Jump to content

திருப்பம் காணும் தமிழரசியல் புரிந்துகொள்ளுமா புதுடில்லி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   22 SEP, 2024 | 03:37 AM

image

லோகன் பரமசாமி

சர்வதேச நாடுகள் மத்தியில் இவ்வருடம் இடம்பெற்று வரும் தேர்தல்களின் பட்டியலில் இலங்கையில் இவ்வாரம் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் நாட்டின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. 

இலங்கைத் தேர்தல் அத்தீவின் தென்பகுதியில் வெறும் உதிரி வேட்பாளர்களின் தேர்தல் களமாக பார்க்கப்பட்டிருந்த போதிலும் ஒருதேசமாக  தமிழ்பொது வேட்பாளரின் வருகை ஏற்கனவே பிராந்திய அரசியலில் தாக்கத்தை விளைவிக்க ஆரம்பித்துவிட்டது. 

பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச அலகுகளையும் மீண்டுமொரு முறை ‘ஈழத்தமிழர்’ விவகாரத்தில் கவனம் செலுத்தும் நிலைக்கு தள்ளியுள்ளது.  இதற்கு முக்கிய ஆரம்பப்புள்ளியாக தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் தமிழ் நாட்டில் பிரபல்யமான சரித்திர முக்கியத்துவம் கொண்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் எதிரொலித்திருந்தமை கவனிக்க தக்தாகும். 

ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பால் ஒழுங்கு செய்யபட்டிருந்த இப்பத்திரிகையாளர் சந்திப்பில்,  தமிழ் நாட்டு மக்களுக்கு இலங்கையில் தமிழ் மக்கள் ஒருபொது வேட்பாளரை போட்டியில் நிறுத்தியுள்ளனர் என்பதை அறிமுகம் செய்வதற்கும் அறிவிப்பதற்குமான கூட்டமாக இருந்தது. 

இலங்கையில் தமிழ் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டமையானது, தேர்தல் விவகாரமாக சில யாழ்பாண ஆய்வாளர்களும் கொழுப்பு ஆய்வாளாகளும் சித்தரிக்க முயலும் அதேவேளை சென்னையில் நடந்த செய்தியாளர் மாநாடு தமிழ் பொதுக் கட்டமைப்பானது அண்மைகால தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பமுனையாக பார்க்கப்படுகிறது. 

பொதுக்கட்டமைப்பை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்வதற்கும் அப்பால் எதிர்க்கட்சிகள், ஆளும்கட்சி என்ற வேறுபாடுகளை கடந்து தமிழ் நாட்டிலுள்ள அனைத்து அரசியல் சமூக செயற்பாட்டாளர்களிடம் இருந்தும் ஆதரவை வேண்டி நிற்கிறது. 

2009ஆம் ஆண்டுக்கு முந்தைய காலங்களில் வெளியகத் தலையீடுகள் பல  தமிழ் மக்களின் தேசக் கட்டுமான நகர்வுகளைச் சிதைக்கும் செயற்பாடுகளை மையமாகக் கொண்டு அமைந்திருந்தன.  

குறிப்பாக போராடும்  தேசிய இனமொன்றின் மீதான வெளியகத் தலையீடு என்பது மொழிப்பிரிவுகள் இனகுழுமப் பிரிவுகள், மதப் பிரிவுகள், வாழும் பிராந்தியங்களுக்கு இடையிலான பிரிவுகள்  என்று பலதரப்பட்ட வகையில் அவரவர் உரிமைகளுக்காக பேசுவது போல் பாசாங்கு செய்து தனித்தனி அலகுகளாக பிரித்து விடுவது வழக்கமாக இருந்தது. 

ஆனால் செப்ரெம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற சென்னை பத்திரிகையாளர் சந்திப்பானது. அனைவரையும் ஒரு தேசியமாக பார்த்த விவகாரம் கவனிக்க தக்கதாகும். இதற்கு தமிழகம் ஒரு தாய் நிலமாக  ஊக்கம் விளைவிக்கும்  சக்தியாக திரள வேண்டும் என்ற வேண்டுகோள் அங்கே விடுக்கபட்டது. 

அத்துடன் தமிழக அரசு நோக்கி விடுக்கப்பட்ட வேண்டுகோளில்  இலங்கையில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவகாரங்களை  தமிழக அரசு டில்லிக்கு அழுத்தம் கொடுக்கும்  விவகாரங்களாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுடன்  தமிழக முதலமைச்சர் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் மக்களிடையே ஒருபொதுவாக்கெடுப்பு நடாத்துவதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

சர்வதேச மன்னிப்பு சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் அனைத்திற்கும் இலங்கையில் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுவரும் இனஅழிப்பு விவகாரங்களை எடுத்து கூறக்கூடிய கடிதங்கள் எழுதும்படி தாம் ஏற்கனவே தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறபட்டது.  

அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் ஏற்பாட்டாளர்களான பெரியார் திராவிடர் கழக செயலர்  கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலர் தோழர் தியாகு ஆகியோருடன் மேலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய கட்சியைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை வாழ், தமிழ் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு கோரி மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் முன்முயற்சியில் சட்டசபை தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது. இதனை புதுப்பிக்கும் வகையில் மீண்டுமொரு தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது அந்த அமைப்பின் சார்பில் தோழர் தியாகுவினால் வேண்டுகோளாக முன்வைக்கப்பட்டது.

இலங்கைத் தமிழ் மக்கள் மீதான தமிழக மக்களின் சரியான புரிந்துணர்வு இந்திய மத்திய அரசுடனான கையாள்கைக்கு மிகவும் இன்றியமையாததாக தெரிகிறது. தோழர் தியாகு போன்றவர்கள் நடைமுறையிலும் சித்தாந்த ரீதியாகவும்  சரியான, தெளிவான சிந்தனைப்போக்குக் கொண்டவாகளாக உள்ளனர். 

ஆயுதப் போராட்ட கால அணுகுமுறைகள் போல் அல்லாது தெற்காசியாவின் பிராந்திய  வல்லரசான இந்தியாவை  ஒரு கூட்டுச் சக்தியாக அணுகுவது என்பது பொதுக் கட்டமைப்பின் நகர்வில் தெரிகிறது. கடந்த காலங்களில் எத்தகைய அழுத்தங்களை பிரயோகித்த போதிலும். 2009ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துவிட்ட நிலையைக் கொண்டிருந்த போதிலும் தமிழ்த் தரப்பு சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் பிடியிலிருந்து விடுபட்டுவிட வேண்டும் என்ற நோக்கம் இன்னமும் மாறவில்லை.

ஆயுதம் தாங்கிய போராட்டக் களத்திலும் சரி தற்போதைய ஜனநாயக போராட்ட களத்திலும் சரி கடந்த பதினைந்து வருடகால தமிழ் மிதவாத, சந்தர்ப்பவாத சக்திகள் வலுவிழந்துள்ள சமகாலத்தில் மீண்டும் பேரினவாத சக்திகளின் பிடியிலிருந்து விடுபட்டு தமது அடையாளங்களை பேண வேண்டும் என்ற அவா தமிழ் மக்களிடம் இன்னமும்  மாறவில்லை.  

இதுவொரு தீர்வைக்காண விளையும் தரப்பிற்கான உருமாற்றமாகவே கருதப்பட வேண்டியுள்ளது என்பதை புதுடில்லி புரிந்து கொள்ளுமா என்பது தான் தற்போதைய கேள்வி.

தெற்காசியப் பிராந்தியத்தில் தற்போது இந்திய சார்பு நாடுகள் என்று எதுவுமில்லை, சர்வதேச வல்லரசுகளின் ஆதிக்கம் அந்தளவிற்கு ஆழ ஊடுருவியுள்ளது. இந்நிலையில் புதுடில்லி தமிழக உறவுகளை வலுவாகக் கொண்ட இலங்கைத்த தமிழ் மக்களை தமது சார்பாளர்களாக உறுதிப்படுத்தி கொள்வது மிக அவசியமானதாகத் தெரிகிறது. 

இலங்கையில் தமிழர் தரப்பு தமது நிழல் திணைக்களங்களை ஏற்கனவே அமைத்துக் கொள்வதற்குரிய வியூகங்களை கொண்டுள்ளது. பொதுக்கட்டமைப்பில் இனைந்துள்ள துறைசார் அமைப்புகள் 2009காலப்பகுதிக்கு முன்னரான சூழலின் அனுபவம் கொண்ட பாமர மக்களிடமிருந்தான  தலைமைத்துவங்களை தன்னகத்தே கொண்டு மீண்டும் உயிர்துள்ள நிறுவன தன்மையை  தமிழ் பொதுக் கட்டமைப்பில் காண முடிகிறது.

இவ்வாறு மக்கள் மயபடுத்தப்பட்ட துறை சார்ந்த அனுபவஸ்தர்களையும்  கல்வியாளர்களையும் புத்திதத்துவ ரீதியாக அணுகவல்ல கொள்கை வகுப்பாளர்களையும்  தன்னகத்தே கொண்ட ஒரு கட்டமைப்பாக மீண்டும் தம்மை தகவமைத்து கொள்ள முடியும் என்பதை தமிழ் மக்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.  

அந்த வகையில் தமிழர் சார்பு கொள்கை மாற்றம் ஊடாக  பிராந்திய அளவில் இந்திய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்காதவொரு தேசமாக உருவாக்கி கொள்ளும் சந்தர்ப்பம் தற்பொழுது புதுடில்லிக்கு ஏற்பட்டுள்ளது. 

அண்மைய பங்களாதேஷ அனுபவத்தின் ஊடாக பார்க்கும் பொழுது தொடர்பாடலின் வளர்ச்சியும் உரிமைகளுக்கான தேவைகளும், தமிழ்த் தரப்பின் இருப்பிற்கான பாதுகாப்பும் மேலைத்தேய சார்பு  தன்னார்வ நிறுவனங்களின் தலையீட்டை தவிர்க முடியாது. 

இவை தமிழக தலைவைர்கள் போல் ஈழத்தேசிய அரசியலுக்கு துணையாகவும் தேசக் கட்டுமானம் குறித்த சிந்தனை கொண்டவைகளாகவும் இருக்கும் என்று எதிர்பார்க முடியாது.  

பங்களாதேஷ் போல இலங்கைத் தீவை ஒட்டுமொத்தமாக தமது கட்டுபாட்டின் கீழ் வைத்திருக்கவே மேலைதேய அரச சார்பற்ற நிறுவனங்கள் முயலும் பொழுது இனங்களுக்கு இடையில் அரசியல் தீர்வற்ற இலங்கைத் தீவு, ஒரு பவீனமான அரசு கொண்ட நாடாக மேலும் நீண்ட காலத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.

https://www.virakesari.lk/article/194352

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த வரலாறை சுருக்கமாக, வேறு திரியில்  சொல்லியிருக்கிறேன் என்று நினைவு. குயிலி, அப்போதைய (இப்போதும்) தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் குயிலி வேலுநாகியருக்கும் தெரியாமல், சேலையின் உள்ள மடிப்புகளுக்குள் எண்ணையை பூசிக்கொண்டே சென்றதாகவே வாய்வழிக்கதை இருக்கிறது. இதை கிந்தியா மறைத்துவிட்டது. UK இல் இந்த வரலாற்றை, குறிப்பிட்ட தமிழ் பாடசாலையில்  நடிப்பு வடிவமாகமுன்னறிவித்தல் இன்றி  செய்த போது, அதிபரை தவிர வேறு எவருக்கும்  தெரிந்து இருக்கவில்லை என்பது எப்படி எமது வரலாற்றில் நாம் அக்கறை இல்லை என்பதை பார்க்க கூடியதாக இருந்தது.  
    • தேசிய உணர்வு என்பது அரியத்தாருக்கு ஆதரவு அளிப்பது அல்ல சாத்.  வடக்கு கிழக்கில் அரியத்தாரை மக்கள் நிராகரித்துவிட்டார்கள,. அவர்களெல்லாம் "நம் இழப்புகள், தேவைகள் தெரிவதுமில்லை, கவலையுமில்லை, இன உணர்வும் இல்லாத ." ஆட்கள் என்கிறீர்களா?  உங்கள் கருத்தின்படி நான் அண்மையில் கனடாவில் இடம்பெற்ற தமிழர் திருவிழாவில் பாடகர் சிறீநிவாஸ் அவர்களுக்குக் கல்லெறிந்திருக்க வேண்டும். அல்லது அரியத்தாருக்கு ஆதரவாக அலட்ட வேண்டும். அப்போதுதான் நான் டமில் தேசியவாதி.  அதாகப்பட்டது மூழையைத் கழட்டி ஒருபக்கம் கடாசிவிட்டு புலம்பெயர்ஸ் போடும் காட்டுக் கூச்சலுக்கு அதலையை ஆட்னால் மட்டும்தான் நான்  டமில்த் தேசியவாதி. சுயமாகச் சிந்தித்தால் துரோகி.  உந்த முட்டாள் கூட்டத்தின் பார்வையில் நான் டமில் தேசியவாதியாய் இருப்பதைவிட இவர்களால்  துரோகியாக கருதப்படுவதே மேல் என நினைக்கிறேன்.  ✋   100% ✅
    • புலம்பெயர் புண்ணியவான்கள் கம்மெண்டு இருந்தாலே போதுமானது.  தாயகத்து மக்கள் தமது அரசியலைத் தகவமைத்துக்கொள்ளுவார்கள்!
    • மாற்றம் ஒன்றே மாறாதது. அனுர நன்மை செய்வார் என்று நம்புவோம். 
    • தேர்தலில் புதிய திருப்பம்: முதல் சுற்றில் 15 மாவட்டங்களில் அநுர முன்னிலை 2024 ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 22 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை பெற்றுள்ளார். இதேவேளை சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம், நுவரெலியா, பதுளை, திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வன்னி ஆகிய சிறுபான்மையின மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அந்தவகையில், சற்றுமுன் வெளியான முதல் சுற்று முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு சஜித் பிரேமதாச 4,363,035  (32.76%) வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன்  (17.27%) மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ச 342,781 (2.57%) வாக்குகளுடனும் மற்றும் பா.அரியநேத்திரன் 226,343 (1.7%) வாக்களுடனும் 5 ஆவது இடத்திலும் உள்ளனர். இதற்கமைய, வாக்குகள் அடிப்படையில் வெற்றிப் பெற்ற அநுர குமார திஸாநாயக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால் தற்போது இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள் தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதித் தேர்தலில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லையென தெரிவித்து இது திருப்திகரமாகவுள்ளதெனவும் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னரும் மக்கள் அமைதியாகச் செயற்படுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://ibctamil.com/article/presidential-election-2024-sri-lanka-results-1727003951
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.