Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30 NOV, 2024 | 12:05 PM

image
 

இந்தியாவிலிருந்து 70,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு விநியோகத்தர்களிடம் இருந்து விலைமனு கோரப்பட்டு வருவதாக லங்கா சதோச நிறுவனத்தின் தலைவர் சமித பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை (29) முதல் 7 நாட்களுக்குள் விநியோகத்தர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் அடுத்த மாதம் அரிசியை நாட்டுக்கு இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் சமித பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

https://www.virakesari.lk/article/200067

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஏராளன் said:

இந்தியாவிலிருந்து 70,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு விநியோகத்தர்களிடம் இருந்து விலைமனு கோரப்பட்டு வருவதாக லங்கா சதோச நிறுவனத்தின் தலைவர் சமித பெரேரா தெரிவித்துள்ளார்.

 

சில மாதங்களின் முன்னர் தான் தேவையை விட அதிக அரிசி இருப்பதாகச் சொல்லியிருந்தார்கள். ஏற்றுமதி செய்ய்யப் போவதாகக் கூட சொல்லியிருந்தனர். என்ன தான் நடக்குது..........🫣.

பழைய அரிசி அமைச்சர் அரசியலை விட்டே விலகி விட்டார் என்றும் தேர்தலின் பின் ஒரு செய்தி பார்த்ததாகவும் ஞாபகம்............  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

30,000 மெட்ரிக் தொன் அரிசி முன்பதிவு!

05 DEC, 2024 | 11:49 AM
image
 

அரிசி தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வு காண்பதற்கு புறக்கோட்டையில் உள்ள இறக்குமதியாளர்கள், இந்தியாவிலிருந்து 25,000 முதல் 30,000 மெட்ரிக் தொன் அரிசியை முன்பதிவு செய்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் அனுமதியின் பிரகாரம், தனியாருக்காகவும் இந்த அரிசி இருப்புக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் குறைவாக இருப்பதால், குறைந்த அளவு அரிசியை இறக்குமதி செய்ய முடியும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நாடு, பச்சை, சம்பா ஆகிய அரிசி வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/200469

  • கருத்துக்கள உறவுகள்

அரிசி மாபியாவை விரைவில் ஒழிப்போம்

December 6, 2024  10:37 am

அரிசி மாபியாவை விரைவில் ஒழிப்போம்

அரிசி நெருக்கடியை தீர்ப்பதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு இம்மாதம் 20ஆம் திகதிக்குள் 50,000 மெற்றிக் தொன் அரிசி கிடைக்கப்பெறவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரிசி கையிருப்பு தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் அரிசி மாபியாவை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் தயாராகி வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

“நாங்கள் வந்து சிறிது காலத்தில் நாட்டினுள் போதுமான அரிசி உள்ளதாக விவசாயத் திணைக்களத்திடம் இருந்து எங்களுக்குத் தகவல் வந்தது.

ஆனால் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய கணக்கெடுப்பின்படி அரிசிக்கு தட்டுப்பாடு இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்தோம்.

"இரண்டு அல்லது மூன்று பேரின் ஏகபோக உரிமைக்கு இது அனுமதிக்கப்படவில்லை.

இப்போது அந்த பலம் அவர்களிடம் உள்ளது. ஏனென்றால் நம்மிடம் கட்டுப்படுத்த எந்த கருவியும் இல்லை.

நாங்கள் கடினமான நிலையில் இருக்கிறோம். தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும்” என்றார்.
 

https://tamil.adaderana.lk/news.php?nid=196912

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.