Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

25 NOV, 2024 | 10:22 AM

image
 

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் சமீபத்தைய சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் குறித்து அவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினருடன் நான் நேரடியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளேன். இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பேன் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனாவின் தனிப்பட் நோக்கங்கள்எங்களிற்கு தெரியாது, இருப்பினும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் அபிலாசைகள் குறித்து சந்தேகமில்லை, என கண்டியில் தெரிவித்துள்ள சபாநாயகர் தற்போதைய அரசியல் சூழலில் இதுபோன்ற செயற்பாடுகளை மக்கள் ஆதரிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மேற்கு கிழக்கு எந்த பகுதியை சேர்ந்தாலும் அவர்கள் ஐக்கியத்தையும் இந்த நாட்டின் அபிவிருத்தியையும் விரும்புகின்றனர் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தனிநபர் ஒருவரே இந்த செயலில் ஈடுபட்டார் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம், நாங்கள் அவரின் செயற்பாடுகள் சமூக ஊடக பதிவுகளை ஆராய்ந்துள்ளோம், இந்த விடயத்தை விவேகத்துடன் அணுகி அவருடன் தீர்வை காண்பதற்கு முயல்வோம் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/199605

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனா குறித்து செய்யப் போவது இதுதான்..! சபாநாயகர் அதிரடி!

அர்ச்சுனா குறித்து செய்யப் போவது இதுதான்..! சபாநாயகர் அதிரடி !

இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்காலத்தில் அவருடனும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர்  அசோக ரங்வல தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஊடகவியலாளர் - அர்ச்சுனா என்ற உறுப்பினர் பாராளுமன்றில் அநாகரீயமாக நடந்து கொள்கிறாரா?

சபாநாயகர் கலாநிதி அசோகா ரங்வல - "அந்த நடவடிக்கையின் போது, சபாநாயகர் நியமனம் கூட முடிக்கப்படவில்லை. எனவே, இந்த நடவடிக்கை உத்தியோகபூர்வ நிலையில் செய்யப்படவில்லை. அது குறித்து சட்டப்பூர்வமாக நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது. எதிர்காலத்தில், இந்த விவகாரம் குறித்து அந்த பாராளுமன்ற உறுப்பினருடனும், மற்ற உறுப்பினர்களுடனும் விவாதிப்போம், சட்டத்திற்கு விரோதமாக ஏதாவது நடந்திருந்தால் நாங்கள் பார்த்துக் கொள்வோம்.

ஊடகவியலாளர் - தமிழ் ஈழத்தில் இருந்து என அவர் ஆரம்பிக்கிறார்?

சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல - "தனி ஒருவரான அவரின் இலட்சியம் என்னவென்று எமக்குத் தெரியாது. அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் இலட்சியம் மிகத் தெளிவாக உள்ளது. இன்று நாட்டில் அவ்வாறானதொன்றை மக்கள் எதிர்பார்க்கவில்லை. எம்.பி.க்கள் அனைவரும் இவ்விடயத்தில் ஒற்றுமையாக உள்ளனர். மீண்டும் ஒரு தாக்குதல் நிலைக்கு செல்வது நல்லது என்று நாங்கள் நம்பவில்லை."

https://tamil.adaderana.lk/news.php?nid=196398

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.