Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை மீள நீதிமன்றம் அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி குழாம் மேல் நீதிமன்ற நீதிபதி குழாமிற்கு இன்று அறிவித்தது.

அவர்களை விடுப்பதற்கான உத்தரவிற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதன் ஊடாக தெரிந்தே கடமையை புறக்கணித்தமை, கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிக்கும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குழாம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீடு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இதனை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் குறித்த வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி தரப்பை அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.

https://thinakkural.lk/article/311657

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பிள்ளையானை விசாரணைக்காக ஆஜராகுமாறு அழைப்பு

image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 இல் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்  தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நாளை சிஐடியினரின் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் ஆசாத்மௌலானா விடுத்த சனல்4 ஊடகத்திற்கு தெரிவித்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் செய்ய்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலத்தை பெறுவதற்காக பிள்ளையான் அழைக்கப்பட்டுள்ளார் என  பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல தெரிவித்த முரணாண தகவல்கள் தொடாபில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198465

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானிடமிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம்

image

பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (12) ஆஜராகுமாறு பிள்ளையானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தன்னால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்றைய தினம் வர முடியாது எனவும், அதற்கு மாறாக எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஒரு திகதியை ஒதுக்கினால் தன்னால் வர முடியும் எனவும் பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198513

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்; புதிய தகவல்களின் அடிப்படையில் விசாரணை - பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

25 NOV, 2024 | 06:31 PM
image
 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் கிடைத்த புதிய தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அநுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) உத்தியோகபூர்வமாக விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/199654

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.