Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

"யாழ்ப்பாணத்தை முற்று முழுதாகக் கைப்பற்றிவிட்டோம். யாழ் நகரில் இருந்த வடக்கு மாகணத்தின் மிகப் பெரிய வைத்தியசாலை தமிழர் நிழல் அரசு இழந்துவிட்டது." "எதிர் காலத்தில் தமிழர் சேனையில் பலர் இறந்துவிடுவர். களங்களில் காயமடையும் அவர்களுக்கு உரிய வைத்தியசாலைப் பராமரிப்பு கிடையாது"

EFF9C4AD-2487-4CA7-8DA5-2EA4D0291BA4.jpe

யாழ்ப்பாணத்தை முற்று முழுதாகக் கைப்பற்றிவிட்டோம். யாழ் நகரில் இருந்த வடக்கு மாகணத்தின் மிகப் பெரிய வைத்தியசாலை தமிழர் நிழல் அரசு இழந்துவிட்டது.”

“எதிர் காலத்தில் தமிழர் சேனையில் பலர் இறந்துவிடுவர். களங்களில் காயமடையும் அவர்களுக்கு உரிய வைத்தியசாலைப் பராமரிப்பு கிடையாது”

யாழ்ப்பாணத்தை முற்று முழுதாகக்கைப்பற்றிவிட்டோம். யாழ் நகரில் இருந்த வடக்கு மாகாணத்தின் மிகப் பெரிய வைத்தியசாலை தமிழர் நிழல் அரசு (De facto Government) இழந்துவிட்டது.

எதிர் காலத்தில் தமிழர் சேனையில் பலர் இறந்துவிடுவர். களங்களில் காயமடையும் அவர்களுக்கு உரிய வைத்தியசாலைப் பராமரிப்பு கிடையாது என ஶ்ரீலங்கா அரசு 1996 ஆம் ஆண்டில் எண்ணி எண்ணிப் பகல் கனவு கண்டு கொண்டிருந்தது.

ஆனால் இரவுகளைப் பகல்களாக்கி உழைப்பால் தமிழீழ மருத்துவத்துறை புத்தெழுச்சி பெற்றது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் நாங்கள் நுளம்புகளுடனும், இலையான்களுடனும்போரிட்டுக் கொண்டிருந்தோம்.

ஆம், மலேரியா நோயினாலும் குண்டுவீச்சாலும் பலர் செத்து வீழ்ந்து கொண்டிருக்கும் போது இன்னுமோர் அடி “வாந்திபேதி” நோயின் வடிவில் வன்னி அன்னையின் தேகமதில் வீழ்ந்தது.

கிளிநொச்சியில் நடைபெற்ற ஒரு சமரில் காயமடைந்த பொது மக்கள், போராளிகள் என வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கையில் மேலிடத்திலிருந்து ஓர் அவசர கட்டளை வந்தது.

1998 ஆம் ஆண்டு கொலரா நோயின் பரவுகையைத் தடுக்கும் (Cholera Prevention) நடவடிக்கைக்காகத்தான் நாம் முள்ளிக்குளம் இரணையிலுப்பைக்குளம் பகுதிக்குச் சென்றோம்.

எதிர் பாராதவிதமாக இரணையிலுப்பைக்குளம் சந்தியிலிருந்த சிறிய மருத்துவமனையைப் பொறுப்பேற்க வேண்டிய கடினமான சூழ்நிலை ஏற்பட்டது.

தமிழீழ மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் வருட மருத்துவக் கற்கையை (2nd MBBS) மட்டுமே கற்றிருந்த எங்களுக்கு மருத்துவமையைப் பார்த்துக்கொள்வது சிரமமாகவே இருந்தது. நாளுக்கு 300 இற்கு மேற்பட்ட நோயாளர் வருகைதரும் OPDயில் எல்லா நோயாளரையும் பார்வையிட்டோம்.

உலகிலிருந்து விரட்டப்பட்ட மலேரியாவும் ஓடிவந்து எங்கள் மண்ணில் தஞ்சம் கோரியிருந்த காலமது.(ஆபிரிக்க நாடுகளுக்கு அடுத்ததாக) ஆதலால் வெளிநோயாளர்திணைக்களத்தில் (OPD) நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

ஒருவாறு பகற் கடமையை முடித்துக்கொண்டு சிறிது மூச்சுவிட்டுக்கொண்டிருந்தோம்.

இருள் கவிந்தது, இரவுக் கடமையினைப் பொறுப்பு ஏற்க அந்தத் தொலை தூரத்துக்கு வந்து எமக்கு யாருமே ஓய்வுக்கு அனுப்பப்போவதில்லை.

இனி எல்லாக் கடமையும் நாமேதான் என்று புரிந்துகொண்டோம். இரவு ஒரு நோயாளரும் வந்துவிடக்கூடாது என்று எல்லாத் தெய்வத்திடம் வேண்டிக்கொண்டோம்.

மூன்று பக்கமும் காடு சூழ்ந்த இந்தக் கிராமம் தமிழர்தம் எழில்மிகு தொன்மைகிராமம்!

இந்த அழகிய கிராமத்துடன் இரட்டைப்பிள்ளைகள் போன்று ஒட்டியதாக காக்கையன்குளம் கிராமம் இருந்தது.

இஸ்லாம் மக்களும் வாழ்ந்த அந்தக் கிராமத்தில் அவர்கள் இருக்கவில்லை. காலத்தின் கோலத்தால் அவர்கள் புத்தளம் மண்ணில் வாழவேண்டி ஏற்பட்டுவிட்டதை நினைக்க கவலையாய் இருந்தது.

செட்டிக்குளம், பூவரசங்குளம் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்த தமிழ் மக்களால் இவ்விருவூர்களிலும் மக்கள் நிரம்பி வழிந்தனர்.

 

0C5BF274-750E-43B2-B869-E78F69CC1875-300

காடு சூழ்ந்த குளங்களுடன் கூடிய கிராமம் ஆகையால், யானையடித்த காயமோ, பன்றி வெட்டிய காயமோ அல்லது பாம்புக்கடிதானே வரக்கூடும் என்று நினைத்துக்கொண்டோம்.

அங்கிருந்த வைத்தியசாலைப் பணியாளர்களுக்கும் எம் மீது நம்பிக்கை ஏற்படவில்லை.

அந்த நேரத்தில்தான் அங்கிருந்த மூத்த பணியாளர்(Pharmacist) (தம்பா அம்மா) கேட்டார்.

“உச்சத்துப் பல்லி சொல்லியது போல”
எங்களுக்கு இருந்தாலும் எமை நாமே மீள்பரிசோதனை செய்ய ஏதுவாகியது அந்த ஊழியரின் கேள்வி.

இரவு நேரம் பிரசவ வலியுடன் வருபவர்களை எப்படி பார்ப்பீர்கள்? “அம்புலன்ஸ் வண்டியும் இங்கில்லை!” “உழவு இயந்திரத்தில்தான் மடுவுக்கு அனுப்பவேண்டும்!” என்பதுதான் தம்பா அம்மாவின் கேள்வியும் பதிலுமாக இருந்தது.

அத்துடன் எனக்கு நடுக்கம் பிடித்துவிட்டது. என் அக்காவின் வயதுடைய Dr முரளி தெளிவாகவே இருந்தார்.

அடுத்தநாள் அவசர அவசரமாக பகற் கடமைகளை முடித்துக்கொண்டு அவ்வூரில் இருந்த வயதான மருத்துவத்தாதி /PHM (யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்) ஒருவரின் வீடு சென்று நீண்ட நேரம் கதைத்தார்.

வெளியே வரும் போது கையில் ஒரு “Ten Teachers”(Gynecology and Obstetrics Book) புத்தகத்துடன் வந்தார். அன்றிரவு 2.00pm மணிவரை அதை மண் எண்ணெய் விளக்கில் படித்தார்.

அடியேனுக்கும் மகப்பேற்றியல்(Obstetrics) தொடர்பான ஆரம்ப பாடத்தைப் படிப்பித்தார். நம்பிக்கையும் தந்தார்!

சமர்களமும் இராணுவ வைத்தியசாலையுமாக நீண்ட கடின பயணம் சென்ற தமிழீழ மருத்துவத்துறையின் அங்கமான தமிழீழ மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் சமாதான காலமாகிய 2002இல் மீண்டும் தம் கற்கை நெறியை யாழில் ஆரம்பித்து நிறைவு செய்தனர்.

மருத்துவப் பொருட்களுடன் மருத்துவர்களுக்கும் தட்டுப்பாடு நிலவிய காலத்தின் உச்சகட்டமான முள்ளிவாய்க்கால் காலம் வரை தம் பணியைத் திறம்படச் செய்தவர்களில் Dr முரளியும் ஒருவர் ஆவார்.

8FD5F712-D088-4448-B118-17CFA97B1F8A.jpe

சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் இணையில்லா மைந்தனான மருத்துவர் முரளி மகேஷ்வரன் களங்களில் மட்டுமல்ல தளங்களிலும் தன்
பணிதனைச் சிறப்பாகச் செய்தவர்.

எல்லை கடந்த மருத்துவர் குழு(Doctors without Borders) MSF என அழைக்கப்பட்டவர்ளும் நோர்வே தலைமையில் சமாதான நாடகம் ஆடப்பட்ட காலத்திலேயே எங்கள் எல்லைகளைக்க டந்துவிட்டனர்.

யுத்தம் மெல்ல மெல்ல இறுக்க நிலையை அடைய, அரச வைத்தியர்களுக்கும் தட்டுப்பாடு வந்தது.

“மனிதநேயம் மேலோங்கட்டும்/Let humanity Prevail” என்ற வாசகம் தாங்கி வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருன் இறுதிக் காலகட்டத்தில் கப்பலில் வந்து போகும் விருந்தாளிகள் ஆகிவிட்டனர்.

வைத்தியசாலை கிளிநொச்சி, முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் Dr த.சத்தியமூர்த்தி, Dr து. வரதராஜன், Dr பிரைற்றன், Dr. கதிர்ச்செல்வன், Dr பாஷ்கரன் போன்ற இன்னும் சில முக்கியமான வைத்தியக கலாநிதிகளுடன்
கடமையில் இருந்தவர்.

 

https://vayavan.com/?p=10065

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.