Jump to content

"ராமன் எத்தனை வஞ்சகனடி?"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"ராமன் எத்தனை வஞ்சகனடி?"
 
 
"தீபம் ஏற்றி திலகம் இட்டு
மங்கையர் வலம் வந்து
தீபம் கொளுத்தி ராவணன் எரித்து
வேங்கையர் துள்ளி ஆடி
தீய சொற்களால் சீதைக்கு எய்தவனை
நங்கையர் மூக்கு அறுத்தவனை
தீண்டாதவன் என்பதால் சங்காரம் செய்தவனை
மங்கையர் பாடி கொண்டாடுகிறார்கள்!"
 
 
"தீர மிக்க வாலியை வஞ்சித்து
குரங்கின் உதவி பெற்றவனை
தீவின் சிறையில் நிமிர்ந்து நின்றவளை
இரக்கமின்றி தீயில் இறக்கியவனை
தீதோ நன்றோ ஒன்றாய் வாழ்ந்தவளை
இரக்கமற்று காடு அனுப்பியவனை
தீபம் ஏற்றி 'ராம-சீதை'யாக வாழ
உரத்த குரலில் தொழுகின்றனர்!!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம் ]
 
No photo description available.
  • Like 4
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமை அண்ணா

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.