Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு- கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் முடிவு கூறும் செய்தியும் தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலமும்

தமிழ் மக்களின் இன்றைய நிலை – ஆட்சியாளரின் நிகழ்ச்சி நிரல் – எமது பலம் – சர்வதேச சக்திகளின் நிலைப்பாடும் – தீர்வுநோக்கி முன்னேறவுள்ள சாத்தியப்பாடுகள் – போன்றவற்றை மனம்விட்டு வெளிப்படையாகப் பேசி கூட்டு முடிவை எடுக்க தமிழரசும் காங்கிரசும் தயாராக வேண்டும். எனவே புதிய கூட்டிணைவு என்பது வெறுமனே சபைகளை கைப்பற்றுவதோடு நிற்க முடியாது. மாறாக தீர்வு நோக்கி ஒன்றுபட்டு செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற வேண்டும் – தொடர வேண்டும்.

கலாநிதி க.சர்வேஸ்வரன்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலானது வெறுமனே உள்ளூராட்சிக்கான வினைத்திறன் மிக்க நிர்வாகத்தை நடத்தவல்ல வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கானதாக மட்டுமின்றி அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக எதிர்நோக்கப்பட்டது. இதன் முடிவுகள் தமிழ்த்தேசிய அரசியல், அதன் போக்கு ஆகியவற்றில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தவல்லதாக அமைய வேண்டும் என்பது ஒன்று.

தமிழ்த் தேசிய நீரோட்டத்தை திசைதிருப்பி மடைமாற்றி வலுவிழக்கச் செய்யும் நிகழ்ச்சி நிரலுடன் செயற்படும் சிங்கள – பௌத்த மேலாதிக்க சக்திகள் வடக்கு – கிழக்கில் காலூன்றுவதை தடுப்பதாக அமைய வேண்டும் என்பது மிக முக்கியமான இன்னோர் எதிர்பார்ப்பாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதித்துவதற்கு ஈடாக சிங்கள – பௌத்த மேலாதிக்கக் கொள்கையை அடிப்படைக் கோட்பாடாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி முகமூடியணிந்த ஜே.வி.பி.யும் தேர்வு செய்யப்பட்டது.

இது இனமோதல் என்ற ஒன்று இல்லை என்ற மூடி மறைப்பு பிரச்சாரத்துக்கும் பலத்த எதிர்ப்பின்றி சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பை வடக்கு – கிழக்கில் தொடர்வதற்கும், தமிழர் தாயக நிலங்களை அபகரிப்பதற்கும், இனமோதல் தீர்வு தொடர்பில் பேசவல்ல சர்வதேச சக்திகளின் வாயை அடைக்கவும் ஏதுவாக அமைந்தது. இப்பலமான மக்கள் ஆதரவு தமிழ்த் தேசியத் தலைமைகளின் குரலையும் பலவீனப்படுத்தியது. பலவீனப்படுத்துகிறது. எனவேதான் இவ்வுள்@ராட்சித் தேர்தலான நாடாளுமன்றத் தேர்தலில் தவறாகத் தமிழ் மக்கள் எழுதிய விதியைத் திருத்தி எழுதும் முக்கிய சந்தர்ப்பமாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் தேர்தல் முடிவுகளை நோக்கலாம். ஒட்டுமொத்தமாக நோக்கின் இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு – கிழக்கில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னூறுக்கு மேற்பட்ட ஆசனங்களையும் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தேசிய மக்கள் சக்தி இன்னமும் வலுவாக உள்ளன. மூன்றாவது இடத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் வாக்குகளைப் பெற்று நூற்றி ஆறு ஆசனங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இவை தவிர அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 80 இற்கு மேலான ஆசனங்களைப் பெற்று நாலாம் இடத்தில்” உள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் வாக்கு அதிகரிப்பை பொறுத்தவரை இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ் ஆகியன ஏறத்தாழ இரட்டிப்பான வாக்குகளை வடக்கிலும் இரட்டிப்பிற்கு சற்றுக் குறைவாக கிழக்கிலும் பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் விட்ட தவறை மக்கள் குறிப்பிடத்தக்க அளவு திருத்தி எழுத்தியுள்ளார்கள்.

இதேவேளை தேசிய மக்கள் சக்தி குறிப்பிடத்தக்களவு தனது வாக்குகளை இழந்துள்ளது. குறிப்பாக யாழ். மாவட்டத்தில் ஏழத்தாழ 16000 வாக்குகள் கடந்த தேர்தலை விட குறைந்துள்ளது. எனவே தமிழ்த் தலைமைகள் எதிர்பார்த்ததற்கு கிட்டவாகவே மக்கள் தீர்ப்பு அமைந்துள்ளது.

அதேவேளை இம்முடிவுகள் இரண்டு முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளன. ஒன்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் வாக்குகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்த போதும் வடக்கு – கிழக்கில் ஒரு சில சபைகள் தவிர்ந்த எந்த சபையிலும் எந்த ஓர் கட்சியும் தனியாக ஆட்சியமைக்கும் வகையில் முடிவுகள் அமையவில்லை. மாறாக தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டணியாக ஆட்சியமைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை இம்முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரிந்து நின்ற தமிழ்க்கட்சிகளைத் தண்டிப்பது போல் அமைந்ததென எடுத்துக்கொண்டால் இத் தேர்தல் முடிவுகள் நீங்கள் ஒன்றுபட்டாக வேண்டும்.

ஒன்றுபட்டு இனமோதல் தீர்வு விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் இடத்தில் இன்னமும் ஜே.வி.பி. வைக்கப்பட்டுள்ளமையானது தமிழ்த் தேசியத் தலைமைகள் இணைந்து கூட்டாக உள்@ராட்சி அதிகாரங்களைக் கையிலெடுத்து வினைத்திறனுடன் செயற்பட முடியாவிட்டால் மீண்டும் இனமேலாதிக்க சக்திகள் வளர்வதற்கான தளங்கள் அழிக்கப்படவில்லை என்ற எச்சரிக்கையையும் இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆகவே பந்து இப்போது தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் எல்லைக்குள் போடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை இவ்விடயத்தில் இரண்டு முக்கிய சவால்களை எதிர்நோக்கியுள்ளன.

ஒன்று: கூட்டு என்பது தமிழ்த் தேசியக் கட்சிகளுடனானதாக இருக்க வேண்டும். எந்த ஓர் சிங்களக் கட்சிகளுடனும் இருக்க முடியாது.

இரண்டு: சபைகளை நிர்வகிக்கும் கூட்டாக மட்டும் அமையுமா? கொள்கையிலும் கூட்டிணைவு ஏற்படுமா? கள யதார்த்தங்களை நோக்கினால் தமிழரசுக்கட்சியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன மட்டுமே வடக்கு – கிழக்கு முழுவதும் பரவலாக போட்டியிட்டு ஆசனங்களைக் கொண்டுள்ளன. தமிழ்க் காங்கிரசைப் பொறுத்தவரை யாழ். மாவட்டத்தில் மட்டுமே குறிப்பிடும்படியாக உள்ளது.

அதற்கு வெளியே அக்கட்சியின் வாக்குகள் குறிப்பிடும் படியாக இல்லை. இங்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருமளவு சபைகளின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. எனவே யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரை தமிழ்க் காங்கிரஸ் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஆதரவை நாடும் நிலையும் பொதுவாக வடக்கு – கிழக்கிலும் குறிப்பாக வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஆதரவை தமிழரசு நாடி நிற்பதும் தற்போதைய நிலையாகும்.

சிங்கள – பௌத்த மேலாதிக்க சக்திகள் உள்ளூராட்சிகளில் எவ்வகையிலும் பலம்பெற்று விடக் கூடாது என்ற அடிப்படை நிலைப்பாட்டில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உறுதியாகவுள்ளது. அதேவேளை யாழ். மாவட்டத்தில் காங்கிரசுடனும் ஏனைய மாவட்டங்களில் தமிழசுடனும் இணைத்து செயற்படுவதென்பது சரியாக அமையாது என்ற நோக்கிலும் நியாயமுண்டு.

இதுவரை கால அனுபவமானது பல கட்சிகளின் கூட்டாக பலமாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தது தமிழரசுக் கட்சியே. அதேபோல் ஏனைய அனைவரும் துரோகிகள் இந்திய முகவர்கள் என பட்டம் வழங்கி யாருடனும் சேர்த்தியங்க மாட்டோம் அதுபற்றிப் பேசவே வரமாட்டோம் என அடம்பிடித்து வந்தது தமிழ்க்காங்கிரஸ் கட்சி.

இப்போது இவ்விரு தரப்பும் ஒன்றுபட்டு ஆட்சியமைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தாலும் அக்கோரிக்கைகள் அடிப்படையில் தாம் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைக் கோரும் தொனியிலானதே தவிர எதிர்காலத்தில் இணைந்து தொடர்ந்து செயற்படுவது என்ற தொனியில் இல்லை.

தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை நாங்கள்தான் தாய்க்கட்சி. எனவே ஏனையவர்கள் எம்முடன் எமது நிபந்தனைகளுக்குள் இணைந்து செயற்படலாமே தவிர நாம் ஏனையவர்களுடன் இணைய முடியாது என்ற நிலைப்பாட்டையும் நாங்கள் ஆலமரம் இணைந்து செயற்படுபவர்கள் குருவிச்சைகள் என்ற வகைப்படுத்தலையும அடிக்கடி வெளிப்படுத்தி வருபவர்கள். இதுவே கூட்டமைப்பின் தமிழரசு தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவான யாப்பு, பெயர், பொதுச் சின்னத்தைக் கொண்டு சட்டப்படியாக கட்டமைக்கப்பட்ட கூட்டணியாக செயற்பட காரணமானது என்ற அண்மைய வரலாற்றுண்மையை மறந்து விட முடியாது.

எனவே மேற்கண்ட தமது நிலைப்பாடுகளை விடுத்து தமது நிலைப்பாட்டின்பால் மற்றவர்களைக் கொண்டு வரும் முரட்டு பிடிவாதங்களை விடுத்து உள்ளூராட்சி அதிகாரத்தில் உரியவர்களுக்கு உரிய மதிப்பளித்து ஆட்சியதிகாரங்களை நியாயமாக மங்கிட்டு இணைத்து ஆட்சிப்பொறுப்பேற்க முன்வருவார்களா?

அதேபோல் இவ்வொற்றுமை சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்ற மட்டும்தானா? இனமோதல் தீர்விலும் ஒன்றுபட்டு செயற்படத் தயாரா? இனமோதல் தீர்வில் அனைவரதும் இறுதி இலக்கு கூட்டாட்சி அல்லது சமஷ்டி என்பதாக இருந்தாலும் அதனை அடையும் வழிமுறை என்பதில் அர்த்தமற்ற முரண்பாடுகளை வெளிப்படுத்தி வருவதையும் மாற்ற வேண்டும்.

13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மாகாணசபைத் தேர்தல் விரைந்து நடத்தப்பட வேண்டும் என்ற ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கட்டமைப்பின் நிலைப்பாடு தர்க்க ரீதியாகவும் அறிவுபூர்வமாகவும் யதார்த்தமானதும் அவசியமானதுமான வழிமுறையாகும்.

இவ்விடயத்தில் தமிழரசைப் பொறுத்தவரை 13ஐ நாம் தீர்வாக ஏற்கவில்லை. ஆனால் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாமானது. நடைமுறைப்படுத்த தயங்கும் சிங்கள மேலாதிக்க சக்திகளின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் அதேவேளை ஏனைய கட்சிகள் 13ஐ இறுதித் தீர்வாக ஏற்றுக்கொண்டவை போன்ற பிழையான பிம்பத்தை ஏற்படுத்தும் தன்மையானது.

தமிழ்க் காங்கிரசைப் பொறுத்தவரை 13ம் திருத்தத்தையும் மாகாணசபைகளையும் சவப்பெட்டிக்குள் வைத்து புதைத்து விட்டோம். அதை கிண்டுபவர்கள் ஒன்றையாட்சியை ஏற்றுக்கொண்டவர்கள். இந்திய அடிவருடிகள் என வசைபாடும் அதேவேளை இந்தியா 13 பற்றி பேசாதிருக்க வேண்டும் எனக்கூறும் அளவிற்கு மந்தமான நிலைப்பாட்டையே இன்றும் கொண்டுள்ளனர். 13ஐயே அழித்தொழிக்க முயலும் சிங்கள பேரினவாதத்திடம் சம~;டியை பெறுவதற்கு பலமான சர்வதேச ஆதரவு தேவை. அதற்கான வழிவரைபடமோ திட்டமோ, சமிக்ஞைகள் கூட இல்லாத நிலையில் அதனை வேண்டாம் என்பது எந்தவகை அறிவைச் சாரும்?

எனவே இந்த முரட்டு நிலைப்பாடுகளைவிடுத்து தமிழ் மக்களின் இன்றைய நிலை – ஆட்சியாளரின் நிகழ்ச்சி நிரல் – எமது பலம் – சர்வதேச சக்திகளின் நிலைப்பாடும் – தீர்வுநோக்கி முன்னேறவுள்ள சாத்தியப்பாடுகள் – போன்றவற்றை மனம்விட்டு வெளிப்படையாகப் பேசி கூட்டு முடிவை எடுக்க தமிழரசும் காங்கிரசும் தயாராக வேண்டும். எனவே புதிய கூட்டிணைவு என்பது வெறுமனே சபைகளை கைப்பற்றுவதோடு நிற்க முடியாது. மாறாக தீர்வு நோக்கி ஒன்றுபட்டு செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற வேண்டும் – தொடர வேண்டும்.

இத்தகைய அர்த்தபுஷ்டியான ஆரோக்கியமான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஜனநாயகபூர்வமானதும் அரசியல் நாகரீகத்தின்பாற்பட்டதுமான எழுத்துபூர்வமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டு சபைகளைக் கையேற்பதும் ஒன்றுபட்டு இனமோதல் தீர்வு நோக்கிய திட்டங்களைச் செயற்படுத்துவதும் அமைய வேண்டும். இந்த அணுகுமுறை விரைவாகவே வடக்கு – கிழக்கில் இருந்து சிங்கள கட்சிகளை அகற்ற ஏதுவாகும் என்பதுடன் தமிழ்த் தேசியத்தின்பால் அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரட்டும். தீர்வு நோக்கிய பயணம் ஆரோக்கியமாக நம்பிக்கையூட்டுவதாகவும் அமையும்.

https://thinakkural.lk/article/317926

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.