Jump to content

ரஷ்யாவின் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தும் யுக்ரேன் பெண்கள் படையைப் பற்றித் தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ரஷ்யா -  யுக்ரேன்

பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE

படக்குறிப்பு, பூச்சாவின் விட்செஸ் சுமார் முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட ஒரு தன்னார்வ வான் பாதுகாப்புப் பிரிவு ஆகும். கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரா ரெயின்ஸ்ஃபோர்ட்
  • பதவி, கிழக்கு ஐரோப்பா நிருபர், பூச்சா
  • 48 நிமிடங்களுக்கு முன்னர்

யுக்ரேனில் உள்ள பூச்சா (Bucha) நகரத்தில் இருள் சாயும் வேளையில் தான் இந்தக் குழு பணியைத் துவங்குகிறார்கள். ஏனெனில் இரவில் தான் ரஷ்யா இந்த நகரத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தத் துவங்கும்.

இந்தக் குழு கிட்டத்தட்ட முழுதும் பெண்களைக் கொண்ட ஒரு தன்னார்வ வான் பாதுகாப்புப் பிரிவு. அவர்கள் தங்களை 'பூச்சாவின் சூனியக்காரிகள்' (The Witches of Bucha) என்று அழைத்துக் கொள்கின்றனர். தற்போது அவர்கள் யுக்ரேனில் வான் பாதுகாப்பிற்காக உதவுகின்றனர். ஏனெனில் ரஷ்யாவுடனான போரில் யுக்ரேன் படையில் அதிக எண்ணிக்கையில் ஆண்கள்தான் முன்னணியில் இருந்து சண்டையிடுகின்றனர்.

இந்த குழு சுட்டு வீழ்த்துவதற்கு அதிகமான ரஷ்ய ட்ரோன்கள் உள்ளன. யுக்ரேன் ஏவுகணை தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாக அதன் முக்கிய பாதுகாப்பு படைகளை வீழ்த்த ரஷ்யா ட்ரோன்களை கொண்டு இங்கு தாக்குதல் நடத்துகின்றது.

இந்தக் குழுவில் உள்ள பெண்கள் பகலில் ஆசிரியர், மருத்துவர் போன்ற பணிகளைச் செய்கிறார்கள். ஒருவர் இதில் கை-கால் அழகுக் கலை நிபுணராகவும் உள்ளார். மறுபுறம் இரவில் தங்களது நாட்டை பாதுகாப்பதற்காக அவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுகிறார்கள்.

பூச்சா பகுதியில் ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் துவங்கி, இந்தப் பகுதியை ஆக்கிரமித்தபோது, அவர்கள் சக்தியற்றதாக உணர்ந்ததால், அதற்கு ஒரு தீர்வு இது என்று இவர்களில் பலர் கூறுகிறார்கள்.

2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில், யுக்ரேன் படைகள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறிய பின், கொலை, சித்திரவதை, கடத்தல் உட்பட பல பதற்றமூட்டும் நிகழ்வுகள் நடந்துள்ளன.

 

விமானத் தாக்குதல்களும் பழைய ஆயுதங்களும்

“எனக்கு 51 வயதாகிறது. எனது எடை 100 கிலோ, என்னால் ஓட முடியாது. போருக்கு தேவையான ஆயுதங்களை அவர்கள் எனக்கு அனுப்புவார்கள் என்று நினைத்தேன், ஆனால் அதற்குள் என்னை போருக்கு அழைத்துச் சென்றார்கள்," என்று வாலண்டினா கூறுகிறார்.

வாலண்டினா ஒரு கால்நடை மருத்துவர். சில மாதங்களுக்கு முன்பு தான் ரஷ்ய ட்ரோன்களைத் தாக்கும் பணியில் இணைந்தார். அவர் 'வால்கிரி' (Valkyrie - நோர்ஸ் தொன்மத்தில் ஒரு பெண் சிறுதெய்வம்) என்னும் குறிப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

அவரது நண்பர்கள் சிலர் ரஷ்யாவுடனான போரில் யுக்ரேன் ராணுவத்தின் முன்னணி வீரர்களாகப் பணியாற்றி உயிரிழந்தனர், அதனால்தான் அவர் இந்த பணியில் சேர்ந்ததாக கூறுகிறார்.

“இந்த வேலையை என்னால் செய்ய முடியும். ஆயுதங்கள் கனமாக உள்ளன. ஆனாலும் பெண்களால் இதைச் செய்ய முடியும்,” என்கிறார்.

வாலண்டினா பேசிய பிறகு அந்தப் பகுதி முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒன்று வந்தது. அப்போது அவர் இந்தக் குழு எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கினார்.

அடர்ந்த காடுகளின் ஒரு பகுதியில் இருந்து அவரது குழு தாக்குதலுக்குத் தயாராகின்றது. பிபிசி-யின் செய்தியாளர்கள் அவர்களது வாகனத்தைப் பின்தொடர்கிறார்கள். அது ஒரு வயலின் நடுப்பகுதியை நோக்கிச் செல்கிறது. நான்கு பேர் கொண்ட குழு தங்கள் ஆயுதங்களைத் தயார்படுத்தத் துவங்கினர்.

அவர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டவை. அவற்றுள் 1939-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகள் கொண்ட பெட்டிகளும் இருந்தன. அதில் சோவியத் கொடியில் உள்ளது போலவே சிவப்பு நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

 
ரஷ்யா -  யுக்ரேன்

பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE

படக்குறிப்பு, சில மாதத்திற்கு முன்பு தான் ரஷ்ய ட்ரோன்களை தாக்கும் பணியில் இணைந்தார், வாலண்டினா.

‘பிரசவத்தைப் போல பயமானது’

இந்தக் குழுவில் செர்ஹி என்ற ஒரே ஒரு ஆண் மட்டும்தான் உள்ளார். அவர் ஆயுதங்களில் உள்ள சூட்டைத் தணிப்பதற்காகக் கையால் ஏவுகணையில் உள்ள ஒரு பகுதியில் பாட்டில் கொண்டு தண்ணீரை ஊற்றுவார்.

யுக்ரேனிடம் இவ்வளவு ஆயுதங்கள்தான் உள்ளன. அதில் சிறந்தவை போரில் முன்னணியில் பயன்படுத்தப்படுகின்றன. யுக்ரேன் அதன் நட்பு நாடுகளிடம் கூடுதல் ஆயுதங்களைக் கோரி வருகிறது.

ஆனால் இந்தப் பழங்கால ஆயுதங்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்படுவதாகவும், இதுவரை மூன்று ட்ரோன்களை வீழ்த்தியதாகவும் 'பூச்சாவின் சூனியக்காரிகள்' குழு கூறுகிறது.

"எதிரிகளின் அசைவுகளைக் கேட்பதே எனது வேலை," என்று வாலண்டினா கூறுகிறார். "இது பதட்டமான வேலை. ஆனால் அவர்களின் சிறிய சத்ததிற்கும் நாம் கவனம் செலுத்த வேண்டும்,” என்கிறார்.

அவரது தோழி இன்னா, போரில் முன்னணியில் பணியாற்றி வருகிறார். அவரும் 50 வயதிற்கு மேற்பட்டவர் ஆவார்.

"இது பயமாக இருக்கிறது. ஆனால் ஒரு குழந்தையைப் பிரசவிப்பதும் பயமானதுதான். இருப்பினும் நான் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளேன்," என்று இன்னா சிரித்துக்கொண்டே கூறுகிறார். அவர் 'செர்ரி' என்ற குறிப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

இன்னா ஒரு கணித ஆசிரியர். இந்தக் குழுவில் பணியாற்றிய பிறகு அவர் ஒரு வகுப்பை எடுக்க இந்தக் காட்டுப் பகுதியில் இருந்து விரைந்து செல்ல வேண்டும்.

 
ரஷ்யா -  யுக்ரேன்

பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE

படக்குறிப்பு, இந்த குழுவில் செர்ஹி என்ற ஒரே ஒரு ஆண் மட்டும்தான் உள்ளார்.

‘பெண்களாலும் இதைச் செய்ய முடியும்’

இன்னா, "நான் எனது காரில் ஆடைகள், ஒப்பனை பொருட்கள், ஹீல்ஸ் ஆகியவை வைத்துள்ளேன். எனது காரிலேயே ஆடைகளை மாற்றிக்கொண்டு, வகுப்பு எடுக்க புறப்பட்டுவிடுவேன்," என்கிறார்.

"ஆண்கள் போரிடச் சென்றுவிட்டார்கள். ஆனால் நாங்கள் இங்கே இருக்கிறோம். யுக்ரேனியப் பெண்களால் என்னதான் செய்ய முடியாது? எங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும்," என்கிறார்.

"ஆண்கள் போரில் முன்னணியில் ஈடுபடுகிறார்கள், அவர்கள் சிக்கல்களைச் சந்திக்கிறார்கள் என்பது எங்களுக்கு புரிகின்றது," என்கிறார்.

இது போன்ற தன்னார்வப் பிரிவுகளின் மொத்த எண்ணிக்கை, அல்லது எத்தனை பெண்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்த தரவு எதுவும் இல்லை. ஆனால், ரஷ்யா ஒவ்வொரு இரவும் வெடிபொருட்கள் நிரம்பிய ட்ரோன்களைக் கொண்டு இங்கு தாக்குவதால், யுக்ரேனில் உள்ள பெரிய நகரங்களில் கூடுதல் பாதுகாப்பை உருவாக்க இந்தக் குழுக்கள் உதவுகின்றன.

களத்தில் உள்ள இந்தக் குழுகளில் உள்ள யூலியா தனது டேப்லெட்டில் இரண்டு ட்ரோன்களைக் கண்காணிக்கிறார். அவை பூச்சாவிற்கு அருகில்தான் உள்ளன. அதனால் இங்கு எந்த உடனடி ஆபத்தும் இல்லை. ஆனால் எச்சரிக்கை முடியும் வரை துப்பாக்கிகள் கொண்டு இவர்கள் களத்தில் இருப்பார்கள்.

ரஷ்யா -  யுக்ரேன்

பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE

படக்குறிப்பு, இன்னா ஒரு கணித ஆசிரியர்.

'ஆண்கள் யாரும் இல்லை'

இந்தத் தன்னார்வலர் குழுவின் தளபதி ஒரு அஜானுபாகுவான நபர். அவர் கடுமையான சண்டை நடைபெற்று வந்த கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள போக்ரோவ்ஸ்கில் இருந்து தற்போது திரும்பியுள்ளார்.

"அங்கு இடைவிடாமல் தாக்குதல் நடந்தது," என்று ஆண்ட்ரி வெர்லாட்டி ஒரு புன்னகையுடன் அதை விவரிக்கிறார்.

பூச்சா பகுதிகளில் வான் பாதுகாப்பு மற்றும் இரவு நேரப் பாதுகாப்புப் பணிக்காகச் சுமார் 200 ஆட்களை அவர் பணியமர்த்தினார். அவர்களில் பலர் முழுநேர ராணுவச் சேவைக்குத் தகுதியற்றவர்கள்.

பின்பு போருக்கான ஆள்திரட்டல் சட்டத்தை யுக்ரேன் மாற்றியமைத்தது. அந்நாட்டிற்குக் கூடுதல் போர் வீரர்கள் அவசரமாகத் தேவைப்பட்டனர். இதனால் படைத்தளபதியின் குழுவினர் பலர் திடீரென முன்னணியில் பணியாற்றத் தகுதி பெற்றனர்.

"எனது குழுவில் இருந்து 90% ஆட்கள் ராணுவத்தில் சேர்ந்தனர், 10% பேர் எலிகள் போலச் சிதறி ஒளிந்து கொண்டனர். எங்களுக்கென யாரும் எஞ்சியில்லை," என்று படைத்தளபதி ஆண்ட்ரி வெர்லாட்டி கூறுகிறார்.

வயது வரம்பிற்குக் குறைவான ஆண்களைக் கொண்டு பணியிடங்களை நிரப்புவது அல்லது பெண்களைக் குழுவில் இணைத்துக்கொள்வது என்பதில் ஒன்றைத் தேர்வு செய்யவேண்டியதாக இருந்தது.

"பெண்களை ராணுவத்தில் பணியமர்த்துவது என்பது முதலில் ஒரு நகைச்சுவையாக இருந்தது. அவர்கள் ராணுவத்தில் பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கையே இல்லை. ஆனால் தற்போது அவர்கள்தான் இங்கு பணியாற்றி வருகின்றனர்," என்று அவர் கூறுகிறார்.

 
ரஷ்யா -  யுக்ரேன்

பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE

படக்குறிப்பு, ஆண்ட்ரி வெர்லாட்டி

‘எங்கள் பங்களிப்பு இல்லாமல் போர் முடியாது’

பூச்சாவின் இந்தப் பெண்கள் குழுவினர் தங்கள் வார இறுதி நாட்களை ராணுவப் பயிற்சிகள் செய்வதில் செலவிடுகிறார்கள். இவர்களைச் சந்திக்க பிபிசி செய்தியாளர் குழு சென்றபோது, அவர்கள் ஒரு கட்டடத்தில் நுழைந்து எவ்வாறு தாக்குவது என்ற முதல் பாடத்தை கற்றுக்கொண்டு இருந்தனர்.

அவர்கள் ஒரு பண்ணை வீட்டின் இடிபாடுகளில் பயிற்சி செய்தனர். வீட்டின் உள்ளே நுழைவதற்கு முன்னர் துப்பாக்கியைக் கொண்டு அந்தப் பகுதியை நோட்டமிட்டு எச்சரிக்கையாக செல்கின்றனர்.

அந்த குழுவில் சிலர் மற்றவர்களை விட உறுதியான தோற்றத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்தப் பெண்களின் அர்ப்பணிப்பு மற்றும் கவனம் தெளிவாக உள்ளது. ஏனெனில் அவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவாதற்கான காரணங்கள் ஆழமானவை மற்றும் தனிப்பட்டவை.

"எதிரி நாட்டுப் படைகள் இந்தப் பகுதியை ஆக்கிரமித்தது எனக்கு நினைவிருக்கிறது. அதனால் ஏற்பட்ட பயம் எனக்கு நினைவிருக்கிறது. என் சொந்தக் குழந்தையின் அலறல் எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் தப்பி ஓடும்போது வழியில் கிடந்த சடலங்கள் எனக்கு நினைவிருக்கிறன," என்று வாலண்டினா பிபிசியிடம் கூறினார்.

பூச்சாவில் நடந்த தாக்குதலில் இருந்து வாலண்டினாவின் குடும்பம் தப்பித்தது. ஒரு ரஷ்ய சோதனைச் சாவடியில், ஒரு வீரர் அவர்களின் காரின் ஜன்னலை இறக்கச் சொன்னார். பின்னர் அவர் வாலண்டினாவின் மகனின் தலையில் துப்பாக்கியை வைத்தார். இதனால் வாலண்டினாவிற்கு பெரும்கோபம் வந்தது.

சுமார் 1,000 நாட்கள் முழு அளவிலான போருக்குப் பிறகு யுக்ரேன் நாட்டின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இனிமேல் இதில் யுக்ரேன் வெற்றி பெறும் என்று வாலண்டினா அழுத்தமாக நம்புகிறார்.

"எங்கள் வாழ்க்கை மாறிவிட்டது, எங்கள் திட்டங்கள் அனைத்தும் தகர்ந்துவிட்டன. ஆனால் இந்தப் போர் விரைவாக முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். இங்குள்ள எங்கள் பெண்கள் சொல்வது போல, எங்கள் பங்களிப்பு இல்லாமல் இந்தப் போர் முடிவுக்கு வராது," என்றார் அவர்.

 
ரஷ்யா -  யுக்ரேன்

பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE

படக்குறிப்பு, ரஷ்ய படையெடுப்புகளை தோற்கடிக்க யுக்ரேனின் படைகள் உறுதியாக இருக்கிறார்கள்

'ரஷ்யர்களை மன்னிக்க மாட்டேன்'

இந்தக் குழுவின் அலுவலக மேலாளராக உள்ளார் அன்யா. அவருக்குத் தற்போது 52 வயதாகிறது. இந்த ராணுவப் பயிற்சிகள் அவரை மேம்படுத்துவதாக அவர் கூறுகிறார்.

"எதிரிகள் இந்தப் பகுதியை ஆக்கிரமித்தபோது, நான் மிகவும் அர்த்தமற்றதாக உணர்ந்தேன். என்னால் வேறு யாருக்கும் உதவவோ, என்னைத் தற்காத்துக் கொள்ளவோ முடியவில்லை. நான் ஆயுதங்களைப் பயன்படுத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள விரும்பினேன், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணினேன்,” என்கிறார்.

இந்தப் பயிற்சியின் மத்தியில் அவர்களுக்குள் மகிழ்ச்சியாக பேசிக்கொள்கின்றனர். ஆனால் அந்த இரவு, ஒரு பெண் மனம் திறந்து மனதை கனக்க வைக்கும் ஒரு கதையைப் பகிர்ந்து கொள்கிறார்.

பூச்சா நகரத்தைக் கைப்பற்றியதும், ரஷ்யப் படைகள் வீடு வீடாகச் செல்லத் துவங்கின. அவர்கள் அங்குள்ள பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தனர். அப்போது ஒரு நாள் ரஷ்யப் படைகள் குழந்தைகளைக் கொல்ல வருவதாக வதந்தி பரவியது.

"அன்று நான் எடுத்த முடிவுக்காக, நான் ரஷ்யர்களை மன்னிக்க மாட்டேன்," என்று அந்தப் பெண் கூறுகிறார்.

ரஷ்ய வீரர்கள் அவரது வீட்டிற்கு ஒருபோதும் வரவில்லை. அவர் எதுவும் செய்யத் தேவை இருந்ததில்லை. ஆனால் அந்தப் பெண் சொன்ன விவரங்களையும், அதற்குப் பின் அவர் எடுத்த தீவிர முடிவையும் வெளியில் கூற முடியாது. ஆனால் இந்தப் பெண் அன்று நடந்த நிகழ்வினால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பத்திருக்கிறார்.

தன்னையும், தன் குடும்பத்தையும், தன் நாட்டையும் தற்காத்துக் கொள்ளக் கற்றுக்கொண்டபோதுதான் முதன்முதலாக அவர் நிம்மதி அடைந்தார்.

"இங்கே வந்து பணிபுரிவது உண்மையில் எனக்கு உதவியது, ஏனென்றால் நான் மீண்டும் பாதிக்கப்பட்டவளைப் போல மிகவும் பயப்பட மாட்டேன்," என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதுதான் யூ டியுப் போராளிகள் அங்கு போய் பட்ம் பிடிக்கவில்லை போல‌
    • தமிழர்களுக்கு தனித்துவம் தேவையில்லை என கூறுபவர்கள் அன்று தொடக்கம் இன்று வரை தமிழர் தரப்பிலும் உண்டு ...சிங்கள தரப்பிலும் உண்டு  இதன் விகிதாசாரம் காலத்துக்கு காலம் மாறு படுகின்றது..வெள்ளைகள்(துதரக அதிகாரிகள்) தங்கள் நலன் கருதி சில கருத்துக்களை வெளியிடுதுகள் அல்லோ அதை பார்த்திட்டு இந்த புலம்பெயர்ஸும் ஏக்க ராஜ்ய கொண்சப்ட்டுக்குள்ள மூக்கை நுழைக்கினம்... எது எப்படியோ அனுராவின் ஆட்சி 5 வருடங்களின் பின் நிலைத்து நிற்காவிடில் என்ன நடக்கும் தமிழர் நிலை?என சிந்திக்க தவறுகின்றனர் சில எம்மவர்கள்...   சிறிலங்காவில் ஒர் ஸ்தீரனமான ஆட்சி வேணும் என இன்றைய வெளிநாட்டு சக்திகள் விரும்புகின்றது..அது அணுராவுக்கு ஒர் வரப்பிரசாதமாகிவிட்டது...அமெரிக்காவுக்கு நிரந்தர தளம் இந்து சமுத்திரத்தில் தேவைப்படுகிறது .....
    • நன்றி நிலாமதி, கந்தையா. நான் நினைக்கிறன் கொஞ்ச நாள் போனாப் பிறகு தான் எழுதலாம் போல.
    • 1)அதில அதிகமானவர்கள் அரசியலே பேசாதவர்கள்/தெரியாதவர்கள்  ...விடுமுறைக்கு சிறிலன்கா சென்றால் கதிர்காமம்,தென்னிலங்கை கடற்கரை என சுற்றுலா செல்பவர்கள் அந்த அழகையும் ,அங்கு ஹொட்டல்களில் சிப்பந்திகள் இவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை பார்த்து மயங்கி ஐயோ சிறிலங்கா மக்கள் புனிதமானவர்கள் என்ற மாயை ... கொட்டியும் சிங்கள அரசியல்வாதியும் தான் நாட்டை குட்டிசுவராக்கியவர்கள் என பிரச்சாரம் செய்தால் அதை நம்புபவர்கள்  2)"சிங்களவர்கள் அதிகமாக இந்த நாட்டில் வாழ்கின்றனர் அவர்கள் விருப்பிய்படி தமிழர்கள் வாழ்வதுதானே நியாயம்....புலம் பெயர்ந்த நாடுகளில் அப்படி தானே நீங்கள் வாழ்கின்றீர்கள் அவர்களுடைய மொழியை படிக்கிறீங்கள் அவர்களுடன் இரண்டர கலந்து  அந்த நாட்டவர்களாக மாறிவிட்டிர்கள் தானே ஏன் சிரிலங்கனாக மாறமாட்டீர்கள் என அடம் பிடிக்கின்றீர்கள்" என சிங்களவ்ர்கள் பாடம் எடுத்தவுடன் இந்த புலம்பெயர்ஸ் அதையும் நம்பி "ஆமால்ல" என்பார்கள்  3)3) புது ரென்ட் புலம் பெயர் நாடுகளில் ஏசியன்(இந்து,இந்தியன்,சிறிலங்கன்) என்ற அடையாளத்துடன் வாழ வேணும் என்ற‌ ஒர் நப்பாசை வந்திருக்கு சில ஈழத்தமிழருக்கு 
    • THE PSYCHOLOGY OF MONEY MORGAN HOUSEL அவர்கள் எழுதிய புத்தகம் உலகம் முழுவதும் பேசும் பொருளாக இருந்தும் அண்மையில் நடிகர் அரவிந்தசாமி கோபிநாத்க்கு அளித்த யூரூயுப் பேட்டியின் பின் தான் இப்பொழுது தமிழ் சூழலிலும் அதிகமானோர்களால் இந்த புத்தகம் பேசும் பொருளாக மாறியுள்ளது _________________________________________________________________________________ **பணம் சார்ந்த உளவியல்** (The Psychology of Money) என்ற மோர்கன் ஹெளஸ்ஸெல் எழுதிய புத்தகம், பொருளாதார நிதி, முதலீடு, செல்வம் மற்றும் பணம் பற்றிய உளவியல் மனநிலைகளின் உண்மைகளை ஆராயும் தன்மை கொண்டது. அதில், பணம் சம்பந்தப்பட்ட முடிவுகள் எவ்வாறு மிகுந்த அறிவியல் தரவுகளினால் மட்டுமே இல்லை, நமது மனநிலைகளாலும், பழக்கவழக்கங்களாலும், பயம், வறுமை மற்றும் ஆசைகளாலும் பாதிக்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிடுகிறார். ### புத்தகத்தின் முக்கியத்துவம்: 1. **மனநிலைகளின் தாக்கம்**: பணம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் உணர்ச்சிகள் மிகுந்த தாக்கம் செலுத்துகின்றன. மனிதர்கள் சில சமயங்களில் பொருளாதார ரீதியான முடிவுகளை தவறாக எடுக்கக் கூடும், ஏனெனில் அவர்கள் அவர்களின் மனசார்ந்த நிலைப்பாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். 2. **நெருக்கடியை சமாளிக்கும் திறன்**: பணம் சம்பந்தமான சிக்கல்களை சமாளிக்கும் போது, மனிதர்கள் தங்களின் நிதிநிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவசியமான உளவியல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. முதலீட்டின் வெற்றி அதிகமாக நிதி அறிவு அல்லது புது தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவில் இல்லை, ஆனால் நிதி மேம்பாட்டின் மனநிலையில் உள்ளது என்பதை புத்தகம் விளக்குகிறது. 3. **சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டது**: பல மனிதர்கள் தங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளின் அடிப்படையில் பணத்துடன் தொடர்புடைய முடிவுகளை எடுப்பார்கள். அதாவது, ஒரு பெரிய முதலீட்டாளர் அல்லது சாதாரண தொழிலாளி பணம் பற்றிய அதே அணுகுமுறைகளைப் பயன்படுத்த மாட்டார் என்பதைக் காட்டுகிறது. ### புத்தகத்தில் கூறப்பட்ட முக்கிய விடயங்கள்: 1. **பணம் சம்பந்தமான அறிவு என்பது தகுதி அல்ல**: - பணம் சம்பந்தமாக அறிவு கொண்டிருப்பது மட்டுமே போதாது; நம் தனிப்பட்ட மனநிலை மற்றும் பழக்கவழக்கங்கள் அதிக முக்கியத்துவம் கொண்டவை. ஒரே மாதிரியான பண சிக்கலை, பலரும் வெவ்வேறு மனநிலைகளின் அடிப்படையில் வெற்றிகரமாக அல்லது தோல்வியடையலாம் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது. 2. **அமைதியாக பணம் சேர்ப்பது**: - பணம் சம்பந்தமான நம் மனநிலைகளில் நிதானமாக செயல்படுவது மிக முக்கியம். வெற்றியடைய, மிகப்பெரிய சவால்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். பணம் சம்பாதிப்பதற்கும் பணத்தைப் பாதுகாப்பதற்கும் மனநிலையிலும் உத்தியோகபூர்வமான சிந்தனையிலும் பரிமாணங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 3. **சில நேரங்களில் தவறான முடிவுகள் கூட நல்லது**: - பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது, நீங்கள் 100% சரியான முடிவுகளை எடுப்பது அவசியமில்லை. சில சிறு தவறுகளைச் செய்தாலும் கூட, முக்கியமான சில சிறந்த முடிவுகள் பல வருடங்களுக்குப் பெரும் ஆதாயத்தை தரும். 4. **நீண்டகால பார்வை**: - பணம் சம்பந்தமான முடிவுகளில் நீண்டகால பார்வையை நிலைநிறுத்துவது முக்கியம். பலருக்கும் எளிதாகவே பணத்தை செலவழித்துவிடுவது வரும், ஆனால் நீண்டகாலம் பொறுமையுடன் செயல்படுபவர்களே அதிக பணவீச்சுடன் வாழ முடியும். 5. **விதிகளின் அடிப்படையில் வாழ்தல்**: - மனிதர்கள் பொதுவாக அவர்கள் வாழும் சூழலில் எளிதான வழிகளை தேடுகின்றனர். ஆனால் சாத்தியமான சிக்கல்களை கணக்கில் எடுத்துக்கொண்டு பூரணமாக முன்னேற வேண்டியது முக்கியம். மோர்கன் ஹெளஸ்ஸெல் எழுதிய **"The Psychology of Money"** (பணம் சார்ந்த உளவியல்) உலகம் முழுவதும் பேசப்படும் முக்கியமான புத்தகமாக மாறியதற்கான பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த புத்தகம் நிதி சந்தை, முதலீட்டு உலகம், மற்றும் தனிப்பட்ட பண மேலாண்மையை பற்றி வழக்கமான டெக்னிகல் தரவுகளின் அடிப்படையிலான பேச்சுக்களை மட்டுமல்லாது, மனித மனநிலைகளின் தாக்கத்தை வெளிப்படையாக ஆராய்ந்து கொண்டாடுகிறது. இது அன்றாட வாழ்க்கையின் சாத்தியமான நிதி சிக்கல்களை மனநிலைகளின் அடிப்படையில் எளிமையாக புரிந்துகொள்ள உதவுகிறது. ### 1. **புதுமையான கண்ணோட்டம்**: நிதி புத்தகங்களில் பொதுவாக கட்டமைக்கப்பட்ட நிதி கற்றல் மற்றும் டெக்னிக்கல் அனலிசிஸ்கள் தரப்படும். ஆனால், **"The Psychology of Money"** புத்தகம் நிதியியல் கட்டுரைகளை தாண்டி, மனித உணர்ச்சிகள், பணம் பற்றிய மனநிலைகள், தனிப்பட்ட அனுபவங்கள், மற்றும் சிறிய முடிவுகள் கூட நிதி வெற்றிக்கான அடிப்படையை அமைக்கும் என்பதற்கான சிந்தனைகளை முன்வைக்கிறது. இது வாசகர்களை இலகுவாகக் கவரும். ### 2. **சாத்தியமான பாடங்கள்**: புத்தகத்தில் வழங்கப்பட்ட அனுபவங்கள் மற்றும் உதாரணங்கள் அனைத்தும் மிகவும் எளிமையான, பரவலான மற்றும் அனைவரும் அணுகக்கூடியவையாக அமைந்துள்ளது. அதாவது, பணம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது சிக்கலான நிதி கொள்கைகளைப் பற்றி கவலைப்படாமல், எளிய நிதி ஞானத்தையும் உளவியல் அடிப்படையிலும் முடிவுகளை எடுப்பதற்கான வழிமுறைகளை விவரிக்கிறது. - உதாரணமாக, "பணம் சம்பாதிப்பதில் வெற்றி என்பது சிறந்த திட்டத்தை அமைப்பதில் இல்லை, ஆனால் சிறந்த சீரான பழக்கங்களை உருவாக்குவதில் இருக்கிறது" என்ற கருத்து மிகுந்த தாக்கத்தை உருவாக்குகிறது. ### 3. **தனிப்பட்ட அனுபவங்கள்**: மணிதர்களின் பணவியல் அசைவுகளை கண்ணியமிக்க முறையில் ஆராய்ந்துள்ளது. எல்லோரும் தங்கள் சொந்த பணமுடிவுகளைத் தங்கள் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் எடுப்பார்கள் என்பதைக் கூறுவதன் மூலம் இது நிதி பற்றி பேசும் வழக்கமான பாணியை மாற்றுகிறது. இது பலரை, குறிப்பாக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை மீண்டும் ஆராய்ந்து பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ### 4. **நீதிகளை மீறிய அனுபவம்**: சாதாரணமாக, நிதி உலகத்தில் சில பல விதிகள் இருந்தாலும், அவற்றை மாற்றியமைக்கவும், வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு விதிகளை பயன்படுத்தவும் மனிதர்கள் தங்கள் மனநிலைகளின்பேரில் வெற்றி பெறுகிறார்கள் என்பதையும் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. இது நிதியியல் வல்லுநர்கள் இடையே கூட ஒரு சிக்கலான விவாதமாக மாறுகிறது, ஏனெனில் பலரது அனுபவங்களில் சில நேரங்களில் நிதி தரவுகளுக்குப் பதிலாக அவர்களது உளவியல் செயல்பாடுகளே வெற்றி பெற்றிருக்கின்றன. ### 5. **எல்லோரும் அணுகக்கூடியது**: நிதி சார்ந்த புத்தகங்கள் பெரும்பாலும் நிதி வல்லுநர்கள் அல்லது பண மேலாண்மை விருப்பம் கொண்டவர்கள் மட்டுமே வாசிக்கிற புத்தகமாக இருப்பது வழக்கம். ஆனால், **"The Psychology of Money"** புத்தகம் மிகவும் எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு பரந்த வாசகர் வட்டத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது, தொடக்க நிலை முதலீட்டாளர்களிலிருந்து பெரிய முதலீட்டாளர்களை வரை தங்கள் பணம் சம்பந்தமான மனநிலைகளைத் திருத்திக் கொள்ளும் வகையில் மிகவும் சுலபமாக கற்றுத் தருகிறது. ### 6. **முடிவுகள் எடுக்கும் முறை**: மிக முக்கியமான ஒரு விஷயம், புத்தகம் உணர்ச்சிகள் மற்றும் மனித இயல்புகளை மட்டுமே கருத்தில் கொண்டு வரையறுக்கிறது. ஒவ்வொருவரும் பணம் சம்பந்தமாக எடுக்கும் முடிவுகள் அவர்களது தனிப்பட்ட மனநிலையினை பிரதிபலிக்கும். இது பணம் சம்பந்தமாக அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு முறை அல்லது கோட்பாடு இல்லாமல், தனிநபரின் தனித்தன்மையான அனுபவங்களை நிதிக்கான ஒரு வழிகாட்டியாக பார்ப்பது. இதனால் அனைவருக்கும் இந்த புத்தகம் ஒரு தனிப்பட்ட பரிசோதனையாக மாறுகிறது. ### 7. **நேர்த்தியான பரிந்துரைகள்**: மற்ற நிதி புத்தகங்களை போலவே இது நேரடியான பின்தொடரக்கூடிய வினைமுறைகளை நிதானமாக முன்வைக்காது. மாறாக, இது வாசகர்களை தங்கள் சொந்த முடிவுகளை தங்கள் பண நிர்வாகத்தில் எடுப்பதற்கான சிந்தனைகளை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இவ்வகை மாற்று பார்வையால் புத்தகம் உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ### **விமர்சன நோக்கம்**: முன்னே குறிப்பிட்டவை அனைத்தும் புத்தகத்தின் சிறப்பான அம்சங்கள். ஆனால், சில விமர்சனங்களும் இவ்வினையில் இருக்கின்றன. 1. **சில பொதுவான அம்சங்கள்**: புத்தகத்தில் கூறப்படும் சில கருத்துகள் ஏற்கனவே பல புத்தகங்களில் அல்லது இணையதளங்களில் வெளிப்படுத்தப்பட்டதுபோல தென்படும். இவை அனைவருக்கும் புதிதாகத் தோன்றாமல், சிலருக்கு மிகவும் அடிப்படை தகவல்களாக உணரப்படலாம். 2. **அழுத்தமான உதவிக்குறிப்புகள் இல்லை**: புத்தகத்தின் பல்வேறு சுவாரஸ்யமான கூறுகள் இருந்தாலும், இது வாசகர்களுக்கு நேரடி வழிகாட்டுதல்களைத் தரவில்லை. அதாவது, “இந்த வழியில் செயல்படு” என்ற அளவில் தெளிவான பரிந்துரைகள் இல்லை. ### **முடிவுரை**: **"The Psychology of Money"** புத்தகம் உலகம் முழுவதும் பேசப்படும் முக்கியமான நூலாக மாறியுள்ளதற்கு அதன் மனித மனநிலைகளை பற்றிய கண்ணோட்டமே முக்கியக் காரணமாகும். இது வாசகர்களை அவர்களுடைய நிதி நிலைப்பாடுகளைப் பற்றி சிந்திக்க வைக்கும் ஒரு புத்தகம். THE PSYCHOLOGY OF MONEY MORGAN HOUSEL அவர்கள் எழுதிய புத்தகம் உலகம் முழுவதும் பேசும் பொருளாக இருந்தும் அண்மையில் நடிகர் அரவிந்தசாமி கோபிநாத்க்கு அளித்த யூரூயுப் பேட்டியின் பின் தான் இப்பொழுது தமிழ் சூழலிலும் அதிகமானோர்களால் இந்த புத்தகம் பேசும் பொருளாக மாறியுள்ளது _________________________________________________________________________________ **பணம் சார்ந்த உளவியல்** (The Psychology of Money) என்ற மோர்கன் ஹெளஸ்ஸெல் எழுதிய புத்தகம், பொருளாதார நிதி, முதலீடு, செல்வம் மற்றும் பணம் பற்றிய உளவியல் மனநிலைகளின் உண்மைகளை ஆராயும் தன்மை கொண்டது. அதில், பணம் சம்பந்தப்பட்ட முடிவுகள் எவ்வாறு மிகுந்த அறிவியல் தரவுகளினால் மட்டுமே இல்லை, நமது மனநிலைகளாலும், பழக்கவழக்கங்களாலும், பயம், வறுமை மற்றும் ஆசைகளாலும் பாதிக்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிடுகிறார். ### புத்தகத்தின் முக்கியத்துவம்: 1. **மனநிலைகளின் தாக்கம்**: பணம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் உணர்ச்சிகள் மிகுந்த தாக்கம் செலுத்துகின்றன. மனிதர்கள் சில சமயங்களில் பொருளாதார ரீதியான முடிவுகளை தவறாக எடுக்கக் கூடும், ஏனெனில் அவர்கள் அவர்களின் மனசார்ந்த நிலைப்பாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். 2. **நெருக்கடியை சமாளிக்கும் திறன்**: பணம் சம்பந்தமான சிக்கல்களை சமாளிக்கும் போது, மனிதர்கள் தங்களின் நிதிநிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவசியமான உளவியல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. முதலீட்டின் வெற்றி அதிகமாக நிதி அறிவு அல்லது புது தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவில் இல்லை, ஆனால் நிதி மேம்பாட்டின் மனநிலையில் உள்ளது என்பதை புத்தகம் விளக்குகிறது. 3. **சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டது**: பல மனிதர்கள் தங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளின் அடிப்படையில் பணத்துடன் தொடர்புடைய முடிவுகளை எடுப்பார்கள். அதாவது, ஒரு பெரிய முதலீட்டாளர் அல்லது சாதாரண தொழிலாளி பணம் பற்றிய அதே அணுகுமுறைகளைப் பயன்படுத்த மாட்டார் என்பதைக் காட்டுகிறது. ### புத்தகத்தில் கூறப்பட்ட முக்கிய விடயங்கள்: 1. **பணம் சம்பந்தமான அறிவு என்பது தகுதி அல்ல**: - பணம் சம்பந்தமாக அறிவு கொண்டிருப்பது மட்டுமே போதாது; நம் தனிப்பட்ட மனநிலை மற்றும் பழக்கவழக்கங்கள் அதிக முக்கியத்துவம் கொண்டவை. ஒரே மாதிரியான பண சிக்கலை, பலரும் வெவ்வேறு மனநிலைகளின் அடிப்படையில் வெற்றிகரமாக அல்லது தோல்வியடையலாம் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது. 2. **அமைதியாக பணம் சேர்ப்பது**: - பணம் சம்பந்தமான நம் மனநிலைகளில் நிதானமாக செயல்படுவது மிக முக்கியம். வெற்றியடைய, மிகப்பெரிய சவால்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். பணம் சம்பாதிப்பதற்கும் பணத்தைப் பாதுகாப்பதற்கும் மனநிலையிலும் உத்தியோகபூர்வமான சிந்தனையிலும் பரிமாணங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 3. **சில நேரங்களில் தவறான முடிவுகள் கூட நல்லது**: - பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது, நீங்கள் 100% சரியான முடிவுகளை எடுப்பது அவசியமில்லை. சில சிறு தவறுகளைச் செய்தாலும் கூட, முக்கியமான சில சிறந்த முடிவுகள் பல வருடங்களுக்குப் பெரும் ஆதாயத்தை தரும். 4. **நீண்டகால பார்வை**: - பணம் சம்பந்தமான முடிவுகளில் நீண்டகால பார்வையை நிலைநிறுத்துவது முக்கியம். பலருக்கும் எளிதாகவே பணத்தை செலவழித்துவிடுவது வரும், ஆனால் நீண்டகாலம் பொறுமையுடன் செயல்படுபவர்களே அதிக பணவீச்சுடன் வாழ முடியும். 5. **விதிகளின் அடிப்படையில் வாழ்தல்**: - மனிதர்கள் பொதுவாக அவர்கள் வாழும் சூழலில் எளிதான வழிகளை தேடுகின்றனர். ஆனால் சாத்தியமான சிக்கல்களை கணக்கில் எடுத்துக்கொண்டு பூரணமாக முன்னேற வேண்டியது முக்கியம். மோர்கன் ஹெளஸ்ஸெல் எழுதிய **"The Psychology of Money"** (பணம் சார்ந்த உளவியல்) உலகம் முழுவதும் பேசப்படும் முக்கியமான புத்தகமாக மாறியதற்கான பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த புத்தகம் நிதி சந்தை, முதலீட்டு உலகம், மற்றும் தனிப்பட்ட பண மேலாண்மையை பற்றி வழக்கமான டெக்னிகல் தரவுகளின் அடிப்படையிலான பேச்சுக்களை மட்டுமல்லாது, மனித மனநிலைகளின் தாக்கத்தை வெளிப்படையாக ஆராய்ந்து கொண்டாடுகிறது. இது அன்றாட வாழ்க்கையின் சாத்தியமான நிதி சிக்கல்களை மனநிலைகளின் அடிப்படையில் எளிமையாக புரிந்துகொள்ள உதவுகிறது. ### 1. **புதுமையான கண்ணோட்டம்**: நிதி புத்தகங்களில் பொதுவாக கட்டமைக்கப்பட்ட நிதி கற்றல் மற்றும் டெக்னிக்கல் அனலிசிஸ்கள் தரப்படும். ஆனால், **"The Psychology of Money"** புத்தகம் நிதியியல் கட்டுரைகளை தாண்டி, மனித உணர்ச்சிகள், பணம் பற்றிய மனநிலைகள், தனிப்பட்ட அனுபவங்கள், மற்றும் சிறிய முடிவுகள் கூட நிதி வெற்றிக்கான அடிப்படையை அமைக்கும் என்பதற்கான சிந்தனைகளை முன்வைக்கிறது. இது வாசகர்களை இலகுவாகக் கவரும். ### 2. **சாத்தியமான பாடங்கள்**: புத்தகத்தில் வழங்கப்பட்ட அனுபவங்கள் மற்றும் உதாரணங்கள் அனைத்தும் மிகவும் எளிமையான, பரவலான மற்றும் அனைவரும் அணுகக்கூடியவையாக அமைந்துள்ளது. அதாவது, பணம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது சிக்கலான நிதி கொள்கைகளைப் பற்றி கவலைப்படாமல், எளிய நிதி ஞானத்தையும் உளவியல் அடிப்படையிலும் முடிவுகளை எடுப்பதற்கான வழிமுறைகளை விவரிக்கிறது. - உதாரணமாக, "பணம் சம்பாதிப்பதில் வெற்றி என்பது சிறந்த திட்டத்தை அமைப்பதில் இல்லை, ஆனால் சிறந்த சீரான பழக்கங்களை உருவாக்குவதில் இருக்கிறது" என்ற கருத்து மிகுந்த தாக்கத்தை உருவாக்குகிறது. ### 3. **தனிப்பட்ட அனுபவங்கள்**: மணிதர்களின் பணவியல் அசைவுகளை கண்ணியமிக்க முறையில் ஆராய்ந்துள்ளது. எல்லோரும் தங்கள் சொந்த பணமுடிவுகளைத் தங்கள் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் எடுப்பார்கள் என்பதைக் கூறுவதன் மூலம் இது நிதி பற்றி பேசும் வழக்கமான பாணியை மாற்றுகிறது. இது பலரை, குறிப்பாக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை மீண்டும் ஆராய்ந்து பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ### 4. **நீதிகளை மீறிய அனுபவம்**: சாதாரணமாக, நிதி உலகத்தில் சில பல விதிகள் இருந்தாலும், அவற்றை மாற்றியமைக்கவும், வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு விதிகளை பயன்படுத்தவும் மனிதர்கள் தங்கள் மனநிலைகளின்பேரில் வெற்றி பெறுகிறார்கள் என்பதையும் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. இது நிதியியல் வல்லுநர்கள் இடையே கூட ஒரு சிக்கலான விவாதமாக மாறுகிறது, ஏனெனில் பலரது அனுபவங்களில் சில நேரங்களில் நிதி தரவுகளுக்குப் பதிலாக அவர்களது உளவியல் செயல்பாடுகளே வெற்றி பெற்றிருக்கின்றன. ### 5. **எல்லோரும் அணுகக்கூடியது**: நிதி சார்ந்த புத்தகங்கள் பெரும்பாலும் நிதி வல்லுநர்கள் அல்லது பண மேலாண்மை விருப்பம் கொண்டவர்கள் மட்டுமே வாசிக்கிற புத்தகமாக இருப்பது வழக்கம். ஆனால், **"The Psychology of Money"** புத்தகம் மிகவும் எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு பரந்த வாசகர் வட்டத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது, தொடக்க நிலை முதலீட்டாளர்களிலிருந்து பெரிய முதலீட்டாளர்களை வரை தங்கள் பணம் சம்பந்தமான மனநிலைகளைத் திருத்திக் கொள்ளும் வகையில் மிகவும் சுலபமாக கற்றுத் தருகிறது. ### 6. **முடிவுகள் எடுக்கும் முறை**: மிக முக்கியமான ஒரு விஷயம், புத்தகம் உணர்ச்சிகள் மற்றும் மனித இயல்புகளை மட்டுமே கருத்தில் கொண்டு வரையறுக்கிறது. ஒவ்வொருவரும் பணம் சம்பந்தமாக எடுக்கும் முடிவுகள் அவர்களது தனிப்பட்ட மனநிலையினை பிரதிபலிக்கும். இது பணம் சம்பந்தமாக அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு முறை அல்லது கோட்பாடு இல்லாமல், தனிநபரின் தனித்தன்மையான அனுபவங்களை நிதிக்கான ஒரு வழிகாட்டியாக பார்ப்பது. இதனால் அனைவருக்கும் இந்த புத்தகம் ஒரு தனிப்பட்ட பரிசோதனையாக மாறுகிறது. ### 7. **நேர்த்தியான பரிந்துரைகள்**: மற்ற நிதி புத்தகங்களை போலவே இது நேரடியான பின்தொடரக்கூடிய வினைமுறைகளை நிதானமாக முன்வைக்காது. மாறாக, இது வாசகர்களை தங்கள் சொந்த முடிவுகளை தங்கள் பண நிர்வாகத்தில் எடுப்பதற்கான சிந்தனைகளை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இவ்வகை மாற்று பார்வையால் புத்தகம் உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ### **விமர்சன நோக்கம்**: முன்னே குறிப்பிட்டவை அனைத்தும் புத்தகத்தின் சிறப்பான அம்சங்கள். ஆனால், சில விமர்சனங்களும் இவ்வினையில் இருக்கின்றன. 1. **சில பொதுவான அம்சங்கள்**: புத்தகத்தில் கூறப்படும் சில கருத்துகள் ஏற்கனவே பல புத்தகங்களில் அல்லது இணையதளங்களில் வெளிப்படுத்தப்பட்டதுபோல தென்படும். இவை அனைவருக்கும் புதிதாகத் தோன்றாமல், சிலருக்கு மிகவும் அடிப்படை தகவல்களாக உணரப்படலாம். 2. **அழுத்தமான உதவிக்குறிப்புகள் இல்லை**: புத்தகத்தின் பல்வேறு சுவாரஸ்யமான கூறுகள் இருந்தாலும், இது வாசகர்களுக்கு நேரடி வழிகாட்டுதல்களைத் தரவில்லை. அதாவது, “இந்த வழியில் செயல்படு” என்ற அளவில் தெளிவான பரிந்துரைகள் இல்லை. ### **முடிவுரை**: **"The Psychology of Money"** புத்தகம் உலகம் முழுவதும் பேசப்படும் முக்கியமான நூலாக மாறியுள்ளதற்கு அதன் மனித மனநிலைகளை பற்றிய கண்ணோட்டமே முக்கியக் காரணமாகும். இது வாசகர்களை அவர்களுடைய நிதி நிலைப்பாடுகளைப் பற்றி சிந்திக்க வைக்கும் ஒரு புத்தகம். https://www.facebook.com/photo?fbid=122121216038460178&set=a.122099946026460178
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.