Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும் தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இது தொடர்பாக ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியேற்பட்டால் அதனை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னதாக ஒன்லைன் ஊடாக சமர்ப்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இதற்கான வசதியினை WWW.Doenets. LK என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்

மாணவர்களுக்கு அவர்களின் பரீட்சை அனுமதி அட்டைகளை விரைவாக வழங்குமாறு அதிபர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

https://thinakkural.lk/article/315635

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

2024 கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த கல்வி செயற்பாடுகளுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், சமூக அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்களின் உதவிகள் போன்றவை 2025 மார்ச் மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/315796

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

Published By: VISHNU 16 MAR, 2025 | 06:18 PM

image

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் (2024 கல்வியாண்டுக்கான) நாளை திங்கட்கிழமை (17) ஆரம்பமாகி, எதிர்வரும் 26ஆம் திகதி வரை 3663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாண்டு 474,147 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறும், இதன் போது எந்தவொரு இலத்திரனியல் உபகரணங்களும் பரீட்சை நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதிக்குள் மேலதிக வகுப்புக்கள் எவையும் நடத்தப்படக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான விசேட ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/209392

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.