Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுவோம் என ஒவ்வொரு தனிநபரும் முடிவெடுத்து செயற்பட்டால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் - வடக்கு மாகாண ஆளுநர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

23 FEB, 2025 | 03:53 PM

image

எமது சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுவோம் என ஒவ்வொரு தனிநபரும் முடிவெடுத்து செயற்பட்டால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தூய்மையான இலங்கை என்பதன் இலக்கை அப்போதே முழுமையாக அடையமுடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 

தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் ஓர் அங்கமான, 'அழகான கடற்கரையின் பங்குதாரரர்களாவோம்' என்னும் தொனிப்பொருளில் கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் கிளிநொச்சி மாவட்ட நிகழ்ச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கௌதாரிமுனை கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (23) நடைபெற்றது. 

IMG-20250223-WA0001.jpg

இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் தனது தலைமை உரையில்,

மாவட்டத்தில் 11 இடங்களில் இந்த நிகழ்ச்சித் திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சுற்றுலாத்துறை ஊடாகவே எமது நாடு அந்நியச் செலாவணியை அதிகம் ஈட்டிக்கொள்கின்றது. சுற்றுலாவிகளைக் கவரக் கூடிய கடற்கரை வளங்கள் அதிகமாக இருந்தாலும் அந்தச் சுற்றாடல்கள் சுற்றுலாவிகளை ஈர்க்கும் வகையில் இல்லை. அதை நாம் துப்புரவாக வைத்திருக்கவேண்டும். எமது முன்னோர்கள் எம்மிடம் கையளித்த வளங்களை நாம் பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு கையளிக்க வேண்டும். மேற்கத்தைய நாடுகளில் எல்லா வசதிகளும் இருக்கின்றன என பலர் அங்கு செல்கின்றார்கள். அதைவிட அதிகமான வசதிகளும் வளங்களும் எங்கள் மண்ணில் இருக்கின்றன. மேற்கத்தைய நாடுகளில் உள்ளவர்கள் அங்குள் சட்டங்களை மதிப்பதைப்போன்று, சுற்றுச்சூழல்களைப் பாதுகாப்பதைப் போன்று நாம் செயற்பட்டாலே, அங்கு உள்ளதைப்போன்று இங்கும் நிலைமைகளை உருவாக்க முடியும், என்றார். 

IMG-20250223-WA0003.jpg

வடக்கு மாகாண ஆளுநர் தனது உரையில்,

தற்போதைய கௌரவ ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்தின் தூரநோக்கில் ஒன்றுதான் தூய்மையான இலங்கை செயற்றிட்டம். எங்கள் இடங்களை நாங்கள் துப்புரவாக வைத்திருக்க பழகவேண்டும். ஏதாவது ஒன்றை நாங்கள் பழக்கப்படுத்திவிட்டால் அதிலிருந்து மாறமாட்டோம். துவறான விடயத்துக்கு பழகிவிட்டால், நாங்கள் முன்னர் அப்படித்தான் செய்தோம் எனச் சொல்லி அந்தத் தவறான விடயத்தை தொடர்வதற்கே விரும்புகின்றோம். மாறுகின்றோம் இல்லை. நாங்கள் மாறவேண்டும். எங்களின் மாற்றம்தான் சூழலை அழகாக்கும். எமது பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான பொதுமலசல கூடங்கள் பயன்படுத்த முடியாத நிலைமையில் இருக்கின்றன. இதற்கு நாம்தான் காரணம். ஜப்பானில் சிறு வயதிலேயே அவர்களது பாடசாலை மலசல கூடங்களை அந்தப் பிள்ளைகளைக்கொண்டே துப்புரவு செய்யப் பழக்குகின்றார்கள். அதனால்தான் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகியதும் தமது சூழலை சுத்தமாக வைத்திருக்கின்றார்கள். 

IMG-20250223-WA0010.jpg

மாணவர்கள் மத்தியிலிருந்து இதை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் வீசாமல் குப்பைத் தொட்டிக்குள் போடுவதிலிருந்து சகல விடயங்களையும் பழக்கவேண்டும். அவர்களுக்கு இத்தகைய பழக்கவழக்கங்களை பழக்குவதன் மூலம் எதிர்காலத்தில் எமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்கலாம், என்றார் ஆளுநர்.

இதனைத் தொடர்ந்து கடற்கரையோரத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பூநகரி பிரதேச செயலர், பிரதேச சபைச் செயலர், இராணுவத்தினர், பொலிஸார், கடற்படையினர், மாணவர்கள், ஊர்மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

IMG-20250223-WA0005.jpg

IMG-20250223-WA0016.jpg

IMG-20250223-WA0014.jpg

https://www.virakesari.lk/article/207453

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி தேவதை மூலம் சுத்தம் செய்யப்படுவார்கள் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

Published By: DIGITAL DESK 7

23 FEB, 2025 | 05:02 PM

image

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடற்கரையை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம்  இன்று ஞாயிற்றுக்கிழமை (23) 'அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்' எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது. தூய்மையான இலங்கை எனும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சு.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கடற்றொழில், நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கிளிநொச்சி மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பூநகரி பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், இராணுவத்தினர், பொலிஸார், கடற்படையினர், மாணவர்கள், ஊர்மக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர். பிரதேச அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தது.

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் வெற்றியளிப்பதற்கு முழு அர்பணிப்புடன் செயற்படும் அரச அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் இவ்விடத்தில் தனியார் பங்களிப்பும் இருந்தால் அது மேலும் சிறப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.

அதைப்போல இந்த க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு, தெற்கு மலையகம் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளன. 

நாடு முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றால் குப்பைகளை அப்புறப்படுத்தல் மாத்திரம் அல்ல. இனவாதம், மதவாதம், ஊழல், மோசடிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும்.

எனவே, நாங்கள் சூழலை சுத்தப்படுத்துவது போல் எமது ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள் ஆகியோரை சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி தேவதை மூலம் சுத்தம் செய்யப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Photo__5_.jpg

Photo__7_.jpg

Photo__9_.jpg

Photo__1_.jpg

Photo__8_.jpg

https://www.virakesari.lk/article/207456

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.