Jump to content

வானம் நீல நிறத்தில் ஏன் உள்ளது? ஒரு கண்ணாடி டேங்கை வைத்து காரணத்தைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஆராய்ச்சியாளர் டிண்டாலின் கண்டுபிடிப்புகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது? ஆராய்ச்சியாளர் டிண்டாலின் கண்டுபிடிப்புகள் கூறுவது என்ன? கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஆசிரியர் குழு
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இயற்கை எவ்வாறு இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வந்ததை நாம் வரலாறு நெடுக கண்டுள்ளோம்.

இயற்கை குறித்த பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக நிகழ்ந்தவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் ஜான் டிண்டால் (1820 - 1893).

அறிவியல் துறைக்கு பல்வேறு பங்களிப்புகளை வழங்கியவர் இவர்.

காற்று மூலம் பரவும் நோய்கள் எதிலிருந்து உருவாகிறது என்பதை நிரூபித்த அவர், பருத்தியால் ஆன 'மாஸ்க்' கிருமிகள் பரவுதலை தடுக்கிறது என்பதையும் தன்னுடைய ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தினர்.

இன்று, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), உலக அளவில் பொது சுகாதாரத்திற்கு பெரிய அளவில் தீங்குவிளைவிக்கும் ஒரு சுகாதார சீர்கேடாக காற்று மாசுபாடு இருக்கிறது என்று கூறுகிறது.

சர்வதேச அளவில் 70 லட்சம் நபர்கள், காற்றுமாசுபாடு காரணமாக அகால மரணமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று கணித்துள்ளது.

யார் இந்த டிண்டால்?

மேதையாக இருந்த டிண்டால் ஒரு ரசனைவாதியும் கூட.

மலையேற்றத்தில் அதிகமாக ஈடுபட்டிருந்த அவர் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தை ஆல்ப்ஸ் மலையில் கழித்தார்.

சூரியன் மறைவதையும், அந்த நேரத்தில் தோன்றும் எண்ணற்ற வர்ணங்களின் மாயத்தாலும் ஈர்க்கப்பட்ட அவர் மாலை நேரங்களில் ஓய்வெடுக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.

அந்த நிறங்கள் குறித்து புரிந்து கொள்ளும் முயற்சியில் அவர் இறங்கினார். அவர் அப்படி செய்தது தான், பின்நாட்களில் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் அது தொடர்பான ஆராய்ச்சியை தொடர்ச்சியாக மேற்கொள்ள வழிவகை செய்தது.

இயற்கை மீது அவருக்கு இருந்த எண்ணற்ற ஆர்வம், பல்வேறு நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்யவும், அறிவியலில் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்யவும் தூண்டுதலாக அமைந்தது.

வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் வெவ்வேறு அளவுகளில் வெப்பத்தை உறிஞ்சுகிறது என்று முதன்முறையாக கண்டறிந்து அதற்கு செயல்முறை விளக்கம் அளித்த முதல் ஆராய்ச்சியாளர் இவர்தான்.

காலநிலை அறிவியல் என்ற பிரிவு உருவாகுவதற்கு காரணமாக இருந்தவர்களுள் டிண்டால் ஒருவராக இருந்ததாக பலர் கருதுகின்றனர்.

அவருடைய பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியின் போது பல கருவிகளை அவர் கண்டுபிடித்தார். அவற்றில் பல கருவிகள் மிகவும் அதிநவீனமாக இருந்தது. ஆழமான புரிதலும், திறமையும் இருந்தால் மட்டுமே அந்த கருவிகளின் செயல்பாடுகள் பற்றி புரிந்து கொள்ள இயலும்.

ஆனால், பகல் பொழுதில் வானம் நீல நிறத்தில் தெரிகிறது. ஆனால் மாலையில் ஏன் சிவப்பு நிறத்தில் தெரிகிறது என்ற கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ள அவர் பயன்படுத்திய கருவி மிகவும் எளிமையானது.

 
ஐரிஷ் இயற்பியலாளர் டிண்டால் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அறிவியல் துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐரிஷ் இயற்பியலாளர் டிண்டால்

வானம் நீல நிறத்தில் இருக்க காரணம் என்ன?

வானத்தை பிரதிபலிக்க ஒரு கண்ணாடி ட்யூப்பையும், சூரிய வெளிச்சத்தை உருவாக்க ஒரு வெள்ளை நிற விளக்கையும் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தினார் டிண்டால்.

அந்த ட்யூபில் கொஞ்சம் கொஞ்சமாக புகையை உட்செலுத்திய போது, வெள்ளை நிற விளக்கில் இருந்து வெளியான ஒளிக்கற்றைகள் ஒரு பக்கம் நீல நிறமாகவும், மற்றொரு பக்கத்தில் சிவப்பு நிறமாகவும் தோன்றியது.

வளிமண்டல மேல் அடுக்கில் உள்ள துகள்கள் மூலமாக சூரிய ஒளி சிதறடிக்கப்படுவதன் விளைவே வானத்தின் நிறங்களுக்கு காரணம் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். இதைத்தான் நாம் தற்போது 'டிண்டால் விளைவு' என்று அழைக்கின்றோம்.

வானம் ஏன் நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது? ஆராய்ச்சிக்கு டிண்டால் பயன்படுத்திய கருவி என்ன?
படக்குறிப்பு, கண்ணாடி டேங்கில் முதலில் நீரை நிரப்பினார் டிண்டால்
வானம் ஏன் நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது? ஆராய்ச்சிக்கு டிண்டால் பயன்படுத்திய கருவி என்ன?
படக்குறிப்பு, டேங்கின் ஒரு பகுதியில் விளக்கு எரியவைக்கப்பட்டது
வானம் ஏன் நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது? ஆராய்ச்சிக்கு டிண்டால் பயன்படுத்திய கருவி என்ன?
படக்குறிப்பு, டேங்கின் ஒரு பகுதியில் வெள்ளை நிறத்தில் தோன்றும் ஒளிக்கற்றைகள், மறு புறத்தை அடையும் போது சிவப்பு நிறத்தில் மாற்றம் அடைகிறது

நீலத்தில் துவங்கி சிவப்பில் முடிந்த ஒளிக்கற்றைகள்

இது தொடர்பான அவரின் மற்றொரு ஆய்வு, இதைவிட எளிமையாக இருந்தது.

ஒரு கண்ணாடி டேங்கில் நீரை நிரப்பி அதில் சில துளி பாலை சேர்ந்தார்.

அதன் பின்னர், அந்த டேங்கின் ஒரு பகுதியில் வெள்ளை நிற விளக்கை ஒளிரச் செய்தார் டிண்டால்.

விளக்கு ஒளிர்ந்தவுடன், டேங்கில் பல நிறங்கள் உருவாவதை அவர் கண்டிருந்தார். இதனை கண்டு ஆச்சரியமடைந்த அவர், தன்னுடைய இலக்கிய ரசனைக்கு ஏற்றவகையில் அந்த ஆராய்ச்சிக்கு "பெட்டியில் சொர்க்கம் (Heaven in a box)," என்று பெயரிட்டார்.

டேங்கின் ஒரு பகுதியில் விளக்கு ஒளிர்விக்கப்பட்டவுடன், அதனை ஒட்டியிருந்த பகுதி நீல நிறத்தில் காட்சி அளித்தது. அது டேங்கின் மற்ற பகுதியை அடையும் போது பல்வேறு நிற மாற்றங்களை அடைந்தது. அடுத்து ஒளிக்கற்றைகள் மஞ்சள் நிறமாகவும், பின்னர் ஆரஞ்சு நிறமாகவும், இறுதியில் சூரிய மறைவில் காணப்படும் சிவப்பு நிறமாகவும் காட்சி அளித்தது.

வெள்ளை நிற ஒளியானது வானவில் நிறங்களின் கலவை என்பதை டிண்டால் அறிந்திருந்தார்.

நீல நிற ஒளி தண்ணீரில் உள்ள பால் துகள்களால் சிதறடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்ற விளக்கம்தான் அவரின் கவனத்தை ஈர்த்த இந்த நிகழ்வுக்கான காரணம் என்று அவர் நினைத்தார்.

மற்ற நிறங்களின் ஒளியைக் காட்டிலும் நீல நிற ஒளி குறைவான அலைநீளத்தைக் கொண்டுள்ளது என்று நாம் தற்போது அறிந்திருக்கிறோம்.

அந்த திரவத்தில் முதலில் சிதறடிக்கப்பட்ட ஒளி நீல நிற ஒளி என்பதே இதன் அர்த்தம். அதனால்தான் வெள்ளை நிற விளக்கிற்கு அருகே உள்ள பகுதி மட்டும் நீல நிறத்தில் உள்ளது.

இதுதான் வானம் நீல நிறத்தில் இருப்பதற்கான காரணம் கூட. ஏன் என்றால் சூரியனில் இருந்து வரும் நீல நிற ஒளியானது, வளிமண்டலத்தில் சிதறடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மற்ற அனைத்து நிறங்களைக் காட்டிலும் அதிகம்.

ஆனால், இந்த கண்ணாடி டேங்க் சூரிய மறைவில் தோன்றும் மற்ற நிறங்கள் குறித்தும் விளக்கமளிக்கிறது.

பால் கலந்த நீரில் ஒளி ஆழமாக ஊடுருவும் போது குறைவான அலை நீளங்களைக் கொண்ட நிறங்கள் சிதறடிக்கப்படுகின்றன. அதிக அலை நீளங்களைக் கொண்டிருக்கும் நிறங்களான ஆரஞ்ச் மற்றும் சிவப்பு நிறங்கள் நீண்ட தூரம் பயணிக்கின்றன.

அதனால்தான் சில தூரம் கடந்தவுடன் நீர் ஆரஞ்சு நிறத்தில் காட்சி அளிக்கிறது. டேங்க் இன்னும் நீளமாக இருந்திருக்கும் பட்சத்தில் சிவப்பு நிறம் காட்சி அளித்திருக்கும். இது போல தான் வானத்தில் நடக்கிறது.

 
டிண்டாலின் அறிவியல் கண்டுபிடிப்புகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அவருடைய காலத்தில் மதிப்புமிக்க மனிதராக பலராலும் அறியப்பட்டார் டிண்டால்

சூரியன் மறையும்போது, அதன் ஒளி வளிமண்டலத்தின் அனேக பகுதிகளுக்கும் பரவுகிறது. அதனால் குறைந்த அலை நீளத்தைக் கொண்ட நீல நிறம் முழுமையாக சிதறடிக்கப்பட்டு, இறுதியாக ஆரஞ்சும் சிவப்பு நிறமும் அதிக தூரம் பயணிக்கின்றன.

இதன் விளைவாகவே அந்த நிறங்கள் சூரிய மறைவில் அதிகமாக காணப்படும் நிறங்களாக உள்ளது.

டிண்டால் நினைத்ததைப் போன்றே, இந்த ஒளிச் சிதறலானது தூசுக்களால் அல்லாமல் காற்று மூலக்கூறுகளால் நடந்தது என்று நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.

அவர் விளக்கத்தில் உள்ள தகவல்களில் சில பிழைகள் இருந்தாலும், முதன்மை கோட்பாடு சரியான ஒன்றே.

உண்மையில், அவரின் கண்டுபிடிப்புக்கு அவர் அளித்த தவறான விளக்கமே மேலும் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை மேற்கொள்ள உந்தியது.

ஒரு பெட்டியும் தூசுக்களும்

ஆர்வம் மிகுதியாக கொண்ட ஆராய்ச்சியாளரான அவர், இது தொடர்பாக மேலும் பல பரிசோதனைகளை மேற்கொண்டார்.

தூசுக்கள் நிறைந்த, காற்றால் அடைக்கப்பட்ட பெட்டி ஒன்றை

சோதனைகளுக்காக எடுத்துக் கொண்டார். அதில் உள்ள தூசுக்கள் எல்லாம் அடங்குவதற்காக பல நாட்கள் அவர் காத்துக் கொண்டிருந்தார்.

அனைத்து தூசுக்களும் அடியில் தங்கிய நிலையில், அந்த சோதனையை அவர் 'ஒளியியல் தூய்மையான காற்று' (optically pure air) என்று பெயரிட்டார்.

பிறகு அந்த பெட்டியில் ஒவ்வொன்றாக பொருட்களை போட ஆரம்பித்தார். முதலில் மாமிச துண்டு ஒன்றை போட்டார். பிறகு மீன் ஒன்றை போட்டார். அவர் தன்னுடைய சிறுநீரையும் கூட அதில் சேர்த்தார்.

அதில் மிகவும் ஆர்வமான ஒன்றைக் கண்டிருந்தார். அதில் போட்ட மாமிசமோ, மீனோ கெட்டுப் போகவில்லை. அவரின் சிறுநீரிலும் எந்த மாற்றமும் இல்லை. அவைகள் அனைத்தும் ''புத்தம் புதிய செர்ரி பழம் போல இருந்தது," என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால், அவர் அந்த பெட்டிக்குள் உருவாக்கியது தூசு இல்லாத அல்லது ஒளியியல் தூய்மையான காற்று அல்ல. அனைத்து பாக்டீரியாக்களும் பெட்டியின் அடியில் தங்கியுள்ளது.

இதனால், கிருமிகள் ஏதும் இல்லாததாக காற்று மாறியது.

 
டிண்டால் ஆராய்ச்சி முடிவுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மாலை நேரத்தில் வானம் ஏன் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது?

டிண்டாலின் இந்த ஆராய்ச்சி, "காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் மூலமாகவே நோயும் அழுகலும் ஏற்படுகிறது" என்ற சர்ச்சையான கோட்பாட்டிற்கு ஆதாரமாக இருந்தது.

பருத்தி மூலமாக இது போன்ற தூசிக்களை வடிக்கட்ட இயலும் என்பதையும் அவர் நிரூபித்தார். மேலும், மனிதர்கள் சுவாசிக்கும் போது இந்த பருத்தியிலான மாஸ்குகளை பயன்படுத்தினால், தூசிகளை தடுப்பதில் அது திறம்பட செயல்படுகிறது என்றும் அவர் நிரூபித்தார்.

நிகழ்கால பிரச்னைகளோடு தொடர்பு கொண்ட விவகாரங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தாமல், கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர் ஆய்வுகளை மேற்கொண்டார்.

வானில் தோன்றும் நிறங்களை குறித்து ஆய்வு செய்யும் போது அவர் காற்றில் மூலம் பரவும் நோய்களின் மூலத்தை அறிந்து கொள்ளும் எண்ணத்தில் அவர் அந்த ஆய்வை துவங்கவில்லை. ஆனால் இறுதியில் அதைத்தான் அவர் கண்டறிந்தார்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இனி வரும் தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி இல்லை; சீமான் பேட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்திருந்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கப்போவது கிடையாது. மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்தில் லட்டு பிரச்சினையையும், ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்சினையையும் கிளப்புகின்றனர்.நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் ஆதரவை வாபஸ் பெற்றால் இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுமா?. மேற்கு வங்கத்திலும், பீகாரிலும் 7 கட்டமாக தேர்தல் நடத்தியவர்கள், இந்தியா முழுவதும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த முடியாது. இனிவரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடாது. எங்களது எண்ணத்திற்கு விருப்பமுள்ள சின்னத்தில் போட்டியிடுவோம். தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்பட வேண்டும். கலைப் பண்பாட்டிற்கு மதுரையும், தொழில் வளர்ச்சிக்கு கோவையும், திரைக்கதை, கணினி, கப்பல் போக்குவரத்திற்கு சென்னையும், ஆன்மிகத்திற்கு கன்னியாகுமரியும், நிர்வாகத்திற்கு திருச்சியும் ஆகியவற்றை தலைநகராக வைக்க வேண்டும்\” இவ்வாறு அவர் பேசினார்.   https://akkinikkunchu.com/?p=292308
    • தேர்தல் முடிவுகள் வௌியாகும் நேரம் அறிவிப்பு! தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   இதன்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களிலும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தாம்  எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் உள்ள வாக்குப்பெட்டிகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர், வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். அத்துடன், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களிப்புக்கு  712,318 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், அவர்களில்  6,200 ஐத் தவிர ஏனைய அனைவரும் தமது வாக்குகளை அளித்துள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். நாட்டிலுள்ள 429 வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நடவடிக்கை மாலை 4.00 மணிக்குத் தொடங்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்  கூறினார். https://athavannews.com/2024/1400450
    • ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 50 வீதமான வாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ள-தேர்தல் ஆணைக்குழு! ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒன்றரை மணித்தியாலங்கள் உள்ளன என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 50 வீதமான வாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கொழும்பு, கம்பஹா, பொலன்னறுவை, திருகோணமலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் 50 வீதத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வன்னி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 40 வீதத்தை தாண்டியுள்ளது. இதற்கு மேலதிகமாக மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் 20 வீதத்தை தாண்டியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1400443
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.