Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
26 NOV, 2024 | 06:16 PM
image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சை 3 நாட்களுக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

நவம்பர் 27, 28 மற்றும் 29ஆம் திகதிகளில் க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறமாட்டாது.

இந்த மூன்று நாட்களுக்கான பரீட்சைகள் முறையே எதிர்வரும் டிசம்பர் மாதம் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/199767

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்டு பரீட்சை நிலையத்துக்கு செல்ல முடியாதவர்கள் தமக்கு அண்மையில் உள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சை எடுக்க முடியும் என அரசு அறிவித்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்டு பரீட்சை நிலையத்துக்கு செல்ல முடியாதவர்கள் தமக்கு அண்மையில் உள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சை எடுக்க முடியும் என அரசு அறிவித்துள்ளது.

இது தற்போது வந்த செய்தி அண்ணை. மழை தொடர்ந்து பொழிகிறது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையை நவம்பர் 30, டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆம் திகதிகளில் நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக 27, 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதில்லை என முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் சீரற்ற வானிலை தணிந்து வரும் போதிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=196533

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

November 28, 2024  10:28 am

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையை நவம்பர் 30, டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆம் திகதிகளில் நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக 27, 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதில்லை என முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் சீரற்ற வானிலை தணிந்து வரும் போதிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

“நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை பரீட்சையை நடத்த மாட்டோம்.

எனவே 6 நாட்களுக்கு பரீட்சை  இல்லை. பின்னர் மீண்டும் டிசம்பர் 4ஆம் திகதி புதன்கிழமை பரீட்சை நடைபெறும்.

அத்தோடு,  டிசம்பர் 4-ம் திகதிக்கான பரீட்சையே அன்று இடம்பெறும்.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, டிசம்பர் 4 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவிருந்த பாடங்களுக்கான பரீட்சையே அன்றைய தினம் நடத்தப்படும்" என்றார்.

பாடங்களை பொறுத்தமட்டில் காலையில் இரசாயனவியல் பகுதி-1 , தொழில்நுட்பம் பகுதி -1 , நாடகம் மற்றும் கலைக்கான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் பகுதி-1, மாலை அரசறிவியல் பகுதி-1 ஆகிய பாடங்களே டிசம்பர் 04 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளன.

ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் மீண்டும் இடம்பெறும் திகதிகள் பின்வருமாறு

* நவம்பர் 27 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 21 நடைபெறும்
* நவம்பர் 28 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 23 நடைபெறும்
* நவம்பர் 29 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 27 நடைபெறும்
* நவம்பர் 30 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 28 நடைபெறும்
* டிசம்பர் 2 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 30 நடைபெறும்
* டிசம்பர் 3 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 31 நடைபெறும்

இதேவேளை, பொது அறிவுப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் எனவும், அன்றைய தினம் புதிய நேர அட்டவணை வேறு நிறத்தில் அச்சிடப்பட்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
 

https://tamil.adaderana.lk/news.php?nid=196533

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

க.பொ.த. உயர்தர பரீட்சை டிசம்பர் 4 ஆம் திகதி மீள ஆரம்பம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

28 NOV, 2024 | 03:22 PM
image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் 30 ஆம் திகதியும் டிசம்பர் மாதம் 2  ஆம் மற்றும் 3 ஆம் திகதிகளில் நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பிற்போடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளில் சில எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத்தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவிக்கையில், 

சீரற்ற வானிலை தணிந்து வரும் போதிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை பரீட்சையை நடத்த மாட்டோம். எனவே 6 நாட்களுக்கு பரீட்சைகள் நடைபெறாது. மீண்டும் டிசம்பர் 4ஆம் திகதி புதன்கிழமை முதல் பரீட்சை நடைபெறும்.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள பரீட்சை அட்டவணையின்படி, டிசம்பர் 4 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள பாடங்களுக்கான பரீட்சையே அன்றைய தினம் நடத்தப்படும்.

இதேவேளை, பொது அறிவுப் பரீட்சை டிசம்பர் மாதம் 7ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும். அன்றைய தினம் புதிய நேர அட்டவணையை வேறு நிறத்தில் அச்சிட்டு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் மீண்டும் இடம்பெறும் திகதிகள் பின்வருமாறு திகதிகளில் நடைபெறவுள்ளன.

அந்தவகையில், நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சைகள் டிசம்பர் 21 ஆம் திகதி நடைபெறும். நவம்பர் 28 ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சைகள் டிசம்பர் 23 ஆம் திகதி நடைபெறும். நவம்பர் 29 ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சைகள் டிசம்பர் 27 ஆம் திகதி நடைபெறும். நவம்பர் 30 ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சைகள் டிசம்பர் 28 ஆம் திகதி நடைபெறும். டிசம்பர் 2 ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சைகள் டிசம்பர் 30 ஆம் திகதி நடைபெறும். டிசம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சைகள் டிசம்பர் 31 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/199903

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் காலநிலைக்கு ஏற்ப ஒரு நிலையான காலப்பகுதியில் மேற்படி பரீட்சைகளை தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக பிரித்தானியாவில் மே-ஜூன் மாதங்களில் பரீட்சைகள் நடைபெறும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.