Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சிங்கத்தின் குகைக்குள் சீறிய புலிகள்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'சிங்கத்தின் குகைக்குள் சீறிய புலிகள்"

-வேழினி-

அநுராதபுரம் சோழமன்னன் ஐந்தாம் மகிந்த ஆட்சியின் பின் நவீன மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் தாக்குதலுக்குள்ளாகி விட்டது எனச் சிங்களத்துச் சோதரர்கள் தமக்குள் மனம் நொந்து கிடக்கின்றனர். சோழ மன்னனின் தாவும் புலிச்சின்னப் படைகளின் பின்னர் பிரபாகரனின் பாயும் புலிச் சின்னக் கரும்புலிகள் தாக்கி விட்டனர் எனச் சிங்களம் மனம் வெதும்பி அழுகின்றனர்.

22.10.2007

அதிகாலை 3.20

ஒரு வளர்பிறைக்காலம்.

1961 இல் குடிசார் வானூர்தி நிலையமாகவும் 1983 இல் சிறிலங்காவின் வான் படைத்தளமாகவும் மாறி இன்று தமிழர் நிலம் மீதான படைப்பின் தளமாகவும் தமிழர் மீதான வான்தாக்குதல் பயிற்சித்தளமாகவும் விளங்கும் அநுராதபுரம் படைத்தளத்தின் மீது கரும்புலிகள் புகுந்து பறக்கும் சிங்கங்களைப் படுக்கையிலேயே வேட்டையாடிவிட்டமையே இந்தச் சிங்கள மனவெதும்பலுக்குக் காரணம்.

ழூ ழூ ழூ

அமெரிக்கா கொடுத்த பீச்கிராஃப்ட்...

இந்தியா கொடுத்த எம்.ஐ.17

சீனா கொடுத்த கே.எட்டு

உக்ரேன் வழங்கிய எம்.ஐ.24 என பகைவனைப் பாதுகாக்கவேயென வழங்கிய படையூர்திகளைக் கரும்புலிகள் இலக்குவைத்து விட்டனர்.

அடிவிழும் ஒவ்வொரு தடவையும் ஓடிப்போகும் சிங்களத்தைப் பறந்துபோகச்செய்து மகிழும் ஆதிக்கத்திமிரும் கூடவே ஒக்ரோபர் 22 இல் தீப்பற்றிக்கொண்டது.

சிங்கங்கள் தமிழரை வேட்டையாடத் தமது உடலை முறுக் கேற்றும் முற்றத்தில் விழுந்த இந்த அடி தமிழரின் நிமிர்வை நிச்சயம் பறைசாற்றவே செய்யும்.

ழூ ழூ ழூ

தாக்குதல் விமானம்

வழங்கல் விமானம்

கண்காணிப்பு விமானம்

பயிற்சி விமானம்

என்றும் வானிலிருந்து தரையைத் தாக்கவும், வானிலிருந்தே வானில் தாக்கவும், தரையைத் தாக்கவும் இரவும் பகழுமென மாறி மாறித் தாக்கவும் என வகை வகையாய் அடுக்கிக் கலிப்புற்றிருந்த சிங்களத்து வான்படை அதன் படுக்கையறையிலேயே சமாதியாக்கப்பட்டபோது தான் புரிந்தது தமிழர் பதுங்கும் புலிகளல்ல பாயும் புலிகள் என்பது.

ழூ ழூ ழூ

24 ஜூலை 2001 இல்

கட்டுநாயக்க வான் படைத்தளம் மீது பாய்ந்த புலிகள் அன்று எரியூட்டிய விமானங்களினால் ஏற்பட்ட இழப்பும் மூன்றாம் கட்ட ஈழப்போர் காலத்தில் அடுக்கடுக்காய் வான்படை சந்தித்த இழப்புக்களும் சிறிலங்காவின் வான்படையை ஏறத்தாழப் படுக்கையிலேயே கிடத்தியிருந்தது.

2002 இல் வந்த சமாதானம் சிங்களத்து வான் படையைப் படுக்கையிலிருந்து எழுப்பிப் புதிய பலத்தைக் கொடுத்திருந்தது.

புதிய விமானக் கொள்வனவு

நாடுகள் தோறும் விமானிகளுக்கான பயிற்சி.

புதிய பயிற்சித் தளங்களின் உருவாக்கம்.

எனச் சிங்களத்து வான்படை கூனல் நிமிர்த்தி நிமிர்ந்த காலமாகி நின்றது.

சிங்களத்து வான்படை என்றுமில்லாதவாறு பெருவாரியான பலம் பெற்றுத் தமிழர் வேட்டைக்குத் தாவிப்பறந்து வந்தன.

நான்காம் கட்ட ஈழப்போரில் நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்களைச் செய்து எப்போதும் வருவோம் என திமிர் எடுத்து நின்றது சிங்களத்து வான்படை.

ழூ ழூ ழூ

இந்த அநுராதபுரத்தளத்தில்...

செஞ்சோலை வளாகம் மீதான

வெறியாட்ட நாயகர்களும்

மன்னார் படகுத்துறைப்

படுகொலைப் பாதகர்களும்

கிளிநொச்சி மருத்துவமனைக்கு அண்மைய பகுதியில் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தில் பலரைக்கொன்ற பாதகர்களும் பயிற்சி எடுத்திருப்பர்.

தாவிப்பறந்து வந்து பாதகம் செய்த பொழுதுகளை மறந்து அவர் படுத்துறங்கியிருக்கக்கூடும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.