Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 2   28 JAN, 2025 | 04:29 PM

image
 

கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (28) ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அதாவது அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையாக அமைய போகிறது. நாடாளுமன்றில் அநுர தரப்பு அதீத பெரும்பான்மையுடன் உள்ளது. அவர்களுக்கு எமது தரப்பின் ஆதரவு தேவையில்லை. அந்த நிலையில் தமிழர் தரப்பில் நாடாளுமன்றில் உள்ள 19 உறுப்பினர்களில் குறைந்த பட்சம் 10 உறுப்பினர்களாவது ஒன்றிணைந்து வரவுள்ள ஒற்றையாட்சியை எதிர்க்க வேண்டும்.

அதற்காகவே தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து, வரவுள்ள அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாட முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.

உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் நாம் சிந்திக்கவில்லை. தற்போது வரவுள்ள அரசியலமைப்பு எவ்வாறு அமையவுள்ளது என்பது தொடர்பிலையே சிந்திக்கின்றோம்.

எங்கள் கட்சிகள் உறுப்பினர்கள், கொள்கைகள் மீது பலருக்கும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் பொதுவாக தமிழ் மக்களின் இருப்பை இல்லாதாக்கும் அரசியலமைப்பை தமிழ் மக்களாக நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். 

ஒற்றையாட்சி சிந்தனையோடு வரும் எந்த அரசியலமைப்பை ஏற்க முடியாது. சமஷ்டி தீர்வை மாத்திரமே ஏற்றுக்கொள்வோம். சமஷ்டி என்பதில் எந்த ஒளிவுமறைவும் இன்றி நேரடியாக சமஷ்டி தீர்வாகவே தீர்வுத்திட்டம் முன் வைக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டமானது, இதுவரையிலான தீர்வு திட்டங்களில் சிறப்பானது. அதனை வைத்து அதில் திருத்தங்களை கொண்டு வரவேண்டும். குறிப்பாக அதில் மலையக மற்றும் முஸ்லீம் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு, அதனை பூரணப்படுத்த வேண்டும். அவ்வாறு பூரணப்படுத்தப்பட்டால் அதனை தமிழர்களின் தீர்வு யோசனையாக முன் வைக்க முடியும் என தெரிவித்தார்.

IMG_6776.jpegIMG_6779.jpegIMG_6778.jpegIMG_6780.jpeg

https://www.virakesari.lk/article/205139

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றையாட்சி தான் தீர்வு எனில் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்!

adminJanuary 29, 2025
Gajan-1170x659.jpeg

ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதன் பின் தேசியம் பேசி பயனில்லை. அதனால் நானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கமானது அறுதிப் பெருமபான்மையுடன் உள்ளது. இந்த அரசாங்கம் மக்கல் மத்தியில் தனது இருப்பை தக்க வைக்க ஏதாவது செய்ய வேண்டியுள்ளது.

அதனடிப்படையில் விரைவாக ஒரு அரசியலமைப்பை கொண்டு வர வாய்ப்புள்ளது. அறுதிப் பெரும்பான்மையுடன் இருப்பதால் இந்த அரசாங்கம் கொண்டு வரும் அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும்.

குறைந்த பட்சம் இந்த அரசாங்கம் கொண்டு வரும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் தேசியம் பேசுகின்ற 10 பேராவது எதிர்க்காவிட்டால் தமிழ் தேசிய கட்சிகளின் ஆதரவுடன் இது நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும். அதன் பின் நாம் தேசியம் பேசி பயனில்லை.

எனவே, தமிழ் தேசிய கட்சிகள ஒன்று சேர்ந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை எதிர்த்து வடக்கு – கிழக்கு தமிழர் தேசம் என அங்கீகரிக்கப்பட்ட, தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையுடன கூடிய ஒரு அரசியலமைப்பை கோர வேண்டும்.

சமஸ்டி ஊடாக மட்டுமே அதனை வழங்க முடியும். எனவே அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இந்த விடயத்தில் ஒன்றுபட வேண்டும்.

அத்துடன், ஒற்றையாட்சி அரசியலமைப்பு நடைமுறைக்கு கொணடு வந்தால் அதனை சர்வசன வாக்குரிமைக்கு விட வேண்டும். இதன் போது வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை உணர்ந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை எதிர்க்க வேண்டும்.

தமிழ் தேசிய கட்சிகள மீது உள்ள வெறுப்பால் பாடம் புகட்ட வேண்டும் என கடந்த தேர்தல்களில் வேறு கட்சிகளுக்கும், குழுக்களுக்கும் வாக்களித்து இருந்தாலும கூட, அரசியலமைப்பு விடத்தில் ஒன்று பட வேணடிய தேவை உள்ளது. இது எமது அடிப்படை உரிமைப் பிரச்சனை. அதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேணடும்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்படுமாக இருந்தால் அதன்பின்  கட்சிகள் தமிழ் தேசியம் என்ற பெயரை வைத்திருப்பதிலும், தேசியம் பேசுவதிலும் எந்த பயனும் இல்லை. அதனால் நானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன்.

அதன் பின் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனசனமும் இல்லை. 76 வருட போராட்டம் தோல்வி கண்டதாக முடியும். இந்த ஆபத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
 

https://globaltamilnews.net/2025/210456/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.