Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ ‘கூலி’ கொலையாளிகள் பற்றி ஜனாதிபதி வெளிப்படுத்துகிறார்

இராணுவ ‘கூலி’ கொலையாளிகள் பற்றி ஜனாதிபதி வெளிப்படுத்துகிறார்

பாதாள உலகக் கைக்கூலிகள் குழுவொன்று இராணுவத்தினரே என ஆயுதப் படைகளின் கட்டளைத் தளபதியான ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.

அச்சத்தை ஏற்படுத்தும் இந்த தகவலை ஜனாதிபதி வெளிப்படுத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், மன்னாரில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், கடமையிலுள்ள இராணுவச் சிப்பாய் என, இலங்கை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவருக்கு ஆதரவாக இருந்த பிரதான சந்தேகநபர் ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர் என்பதுடன் 2023 இல் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரே அவர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தேர்தல் வெற்றியை கொண்டாடும் பொதுக்கூட்டத்தில் இலங்கையை ‘குற்றவியல் நாடு’ எனக் கூறிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, இராணுவத்தின் 73 தானியங்கி துப்பாக்கிகள் பாதாள உலகத்தின் கைகளில் சிக்கியுள்ளதாக தெரிவித்து நாட்டின் அவல நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

அதில் சுமார் பாதி துப்பாக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக (கைப்பற்றப்பட்டுள்ளதாக) ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

“இந்த நாடு இருக்கும் பயங்கரமான சூழ்நிலையை நான் உங்களுக்குச் சொல்கிறேன். இராணுவ முகாம்களில் இருந்து ஆயுதங்கள் வெளியே வந்துள்ளன. ஒரு முகாமில் இருந்து எழுபத்து மூன்று T56 (தானியங்கி துப்பாக்கிகள்) பதாள உலகத்திற்கு வந்துள்ளன. ஏற்கனவே 38 ஐ நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும் 35 ஐ நாங்கள் தேடி வருகிறோம்.
இது இப்படித்தான் நடந்துள்ளது. நேற்று, ஒருவர் T56 உடன் கைது செய்யப்பட்டார். அவர் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்.”

ஏற்கனவே 13 பாதாள உலக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மேலும் வலியுறுத்தினார்.

“எங்களிடம் ஒரு பெரிய மற்றும் மதிப்புமிக்க இராணுவம் உள்ளது. இராணுவத்தின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் ஏராளமானோர் உள்ளனர். இவ்வளவு பேர் இருக்கின்றபோதிலும், இராணுவத்திற்குச் சொந்தமான ஆயுதங்கள் பாதாள உலகத்திற்கு வந்துள்ளன. நாட்டின் நிலைமை இதுதான். பாதாள உலக கோஷ்டியினரின் கூலிக்கு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு மீண்டும் முகாமுக்கு திரும்பும் சிலர் இராணுவத்தில் உள்ளனர்.

பதின்மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறான குற்றவியல் அரசு ஒன்று எம்முன்னே இருக்கிறது. யாரை நம்புவது? எங்கே நம்புவது? நாடு அத்தகைய நிலைக்குச் சென்றுள்ளது.”

கடந்த 19ஆம் திகதி கட்டுகுருந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய, இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் பதவியேற்ற அனுர குமார திஸாநாயக்க, தனது ஆட்சியின் கீழ் உள்ள ‘குற்றவியல் அரசை’ சுத்தம் செய்வதாக உறுதியளித்ததுடன் பாதாள உலகத்திற்கு அரசியல் ஆதரவு கிடைப்பதாகவும் வலியுறுத்தினார்.

“முகாம்களில் உள்ள ஆயுதங்கள் அரசியல் ஆதரவுடன் பாதாள உலகத்திற்கு வருகின்றது எனச் சொன்னால், பாதாள உலகத்தின் கூலிக்கு, இராணுவத்தில் இலட்சக்கணக்கானோர் உள்ளனர். பெரியளவிலானோர் அல்ல, கையில் உள்ள விரல்களை விட கொஞ்சம் அதிகமானோர், கூலிக்கு வெளியே சென்று, கொலை செய்துவிட்டு முகாமுக்குத் திரும்புகிறார்கள். 13 பேர் கைது செய்யப்பட்டனர். நாட்டின் நிலைமை இதுதான். எனவே, இது ஒரு குற்றவியல் அரசு. இது எந்த நேரத்திலும் எதையும் நம்ப முடியாத ஒரு வகையான அரசு. அத்தகைய ஒரு அரசில்தான் நாங்கள் (உட்கார்ந்து) இருக்கிறோம். இதை ஒவ்வொன்றாக நாம் சுத்தம் செய்வோம்.”

மன்னார் இரட்டைக் கொலை

அண்மையில் கைது செய்யப்பட்ட பலரைப் பற்றி பொலிஸார் வழங்கிய தகவல்களுக்கு அமைய பணத்திற்காக செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வடக்கில் இடம்பெற்ற தொடர் கொலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் ஜனவரி 16ஆம் திகதி இருவரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் ஜனவரி 18ஆம் திகதி களனி பிரதேசத்தில் உள்ள மடு பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் வைத்திய உதவியாளராக கடமையாற்றும் 34 வயதுடைய சீதுவ, அமந்தொலுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் 2022ஆம் ஆண்டு மாட்டு வண்டி சவாரி போட்டியின் போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவரைக் கொலை செய்தமை தொடர்பான வழக்கின் சந்தேகநபர்கள் என பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார், நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய சவேரியன் அருள் மற்றும் 42 வயதுடைய செல்வகுமார் ஜூட் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இருவரும் ஆண்கள், ஆனால் ஒருவர் பெண் என பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பதிவாகிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய பிரதான சந்தேகநபர் ஒருவரும் ஜனவரி 18ஆம் திகதி பேசாலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பேசாலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மாத்தளை, கைகாவல பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் எனவும் அவர் களனியில் தற்காலிகமாக வசிப்பவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகள் மற்றும் ஆய்வின் அடிப்படையில் 24.08.2023 அன்று அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிகண்டல் பகுதியில் துப்பாக்கியால் சுட்டு இரட்டை கொலையை செய்த குற்றத்தின் பிரதான சந்தேகநபரே இந்த சந்தேகநபர் என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற மாட்டு வண்டிச் சவாரி போட்டியின்போது உயிலங்குளம் மற்றும் நொச்சிக்குளம் ஆகிய இரு பிரதேசங்களைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் உயிலங்குளத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதோடு அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக 2023 ஓகஸ்ட் மாதம் மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

https://oruvan.com/president-reveals-about-military-hired-killers/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பிரதான சந்தேகநபர் ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர் என்பதுடன் 2023 இல் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரே அவர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதன் பின்புலம் என்ன ? அடுத்த தேர்தலுக்கு அனுரா பிரச்சாரம் தொடங்கி விட்டார் போலும் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.