங்களாக்கப்பட்ட பகுதிகளும், உரிமைகள் மறுதலிக்கப்பட்ட தேசிய இனங்களும் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கின. இது 17வருடங்கள் நீடித்திருந்தன.

இதேநேரம், 1950ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 390(வி)ஏ இற்கு அமைவாக, 1952முதல் 1962வரை நீடித்த எதியோப்பியாவுடன் எரித்திரியா இணைக்கப்பட்டது. எனினும், 1962ஆம் ஆண்டில் எதியோப்பியா-எரித்தியா கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக இரத்து செய்யப்பட்டது.

இதனால், 1961இல் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோடு அது 1991 வரை தொடர்ந்தது.1991-1993வரையான காலப்பகுதியில் பதவியில் இடைக்கால அரசாங்கம் நீடித்திருந்தது. 1993இல் எரித்திரியா ஒரு மேலாதிக்கக் கட்சியான விடுதலை முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட வாக்கெடுப்பைத் தொடர்ந்து அதன் சுதந்திரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அப்போதைய எதியோப்பியாவின் இடைக்கால அரசாங்கம் எரித்திரியாவின் சுதந்திரத்தை அங்கீகரித்தது. அத்துடன் எரித்திரியா ஐ.நா.வின் அங்கீகாரத்தினையும் பெற்றுக்கொண்டது. எனினும், 1998-2000 வரையிலான காலத்தில் எரித்திரியா எதியோப்பியாவுடன் போரை முன்னெடுத்தது. இதன் விளைவால் எரித்திரியா 1991 இல் நிறுவப்பட்ட இடைக்கால அரசாங்கத்தால் இன்னும் ஆளப்படும் நிலைமையே நீடிக்கின்றது.

பேரரசர்கள் மற்றும் இராணுவத் தலைவர்களின் கட்டாய ஒருங்கிணைப்புக் கொள்கைகள், தேசிய இனங்கள் அல்லது இனக்குழுக்களின்; சுயாட்சிக்கான கோரிக்கைகளை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டன. இதன்விளைவால்; மத்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சிகள் தீவிரமடைந்தன. நீண்ட உள்நாட்டுப் போர் ஒட்டுமொத்தமாக நாட்டையே அழித்தது.

நீண்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ஒருவாறு, 1991இல் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. எனினும் ஒருகுழு ஆதிக்கம் செலுத்தும் சர்வாதிகார ஆட்சிகளின் தீவிர அடக்குமுறை இயல்புகளுக்கு எதிர்வினையாக நாட்டில் பல்வேறு குழுக்கள் வலுவான இனவாத உணர்வை வளர்த்தன.

இதனால், 1991இல் உள்நாட்டின் வரலாற்றில் புதிய அத்தியாயம் உருவானது. மத்திய அரசைக் கட்டுப்படுத்தியவர்களை முழுமையாகத் தோற்கடித்து நாட்டைக் கிளர்ச்சிப் படைகள் கட்டுப்படுத்தின. சுதந்திரம், சமத்துவம் மற்றும் ஜனநாயகத்திற்கான மற்றொரு நம்பிக்கை மீண்டும் தோற்றுவிக்கப்பட்டது.

இராணுவ ஆட்சியைத் தோற்கடித்த எதிரோப்பிய கிளர்ச்சியாளர்கள் பல்வேறு குழுக்களின் சுயநிர்ணயக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு பொதுவான மத்திய அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் நாட்டின் ஒற்றுமையைப் பராமரிக்க முடிவு செய்தனர்.

பலதரப்பட்ட குழுக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். எனவே நிறுவனமயமாக்கப்பட்ட அங்கீகாரம் மற்றும் பன்முகத்தன்மைக்கு இடமளிப்பதற்கான தேவை உணரப்பட்டது. எதியோப்பியாவை 14சுயாட்சிப் பகுதிகளாகப் பிரித்து, அரசியலமைப்பு ஆணையகத்தால் சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் 1994இல் அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு தாமதமின்றி 1995இல் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது. 

‘எங்களது தேசம் எதியோப்பிய நாடு, நாங்கள் தேசிய இனங்கள் மற்றும் பூர்வீகமான மக்கள்’ என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பின் 46ஆவது சரத்தில் குடியேற்ற முறைகள், மொழி, அடையாளம் மற்றும் சம்பந்தப்பட்ட மக்களின் ஒப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படும் என்பது தெளிவாக குறித்துரைக்கப்பட்டது.

எனவே, எதியோப்பியாவில் உள்ள ஒவ்வொரு தேசமும், தேசியமும் மற்றும் மக்கள் குழுக்களும் ஒரு சமஷ்டி மாநிலமாக இருக்கலாம். அத்துடன் தங்கள் சொந்த மாநிலத்தை நிறுவுவதற்கும் அவர்களுக்கு உரிமையுண்டு என்பதும் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எந்தவொரு தேசம், தேசியம் அல்லது மக்கள் குழு தனது சொந்த மாநிலத்தை உருவாக்குவதற்கான உரிமையானது பின்வரும் அடிப்படையில் உறுதி செய்யப்படுகின்றது. அவையாவன,

(அ) தேசம், தேசியம் அல்லது சம்பந்தப்பட்ட மக்கள் குழு அரசியலமைப்பு கவுன்சிலின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் மாநில உரிமைக்கான கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டு, கோரிக்கை மாநில கவுன்சிலுக்கு எழுத்துபூர்வமாக முன்வைக்கப்படும் போது

(ஆ)கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கவுன்சில் ஒரு வருடத்திற்குள் வாக்கெடுப்பை ஏற்பாடு செய்து, கோரிக்கையை முன்வைத்த தேசம், தேசியம் அல்லது மக்கள் குழு மத்தியில் நடத்தப்படும் போது

(இ)வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளால் மாநில உரிமைக்கான கோரிக்கை ஆதரிக்கப்படும் போது

(ஈ)மாநில கவுன்சில் தனது அதிகாரங்களை, கோரிக்கையை முன்வைத்த தேசம், தேசியம் அல்லது மக்கள் குழுவுக்கு அங்கீகாரம் அளிக்கும் போது 

(உ)விண்ணப்பமின்றி வாக்கெடுப்பு மூலம் புதிய மாநிலம் உருவாக்கப்பட்டால், நேரடியாக எதியோப்பியாவின் கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசில் உறுப்பினராகிறது.

(ஊ)எதியோப்பியாவின் கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசின் உறுப்பினர்கள் சம உரிமைகள் மற்றும் அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.

இந்நிலையில் எதியோப்பிய நாடானது, தற்போது மத்திய எதியோப்பியா பிராந்திய மாநிலம், சிடாமா பிராந்திய மாநிலம், தெற்கு எதியோப்பிய பிராந்திய மாநிலம், தென்மேற்கு எதியோப்பியா மக்கள் பிராந்திய மாநிலம் ஆகிய நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் சுயாட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேநேரம், மக்கள் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சிறுபான்மை தேசிய இனங்களுக்கான சிறப்பு பிரதிநிதித்துவத்திற்காக அரசியல்சாசனத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் சிறுபான்மை தேசிய இனங்கள் மற்றும் சிறு மக்கள் குழுக்களின் சிறப்புப் பிரதிநிதித்துவம் குறைந்தபட்சம் 20ஆக இருப்பதோடு மக்கள் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் 550க்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்; என்பதும் அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மக்கள் பிரதிநிதிகள் சபையானது சமஷ்டி அதிகார வரம்பிற்கு ஒதுக்கப்பட்ட அனைத்து விடயங்களிலும் சட்டம் இயற்றவும், மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட வருவாய்களைப் பெறவும், வரிகளை விதிக்கவும், மத்திய வரவு,செலவுத்திட்டத்தினை அங்கீகரிக்கவும், சர்வதேச ஒப்பந்தங்களை அங்கீகரிக்கவும், தேசிய பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் ஒரு தேசிய பொலிஸ் படை ஆகியவற்றின் அமைப்பை தீர்மானிக்கவும் அதிகாரத்தினைக் கொண்டிருக்கின்றது.

அத்துடன், இச்சபையானது சுயநிர்ணய உரிமை தொடர்பான பிரச்சினைகளை முடிவு செய்வதற்கும், மத்திய மற்றும் மாநில வரிகளின் மூலங்களிலிருந்து பெறப்பட்ட வருவாயின் விகிதங்களைத் தீர்மானிக்கவும், மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் மானியங்களை முடிவு செய்யவும், மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினைகள் குறித்து முடிவெடுக்கவும் அதிகாரத்தினைக் கொண்டிருகின்றது.

மாநில மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு இடையிலான பகிரப்பட்ட ஒத்திசைவுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தவும், ஒரு மாநிலம் அரசியலமைப்பு ஒழுங்குக்கு ஆபத்தை ஏற்படுத்தினால் தலையீட்டை ஆணையிடுவதற்கும், மக்கள்தொகை கணக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில், தொகுதிகளின் எல்லைகளை தீர்மானிப்பதற்கும், அரசியலமைப்பு திருத்தத்திற்கான முன்மொழிவை தீர்மானிக்கவும், அரசியலமைப்பு திருத்தம் குறித்து முடிவு செய்யவும் அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றது.

மேலும், நாட்டின் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான அங்கீகாரத்தினை வழங்குதல், அரசியலமைப்பில் வழங்கப்படாத வரிவிதிப்பு அதிகாரத்தின் மீதான முடிவுகளை எடுத்தல், மாநில அதிகாரிகள் தங்கள் அதிகார வரம்பிற்குள் மனித உரிமை மீறல்களை செய்கின்றபோது கைது செய்ய முடியாத சந்தர்ப்பங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முடிவுகளை தீர்மானித்தல் உள்ளிட்ட அதிகாரங்களும் மக்கள் பிரதிநிதிகள் சபையிடத்தில் உள்ளன.

எதியோப்பியாவில் உள்ள ஒவ்வொரு தேசங்களும், தேசியங்களும் மற்றும் மக்கள் குழுக்களும் பிரிந்து செல்லும் உரிமை உட்பட சுயநிர்ணய உரிமைக்கு நிபந்தனையற்ற உரிமை உள்ளது. எதிரோப்பியாவில் உள்ள ஒவ்வொரு தேசமும், தேசியங்களும் மற்றும் மக்கள் குழுக்களும் அதன் சொந்த மொழியைப் பேசவும், எழுதவும், வளர்க்கவும், கலாசாரத்தை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும் அதன் வரலாற்றைப் பாதுகாக்கவும் உரிமைகளைக் கொண்டிருக்கின்றன.

எத்தியோப்பியாவில் உள்ள ஒவ்வொரு தேசங்களுக்கும், தேசியங்களுக்கும் மற்றும் மக்கள் குழுக்களுக்கும் முழு அளவிலான சுய-அரசு உரிமை உள்ளது, இதில் தான் வசிக்கும் பிரதேசத்தில் அரசாங்க நிறுவனங்களை நிறுவுவதற்கான உரிமையும், மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களில் சமமான பிரதிநிதித்துவமும் உள்ளடங்குகின்றது.

இத்தகைய உச்சபட்சமான அதிகாரங்கள் அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால்  முன்னர் ஒடுக்கப்பட்ட பலதரப்பட்ட மக்கள் குழுக்கள் உறுதியானவர்களாக மாறி தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். உள்நாட்டில் பாரிய பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை தோற்றுவிக்கப்பட்டுள்ளதோடு பிராந்தியத்தில் எதியோப்பியாவின் அதிகாரம் அதிகரித்துள்ளது. அதேநேரம் சர்வதேச சமாதான முயற்சிகளில் எதியோப்பியாவின் வகிபாகமும் அதிகரித்துள்ளது.

இருந்தபோதும், எதியோப்பியாவில் மக்கள் குழு அடையாளங்களின் ஆதிக்கம், வலிமையான ஒருங்கிணைப்பு செயல்முறை, என்பன மக்கள் குழுக்களுக்கு இடையில் அவநம்பிக்கைகள் நிலவுவதற்கு வழிசமைக்கிறது. அதுமட்டுமன்றி தற்போதுள்ள பன்முகத்தன்மைக்கு இடமளிக்கும் வகையில் சமஷ்டி அமைப்புகள் நல்ல நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றபோதும் யதார்த்தத்தில் பார்க்கும்போது, அந்த வடிவமைப்பில் காணப்படும் சில சிக்கல்களால் கடுமையான நெருக்கடிகள் தோன்றியுள்ளன.

மக்கள் சபைக்கான பிரதிநிதித்துவம் தொகுதியின் அனைத்து மக்களின் பிரதிநிதியாக ஒற்றை உறுப்பினர் முறைமை காணப்படுகின்றது. இது பல்வேறு குழுக்களின் உண்மையான பிரதிநிதித்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்காதுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு சிறு குழுக்களுக்கு கணிசமான பங்கேற்பு இல்லாத சூழல் நீடிக்கின்றது. இதன்விளைவாக,  பெரும்பான்மை அமைப்பானது, அதிக மக்கள்தொகை அதிக பிரதிநிதிகள், அதிக அதிகாரம் போன்ற கோரிக்கைகளை தொடரச் செய்கிறது.

சட்டத்தை உருவாக்கும் செயல்முறைகளில் மக்கள் பிரதிநிதித்துவ சபையின் நிர்வாகியின் உருவாக்கம் சிக்கலுக்குள்ளானதாக காணப்படுகின்றது. அரசியலமைப்பு விளக்கம், மற்றும் நிதி இடமாற்றங்கள், இனங்களுக்கிடையிலான மோதல்களைத் தீர்த்தல் என்பன மையத்தில் இருப்பதால் தேசிய இனங்களின் சமத்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்காத நிலைமை காணப்படுகின்றது.

முடிவெடுக்கும் நடைமுறை எளிய பெரும்பான்மை அடிப்படையில் இருப்பதால், சட்டத்தை உருவாக்கும் அமைப்பு போலவே, அதிக மக்கள் தொகை கொண்ட குழுக்கள் அதிக பிரதிநிதிகள் மற்றும் அதிக அதிகாரங்களைக் கொண்டிருக்கலாம் என்பது இயல்பாகின்றது.

எதியோப்பியாவில் சமஷ்டி அமுலாக்கம் தொடர்ச்சியான சவால்களை சந்திக்கின்றது. குறிப்பாக, சட்டப்பூர்வ பிரச்சினையை தோற்றுவிப்பதாக உள்ளது.  ஆரம்பத்தில், எதியோப்பிய சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளும் சமஷ்டி முறையை நல்ல நிர்வாக அமைப்பாக ஏற்றுக்கொள்ளவில்லை. 

முன்னர் சலுகை பெற்ற மக்கள் குழுக்கள் அல்லது உயரடுக்கினர் அதை முற்றிலுமாக நிராகரித்தனர். பல தசாப்தங்களாக அதற்கு எதிராக வேலை செய்தனர். பின்னர் சமஷ்டி, கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது அவர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டது. 

பழைய ஆட்சியை எதிர்த்துப் போராட, அரசியல் கட்சிகள், மக்கள் குழுக்கள் இன அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டன, இன்னும் அவை தொடர்ச்சியான அவநம்பிக்கையின் காரணமாக அவ்வாறான கூட்டிலேயே இருக்கின்றது. அந்நிலையானது இப்போது நடந்து கொண்டிருக்கும் முரண்பாடுகளுக்கும் அடிப்படையாக காணப்படுகின்றது.

முந்தைய ஆட்சியை இராணுவ ரீதியாக தோற்கடித்த எதியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி என்ற இனக் கட்சிகளின் கூட்டணி, அதீத மத்தியத்துவத்துடன் நாட்டை 27 ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கு இடமளித்தது. இது ஜனநாயக புறக்கணிப்பையும், மத்திய அரசின் சர்வாதிகார ஆட்சி, பிராந்தியங்களில் தலையீடு ஆகியவற்றுக்கும் வழிசமைப்பதற்கு வித்திட்டுள்ளது. 

பன்முகத்தன்மை சார்ந்த சமஷ்டி முறையை ஏற்றுக்கொள்வது என்பது பல்வேறு வகைகளில் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதாகும். எவ்வாறாயினும், இனக்குழுக்களின் உரிமைகளுக்கும், குறிப்பிட்ட இனக்குழுக்கள் வாழும் பிரதேசத்தில் குடியேறும் தனிநபர்களின் உரிமைக்கும் இடையில் முரண்பாடுகள் உருவாகியுள்ளன.

அடக்குமுறை மற்றும் ஒருமைப்படுத்தல் செயல்முறைகளின் மரபு காரணமாக, அரசியலமைப்பு உரிமைக்கும் நடைமுறைக்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு தேசமும், தேசியமும் மற்றும் மக்கள் குழுவின் உரிமையாக அதன் மொழியை பயன்படுத்த, அதன் கலாசாரம் மற்றும் வரலாற்றை வளர்க்க, சுயராச்சிய அதிகாரத்தைப் பயன்படுத்த, மாநில மற்றும் மத்திய அரசுகளில் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த, எந்த நேரத்திலும் தங்கள் சொந்த மாநிலத்தை நிறுவவதற்கு இடமளிக்கின்ற போதும் நடைமுறையில் சாத்தியமற்ற நிலைமையே உள்ளது.

எதியோப்பியாவின் தேசங்கள், தேசியங்கள் மற்றும் மக்கள் குழுக்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலிடப்படவில்லை,  அரசியலமைப்பு தேசம், தேசியம் மற்றும் மக்கள் குழு என்ற சொற்களில் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தவில்லை. அங்குள்ள மக்கள் குழுக்கள் அனைத்திற்கும் ஒரே வரையறைகளே பயன்படுத்தப்படுகிறது

ஒரு பொதுவான கலாசாரம் அல்லது ஒத்த பழக்கவழக்கங்கள், மொழியின் பரஸ்பர நுண்ணறிவு, பொதுவான அல்லது தொடர்புடைய அடையாளங்களில் நம்பிக்கை, பொதுவான உளவியல் அமைப்பு மற்றும் அடையாளம் காணக்கூடிய, முக்கியமாக தொடர்ச்சியான பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் குழு உள்ளிட்டவற்றுக்கான விசேட அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

இதனால், 2018 இல், ஒரு புதிய குழு வெகுஜன ஆர்ப்பாட்டத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றியபோது, முந்தைய அனைத்து முன்னேற்றங்களும் மீண்டும் தலைகீழாக மாறியது.

புதிய பிராந்திய மாநிலங்களை உருவாக்க அதிக ஆர்வம் கொண்ட நிலைமையும், வெளிநாட்டு உதவி, புதிய அரசியல் கூட்டணி மற்றும் வெளிநாட்டு தலையீடுகளை நம்பியிருக்கும் நிலைமையும் புதிய வடிவம் பெற்றது.

2020 நவம்பரில் இருந்து, மத்திய அரசு வெளிநாட்டுப் படைகளுடன் இணைந்து தனது சொந்த மக்கள் மீது இனப்படுகொலைப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையானது சமஷ்டி ஆட்சி அமைப்பின் தோல்வியாகும். இத்தோல்வி என்பது அரசின் தோல்வி என்பதே பொருளாகும். 

எதிரோப்பியாவைப் பொறுத்தவரையில் ஜனநாயக வழிமுறைகள் மூலம் நாட்டை ஒன்றாகக் கட்டியெழுப்புவதற்கான கடைசித் தெரிவாக சமஷ்டி முறையே சிறந்தது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உள்நாட்டின் பலதரப்பட்ட குழுக்களுக்கு இடமளிக்கும் ஒருநல்ல பொறிமுறையாக இருக்க முடியும். 

அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் புதிய முன்னேற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள நெகிழ்வுத் தன்மைகள் உள்ளன, அதாவது அரசியலமைப்பின் இயக்கம் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

எதியோப்பிய சமஷ்டி அமைப்பு முறையானது பன்முகத்தன்மைக்கு இடமளிக்கும் நல்ல நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது, ஆனால் அது நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை. எதியோப்பியா தன்னை சீர்திருத்துவதில் தோல்வியடைந்தது அல்லது சீர்திருத்தம் மற்றும் வளர்ந்து வரும் சவால்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க மிகவும் தாமதமானது.

இதனால், அரசின் தோல்வி தவிர்க்க முடியாததாகி விட்டது. தற்போதைய நிலையில் மத்தியையும், மாநிலத்தையும் பராமரிப்பதற்கான ஒரேவழி, முற்றிலும் சீர்திருத்துவதும் ஒரு புதிய ஒப்பந்தத்தை கொண்டு வருவதுதான்.

எதியோப்பியாவில் உள்ள ஒவ்வொரு குழு மக்களும், குறிப்பாக மத்திய அரசால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள். அத்தகைய தரப்பினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

பிராந்தியங்கள் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றுக்கு இடையிலான ‘சரிபார்ப்புகள் மற்றும் சமப்படுத்தல்கள்’ வழிமுறையை அமைப்பது முக்கியமானதாக உள்ளது. சமஷ்டி அதிகார முறைமையை இழந்த பிராந்திய மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் மீள வழங்குவது உறுதியாக வேண்டியுள்ளது.

இதேநேரம் மத்திய அரசாங்கத்தின் தவறுகளுக்கு பொறுப்புக்கூற முடியாது விட்டாலோ அல்லது அச்செயற்பாட்டை எதிர்காலத்திலும் மாற்றுவதற்கு முடியாவிட்டால், மாநிலத்தின் சுய இடையூறுக்கு வழிவகுக்கக் கூடாது. விவாகரத்து முறையே சிறந்தது. அந்த விவாகரத்து முறையானது வன்முறையாக இருக்க வேண்டியதில்லை, அது அமைதியாகவும் இருக்கலாம்.

https://www.virakesari.lk/article/192707

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் பரப்புரைக் கூட்டத்தில்; தமிழின விடுதலைக்கான இலட்சியத்துக்காக அணிதிரண்டுள்ள உங்களைப்போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் - மாவை.சோ.சேனாதிராஜா Published By: VISHNU   16 SEP, 2024 | 10:28 PM   தமிழின விடுதலைக்கான இலட்சியத்துக்கான பயணத்தில் அணிதிரண்டுள்ள பெருந்தொகையான உங்களைப்போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் தெரிவிக்கின்றேன் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். கிளிநொச்சி பசுமைப்பூங்கவில் திங்கட்கிழமை (16) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து ‘தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சியே தமிழ்த் தேசத்தின் மீட்சி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,  தமிழர்களின் எழுச்சி நிகழ்வான நாளாகவும் தமிழனம் விடுதலை பெறதாத நிலையில் நடைபெறுகின்ற மற்றொரு ஜனாதிபதி தேர்தலாகவும் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறுகின்ற தேர்தல் அமைகின்றது.  அவ்விதமான தேர்தலில் எமது விடுதலையையும், அதற்கான இலட்சியப் பயணதுக்காகவும் எங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவோம் என்ற உறுதியோடு இந்த எழுச்சி நிகழ்வில் பங்கெடுத்துள்ளீர்கள். விடுதலைக்கான போராட்டத்தில் மக்களையும், போராளிகளையும் பலிகொடுத்துள்ளோம். அந்த வகையில் நாம் எமது பயணத்திலே உறுதியாக இருக்கின்றோம், அந்தப் பயணத்தினை வலுவானதாக மேற்கொள்ள வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருக்கும் உங்கள் முன்னிலையில் அந்த இலட்சியத்துக்காக என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் வருகைதந்துள்ளேன். அது மட்டுமன்றி, நீங்கள் அனைவரும், தமிழர்களின் இட்சியத்துக்கான எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் உங்களது வாக்குகளை எதிர்வரும் 21ஆம் திகதி உங்களுடைய வாக்குகளை அளிக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகின்றேன். கடந்த காலத்தில் எமது விடுதலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உயிர்களை நெஞ்சில் நிறுத்தியவனாக , அதற்காக பயணிக்கும் எமது உயிர்களும் எப்போது வேண்டுமானாலும் போகலாம், பணயம் வைக்கப்படலாம் என்பதை நினைவு படுத்தியவனாக, எதிர்கால எமது இலட்சியத்துக்கான பயணத்தில் அர்ப்பணிப்புச் செய்வதற்கு தயாராக உள்ள மக்களுக்கும் நன்றி உடையவனாக தேசமாக எழுச்சி அடைவோம். அதற்காக உழைப்போம் என்று உரைத்து விடைபெறுகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/193882
    • பட மூலாதாரம்,X/M.K.STALIN படக்குறிப்பு, திருமாவளவன் மற்றும் மு.க. ஸ்டாலின் (கோப்புக்காட்சி) கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மதுவிலக்கு மாநாட்டிற்கு அ.தி.மு.கவுக்கு அழைப்பு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான வீடியோ வெளியீடு என தி.மு.க. - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி குறித்த சலசலப்பு எழுந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். என்ன நடந்தது? முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாநாட்டில் தி.மு.க.வின் சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியும் செய்தித் தொடர்புப் பிரிவின் செயலர் டி.கே.எஸ். இளங்கோவனும் பங்கேற்பார்கள் என்று முதலமைச்சர் கூறியதாக தெரிவித்திருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது விலக்கை வலியுறுத்தி மாநாடு நடத்தப்போவதாகவும் அதில் அ.தி.மு.கவும் கலந்துகொள்ளலாம் என செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த மாநாடு தொடர்பான அழைப்பையும் தேர்தல் கூட்டணியையும் இணைத்துப் பார்க்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டாலும் இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.   மதுவிலக்கு விவகாரத்தை வைத்து தி.மு.க. கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் அழுத்தம் கொடுக்கிறதா என்பதில் துவங்கி, கூட்டணியைவிட்டு வெளியேறுகிறதா என்பதுவரை பல்வேறு கருத்துகள் இதனைச் சுற்றி எழுந்தன. உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களும் இந்த விவகாரத்தை வைத்து விவாதங்களை நடத்தின.   செப்டம்பர் 14-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியபோது, இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதற்கு அவரே (திருமாவளவன்) விளக்கமளித்துவிட்டார், அதற்கு மேல் ஏதும் சொல்ல வேண்டியதில்லை என்று கூறினார். ஆனால், அதே நாளில், "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்பது குறித்து திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. விரைவிலேயே அது நீக்கப்பட்டது. பிறகு மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, மீண்டும் தி.மு.க. - வி.சி.க. கூட்டணி குறித்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான், திங்கட்கிழமையன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப்பேசியிருக்கிறார் திருமாவளவன். காலை 11.30 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள 'மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை முதல்வரிடம் வழங்கினோம். அதில் இடம்பெற்றுள்ள முதலாவது கோரிக்கை, தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகளின் விற்பனை இலக்கை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பதாகும். இரண்டாவது கோரிக்கை தேசிய அளவிலானது. அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47ன் படி, படிப்படியாக மதுவிலக்கை இந்தியா அளவில் கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்பதாகும். கோரிக்கையை படித்துப் பார்த்த முதல்வர் மதுவிலக்கு தமிழ்நாட்டில் அமலுக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நிர்வாகச் சிக்கலைக் கருத்தில் கொண்டு அதைப் படிப்படியாக எவ்வாறு நிறைவேற்ற முடியுமோ அவ்வாறு செய்வோம். வி.சி.கவின் மாநாட்டில் தி.மு.கவின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்பார்கள் என்று சொன்னார்" என்று தெரிவித்தார். மேலும், தி.மு.க. - வி.சி.க. கூட்டணியில் எந்த நெருடலும் இல்லை என்றும் கூறினார்.   படக்குறிப்பு, ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன். "மதுவிலக்கு மாநாடு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் எல்லாக் கட்சிகளும் வரலாம், அ.தி.மு.கவும் வரலாம் என திருமாவளவன் பேசியது, எதிர்பாராத அளவில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. அதற்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து முதல்வர் தமிழ்நாட்டிற்குத் திரும்பும் நாளில், 'அதிகாரத்தில் பங்கு' குறித்த வீடியோ ஒன்றை தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, நீக்கி பிறகு மீண்டும் வெளியிடப்பட்டது. இதெல்லாம் சேர்த்து திருமா கூட்டணி மாறப்போகிறாரோ என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. வி.சி.க.விற்குள்ளேயே தி.மு.கவுக்கு கூடுதல் அழுத்தம் அளிக்கவேண்டும் எனக் கருதும் சக்திகள் இருக்கலாம். அவர்கள் இதனைச் செய்திருக்கலாம். ஆனால், இப்போது அந்த மதுவிலக்கு மாநாட்டில் கலந்துகொள்வதாக அறிவித்ததன் மூலம், கூட்டணிக்கு வெளியில் உள்ள கட்சிகள் யாரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாதபடி செய்துவிட்டது தி.மு.க.. தி.மு.க. தலைமையகத்தில் வந்து முதல்வரைச் சந்தித்ததைப் போல, கூட்டணிக்கு வெளியில் உள்ள கட்சிகளின் தலைவர்களைப் போய் திருமாவளவன் சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை. ஆகவே, கூட்டணியைப் பொறுத்தவரை இப்போதைக்கு போர் நிறுத்தம் வந்திருப்பதாகச் சொல்லலாம்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன். மதுவிலக்கு மாநாட்டில் அ.தி.மு.கவும் கலந்துகொள்ளலாம்; தேர்தல் அரசியலுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என திருமாவளவன் சொல்வதை ஏற்கலாம் என்றாலும் வீடியோ வெளியிடப்பட்டதுதான் கூட்டணி தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். "மதுவிலக்கு குறித்து பலரும் பேசினாலும் இப்போதைக்கு அது நடைமுறை சாத்தியமில்லாதது என்பது எல்லோருக்குமே தெரியும். மதுவிலக்கு மாநாட்டிற்கு தி.மு.கவின் கூட்டணிக் கட்சியாக இருந்தபடி, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் அழைப்பது என்பதே வித்தியாசமாக இருந்தது. அ.தி.மு.கவின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொள்வதாகவே வைத்துக்கொள்வோம். அவர் பேசிய பிறகு ஆர்.எஸ். பாரதி பேசினால் என்னவாகும்? இது ஒருபுறமிருக்க, அதிகாரத்தில் பங்கு குறித்து பேசிய வீடியோவை இந்தத் தருணத்தில் வெளியிட்டு, நீக்கி, மீண்டும் வெளியிட்டதும் ஏன் என்ற கேள்வியும் இருக்கிறது" என்கிறார் குபேந்திரன். ஆனால், கூட்டணி மாற்றம் தொடர்பாக, இந்தத் தருணத்திலேயே ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது என்கிறார் அவர். மதுவிலக்கு மாநாட்டை ஒட்டி எழுந்த யூகங்கள் அனைத்தும் தவறானவை என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான வன்னியரசு. "இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை ஆரம்பத்தில் இருந்து சொல்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் தலைவரின் பிறந்த நாளை ஒட்டி ஒரு மாநாட்டை நடத்துவோம். அதுவும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து நடத்துவோம். கடந்த ஆண்டு 'வெல்லும் ஜனநாயகம்' என்ற பெயரில் நடத்தினோம். அதற்கு முந்தைய ஆண்டு, 'சமூக நீதி சமூகங்களுடைய ஒற்றுமை மாநாடு' என்ற பெயரில் நடந்தினோம். இந்த ஆண்டு 'மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு' என்ற பெயரில் நடத்த முடிவுசெய்யப்பட்டது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நாங்களாக அ.தி.மு.கவுக்கு அழைப்புவிடுக்கவில்லை. எல்லோரும் வரலாம் என்று சொன்னபோது, அ.தி.மு.கவும் பங்குபெறலாமா எனக் கேட்டபோது, பங்கு பெறலாம் என திருமாவளவன் பதிலளித்தார். மதுவிலக்கு தொடர்பாக, எல்லா கட்சிகளுமே தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அ.தி.மு.கவும் அதனைச் சொல்ல வேண்டும். தி.மு.க. கூட்டணி தற்போது வலிமையாக இருக்கிறது. ஆகவே அந்தக் கூட்டணியைச் சிதைக்க வேண்டும், அதற்காக அந்தக் கூட்டணியிலிருந்து வி.சி.கவை வெளியேற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இப்படி கிளப்பிவிடுகிறார்கள்" என்கிறார் வன்னியரசு. வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு பிறகு நீக்கப்பட்டது குறித்து கேட்டபோது, "அதிகாரத்தில் பங்கு என்பது 1999ஆம் ஆண்டிலிருந்து வி.சி.க. முன்வைத்துவரும் கருத்துதான். அதில் புதிதாக ஏதும் இல்லை. செப்டம்பர் 13-ஆம் தேதி நடந்த மண்டல செயற்குழு கூட்டத்திலும் அதைத்தான் திருமாவளவன் பேசினார். அந்த வீடியோதான் பதிவேற்றப்பட்டது. ஆனால், அதன் ஒரு பகுதி மட்டும் பதிவேற்றப்பட்டதால் முழுவதையும் பதிவேற்றும்படி சொன்னார். ஆகவே, அது நீக்கப்பட்டு மீண்டும் பதிவேற்றப்பட்டது. அதில் வேறு எதுவும் இல்லை" என்றார் அவர்.   படக்குறிப்பு, தி.மு.க. கூட்டணி தற்போது வலிமையாக இருக்கிறது என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான வன்னியரசு வி.சி.கவின் கூட்டணி 1999ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் வி.சி.க. இடம்பெற்று, த.மா.கா. சின்னத்திலேயே 2 இடங்களில் போட்டியிட்டது. 2001-ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று 8 இடங்களில் போட்டியிட்டது. 2004-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கூட்டணி என்ற பெயரில் ஜனதா தளம், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து 8 இடங்களில் போட்டியிட்டது. 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்ணியில் போட்டியிட்டது. 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 2 இடங்களில் போட்டியிட்டது. 2011 சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணியில் இடம்பெற்றது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணி. 2 இடங்களில் போட்டியிட்டது. 2016 சட்டமன்றத் தேர்தலில் வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., இடதுசாரிகள் ஆகியவை இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் வி.சி.க. 25 இடங்களில் போட்டியிட்டது. 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வி.சி.க இடம்பெற்றது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் விசிக தொடர்ந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cr7551evjyjo
    • தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து மேடையேறிய மாவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேடையேறி உரையாற்றியுள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கூட்டம் கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. தமிழரசுக்கட்சியின் தீர்மான அறிக்கை இந்த கூட்டத்தில் மேடையேறிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியுள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் தீர்மான அறிக்கையை வவுனியாவில் இன்று முற்பகல் நடைபெற்ற கட்சியின் விசேட குழு கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்கள் முன்னிலையில் மாவை சேனாதிராஜா வாசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/mavai-senathiraja-support-in-ariyanendren-1726495223#google_vignette
    • Published By: VISHNU   16 SEP, 2024 | 07:34 PM   முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதியன்று மந்துவில் சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 24 அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாய்த் தமிழ் பேரவை அமைப்பின், தாய்த்தமிழ் நினைவேந்தல் குழுவால் மேற்கொள்ளப்பட்டது. குறித்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற மந்துவில் சந்தி வளாகத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அந்தவகையில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு இந்த நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிரிழந்தவர்களின் உறவுகள்  பொதுச்சுடரை ஏற்றி, நிகழ்வேந்தல் நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர். தொடர்ந்து குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் திருவுருவப் படங்களுக்கு, உயிர்நீத்தவர்களின் உறவுகள் மலர்மாலை அணிவித்து, ஈகைச்சடேரேற்றி, மலர்தூவி, கண்ணீர் சொரிந்து உணர்வெழுச்சியுடன் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர். மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் தாய்த்தமிழ் பேரவை அமைப்பின் ஸ்தாபகர் எஸ்.சத்தியரூபன், தாய்த் தமிழ் பேரவை அமைப்பு நிர்வாகிகள், படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/193880
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.