Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாழம்பூவின் மணமும் , தலைவலியும் – பழமொழி சொல்வது உண்மையா?

தாழம்பூவின் மணமும் , தலைவலியும் – பழமொழி சொல்வது உண்மையா?

பூக்களில் ஆண் மலர், பெண்மலர் என வகைகள் கொண்ட மலர் தாழம்பூ. செந்தாழம்பூ என்றால் சிகப்பு நிறத்தில் இருப்பது இல்லை. வெண்மை, மஞ்சள் ஆகிய இரு வண்ணத்தில் காணப்படும் மலர். மஞ்சள் நிறத்தில் பூக்கும் மலர் ஆண் மலர் (செந்தாழம்பூ) என்றும் வெண்மை நிறத்தில் பூப்பது பெண்மலர் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆற்றோரம், சுனைகள், ஊற்று, கால்வாய்க்கரை, கடற்கரை ஆகிய நீர்நிலை பகுதிகளில் வளரும் மரம். திருநெல்வேலி மாவட்டத்தில் தாழை ஊற்று (தாழையூத்து), பெரியதாழை, கூடுதாழை மற்றும் கன்னியாக்குமரி மாவட்டத்தில் தாழக்குடி போன்ற ஊர் பெயர்களின் காரணம் தாழைமரங்கள் அடர்ந்து இருந்ததால் வந்த பெயர்கள் என்று கூறப்படுகிறது.

தாழையை கவனக்குறைவாக தொடும்போது இலையில் இருக்கும் முள் கையை தைக்கும் என்பதால் இதை “கைதை” என தமிழில் முன்பும், மலையாளத்தில் தற்போது வரை குறிப்பிடுகின்றார்கள். அன்னாசி பழத்தை கைதை செத்தை என மலையாளத்தில் சொல்வார்கள்.. அன்னாசி மரமும் தாழை இனத்து வகையே.
சிவபெருமானின் பூஜைக்கு உகந்த மலர் இல்லை என்றாலும் மற்ற தெய்வங்களின் பூஜைக்கு தாழம்பூவை பயன்படுத்துவார்கள்.

தாழம்பூ அதிக மணம் கொண்டது. இந்த பூவில் சிறிய பூநாகம் இருக்கும். நல்ல பாம்பை விட விசம் கொண்டது. தாழம்பூவை பறித்து தரையில் தட்டிய பின்னர் தான் எடுக்க வேண்டும். இல்லையெனில் பூநாகம் தீண்டும் என்ற பழைய பாட்டி கதை உண்மையா, பொய்யா என தெரியாது.

அதிக மணம் கொண்ட மலராக இருந்தாலும் பெண்கள் இதனை தலையில் சூடுவதில்லை. சூடினால் தலைவலியை தரும் மலர். மணம் மட்டுமல்ல மருத்துவ குணமும் கொண்ட மலர். பித்தம் அதிகம் ஆகி வரும். உடல் சூட்டு நோய்களை குணமாக்க தாழம்பூவை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி பசும்பாலில் கலந்து குடிப்பதை மருந்தாக சித்த மருத்துவம் சொல்கிறது.

ஒய்யாரக்கொண்டையில் தாழம்பூவாம். உள்ளே இருப்பது ஓராயிரம் ஈறும் பேனுமாம்.. என உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி போலியாக நடப்பவர்களை பற்றி தமிழில் தாழம்பூவை வைத்து பழமொழியும் உண்டு.

இந்தப் பூ மிகுந்த வாசனை கொண்டதாக இருந்தாலும் கூட யாரும் இதை பயிரிட மாட்டார்கள்…  வளர்ப்பது ரொம்ப கஷ்டம். சங்க காலத்தில் பெண்கள் மிகவும் விரும்பி தலையில் அணிந்த பூ இன்று தேடினாலும் கிடைக்காத அளவிற்கு அருகி கொண்டே வருகிறது.

தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்தது இந்த தாழம்பூ என்று சொன்னால் மிகை ஆகாது. சங்ககாலத்தில் பெண்கள் மிகவும் விரும்பி இந்த பூவை தலையில் சூடி கொள்வார்களாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் தலையில் வைக்கும் ஜடைக்கும் இந்த தாழம் பூவை வைத்து பின்னுவார்கள்.

கோடை காலத்தில்  நாம் அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனை உடல் சூடு. அதற்கு  தாழம் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் சிறிது பனைவெல்லத்தை கலந்து கொடுத்து வரும்போது  உடல் சூட்டை பெருமளவு குறைக்கும்… சரும பிரச்சனை தோல் அலர்ஜி உள்ளவர்கள் இந்த பூவை கொதிக்க வைத்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் தோல் நோய் பிரச்சனை சரியாகும்.

https://athavannews.com/2025/1414980

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.