Jump to content

வடக்கு, கிழக்கில் ஊழலற்ற அரசியலை முன்னெடுக்க நாங்கள் போராடுவோம் - கே.இன்பராசா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
28 SEP, 2024 | 05:59 PM
image

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஆதரவாளர்கள் மக்களின் அனுசரணையுடன் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி சுயேட்சையாக வடக்கு, கிழக்கில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கே.இன்பராசா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று சனிக்கிழமை (28) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது அதிகூடிய சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயேட்சையாக போட்டியிடவுள்ளோம்.

தமிழ் மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இந்த தேர்தல் குறித்து நாங்கள் உங்களைத் தேடி வருவோம். எங்களுக்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்காக நாங்கள் எங்கள் உயிரையே அர்ப்பணித்தோம். அங்கவீனமாக்கப்பட்டுள்ளோம். அனாதரவாக்கப்பட்டுள்ளோம். எனவே முன்னாள் விடுதலைப்புலிகள் ஆகிய நாங்கள் இத்தேர்தலில் களமிறங்கவுள்ளோம்.

தற்போதைய ஜனாதிபதியின் ஊழல் அற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை போல் வடக்கு, கிழக்கில் ஊழலற்ற அரசியலை முன்னெடுக்க நாங்கள் போராடுவோம்.

மன்னார் மாவட்ட முன்னாள் விடுதலைப்புலிகளும் எங்களுடன் இணைந்துள்ளனர். எனவே, தமிழ் மக்களும் எங்களுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார். 

https://www.virakesari.lk/article/195010

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்துக்களத்தில் உள்ள தமிழ்த்தேசிய தூண்கள் இவர்களுக்கு ஆதரவு அளிப்பார்களா என அறிய ஆவல்.

சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் தொடக்கம் விநாயக மூர்த்தி முரளிதரன், பிள்ளையான் வரை அரசியலில் ஈடுபடலாம் என்றால் இவர்களுக்கு அரசியலில் கிடைக்கக்கூடிய இடம், பெறப்படக்கூடிய இடம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நியாயம் said:

யாழ் கருத்துக்களத்தில் உள்ள தமிழ்த்தேசிய தூண்கள் இவர்களுக்கு ஆதரவு அளிப்பார்களா என அறிய ஆவல்.

சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் தொடக்கம் விநாயக மூர்த்தி முரளிதரன், பிள்ளையான் வரை அரசியலில் ஈடுபடலாம் என்றால் இவர்களுக்கு அரசியலில் கிடைக்கக்கூடிய இடம், பெறப்படக்கூடிய இடம் என்ன?

தற்பொழுது உள்ள அரசாங்கத்திடம் இப்படியானவர்களின் செல்வாக்கு எடுபடுமா? நீங்கள் கூறிய யாவரும் அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்து , அரசுகள் தோல்வியடைந்த பின்பு தமிழ்மக்களின் வாக்கு அரசியலுக்கு வந்தவர்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

தற்பொழுது உள்ள அரசாங்கத்திடம் இப்படியானவர்களின் செல்வாக்கு எடுபடுமா? நீங்கள் கூறிய யாவரும் அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்து , அரசுகள் தோல்வியடைந்த பின்பு தமிழ்மக்களின் வாக்கு அரசியலுக்கு வந்தவர்கள்

 

அரசாங்கத்தை விடுங்கள். மில்லியன் டொலர் கேள்வி என்ன என்றால் நமது தூண்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளுமா என்பதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

 

அரசாங்கத்தை விடுங்கள். மில்லியன் டொலர் கேள்வி என்ன என்றால் நமது தூண்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளுமா என்பதுதான்.

சோசலிஸ்ட்கள் இன அடையாளத்தை பெரிதாக எடுக்க மாட்டார்கள் அவர்கள் அபிவிருத்தி,உற்பத்தி என்ற கோசத்தை முன் வைத்து அரசியல் செய்ய முயற்சிப்பார்கள்...அத்துடன் இனங்களின் தனித்துவத்தை அழிக்க முயற்சிப்பார்கள் ...ஆகவே தூண்கள் கொஞ்சம் யோசித்து செயல் பட வேண்டிய கால கட்டம் ..தமிழ்தேசியத்துடன் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்க வேண்டிய காலம்...

இந்த சோசலிஸ்ட்கள் எவ்வளவு காலம் ஆட்சி செய்வார்களோ தெரியவில்லை...இதன் பின்பு 10 வருடங்களின் பின்பு மீண்டும் நாமல்,அல்லது வேறு யாராவது ஆட்சியை கைப்பற்றினால் எம் மக்களின் அடையாளம் கேள்விகுறியாகும்..

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேலை தாக்க நடந்த இரகசியத் திட்டம்! Hassan Nasrallah மரணம் ஏற்படுத்தியுள்ள தாக்கம்!! ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நசரல்லாவைத் தாக்கி அழிக்க இஸ்ரேல் எதற்காக இந்தக் காலகட்டத்தைத் தேர்ந்தெடுத்திருந்தது? ஹிஸ்புல்லாக்களுக்கு அருகில், ஹிஸ்புல்லா அமைப்புக்கு உள்ளே நீண்டகாலமாகச் செயற்பட்டுவந்த இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு நினைத்திருந்தால்- Hassan Nasrallahவை முன்னரேயே அகற்றி இருக்க முடியும். அப்படியிருக்க எதற்காக இந்தத் தருனத்தைத் தேர்ந்தெடுத்திருந்தது இஸ்ரேல்?  
    • 30 SEP, 2024 | 01:31 PM காலித் ரிஸ்வான் அதிநவீன AI மற்றும் ரோபோ தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானம்,  போக்குவருத்து, பொழுதுபோக்கு, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளிலும் சவூதி அரேபியா தொடர்ந்தும் புதிய சாதனைகளைப் படைத்துவருகிறது.  அண்மையில் நடைபெற்ற ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் AIஇனால் இயக்கப்படும் ரோபோக்களின் பயன்பாடு மற்றும் மன்னர் சல்மான் மெடிக்கல் சிட்டியில் வெற்றிகரமான ரோபோ உதவி மூலமான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை அண்மைய தொழில்நுட்ப ரீதியான மருத்துவ மற்றும் கல்வி ஆகிய துறைகளில் சவூதியின் சாதனைகள் மற்றும் ஆர்வம் போன்றவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.  இவ்வாண்டு நடைபெற்ற ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சவூதியின் இலக்கியம், வெளியீடு மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையம் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில்  AI மூலமான சேவைகளை அறிமுகப்படுத்தி செயற்படுத்தி இருந்தது.  அந்த வகையில் பல்வேறு மொழிகளில் தொடர்புகொள்ளும் திறன் கொண்ட AI மூலம் இயங்கும் ரோபோக்கள் கண்காட்சியில் பங்கேற்பாளர்களுக்கு விதிவிலக்கான துல்லியத்துடன் வழிகாட்டும் வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தன.  இந்த ரோபோக்கள் பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட புத்தகங்கள் மற்றும் வெளியீட்டு நிறுவனங்களைக் கண்டறிய உதவுவனவாக இருந்ததோடு, பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு பல மொழிகளிலான உதவிகளை, வழிகாட்டல்களை வழங்கின.  மேலும் இந்த ரோபோக்கள் புத்தகங்களுக்கான ஆடியோ  (Audio) வடிவிலான சுருக்கங்களை வழங்குகின்றன. முக்கிய கருப்பொருள்கள் மற்றும் காண்பிக்கப்படும் புத்தகங்களின் உள்ளடக்கத்தையும் வழங்குகின்றன. புத்தக ஆர்வலர்களுக்கான சிறந்த ஒரு அனுபவத்தை இந்த திட்டமானது வழங்குகின்றது.  இக்கண்காட்சியின் சகல அரங்குகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்டிருந்ததோடு, ஊடாடும் சாதனங்கள், தேவைக்கேற்ப கதை அச்சிடுவதற்கான அச்சியந்திரங்கள் வைக்கப்படல் மற்றும் தகவல் திரைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் கண்காட்சியின் கவர்ச்சி மேலும் அதிகரிக்கப்பட்டது. சுகாதாரத்துறையை பொருத்தமட்டில், மதீனா நகரில் உள்ள மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மெடிக்கல் சிட்டி, 70  வயதான ஒரு பெண்ணுக்கு முதல் முதலாக ரோபோ உதவியுடன் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து வரலாறு படைத்துள்ளது.  சிறப்பு எலும்பியல் மற்றும் மூட்டு மாற்றுக் குழுவால் நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சை, மதீனா சுகாதாரத் தொண்டு நிறுவனத்துக்கு (Madina Health Cluster) ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது.  மூட்டுமாற்று அறுவை சிகிச்சையில் ரோபோ அமைப்புகளின் பயன்பாடானது எலும்பு சீரமைப்பு மற்றும் எழும்பு மாற்று செயற்பாடுகளில் துல்லியத்தை உறுதி செய்கிறது.  அத்தோடு இது சிறந்த அறுவை சிகிச்சை விளைவுகளுக்கும் விரைவான குணமடைதலுக்கும் வழிவகுக்கிறது.  இந்த புதுமையான செயல்முறையின் வெற்றியை அடிக்கோடிட்டுக் காட்டும் வண்ணமாக நோயாளி பூரண ஆரோக்கியத்துடன் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார். கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய இரு துறைகளிலுமான இந்த முன்னேற்றங்கள் தொழில்நுட்பத்தை முக்கிய துறைகளில் ஒருங்கிணைப்பதற்கான சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான முயற்சிகளை பிரதிபலிக்கின்றன. அத்தோடு இவ்வாறான முயற்சிகள் பிராந்திய ரீதியாகவும் உலகளவிலும் சவூதியை புதுமை மற்றும் முன்னேற்றத்துக்கான ஒரு முன்னோடியாக நிலைநிறுத்தியிருக்கின்றன. https://www.virakesari.lk/article/195126
    • சூரிய ஆற்றலின் நன்மை தீமைகள்   சூரியன் பூமிக்கு ஒரு மணி நேரம் அளிக்கும் ஆற்றல் ஒரு வருடத்திற்கான உலகளாவிய ஆற்றல் தேவையை பூர்த்தி செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சந்தேகத்திற்கு இடமின்றி, சூரியன் ஒரு சக்திவாய்ந்த ஆற்றல் மூலமாகும், மேலும் இந்த ஆற்றலின் ஒரு பகுதியை நம்மால் சேகரிக்க முடியாவிட்டாலும், சோலார் பேனல்களை நிறுவுவதன் மூலம் இந்த சக்தியைப் பயன்படுத்துவது கிரகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். இது விலை உயர்ந்தது அல்லது திறமையற்றது என்று பரவலாக விமர்சிக்கப்பட்டாலும், சூரிய ஆற்றல் இப்போது மிகவும் நன்மை பயக்கும் - சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, தனியார் பொருளாதாரத்திற்கும்.   நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?   கிடைக்கக்கூடிய சோலார் பேனல் மானியங்கள் மற்றும் சந்தையில் பெருகிய முறையில் போட்டி விலைகள் காரணமாக, சூரிய ஆற்றல் அதிக குடும்பங்களுக்கு ஆற்றலின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. தொழில்நுட்பம் கடந்த ஆண்டுகளில் வெகுவாக மேம்படுத்தப்பட்டு, சூரிய மின்கல சேமிப்பு அமைப்புகளால் நிரப்பப்பட்டு, சூரிய சக்தியை தூய்மையான ஆற்றலின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக மாற்றுகிறது. இருப்பினும், நீங்கள் பகுப்பாய்வு செய்யத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் மூலத்தைப் பொருட்படுத்தாமல் எப்போதும் குறைபாடுகள் உள்ளன. சூரிய ஆற்றலின் முக்கிய நன்மைகள் மற்றும் தீமைகள் முக்கியமாக பின்வரும் புள்ளிகளில் பிரதிபலிக்கின்றன:     சூரிய ஆற்றலின் நன்மைகள்     1. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரம் சோலார் பேனல்களின் அனைத்து நன்மைகளிலும், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சூரிய ஆற்றல் உண்மையிலேயே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும். இது உலகின் அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தப்படலாம் மற்றும் ஒவ்வொரு நாளும் கிடைக்கும். மற்ற சில ஆற்றல் ஆதாரங்களைப் போலல்லாமல், சூரிய சக்தியை நம்மால் இயக்க முடியாது. சூரியன் இருக்கும் வரை சூரிய சக்தியை அணுக முடியும், எனவே விஞ்ஞானிகளின் கூற்றுப்படி சூரியன் இறக்கப் போகும் போது குறைந்தது 5 பில்லியன் ஆண்டுகளுக்கு சூரிய ஒளி நமக்குக் கிடைக்கும். 2. மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கிறது உங்கள் சூரிய குடும்பம் உருவாக்கிய மின்சாரம் மூலம் உங்கள் ஆற்றல் தேவைகளில் சிலவற்றை நீங்கள் பூர்த்தி செய்வதால், உங்கள் ஆற்றல் கட்டணம் குறையும். உங்கள் பில்லில் எவ்வளவு சேமிக்கிறீர்கள் என்பது சூரியக் குடும்பத்தின் அளவு மற்றும் உங்கள் மின்சாரம் அல்லது வெப்பப் பயன்பாட்டைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, நீங்கள் வணிகரீதியான சோலார் பேனல்களைப் பயன்படுத்தும் வணிகமாக இருந்தால், இந்த சுவிட்ச் பெரிய பலன்களைப் பெறலாம், ஏனெனில் பெரிய சிஸ்டம் அளவு உங்கள் ஆற்றல் பில்களின் பெரிய பகுதிகளை உள்ளடக்கும். மேலும், நீங்கள் மின்சாரக் கட்டணத்தைச் சேமிப்பது மட்டுமின்றி, ஸ்மார்ட் ஏற்றுமதி உத்தரவாதம் (SEG) மூலம் மின்கட்டணத்திற்கு மீண்டும் ஏற்றுமதி செய்யும் உபரி ஆற்றலுக்கான கட்டணங்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. நீங்கள் பயன்படுத்துவதை விட அதிக மின்சாரத்தை நீங்கள் உற்பத்தி செய்தால் (உங்கள் சோலார் பேனல் அமைப்பு கட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு). 3. பல்வேறு பயன்பாடுகள் சூரிய சக்தியை பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். நீங்கள் மின்சாரம் (ஒளிமின்னழுத்தம்) அல்லது வெப்பம் (சூரிய வெப்ப) உருவாக்க முடியும். சூரிய ஆற்றலை ஆற்றல் கிரிட் அணுக முடியாத பகுதிகளில் மின்சாரம் தயாரிக்கவும், குறைந்த சுத்தமான நீர் விநியோகம் உள்ள பகுதிகளில் தண்ணீரை வடிகட்டவும் மற்றும் விண்வெளியில் செயற்கைக்கோள்களை இயக்கவும் பயன்படுத்தலாம். கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களிலும் சூரிய சக்தியை ஒருங்கிணைக்க முடியும். நீண்ட காலத்திற்கு முன்பு ஷார்ப் வெளிப்படையான சூரிய ஆற்றல் ஜன்னல்களை அறிமுகப்படுத்தியது. 4. குறைந்த பராமரிப்பு செலவுகள் சூரிய ஆற்றல் அமைப்புகளுக்கு பொதுவாக அதிக பராமரிப்பு தேவையில்லை. நீங்கள் அவற்றை ஒப்பீட்டளவில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், எனவே வருடத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்வது வேலையைச் செய்யும். சந்தேகம் இருந்தால், நீங்கள் எப்பொழுதும் பிரத்யேக துப்புரவு நிறுவனங்களை நம்பலாம், அவை சுமார் £25-£35 வரை இந்தச் சேவையை வழங்குகின்றன. மிகவும் நம்பகமான சோலார் பேனல் உற்பத்தியாளர்கள் 20-25 ஆண்டுகள் உத்தரவாதத்தை வழங்குகிறார்கள். மேலும், நகரும் பாகங்கள் இல்லாததால், தேய்மானம் இல்லை. இன்வெர்ட்டர் பொதுவாக 5-10 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றப்பட வேண்டிய ஒரே பகுதியாகும், ஏனெனில் இது சூரிய சக்தியை மின்சாரம் மற்றும் வெப்பமாக மாற்றுவதற்கு (சோலார் பி.வி. வெர்சஸ் சோலார் தெர்மல்) தொடர்ந்து வேலை செய்கிறது. இன்வெர்ட்டரைத் தவிர, உங்கள் சூரிய சக்தி அமைப்பு அதிகபட்ச செயல்திறனில் இயங்குவதை உறுதிசெய்ய கேபிள்களுக்கும் பராமரிப்பு தேவைப்படுகிறது. எனவே, சோலார் சிஸ்டத்தின் ஆரம்ப செலவை உள்ளடக்கிய பிறகு, பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு மிகக் குறைந்த செலவை எதிர்பார்க்கலாம். 5. தொழில்நுட்ப வளர்ச்சி சூரிய சக்தி துறையில் தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருகிறது மற்றும் எதிர்காலத்தில் மேம்பாடுகள் தீவிரமடையும். குவாண்டம் இயற்பியல் மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் உள்ள கண்டுபிடிப்புகள் சோலார் பேனல்களின் செயல்திறனை அதிகரிக்கலாம் மற்றும் சூரிய சக்தி அமைப்புகளின் மின் உள்ளீட்டை இரட்டிப்பாக அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கலாம்.   சூரிய ஆற்றலின் தீமைகள்     1. செலவு ஒரு சோலார் சிஸ்டத்தை வாங்குவதற்கான ஆரம்ப செலவு மிகவும் அதிகமாக உள்ளது. சோலார் பேனல்கள், இன்வெர்ட்டர், பேட்டரிகள், வயரிங் மற்றும் நிறுவலுக்கு பணம் செலுத்துவது இதில் அடங்கும். ஆயினும்கூட, சூரிய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன, எனவே எதிர்காலத்தில் விலைகள் குறையும் என்று கருதுவது பாதுகாப்பானது. 2. வானிலை சார்ந்தது மேகமூட்டம் மற்றும் மழை நாட்களில் சூரிய சக்தியை இன்னும் சேகரிக்க முடியும் என்றாலும், சூரிய குடும்பத்தின் செயல்திறன் குறைகிறது. சோலார் பேனல்கள் சூரிய சக்தியை திறம்பட சேகரிக்க சூரிய ஒளியை சார்ந்துள்ளது. எனவே, சில மேகமூட்டமான, மழை நாட்கள் ஆற்றல் அமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இரவில் சூரிய சக்தியை சேகரிக்க முடியாது என்பதையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மறுபுறம், இரவில் அல்லது குளிர்காலத்தில் வேலை செய்ய உங்கள் நீர் சூடாக்கும் தீர்வு தேவைப்பட்டால், வெப்ப இயக்கவியல் பேனல்கள் கருத்தில் கொள்ள ஒரு மாற்றாகும். 3. சூரிய ஆற்றல் சேமிப்பு விலை அதிகம் சூரிய சக்தியை இப்போதே பயன்படுத்த வேண்டும், அல்லது பெரிய பேட்டரிகளில் சேமிக்கலாம். ஆஃப்-தி-கிரிட் சோலார் சிஸ்டங்களில் பயன்படுத்தப்படும் இந்த பேட்டரிகள், பகலில் சார்ஜ் செய்யப்படலாம், இதனால் ஆற்றல் இரவில் பயன்படுத்தப்படுகிறது. நாள் முழுவதும் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கு இது ஒரு நல்ல தீர்வாகும், ஆனால் இது மிகவும் விலை உயர்ந்தது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பகலில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதும், இரவில் கிரிட்டில் இருந்து ஆற்றலை எடுத்துக்கொள்வதும் சிறந்ததாகும் (உங்கள் கணினி கட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும்). அதிர்ஷ்டவசமாக உங்கள் ஆற்றல் தேவை பொதுவாக பகலில் அதிகமாக இருக்கும், எனவே நீங்கள் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி பெரும்பாலானவற்றைச் சந்திக்கலாம். 4. நிறைய இடத்தைப் பயன்படுத்துகிறது நீங்கள் எவ்வளவு அதிக மின்சாரம் உற்பத்தி செய்ய விரும்புகிறீர்களோ, அவ்வளவு சூரிய ஒளியை நீங்கள் சேகரிக்க விரும்புவதால், உங்களுக்கு அதிகமான சோலார் பேனல்கள் தேவைப்படும். சோலார் PV பேனல்களுக்கு நிறைய இடம் தேவைப்படுகிறது மற்றும் சில கூரைகள் நீங்கள் வைத்திருக்க விரும்பும் சோலார் பேனல்களின் எண்ணிக்கையைப் பொருத்தும் அளவுக்கு பெரியதாக இல்லை. உங்கள் முற்றத்தில் சில பேனல்களை நிறுவுவது ஒரு மாற்றாகும், ஆனால் அவை சூரிய ஒளியை அணுக வேண்டும். நீங்கள் விரும்பிய அனைத்து பேனல்களுக்கும் இடம் இல்லை என்றால், உங்கள் ஆற்றல் தேவைகளில் சிலவற்றை இன்னும் பூர்த்தி செய்ய சிலவற்றை நிறுவுவதைத் தேர்வுசெய்யலாம். 5. மாசுபாட்டுடன் தொடர்புடையது மற்ற ஆற்றல் ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது சூரிய ஆற்றல் அமைப்புகளுடன் தொடர்புடைய மாசுபாடு மிகவும் குறைவாக இருந்தாலும், சூரிய ஆற்றல் மாசுபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம். கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெளியேற்றத்துடன் சூரிய மண்டலங்களின் போக்குவரத்து மற்றும் நிறுவல் தொடர்புடையது. சூரிய ஒளிமின்னழுத்த அமைப்புகளின் உற்பத்தி செயல்முறையின் போது சில நச்சு பொருட்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவை சுற்றுச்சூழலை மறைமுகமாக பாதிக்கலாம். ஆயினும்கூட, சூரிய ஆற்றல் மற்ற மாற்று எரிசக்தி ஆதாரங்களை விட மிகக் குறைவாகவே மாசுபடுத்துகிறது. https://tamil.hyliess.com/தொழில்-அறிவு/சூரிய-ஆற்றலின்-நன்மை-தீமைகள்
    • Published By: RAJEEBAN   30 SEP, 2024 | 02:35 PM நேபாளத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் தலைநகர் காத்மண்டுவில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். மழைவெள்ளம் தலைநகரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான மழை காரணமாக ஆறுகள பெருக்கெடுத்துள்ளதால் தலைநகரின் பல நகரங்கள் நீரின் கீழ் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. வெள்ளம் மண்சரிவு காரணமாக 100க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன, நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன, மின்கோபுரங்கள் வீழ்ந்துள்ளன என நேபாள தகவல்கள் தெரிவிக்கின்றன. காலநிலை நெருக்கடி காரணமாகவே நேபாளம் மிக அதிகளவான ஆபத்தான மழையையும் வெள்ளத்தையும் எதிர்கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளம் காரணமாக தங்களின் வீடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களையும், தொலைதூர பகுதியில் வெள்ளத்தினால் சிக்குண்டுள்ளவர்களையும் தேடிகண்டுபிடித்து மீட்பதில் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். காத்மண்டுவின் தென்பகுதியில் உள்ள லலித்பூரே மிக மோசமான பாதிப்புகளை  எதிர்கொண்டுள்ளது. பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் ஊடாக இராணுவத்தினரும் மீட்பு பணியாளர்களும் ஆபத்தான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நகரில் சேற்றில் அல்லது வெள்ளத்தில் சிக்குண்டிருக்கலாம் என கருதப்படுபவர்களை மீட்பதற்காக மீட்பு பணியாளர்கள் தங்கள் கரங்களால் அந்த பகுதிகளை தோண்டிவருகின்றனர். கூரைகளின் மேல் தஞ்சமடைந்துள்ள மக்களை மீட்பதற்கு ஹெலிக்கொப்டர்களையும் படகுகளையும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பயன்படுத்துகின்றனர். வெள்ளிக்கிழமை முதல் 192 பேர் உயிரிழந்துள்ளனர் 92 பேர் காயமடைந்துள்ளனர் பெருமளவானவர்கள் காணாமல்போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3700 பேரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொலைதூரத்தில் உள்ள துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீட்பு பணியாளர்கள் சென்றடைந்ததும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பொலிஸார் அச்சம் வெளியிட்டுள்ளனர். நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளும் வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. காத்மண்டுவின் முக்கிய வீதியொன்றால் சென்றுகொண்டிருந்த இரண்டு பேருந்துகள் மண்சரிவில் சிக்குண்டன  எனதெரிவித்துள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட பேருந்திலிருந்த 16 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுற்றுலாப்பயணிகளின் பேருந்து மண்ணிற்குள் புதையுண்ட நிலையில் காணாப்படுவதை  காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. டொலாக்கா மாவட்டத்தின் பிமேஸ்வரில் இடிந்து விழுந்த வீட்டிலிருந்து இரண்டு வயது பையன் உயிருடன் மீட்கப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/195133 கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடியாக இருக்கே!!
    • Published By: DIGITAL DESK 3   30 SEP, 2024 | 12:54 PM முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் தாமதமின்றி திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் துப்பாக்கிகளைப் பெற்ற முன்னாள் எம்.பி.க்களுக்கு, கைத்துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாராளுமன்ற அதிகாரிகள் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளதாக, மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் 100க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. முன்னாள் எம்.பி.க்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக குறைந்தபட்சம் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிப்பதாக முன்னைய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை தொடர்ந்து இந்த சமீபத்திய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அப்போதைய அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன, நாட்டில் நிலவும் வன்முறை போக்குவதற்காக முன்னாள் எம்.பி.க்கள் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்கும் புதிய கொள்கையை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்ததாக தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/195122
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.