Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உணவை தேடி பல மைல் நடந்த பாலஸ்தீனிய மக்கள் - மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உணவு பெட்டிகளை தூக்கினர் - இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

28 MAY, 2025 | 11:29 AM

image

பட்டினியின் பிடியில் வாடும் பாலஸ்தீனியர்கள் உணவு விநியோகிக்கப்படும் நிலையத்தில் பெருமளவில் திரண்டதையடுத்து காசாவில் அமெரிக்கா ஆதரவுடனான புதிய குழுவின் மனிதாபிமான உதவி வழங்கும் நடவடிக்கைகள் பெரும் குழப்பத்திற்குள் சிக்கியுள்ளதாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.

உணவு விநியோகிக்கப்படும் பகுதியை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு பெருமளவு பாலஸ்தீனியர்கள் நுழைந்ததை தொடர்ந்து இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என ஏபி தெரிவித்துள்ளது.

gaza_food__delivery__2025.jpg

இஸ்ரேலிய டாங்கிகளின் துப்பாக்கி பிரயோகத்தையும் துப்பாக்கி சூட்டு சத்தத்தையும் கேட்க முடிந்ததாக தெரிவித்துள்ள ஏபி செய்தியாளர் ஹெலிக்கொப்டரில் இருந்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதியில் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்ததாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய படையினர் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளனர்.

மூன்று பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர் ஒருவரின் காலில் இருந்து குருதி வெளியேறுகின்றது என ஏபி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

gaza_food__delivery_3__2025.jpg

காசாவின் தென்பகுதயில் உள்ள ரபாவில் காசா மனிதாபிமான மன்றம் என்ற அமைப்பு மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் இந்த அமைப்பிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

எனினும் இந்த முறை மூலம் காசாவில் உள்ள 2.3 மில்லியன் மக்களின் மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என தெரிவித்து ஐநாவும் ஏனைய சர்வதேச அமைப்புகளும் இதனை ஏற்க மறுத்துள்ளன.

பொதுமக்களிற்கான உணவை இஸ்ரேல் ஆயுதமாக பயன்படுத்துவதற்கு இது அனுமதிக்கின்றது என ஐநாவும் சர்வதேச அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

மனிதாபிமான பொருட்களை எதிர்பாத்திருக்கும் மக்களிற்கும் இஸ்ரேலிய துருப்பினருக்கும் இடையில் மோதல் வெடிக்கலாம் என சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன.

மூன்று மாதகால இஸ்ரேலின் தடை காரணமாக பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள காசா மக்கள் உணவிற்காக காத்திருக்கின்றனர்.

பெருமளவானவர்கள் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்கு செவ்வாய்கிழமை சென்று உணவுப்பெட்டிகளை பெற்றுக்கொண்டனர் என பாலஸ்தீனியர்கள் ஏபிக்கு தெரிவித்துள்ளனர்.

தகவல் பரவியதும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் தங்களின் அகதிமுகாமிலிருந்து பல மைல் நடந்து மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதியை நோக்கி சென்றனர்.

gaza_food__delivery_2__2025.jpg

அவர்கள் இஸ்ரேலின் இராணுவநிலைகள் ஊடாகவே அந்த இடத்தை சென்றடையவேண்டும்.

மதியமளவில் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் காணப்பட்டனர். நீண்ட சங்கிலிதொடர் வேலிப்பாதைகளில் பெருமளவில் மக்கள் குவிந்திருப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

gaza_food__delivery_4__2025.jpg

ஒவ்வொருவரும் சோதனை செய்யப்பட்டு முக அடையாளங்கள் ஸ்கான் செய்யப்பட்ட பின்னர் உணவுபெட்டிகளை பெற அனுமதிக்கின்றனர் என ஏபிக்குதெரிவித்துள்ள இருவர்,கூட்டம் அதிகரித்ததும்,மக்கள் வேலிகளை இழுத்துவிழுத்திவிட்டு உணவுப்பெட்டிகளை எடுத்தனர்,அங்கிருந்த பணியாளர்கள் தப்பியோட வேண்டிய நிலையேற்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/215882

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியில் இந்த " மனிதாபிமான உணவு வினியோகம்" 😎 என்பதன் பின்னணியைச் சரியாக அடையாளம் காட்டவில்லை.

காலாகாலமாக, காசாவிற்கு உணவு வினியோகம் செய்வது ஐ.நாவின் தொண்டு அமைப்புகள் தான். இஸ்ரேல், காசாவின் மீதான தாக்குதலை ஆரம்பித்த பின்னர், இந்த உணவு வினியோகத்தை மிகவும் குறைத்து விட்டது (ஒரு நாளைக்கு 500 லொறிகள் என்பதில் இருந்து 5 லொறிகள் என்ற நிலை தற்போது). உணவை ஆயுதமாகப் பிரயோகிக்கும் இந்த மிருகத் தனத்திற்கு பைடன் ஆட்சியில் ஆதரவு இருக்கவில்லை. எனவே, கொஞ்சமாவது லொறிகளின் எண்ணிக்கையை உயர்வாக வைத்திருந்தார்கள். இப்போது ட்ரம்ப் ஆட்சி வந்தவுடன், புதிதாக மீண்டும் தாக்குதலையும், உணவுத் தடுப்பையும் அமல் படுத்தி விட்டார்கள்.

இந்தப் பட்டினிப் பின்னணியில், பணம் பார்க்கும் ஆசையில் அலையும் அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக் காரர்களும் (security contractors), சில உணவு முகவர்களும் ட்ரம்பை அணுகியிருப்பார்கள் என ஊகிக்கிறேன். அவர்கள் கொண்டு வந்த திட்டம் தான் அமெரிக்க ஒப்பந்தக் காரர்களால், இஸ்ரேல் படையின் பாதுகாப்புடன் உணவை வினியோகிக்கும் GHF என்ற அமைப்பு. பெயரில் "மனிதாபிமானம்" இருந்தாலும், இது ஈராக்கிலும், ஆப்கானிலும் செய்தது போல, அமெரிக்க ஒப்பந்தக் காரர்களுக்கு வருமானம் தேடும், காசா மக்களை மந்தைகள் போல அலைய விடும் ஒரு திட்டம் என்பது பலருக்கும் தெரியும். எனவே, ஐ.நா அமைப்புகள் இதற்கு ஒத்துழைக்க மறுத்து விட்டன. "செய்து காட்டுகிறோம் பார்" என்று நேற்று ஆரம்பித்திருக்கிறார்கள். முதல் நாளே இப்படியாக ஆகி விட்டது. என்றாலும் மீண்டும் மீண்டும் இப்படி செய்வார்கள், காசா மக்கள் அள்ளுப் படுவர், இஸ்ரேல் படைகள் சுடும்.

இறுதியில் "காசா மக்களின் பட்டினிக்கு அவர்கள் இப்படி நடந்து கொள்வது தான் காரணம்" என்று பிரச்சார வீடியோக்களை வெளியிட்டு விட்டு, கடையை மூடி விட்டுப் போவார்கள்!

இந்த GHF பற்றிய மேலதிக தகவல்கள்: https://www.bbc.com/news/articles/cev41em3r9lo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதப்பேரவலத்திலும் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்களா?!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

மனிதப்பேரவலத்திலும் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்களா?!

இதெல்லாம் பனிக்கட்டியின் வெளியே தெரியும் முனை மட்டுமே.

1000 கிலோ ரிஎன்ரி வெடிமருந்தை நிரப்பிய MOAB குண்டுகளை விற்பது முதல், இப்படியாக அமெரிக்காவில் கொள்வனவு செய்த உணவை , அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக் காரர்களின் பாதுகாப்போடு விநியோகிப்பது வரை, பிணம் தின்று வயிற்றை வளர்த்து, உழன்று, ஒரு நாள் செத்துப் போய் பூமிக்குப் பாரமாகப் போகும் பேர்வழிகள் நடமாடும் உலகம் இது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.