Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு; இராணுவத்தினர், பொலிஸாருக்கு நேரடித்தொடர்பு - தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்கள் அரசுக்கு சுட்டிக்காட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 2

06 Mar, 2025 | 09:30 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விநியோகம், பாவனைகளில் இராணுவத்தினர்,பொலிஸாருக்கு நேரடித்தொடர்புகள் உண்டு.  அவர்கள் தான் போதைப் பொருளுக்கு முழுக் காரணம் என்பதனை புரிந்துகொள்ளாமல் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாதென தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்கள் அரசுக்கு சுட்டிக்காட்டினர்.

வடக்கில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை தடுப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட எம்.பி. ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழ் தேசியக்கட்சிகளின் எம்.பி.க்கள் இவ்வாறுசுட்டிக்காட்டினர்.

வடக்கில் அதிகரித்துவரும் போதைப் பொருள் பாவனையை தடுப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி எம். பி. உரையாற்றுகையில்,

எமது இளைஞர்களிடையே போதைப் பொருள் பாவனை சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள், வன்முறைகள் சமுகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன . பெண்கள், பிள்ளைகள், பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இந்த நிலைமை அதிகரித்துள்ளது. போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையங்கள் இல்லாமை இதற்கு பெரும் காரணியாக இருக்கின்றது. இந்த விடயங்கள் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். இதனால் புனர்வாழ்வளித்தல், சிறுவர்கள், பெண்களை பாதுகாத்தல் என்பனவும் அவசியமாகும்.

இதில் மாவட்ட செயலாளர்கள், பொலிஸார், கிராமிய தலைவர்கள் ஆகியோர்களை உள்ளடக்கியதாக குழுவை அமைத்து அந்த குழுவின் செயற்பாடுகளை ஆராய்ந்து சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு போதைப் பொருள் பாவனையையும் மற்றும் அதன் விநியோகத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த பிரேரணையை வழிமொழிந்து  தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட எம்.பி ஸ்ரீபவானந்தராஜா உரையாற்றுகையில்,

நான் இந்த பிரேரணையை வரவேற்கின்றேன். 2009இற்கு முன்பிருந்த நிலைமை வேறு, இப்போதுள்ள நிலைமை வேறாகும். ஏ9 வீதி திறக்கப்பட்ட பின்னர் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இதன்மூலம் சமுக சீர்கேடுகள் நடக்கின்றன. இதனால் இளம் சமூதாயத்தினர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை ஏடுக்கப்பட வேண்டும் என்றார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றுகையில்,

இந்தப் பிரேரணை எதிர்க்கட்சி உறுப்பினரால் கொண்டு வரப்பட வேண்டியது. ஆனால் இதனை அரசாங்க கட்சியை சேர்ந்த ஒருவர் கொண்டு வந்துள்ளமை ஆச்சரியத்துக்குரியது. இந்த பிரேரணையை பார்க்கும் போது அறைக்குள் இருக்கும் யானையை நாங்கள் கண்டும் காணாமலும் இருப்பதை போன்றே உள்ளது. வடக்கு, கிழக்கை எடுத்துக்கொண்டால் இராணுவத்தின் 20 பிரிவுகளில் 16 பிரிவுகள் இந்த மாகாணங்களில் உள்ளன. குறிப்பாக வடக்கில் மாத்திரம் 14 பிரிவுகள் உள்ளன. கரையோரம் முழுவதும் ஒரு கிலோ மீற்றர் இடைவெளியில்  பொதுமக்களின் காணிகளை பிடித்து கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பொதுமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் என்ற ரீதியில் படையினர் இருப்பதுடன் யாழ்ப்பாணத்தில் 14 பொதுமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் என்ற வகையிலும் வன்னியில் 10 பொதுமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் என்ற ரீதியிலும் படையினர் இருக்கின்றனர். போரை வென்றெடுத்தவர்கள் என்றும் தமது புலனாய்வு பலமாக இருக்கின்றது என்றெல்லாம் கூறுகின்றனர். இவ்வாறான சூழலில் இதுபோன்ற மோசமான நிலைமை இருக்கின்றதென்றால் இராணுத்தினரின் முழுப் பங்களிப்பு இன்றி இது நடக்கும்  என்று நினைக்கின்றீர்களா? கிரீஸ் பூதம் போன்ற விடயங்கள் நடந்த போது தப்பியோடியவர்கள் இராணுவ முகாம்களுக்குள் ஒளிந்தமை தெரியவந்தது.

அத்துடன் ஆவா குழுவினர் பொலிஸாரால் வழிநடத்தப்படுகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. இன்று போதைப் பொருளுடன் தொடர்புடையவர்கள் இப்போது ஓடி ஒளிவது இராணுவ முகாம்கள் மற்றும் கடற்படை முகாம்களுக்குள்ளேயே ஆகும். இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அதே இராணுவம், அதே முப்படையினரை வைத்துக்கொண்டு இந்த பிரச்சினையை தீர்க்க முடியுமென்று கனவு காண வேண்டாம். பிரச்சினை எங்கே இருக்கின்றது என்று சரியாக விளங்கிக்கொள்ளுங்கள். இந்த இராணுவம் இப்போதும் தமிழர்களை எதிரிகளாகவே பார்க்கின்றனர் என்பதே உண்மை. இவர்களின் மனோநிலையை மாற்றாமல் ஒருபோதும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

இதனை கோபத்திலோ, எரிச்சலிலோ, வெறுப்பு காரணமாகவோ, இனவாதத்திலோ கூறவில்லை. போர் முடிவடைந்த பின்னர் மனோநிலை மாற்றங்கள் நடக்காது வட, கிழக்கில் உள்ள இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது. கடந்த கால அரசாங்கங்களை விடவும் நீங்கள் வித்தியாசமானவர்களாக இருக்க விரும்பினால் இந்த உண்மைகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் பேசுகையில்,

போதையினால் நாடுமட்டுமல்ல எங்களுடைய மாவட்டங்களும் தள்ளாடிக்கொண்டுதான் இருக்கின்றன . இதுதொடர்பில் ஏற்கனவே நான் பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தில்கூட போதைப்பொருட்களின் ஊடுருவல்கள் தொடர்பிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் பேசியிருந்தேன். இருப்பினும் சக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமுர்த்தியால்  முன்மொழியப்பட்ட இந்த ஒத்திவைப்புவேளைப் பிரேரணைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயமாக மிகவும் பொருத்தமான ஒத்திவைப்புவேளைப் பிரேரணையாகும்.

நாட்டின் அதியுயர்பீடமாகக் காணப்படும் பாராளுமன்றிலே, தற்போது நாட்டில் போதைப்பொருட்களால் சீரழிந்துகொண்டிருக்கும் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். இந்த போதைப்பொருள் ஊடுருவல்கள் பாடசாலைகளில்கூட இடம்பெற்றுவருவதை தற்போது நாம் அவதானித்து வருகின்றோம். போதைப்பொருள் பாவனையால் எமது சந்ததிகள், ஒருதொகுதி எதிர்கால தலைமுறையினர் அழிந்துவருகின்றனர். இந்தப் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துகின்ற விடயத்தில் பொலிஸாருக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது. சட்டம் ஒழுங்கு முறையாகச் செயற்படுத்துங்கள். இந்த விடயத்தில் கூடிய கரிசனை செலுத்தி போதைப் பொருட்களிடமிருந்து எமது மக்களைக் காப்பாற்றுங்கள். அதற்குரிய  நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுங்கள்   என்றார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சிறிநேசன் பேசுகையில்,

யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனை, அதன் விநியோகம் மற்றும் வியாபாரம் என்பன பரந்துபட்டு காணப்படுகின்றன. விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கில் பரிபாலனம் செய்த காலங்களில் அங்கு போதைப்பொருள் பாவனை என்பது முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது.போர் முடிந்த பின்னர் போதைப்பொருள் விநியோகம் என்பது முழு மூச்சாக நடைபெறுகிறது.

யுத்தம் முடிந்த பின்னரே வடக்கில் ஆவா குழு உருவாக்கப்பட்டுள்ளது.கிரீஸ் மனிதர்கள் உருவாக்கப்பட்டார்கள்.வாள்வெட்டு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மக்கள் மத்தில் அவர்களின் கலாசாரத்தை, பண்பாட்டை  உடைத்து சிதைப்பதற்கேற்ற வகையில் இந்த விடயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஆட்சிக்கு வந்து சிறிது காலமே ஆகியுள்ளது. இனிவரும் நாட்களில் நீங்கள் வடக்கு,கிழக்கில் இந்த போதைவஸ்து என்னும் அரக்கனை அழிப்பதற்கு முழுமையான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.வடக்கு ஆளுநர் இராணுவ, பொலிஸ் அதிகாரிகள்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைந்து நடவடிவக்கை எடுத்தால் இதனை அழிக்க முடியும்.

வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் போதைப்பொருள் விநியோகம் அதிகரித்துள்ளது .கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. மதுபான சாலைகள் அதிகரித்து வருகின்றன எனவே போதைப்பொருள் விநியோகம், பாவனையை தடுக்க வேண்டுமாக இருந்தால் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை இறுக்கமாக முன்னெடுக்க வேண்டும்.இவ்வாறான வேலைகளுக்கு உறுதுணையாக இருக்கின்ற இராணுவத்தினர்,பொலிஸார் கைது செய்யப்பட வேண்டும் .

சுயேச்சைக் குழு 17 இன் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான இ.அர்ச்சுனா பேசுகையில்,

மக்களை பாதுகாப்போம் எனக் கூறி அரசாங்கத்தை பொறுப்பேற்றவர்களே வடக்கு, கிழக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக கூறுவது வேடிக்கையானது, யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிக் கொட்டிக்கொள்ளுமாம். அந்த வகையிலேயே இந்தப் பிரேரணையும் உள்ளது. அரசாங்கம் உங்களிடமே இருக்கின்றது. மக்களை பாதுகாப்போம். என்று கூறி அரசாங்கத்தை பெற்றுக்கொண்டு நீங்களே பாதுகாப்பு தொடர்பில் பிரேரணையை கொண்டுவந்து வடக்கு, கிழக்கில் போதை இருக்கின்றது என்று கூறுவது கேவலமானதே. இதேவேளை நாட்டின் நீதிமன்றம் சுயமாக இயங்காவிடின் அந்த நாட்டில் நீதி நியாயம் ஒருபோதும் நிலைநாட்டப்படாது. வடக்கின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் நீதிபதிகளுக்கே நீதிபதியான இளஞ்செழியனை தமிழன் என்ற காரணத்தினால் பதவி உயர்வு வழங்காது இந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பியுள்ளது. அந்தளவுக்கு கேவலமான வேலைசெய்யும் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான நீங்கள் வடக்கு, கிழக்கில் போதைப் பொருளை குறைக்கலாம் என்று பிரேரணையை கொண்டுவருவது கேவலமான செயலே. உங்களுக்கு கீழே இயங்கும் கடற்படையின் கீழேயே கேரள கஞ்சா கொண்டுவரப்படுகிறது. வல்வெட்டித்துறையில் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்தவரை அமைச்சர் ஒருவர் தமது பிராந்திய இணைப்பாளராக தேசிய மக்கள் சக்திக்கு இணைத்துள்ளார்  என்றார்.

இந்த பிரேணைக்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பதிலளித்து உரையாற்றுகையில்,

வடக்கில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை   குறைவான  போக்கில் இருப்பதை  காண முடிகிறது.இருப்பினும்  ஏனைய போதைப்பொருள்   பாவனை  உயர்வடைந்துள்ளது. போதைப்பொருள்  ஒழிப்பு தொடர்பில்  வடக்கில்  விசேட  மத்திய நிலையத்தை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் ஒழிப்புக்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.கடந்த   காலங்களில் 

அரசியல்வாதிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. வரலாற்றில் முதல்தடவையாக  போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு முடிவுக்கு  கொண்டு வரப்பட்டுள்ளது. போதைப்பொருள்    ஒழிப்புக்கு உரிய நடவடிக்கைகளை நிறுவன மட்டத்தில் முன்னெடுத்துள்ளோம். கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்புக்களில் வடக்கில் மாத்திரம்  கடந்த  செவ்வாய்க்கிழமை  174 கிலோ  கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள்   பாவனை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்க 14 விசேட மையங்களை ஸ்தாபிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.  அதேபோல் வைத்தியசாலைகளில் போதைப்பொருள் தொடர்பில் தமிழ் மொழியில் விழிப்புனர்வுகள் வழங்கப்படும்.

2025 .01.01 முதல் 2025.03.01 வரையான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் 168 ஹெரோயின் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு,  279 கிராம் ஹெரோயின்  கைப்பற்றப்பட்டுள்ளது . 2140 கிலோ  கேரள கஞ்சா,  423 கிராம்  ஐஸ் போதைப்பொருள், 41048 போதைப்பொருள்  குளிசைகள் கைப்பற்றப்பட்டன. அதேபோல்  யாழ்ப்பாணத்தில் 104 கிராம் ஐஸ்,  650 கிலோ  கேரள கஞ்சா, 26915 போதைப்பொருள் குளிசைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.     வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் ஆணைக்கு அமைவாக  போதைப்பொருள் பாவனையை முழுமையாக இல்லாதொழிப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/208478

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.